23

23

பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து சீமானை விடுவிக்க முடியாது – உயர் நீதி​மன்றம் அதிரடித் தீர்ப்பு

பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து சீமானை விடுவிக்க முடியாது – உயர் நீதி​மன்றம் அதிரடித் தீர்ப்பு

சீமான் மீதான பாலியல் கொடுமை வழக்கைத் தள்ளுபடி செய்ய முடியாது என உயர் நீதி​மன்றம் தீர்ப்​பளித்​துள்ளது.

திரு​மணம் செய்து கொள்​வதாக கூறி சீமான் பாலியல் ரீதியாக ஏமாற்றிய​தால் விஜயலட்​சுமி சுமார் 7 முறை கருக்​கலைப்பு செய்துள்ளார். நடிகை விஜயலட்​சுமி அளித்த பாலியல் முறைப்பாட்டின் பேரில் நாம் தமிழர் கட்சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளரான சீமான் மீது 2011இல் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

புகாரை விஜயலட்​சுமி 2012-ம் ஆண்டே மீளப்பெற்றதால் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உயர் நீதி​மன்​றத்​தில் அண்மையில் விசா​ரணைக்கு வந்தது. அப்போது சீமான் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்ய முடி​யாது என மறுப்பு தெரி​வித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண் இந்த வழக்கை திரும்பப் பெற்றாலும், பாலியல் வன்கொடுமை என்ற தலைப்பில் விசாரிக்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. சா்வ சாதாரணமாக இந்த வழக்கை முடித்து விட முடியாது என குறிப்பிட்டார்.

மேலும் 12வாரத்​துக்​குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்​டும் என பொலி​ஸாருக்கு உத்தர​விட்டு சீமானின் மனுவை தள்ளுபடி செய்​தார்.

ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பாசறையில் வளர்ந்த சிலர் இவ்வாறானதொரு பாலியல் காமுகனைத் தங்கள் தலைவனாக போற்றிக் கொண்டாடிக்கொண்டு கேவலமான அரசியலைச் செய்ய முனைகின்றனர். காமுகனான சீமானுக்கு தான் தான் ஐடியா கொடுத்தேன் என்று இன்னுமொரு பாலியல் காமுகனைக் கும்பிடும் முன்னாள் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனின் கட்சியைச் சேர்ந்த சட்டத்தரணி இராசையா உமாகரன் ரிக்ரொக்கில் குதிக்கின்றார்.

உங்கள் கொட்டங்களை அடக்குகின்றேன். தந்தை பெரியாருக்கும் அம்பேக்காருக்கும் யாழ் மண்ணில் சிலை எழுப்புகின்றேன் என்று சவால் விட்டுள்ளார் ஈழத்து பெரியாரிஸ்ட் அருண் சித்தார்த்.

பட்ஜெட்டில் கிழக்கு புறக்கணிப்பு – உள்ளூராட்சித் தேர்தலில் பாடம் புகட்டுவோம் ! சாணக்கியன்

பட்ஜெட்டில் கிழக்கு புறக்கணிப்பு – உள்ளூராட்சித் தேர்தலில் பாடம் புகட்டுவோம் ! சாணக்கியன்

வரவு, செலவுத் திட்டத்தில் கிழக்கு மாகாணம் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றஞ்சாடியுள்ளார். பாராளுமன்ற வரவு செலவுத் திட்டத்தின் மீதான 5 ஆம் நாள் விவாதத்தில் நேற்று உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மாறாக வடக்கிற்கு வழமைக்கு மாறாக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசுக்கு ஆதரவு பெருகியுள்ளது. மக்கள் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்த்து வருகின்றனர்.

சாணக்கியன் தொடர்ந்தும் உரையாற்றுகையில், “வடக்கு மாகாண அபிவிருத்திக்கு பெருமளவிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தை நிர்மாணிப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. தேசிய மக்கள் சக்திக்கு வடக்கு மாகாண மக்கள் பெருமளவில் வாக்களித்தார்கள். ஆனால் மொத்த வரவு செலவுத் திட்டத்தில் 6 சதவீதமான அளவு தான் வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. குறைந்தளவான நிதியை ஒதுக்கி வடக்கு மாகாண மக்களை ஏமாற்றலாம் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நினைக்க கூடாது.

