27

27

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குங்கள் – சுமந்திரனும் வலியுறுத்தல் !

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குங்கள் – சுமந்திரனும் வலியுறுத்தல் !

பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதாக வாக்குறுதியளித்து ஆட்சிபீடமேறிய தற்போதைய அரசாங்கம், அவ்வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வெள்ளவத்தை தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் வலியுறுத்தினார்.

தற்போதைய அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 15 பேரில் இருவர் மட்டுமே தமிழர்கள். ஆனால் தமிழ் தேசியம் பேசுபவர்கள் தமிழர்களுக்கு எதிராக மட்டும் பயங்கரவாதத் தடைச்சட்டம் மேற்கொள்ளப்படுகின்றபோது கூட் இவ்வளவு ஆக்ரோசமாக அதனை நீக்கச் சொல்லிக் கேட்கவில்லை. ஆனால் தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டம் பெருமளவில் பாதாள குழுக்களுக்கு எதிராகப் பாய்ந்துகொண்டிருக்கின்ற இந்நேரத்தில் தமிழ் தேசியம் பேசுபவர்கள் பெரும் கொள்கைப் பிடிப்போடு பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோருகின்றனர்.

சில தினங்களுக்கு முன் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குங்கள் எங்களுடைய சகோதரர்கள் உங்களுக்குப் பிச்சை போடுவார்கள் என்று பா உ அர்ச்சுனா முழங்கினார். பொன்னம்பலம் கஜேந்திர குமார் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கினால் வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருப்போம் என்று தெரிவித்திருந்தார். பாதாள குழுக்களின் மனித உரிமைகள் மீது தமிழ் தேசியத்துக்கு ரொம்பவும் கருணைதான் என்கிறார் ஆய்வாளர் வி சிவலிங்கம்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த சுமந்திரன், இச்சட்டம் நடைமுறையிலிருந்த காலப்பகுதியில் பாரதி ஊடகவியலாளராகப் பணிபுரிந்ததுடன், இச்சட்டத்தின் கீழ் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களை நாம் பார்த்திருக்கிறோம். தற்போதைய ஆட்சியாளர்கள் ஏற்கனவே வாக்குறுதியளித்ததைப் போல் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும்.

அதேவேளை இச்சட்டத்தைப் பிறிதொரு சட்டத்தினால் பதிலீடு செய்யாமல், முழுமையாக நீக்க வேண்டியது மிகமிக அவசியமானதாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 

மத்திய வங்கி மோசடி அர்ஜுன மகேந்திரனை அழைத்து வர வேண்டிய பொறுப்பு ரணிலுக்கு உள்ளது – ஆளும் தரப்பு !

மத்திய வங்கி மோசடி அர்ஜுன மகேந்திரனை அழைத்து வர வேண்டிய பொறுப்பு ரணிலுக்கு உள்ளது – ஆளும் தரப்பு !

 

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பிலான விசாரணைகளுக்கு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை அழைத்து வருவதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜதிஸ்ஸ தெரிவித்தார்.

அவரை இலங்கைக்கு நாடு கடத்த அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தெரிவித்த அமைச்சர், அவர் மீதான வழக்கு அவர் முன்னிலையிலோ அல்லது இல்லாமலோ தொடரும் என்றும் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதாகக் கூறி அர்ஜுன மகேந்திரன் நாட்டைவிட்டு வெளியேறியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னர் பாராளுமன்றத்தில் கூறியதாகக் கூறிய அமைச்சர், மகேந்திரன் மீண்டும் நாடு திரும்புவதை உறுதி செய்வது முன்னாள் ஜனாதிபதியின் கடமை என்றும் கூறினார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி நடைபெற்று பெப்ரவரி மாதத்துடன் 10 ஆண்டுகள் நிறைவடைவதும் கவனிக்கத்தக்கது.

இலங்கை எரிபொருள் சந்தையில் அமெரிக்காவின் எரிபொருள் நிறுவனம் !