வடக்கு மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளார்கள். காணாமல் போனோரின் உறவுகள் 2,900 நாட்களை கடந்து போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த விடயத்துக்கு ஒரு முன்மொழிவை கூட இதுவரையில் முன்வைக்கவில்லை. இந்த நாட்டில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லையென நீதியமைச்சர் குறிப்பிடுகிறார். பட்டியலை தருமாறு என்னிடம் கேட்கிறார். இந்த நாட்டில் நான் நீதியமைச்சரா அல்லது அவர் நீதியமைச்சரா, வடக்கில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் பொறிமுறை வகுக்கப்படவில்லை.

அபிவிருத்திகளை செய்து இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்று கருத வேண்டாம். புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து தேசிய மக்கள் சக்தி வழங்கிய வாக்குறுதி மீது நம்பிக்கை கொண்டே வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கினார்கள். புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை அரசாங்கம் கிடப்பில் போட்டுள்ளது. தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்தது தவறு என்பதை வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெளிப்படுத்துவார்கள்” என்றார் சாணக்கியன்

புலிகள் உள்ளிட்ட 9 தமிழ் அமைப்புகள் 6 இஸ்லாமிய அமைப்புகள் மீதான தடை நீடிப்பு !

புலிகள் உள்ளிட்ட 9 தமிழ் அமைப்புகள் 6 இஸ்லாமிய அமைப்புகள் மீதான தடை நீடிப்பு !

தமிழீழ விடுதலை புலிகள் உள்ளிட்ட 15 அமைப்புகள் மீதான தடை நீடிக்கப்பட்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்தவால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 2014 இல் வெளியிடப்பட்ட இப்பட்டியலானது 2024 திருத்தி வெளியிடப்பட்டு இருந்தது அதன் தொடர்ச்சியாக நேற்று புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE), தமிழர் புனர்வாழ்வு அமைப்பு (TRO), தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC), தமிழ் இளைஞர் அமைப்பு (TYO), உலக தமிழர் இயக்கம் (WTO), நாடு கடந்த தமிழீழ அரசு (TGTE), உலக தமிழர் நிவாரண நிதியம் (WDRF), தலைமைச் செயலகம் (HQ), கனேடிய தமிழர் தேசிய அவை ஆகிய தமிழ் அமைப்புகளும்; தேசிய தௌஹீத் ஜமாஅத், ஜமாதே மிலாதே ஈப்ராஹிம், விலாயத் அஸ் செய்லானி, டருல் ஆதர் அத்தபவியா, இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம் மற்றும் சேவ் த பேர்ள்ஸ் ஆகிய இஸ்லாமிய அமைப்புகளும் வர்த்தமானி அறிவித்தலூடாக தொடர்ந்தும் தடைசெய்யப்பட்டுள்ளன.

தடை நீடிக்கப்பட்ட 9 தமிழ் அமைப்புகளில் பெரும்பாலானவை கனடா மற்றும் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றன. இவ்வமைப்புகளின் செயற்பாடுகள் மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் தொடர்ச்சியாக நடந்து வருகின்றது. ஆண்டுகள் கடந்து செல்ல இவ்வமைப்புகளின் ஆதரவுத் தளம் குறுகிக்கொண்டே சென்று தற்போது தனிமனித முரண்பாடுகளில் சிக்குண்டு ஒருவரை மற்றவர் தூற்றுவதாகவே காணப்படுகின்றது.

பயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட செயற்பாடுகளுக்கு நிதியளித்த குற்றச்சாட்டின் பேரில் இவை தடை செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். இவற்றின் நிதி மற்றும் பொருளாதார சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.

மேலும், விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்ட 222 தனிநபர்கள் மீதான தடையையும் அரசாங்கம் நீடித்துள்ளது. பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடையவர்கள் அவற்றுக்கு நிதிஅளித்தவர்கள் என்ற அடிப்படையில் இவர்மீதான தடை விதிக்கப்பட்டுள்ளது.

AFD யை ஆதரிக்கும் தமிழர்கள்; ஈழத் தமிழர்கள் வலதுசாரிகளா?

AFD யை ஆதரிக்கும் தமிழர்கள்; ஈழத் தமிழர்கள் வலதுசாரிகளா?