இலங்கை எரிபொருள் சந்தையில் அமெரிக்காவின் எரிபொருள் நிறுவனம் !

அமெரிக்காவுக்குச் சொந்தமான RM பார்க்ஸ் , ஷெல் நிறுவனம் இலங்கையில் முதலாவது எரிபொருள் நிலையத்தை அம்பத்தலை பகுதியில் நேற்றையதினம் திறந்து வைத்தது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

கலிபோர்னியாவைத் தளமாகக் கொண்ட நிறுவனம் இலங்கையில் இந்த எரிபொருள் நிலையத்தைத் திறந்துள்ளமை பெருமையளிப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தமது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார் . எரிபொருள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு இந்த நிறுவனமும் பங்களிப்பு வழங்கும் என ஜூலி சங் கூறினார்.

 இலங்கையில் பாலின வெறுப்பு பேச்சு அதிகரிப்பு – ஐ.நா தகவல்

இலங்கையில் பாலின வெறுப்பு பேச்சு அதிகரிப்பு – ஐ.நா தகவல்

 

2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து இலங்கையில் வெறுப்புப்பேச்சு 113 சதவீதம் அதிகரித்துள்ளதாக கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

பாலின அடிப்படையிலான வெறுப்புப்பேச்சு 159 சதவீதம் அதிகரித்தமையால் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்து இனம் அல்லது மத ரீதியில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சு 8 மடங்கு அதிகரித்ததாக தெரிவித்துள்ளது.

அதேநேரம் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஒத்துழைப்பு மற்றும் உள்ளூர் அமைப்புகளின் தீவிர முயற்சிகள் மூலம், சிறுபான்மையினருக்கு எதிரான நிகழ்நிலை பிரசாரங்கள் 2021 ஆம் ஆண்டு முதல் குறைந்தன.

இருப்பினும், மதங்கள் மற்றும் பெண்களை இலக்குவைத்து குறிப்பாக பொது நிகழ்வுகளில் ஈடுபடுபவர்களை அல்லது பொதுவெளியில் கருத்துகளை வெளியிடுபவர்களுக்கு எதிரான வெறுப்புப்பேச்சு தொடர்வதாக ஐக்கிய நாடுகள் சபை அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகள் பிச்சையல்ல. அது உரிமை” – பா.உ அர்ச்சுனாவுக்கு ஈ.பி.டி.பி பதில் !

“வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகள் பிச்சையல்ல. அது உரிமை” – பா.உ அர்ச்சுனாவுக்கு ஈ.பி.டி.பி பதில் !

வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகள் என்பது யாரும் யாருக்கும் போடும் பிச்சை அல்ல, குறித்த ஒதுக்கீடுகள் மக்களின் உரிமை என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியி்ன் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் யாழ் ஊடக மையத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் மேலும் தெரிவிக்கையில், “இந்த நாட்டினிலே வாழ்ந்து கொண்டிருக்கின்ற அனைவருமே, வரி செலுத்துநர்களாகவே இருக்கின்றோம். சாதாரண குடும்பம் ஒன்று தங்களுடைய அன்றாடச் செயற்பாடுகளின் ஊடாக மாதாந்தம் 40,000 ஆயிரம் ரூபாய் வரியை மறைமுகமாக செலுத்திக் கொண்டிருக்கின்றது. ஆக, வரவு செலவுத் திட்டத்தில் ஊடாக கிடைக்கின்ற நிதியொதுக்கீட்டை பெற்று பயன்படுத்துவது என்பது எமது உரிமை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு வரவு செலவுத் திட்டத்தில், ஒவ்வொரு துறைக்காவும் ஒதுக்கீடுகளிலும் எமக்கான ஒதுக்கீடுகள் காணப்படுகின்றன.

அதைவிட மாகாண சபைக்கான ஒதுக்கீடுகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றிலும் சரியான முறையில் எமக்கான ஒதுக்கீடுகள் வழங்கப்படுகின்றனவா என்பதை தொடர்ச்சியாக அவதானித்து அதனை உறுதிப்படுத்துவதே மக்கள் பிரதிநிதிகளின் கடப்பாடாக இருக்க முடியும்.

கடந்த காலங்களில் குறுகிய அரசியல் நலன்களுக்காகவும் சுய தேவைகளுக்காகவும் எமது மக்களை உணர்ச்சியூட்டும் வகையில் எம்மவர்கள் சிலரினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளும் எமது மக்களின் இன்றைய கையறு நிலைக்கான காரணங்களில் ஒன்று என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அனுர குமார திசாநாயக்க முன்வைத்த வரவு செலவு திட்டத்தில் வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு பிச்சை போடப்பட்டுள்ளது எனவும் அந்த பிச்சையை விட அதிக பிச்சையை பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கினால் நான் பெற்றுத்தருவேன் என நாடாளுமன்றத்தில் தெரிவித்தமையும் கவனிக்கத்தக்கது.

 

உள்நாட்டு பொறிமுறைகளை அரசியலமைப்பிற்குள் கொண்டுவந்து தீர்வு எட்டப்படும் – ஜெனீவாவில் அமைச்சர் விஜித ஹேரத் !

உள்நாட்டு பொறிமுறைகளை அரசியலமைப்பிற்குள் கொண்டுவந்து தீர்வு எட்டப்படும் – ஜெனீவாவில் அமைச்சர் விஜித ஹேரத் !

காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் போன்ற உள்நாட்டு நிறுவனங்கள் பலப்படுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஜெனீவாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது அமர்வில் தெரிவித்துள்ளார்.

இம்மாநாட்டில் இம்முறை தமிழ் தரப்புகளின் மனித உரிமைத் தளம் மிகப் பலவீனப்பட்டுப் போயுள்ளது. தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களே நீண்டகாலமாக மனித உரிமைக்காகச் செயற்பட்டு வந்த மரியதாஸ் பொஸ்கோவைக் காட்டிக்கொடுத்து விட்டனர் என்ற குற்றச்சாட்டு பலமாகியுள்ளது. மரியதாஸ் பொஸ்கோ ஜனவரி 16 இல் இடம்பெற்ற கூட்டத்தொடரில் வைத்து சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை ஜெனிவாவின் மனித உரிமைக் கூட்டத்தொடர் ஆரம்பமானபோது மனித உரிமை ஆணையாளர் வோல்கர் டேக் தனது ஆரம்ப உரையில் இலங்கை பற்றி எதனையும் குறிப்பிடவில்லை. மேலும் அமைச்சர் விஜித ஹெரத் தன்னுடைய உரை முடிந்து வெளியே வந்த போது தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் சிலர் அவரோடு உரையாட முற்பட்டனர். அது தொடர்பில் தமிழ் மனித உரிமைச்செயற்பாட்டாளர் கூறியது:

அமைச்சர் விஜித ஹேரத் தனது உரையில், தற்போதைய பாராளுமன்றமானது, இலங்கை வரலாற்றில் இரண்டு மலையக சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் ஒரு பார்வைக் குறைபாடுள்ள நபர் ஆகியோரைக் கொண்டதும், அனைத்து தரப்பினரையும் பிரதிநித்துவப்படுத்துவதுமான ஒன்றாகவுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான தேசிய பாதீட்டில், சமூக நலன் மற்றும் பாதுகாப்பிற்கான அதிகரித்த ஒதுக்கீடு உட்பட மக்களுக்கு மிகவும் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கான, தொடர் நடவடிக்கைகளுக்கு உறுதியளித்துள்ளோம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சமூக-பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதற்கும், மீள்குடியேற்றம், வீடளித்தல், இழப்பீடு மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு போன்ற முக்கியமான தேவைகளை நிவர்த்தி செய்வதற்குமான சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஜனவரி முதலாம் திகதி ஜனாதிபதியால் தொடங்கப்பட்ட, “தூய்மையான இலங்கை” திட்டத்தின் மூலம், அரசாங்கம் ஒரு புதிய அரசியல் கலாசாரத்தையும் தார்மீக மற்றும் நெறிமுறை நிர்வாகத்திற்கான அர்ப்பணிப்பையும் அறிமுகப்படுத்தியுள்ளது. எசமூகங்களுக்கு இடையிலான இடைவெளிகளைக் குறைப்பதற்கான எமது, தொலைநோக்குக்கு ஏற்ப, இலங்கை தினத்தை அறிவிக்க ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார்.