21 ஆம் நூற்றாண்டில் உலகத்தில் வலதுசாரிகள் மிகப் பெரும் வெற்றிகளைப் பெற்று எழுச்சியடைந்து வருகின்றனர். அமெரிக்காவில் 2016 ஆம் ஆண்டு முதல் தடவையாக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றமை தீவிர வலதுசாரி அரசியலுக்கு கிடைத்த வரவேற்பு எனலாம். அதேபோன்று 2014 இல் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடென கருதப்படுகிற இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி வெற்றி பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு படிப்படியாக இந்த நூற்றாண்டில் பல நாடுகளிலும் எழுச்சியடைந்து வந்த தீவிர வலதுசாரிகள், இன்று அமெரிக்கா, நெதர்லாந்து, ஒஸ்ரியா போன்ற பல நாடுகளில் அரியணையில் அமர்ந்து விட்டனர். ஜேர்மனி, பிரான்ஸ், போலந்து, ஹங்கேரி மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் கடும்போக்குடைய வலதுசாரிகள் பெரும் செல்வாக்குடைய கட்சிகளாக வளர்ந்து வருகின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை தீவிர இந்துத்துவ அமைப்பான ஆர்எஸ்எஸ் இன் ஆட்சி மூன்றாவது தடவையாக நடக்கின்றது. 2008 இல் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பல பொருளாதாரப் பிரச்சினைகளை உலகமே எதிர்கொண்டது. இதனால் உள்நாட்டில் ஏற்பட்ட வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதார மந்தநிலைக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் குடியேறிகள் மற்றும் புலம்பெயர் மக்களே காரணம் என்ற கருத்துருவாக்கம் வலதுசாரிகளினால் பரப்பப்படுகிறது. கோப்பிறேட் நிறுவனங்களும் முதலாளிகளும் தமதுக் கெதிரான தொழிற்சங்க நடவடிக்கைகளை தவிர்க்க இந்த கருத்துருவாக்கதை ஊக்குவிக்கின்றன.

அந்தவகையில் ஜேர்மனியில் வாழும் ஈழத்தமிழர்களில் ஒரு சிலர் இன்று நடக்கவுள்ள பொதுத் தேர்தலில் ஜேர்மனியின் கடும்போக்கு வலதுசாரிக் கட்சியான ஏஎப்டியை ஆதரிக்கும் கருத்துக்களை சமூக ஊடகங்களில் பரப்புகிறார்கள். இலங்கைத் தமிழர்கள் அல்லது ஈழத்தமிழர்கள் 2009 இறுதித் யுதத்தின் பின்னரான அரசியல் போக்கில் புலத்திலும் சரி நாட்டிலும் சரி தீவிர வலதுசாரிப் போக்கினை அவதானிக்க கூடியதாக இருப்பதாக சமூக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

2009 பின்னர் புலம்பெயர் நாடுகளில் ஈழத்தமிழர்கள் மத்தியில் பேசப்படும் கடும்போக்கு தமிழ்த் தேசியம் அல்லது குறுந்தமிழ்த் தேசியம் – குறிப்பாக தமிழ்நாட்டு அரசியலில் இனத் தூய்மை வாதம் பேசும் தமிழ் வலதுசாரி சீமானை கொண்டாடும் ஆதரிக்கும் கூட்டம் ஒன்று ஈழத்தமிழர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

எப்படி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கே முதலிடம் என்கிறாரோ அதேபோன்று ஜேர்மனியில் ஏஎப்டி ஜேர்மனியர்களுக்கு முதலிடம் என்கிறதோ அதேமாதிரி சீமான் தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே முதலிடம் என்கிறார். தமிழ்நாட்டை தமிழர்களே ஆள வேண்டும் என்கிறார்.

சீமானின் தமிழ் நாஸிஸத்தை இனப்பற்று மற்றும் தமிழ்த் தேசியம் என கொக்கரிக்கும் ஈழத்தமிழர்கள் நாட்டிலும் புலத்திலும் அதிகரித்துள்ளார்கள். அதைவிட கணிசமான அளவு இஸ்லாமிய போபியா ஈழத்தமிழர்களிடையேயும் அதிகரித்துவருகின்ளது. ஒரு பக்கம் வெள்ளாள சாதிய மேலாதீக்க பெருமை பீத்தல்களும் அதன்பாலான வன்முறைகளும் பெருகியுள்ளன.

2009 வரையான ஆயுதப் போராட்டமாக தமிழீழ விடுதலைப் போராட்டம் நடந்த போது நீறு பூத்த நெருப்பாக சாதிய வேறுபாடுகள் அமுங்கியிருந்தன. 2009 பின் சாதிய வெறி கொழுந்துவிட்டெரிகிறது.

வெள்ளாள சாதிப் பெருமை பேசும் பாதாள உலகக் குழுக்களும் கூட யாழ்ப்பாணத்தில் இயங்குகின்றன.

இலங்கையில் தமது அரசியல் சுயலாபத்திற்காக தீவிர வலதுசாரி தமிழ்த் தேசியவாதத்தை சில கட்சிகளும் மற்றும் அரசியல்வாதிகளும் பேசுகின்றன. குறிப்பாக சிவஞானம் சிறிதரன், கனகரட்ணம் சுகாஸ், பொன்னம்பலம் கஜேந்திரகுமார், இராசையா உமாகரன் என பட்டியல் நீண்டு கொண்டு போகின்றது. இதனை சிங்களத் தரப்பிலும் செய்கின்றனர்.

நாட்டில் நடந்த போரை காரணம் காட்டி சுமார் 20 வருடங்களுக்கு முன்னரே புலம்பெயர்ந்து வாழும் மக்களிடையே இந்த கடும்போக்கு வலதுசாரிச் சிந்தனைகள் மேலோங்கியிருக்கின்றன. புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில் பெரும்பாலும் குழுக்களாக பிரிந்து வாழ்கின்றனர். உழுத்துப்போன சாதியை புலம்பெயர் நாடு வரை கொண்டுவந்து தமக்குள்ளேயே பிளவுபட்டு நிற்கின்றனர். புலம்பெயர் நாடுகளிலிருந்து கொண்டு பணம் அனுப்பி ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் சாதிய குழுக்களை நடத்துகின்றனர்.

புலம்பெயர் தமிழர்கள் தமக்காக போராடிய முன்னாள்ப் போராளிகளும் மாவீரர்களின் குடும்பங்களும் வறுமையில் வாட கோடிக்கணக்கான பணத்தை கோயில்கள் கட்டவும், கோயில்களை புனரமைப்பு செய்யவும் மற்றும் திருக்குறளுக்கு மண்டபமும் இந்துசமயத்திற்கு கண்காட்சி மையமும் அமைக்க கொட்டுகிறார்கள். மாம்பழத் திருவிழாவில் படைத்த மாம்பழத்தை இலட்சங்கள் கொடுத்து ஏலம் எடுக்கிறார்கள். இத்தகைய தான் தோன்றித்தனமான நடவடிக்கைகளை ஆதரிக்க என யாழ் மையவாத வலதுசாரி ஊடகங்களும் துணை போகின்றன.

தாம் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் வெள்ளையர்கள் அல்லாத இஸ்லாமிய மக்களை சந்தேகத்தோடு பார்க்கின்றனர். தாம் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் வெள்ளையர்களிடம் குட்டு வாங்கிக் கொண்டு சமரசம் செய்து கொண்ட வாழ தயாராக இருக்கும் ஈழத்தமிழர்கள் சக பிற வெளிநாட்டவர்களுக்கு எதிரான மனநிலையை கொண்டிருக்கின்றனர். இந்தப்போக்கு புலம்பெயர் நாடுகளில் இரண்டாம் தலைமுறையினரிடம் குறைவாக காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஈழத்தமிழர்களிடம் மேலோங்கி வரும் பேரினவாத மனப்பாங்கு தமிழர்கள் நாம் தான் உயர்ந்தவர்கள். எங்களுடைய கலாச்சாரம் , மொழி மற்றும் மதம் மட்டுமே உயர்ந்தது என்ற உயர்வுச் சிக்கல் அதிகரித்திரிக்கின்றது. இதனாலேயே சீமான் போன்ற பிற்போக்குவாதிகளை ஆதரிக்கின்றனர்.

கடந்த வாரம் ஐரோப்பிய நாடுகளில் “நம்ம பொடியல் ‘’ என்ற தலைப்பில் இசைப்பயணம் மேற்கொண்ட ரப் பாடகர் வாகீசன் இராசையா குழுவினரின் இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து கலந்துரையாடல் தொடங்கப்பட வேண்டியதன் அவசியத்தை சமூகச் செயற்பாட்டாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

சிறுபான்மை மக்களுக்கெதிரான கருத்துக்களை விதைத்து எவ்வாறு மோடி அரசு இந்தியாவில் இந்துத்துவ மத அரசியலை நடத்துவதை விமர்சிக்கும் ஆய்வாளர்கள். ஈழத்தமிழர்கள் இடையே வளர்ந்து வரும் தீவிர தேசியவாத வலதுசாரிச் சிந்தனைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

கனடாவில், லண்டனில் தமிழர் ஒருவர் எம்பியானால் கொண்டாடும் புலம்பெயர் தமிழர்கள், சீமான் பேச்சை கேட்டு தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும் என்கின்றனர். அதேநேரம் உலகெங்கும் புலம்பெயர்ந்து தொழில் புரியும் ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்யக் கூடாது என்கின்றனர். கிட்லர் எப்படி யூத இனமக்களை ஜேர்மனியர்களுக்கு எதிர்நிலையில் நிறுத்தி யூதர்களை எதிரிகளாக சித்தரித்து தனது ஆட்சியை நிலைநிறுத்தினார், அதேமாதிரி ஏஎப்டி கட்சி இஸ்லாமியர்களை மற்றும் வெளிநாட்டு மக்களை ஜேர்மனியர்களுக்கு எதிர்நிலையில் நிறுத்தி வாக்கு சேகரிக்க முயற்சிக்கின்றது. இதேபாணியை சீமான் தமிழ்நாட்டில் திராவிடக் கொள்கையை தமிழத் தேசியத்துக்கு எதிராக நிறுத்தி தனது பிழைப்பு அரசியலை முன்னெடுக்க முயல்கிறார்.

ஈழத்தமிழர்கள் மத்தியில் மெல்ல மெல்ல உருவாகி வரும் இந்த தீவிர வலதுசாரி தமிழ்த்தேசிய வாதம் முறியடிக்கப்பட வேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்ட காலத்தில் சரிபிழைக்கு அப்பால் எப்போதுமே பிறிதொரு இனத்தினை முற்றுமுழுதாக வெறுத்து இனவழிப்பு செய்யும் மனநிலையோ கொள்கையோ காணப்பட்டிருக்கவில்லை. அவ்வப்போது பரஸ்பர சந்தேகம், தவறான புரிந்துணர்வு மற்றும் பழிவாங்கல் என தமிழர் தரப்பால் இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சிங்கள மற்றும் முஸ்லீம் மக்கள் மீதான வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் அத்தாக்குதல் தற்காலிகமானவையாகவும் பிழையான வழிநடத்தல்களாகவுமே காணப்பட்டிருந்தன. தமிழீழ விடுதலைப்புலிகள் உட்பட ஏனைய போராட்ட இயக்கங்களிடமும் கூட இஸ்லாமிய வெறுப்பு காணப்பட்டிருக்கவில்லை. ஆனால் புலிகள் அற்ற தற்காலத்தில் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களிடம் ஒரு இஸ்லாமிய போபியா காணப்படுகின்றது.

ஜேர்மனியில் வருகிற தேர்தலில் 20 வீத த்திற்கு அதிகமான வாக்குகளை பெறும் என எதிர்பார்க்கப்படும் கடும்போக்கு தேசியவாதம் பேசும் ஏஎப்டி கட்சியை கண்டித்து ஜேர்மன் மக்கள் தெருவில் இறங்கி போராடுகிறார்கள். கிட்லரின் நாஸி ஆட்சியினால் ஏற்பட்ட அழிவுகளிலிருந்து பாடம் படித்த ஜேர்மனியர்கள் ஏஎப்டியை வெறுக்கிறார்கள். தமிழர்களும் வரலாறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். 30 வருட யுத்தம் தந்த வடுக்கள் மற்றும் வலிகளை மறக்க கூடாது.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழர் அறம் நிலைநாட்டபட வேண்டும்.

எண்பதுக்களில் தாயகத்தின் குரலாக இருந்த ஆனந்தி அக்கா பிற்காலத்தில் புலிகளின் குரலாகி மௌனித்துக் கொண்டார் ! : தேசம் த ஜெயபாலன்

தமிழீழ விடுதலைப் போராட்டம் வீச்சுப் பெற்ற 1980க்களின் முற்பகுதியில், இலங்கைப் பேரினவாத அரசுகளின் கொடும் கரங்கள் தமிழ் மக்களை நசுக்கிய நாட்கள். இலங்கையின் வடக்கு கிழக்கில் என்ன நடைபெறுகின்றது என்பதை இலங்கைத் தேசிய ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்த காலம். மின்சார வசதியற்ற கிராமங்கள். தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாத வரவேற்பறைகள். வானொலிகள் கோலோச்சிய காலகட்டம். அன்று பத்திரிகைகளை வாங்கும் வசதி குடும்பங்களில் இல்லை. சனசமூக நிலையங்களில் போய் பத்திரிகை படிக்கின்ற காலம். சன சமூக நிலையங்களிலும் ஒவ்வொரு பக்கத்தை ஒவ்வொருவர் வைத்து வாசிப்பார்கள். தகவலுக்கான கேள்வி மித மிஞ்சியிருக்கும். ஆனால் தகவல் கிடைப்பதற்கான வழிகள் மிக மிக அரிதாக இருந்த அந்தக் காலம்.

விரல் நுனியில் தட்டினால் செய்திவரும் இன்றைய காலத்தில் செய்திகளின் ஆயட்காலம் மிக மிக அரிது. அன்று நிலைமை அவ்வாறில்லை. 1986 இல் யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்துகின்றார்கள் என்பதை அந்த ரெலோ இயக்கப் போராளிகள் அறிந்து உணர்ந்து கொள்ளவே பல மணிநேரம் ஆகியது. ஆவ்வாறான ஒரு காலகட்டத்தில் மக்கள் செய்திகளுக்காக ஏங்கினர்.

பிபிசி தமிழோசையில் ஆனந்தி அக்காவின் குரலால் தாயகத் தமிழர்கள் ஈர்க்கப்பட்டு இருந்தனர். அதேபோல் பிபிசி தமிழோசையில் சங்கர் அண்ணா, விமல் சொக்கநாதனும் குறிப்பிடத்தக்கவர்கள். சமகாலத்தில் பணியாற்றியவர்கள். விமல் சொக்கநாதன் சில ஆண்டுகளுக்கு முன் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டமை வருத்தத்திற்குரிய பதிவு. இவர்கள் வரிசையில் தாயக மக்களை தன்வசப்படுத்திய மற்றையவர் பிலிப்பைன்ஸ் வெரித்தாஸ் வானொலி அறிவிப்பாளராக இருந்த ஜெகத் கஸ்பர்.

எண்பதுக்களில் இவர்களின் குரல்களுக்காக மக்கள் தவமிருந்தனர். ஒரு நாளைக்கு 30 நிமிடங்களே ஒலிபரப்பாகும் இச்செய்தித் சேவைவைகளினூடாக மட்டுமே வடக்கு, கிழக்கு மற்றும் புலம்பெயர் நாடுகளில் வாழும் மக்களால் இலங்கையின் வடக்கு, கிழக்கில் என்ன நடக்கின்றது என்பதை அறியக் கூடியதாக இருந்தது. அன்றை நாட்களில் அப்போதைய இலங்கை அரசு பற்றரிகளைத் தடைசெய்த போது சைக்கிள் டைனமோக்களை வைத்து செய்தி கேட்ட காலங்கள் அது. தமிழ் மக்கள் மிக நெருக்கடியாக இருந்த காலத்தில் அவர்களுக்கு நம்பிக்கை அளித்த குரல் பிபிசி ஆனந்தியின் குரல். அதனால் அவர் என்றும் தமிழ் மக்களின் ஒரு செலிபிரேற்றியாகவே வாழ்ந்தார்.

இதனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் நெருக்கமானவராகவும் குடும்ப நண்பராகவும் மாறினார். செய்தி சேகரிப்புக்காகவும் அதற்கு மேலாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளுக்கும் மிகுந்த நட்பானார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை நேர்கண்ட மிகச் சிலரில் பிபிசி ஆனந்தி அக்கா குறிப்பிடத்தக்கவர். அதைவிட இந்தியாவின் ஹிந்து பத்திரிகையின் ஊடகவியலாளர் அனிதா பிரதாப், ஜெகத் கஸ்பர் ஆகியோரும் வே பிரபாகரனை நேர்கண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் பின்னணியில் பிபிசி ஆனந்தி அக்கா ஒரு ஊடகவியலாளராக அல்லாமல் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சாரப் பீரங்கியாகவே மாறினார். துரதிஸ்ட்ட வசமாக பிபிசி தமிழோசையில் இலங்கைத் தமிழர்களின் பாத்திரம் இவரோடு முடிவுக்கு வந்தது. ஆனந்தி அக்கா, விமல் சொக்கநாதன் ஆகியோரின் காலகட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் உள்வாங்கப்பட்டு அடுத்த தலைமுறைக்கு வளர்த்தெடுக்கப்பட வில்லை. அதனால் பிபிசி தமிழோசையில் இலங்கைத் தமிழர்கள் அதன் பாத்திரத்தை இழந்தனர்.

யாழ் சாவகச்சேரியைச் சேர்ந்த ஆனந்தி சூரியப்பிரகாசம் தனது சொந்த வாழ்வில் பல நெருக்கடிகளைச் சந்தித்தவர். உறவை விபத்தில் இழந்தவர். பிற்காலங்களில் முதமையில் தனது கணவரையும் இழந்தவர். இலங்கை வானொலியில் தயாரிப்பாளராக இருந்தவர். அப்போது வானொலி நாடகங்களில் நடித்தவர். அறிவிப்பாளராகப் பணியாற்றியவர். 1970க்களில் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்து பகுதிநேர அறிவிப்பாளராக பணியாற்ற ஆரம்பித்து பின் முழுநேர அறிவிப்பாளராக 2005 ஓய்வுபெறும்வரை இருந்தார். 2025 பெப்ரவரி 21இல் அவர் குரல் மௌனமானது.

ஆனந்தி அக்கா முரண்பட்ட கருத்துடையோருடனும் உறவைப் பேணி வருபவர். தமிழீழ விடுதலைப் புலிகள் மீது அவர் பற்றுக்கொண்டிருந்த போதும் ஏனைய விடுதலைப் போராட்ட அமைப்புகளுடனும் நல்லுறவைப் பேணி வந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஈபிடிபியினருக்கும் இடையே மோசமான பகைமுரண்பாடு நிலவிய காலகட்டத்திலும், தோழர் டக்ளஸ் தேவானந்தவுடனும் நல்லுறவைப் பேணியவர்.

தமிழ் புலமை மிக்க ஆனந்தி அக்கா தமிழ் இலக்கியத்திலும் மிகுந்த ஆர்வம் மிக்கவர். தொலைபேசி உரையாடல்களில் தமிழ் இலக்கியத்திலிருந்து பாடல்களை எனக்கு பாட்டிக்காட்டியுள்ளார். எப்போதும் ‘டேய்’, ‘என்னடா’ என்று வாஞ்சையோடு அழைக்கும் அவர், ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றுக்கு என்னையும் வற்புறுத்தி அழைத்திருந்தார். அவர் பல நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே என்னை அழைத்திருப்பார் என்பதும் எனக்குத் தெரியும். அப்போது என்னருகில் வந்து சொன்னார், “எப்பிடியும் போய் என்னைத் திட்டித்தான் எழுதப்போகின்றாய்” என்று வாஞ்சையுடன் திட்டிக்கொண்டார். நான் பிரித்தானியாவில் அவரைச் சந்தித்த பின் அவரை ஒரு ஊடகவியலாளராக ஒரு போதும் பார்த்ததில்லை.

இடையிடையே தொலைபேசியல் கதைத்துக் கொள்வார். என்னுடைய தனிப்பட்ட குடும்ப பிரச்சினைகள் உட்பட. ஒரு சகோதரியாக ஒரு நல்ல பண்பாளராக எனக்கு ஆனந்தி அக்கா மீது எப்போதும் ஒரு கௌரவம் உண்டு.

ஜேர்மன் தேர்தலுக்குப் பின் இலங்கையர்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்களா? ஜேர்மன் தேர்தல் பார்வை

ஜேர்மன் தேர்தலுக்குப் பின் இலங்கையர்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்களா? ஜேர்மன் தேர்தல் பார்வை

ஜேர்மனி எஸ்டிபி கட்சியின் பிரமுகர் ரட்ணசிங்கம் அனஸ்லி உடன் நேர்காணல்