முரண்பாடுகள் தவிர்த்த, ஏனைய எஞ்சியுள்ள சவால்களை எதிர்கொள்ள நிறுவப்பட்ட உள்நாட்டு செயன்முறைகள் சுயாதீனமான மற்றும் நம்பகமான முறையில் தங்கள் பணிகளைத் தொடரும் என்பதை நாம் உறுதி செய்வோம். காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் போன்ற உள்நாட்டு நிறுவனங்கள் மேலும் பலப்படுத்தப்படும். அனைத்து இலங்கையர்களின் நம்பிக்கையையும் பெறும் செயன்முறையொன்றை உறுதி செய்வதற்காக, உண்மை மற்றும் நல்லிணக்கக் கட்டமைப்பின் வரையறைகள், பங்குதாரர்களின் சாத்தியமான மிகப்பரந்த பிரிவினருடன் மேலும் விவாதிக்கப்படும்.

உள்நாட்டு பொறிமுறைகளை அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் நம்பகமானதாகவும், உறுதியானதாகவும் மாற்றுவதே எமது நோக்கமாகும். இலங்கை சமூகத்திற்குள் பதட்டங்களை ஏற்படுத்தும் வன்முறைச் செயற்பாடுகளை விசாரிக்க உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கப்படும் என்றார் அமைச்சர் விஜித ஹேரத்.

சத்தியமூர்த்திக்கு எதிராக மருத்துவர்கள் போர்க்கொடி

சத்தியமூர்த்திக்கு எதிராக மருத்துவர்கள் போர்க்கொடி

 

யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்திக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கையை இன்று தொடக்கம் முன்னெடுத்துள்ளனர். பணிப்பாளர் சத்தியமூர்த்தி மீது அண்மைக் காலமாக மருத்துவ அசமந்தப் போக்கோடு நிதி நிர்வாக முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டுகளும் நிறையவே வெளிவந்தன. பா உ அர்ச்சுனாவும் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தொடர்பில் பல குற்றச்சாட்டுக்களை அடுக்கியிருந்தார்.

அதே போல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரும் ஒரு மாபியா போல் செயற்படுவதாக பா உ அர்ச்சுனாவும் ஏனையவர்களும் நீண்டகாலமாக குற்றம்சாட்டி வருகின்றனர். மருத்துவ கலாநிதி நாகநாதன் தேசம்நெற் இல் யாழ் மருத்துவமனையில் நடைபெறும் பல்வேறு விடயங்களையும் நாசுக்காக தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பணிப்பாளர் சத்தியமூர்த்திக்கு எதிரான போராட்டம் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நோயாளிகளது பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியமை மற்றும் நிர்வாகத்தைத் தக்க வைக்க மருத்துவமனை ஊழியர்களிடையே தொடர்ந்தும் சர்ச்சைகளை உருவாக்கும் முயற்சிகளைத் தொடர்ச்சியாக மருத்துவமனைப் பணிப்பாளர் மேற்கொண்டு வருவதை எதிர்த்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட நாம் தீர்மானித்துள்ளோம்.

வைத்தியசாலை நிர்வாகத்தோடு இரண்டு மாதங்களாக கலந்துரையாடல்களை மேற்கொண்டு வந்த நிலையிலும் நோயாளர்களின் பாதுகாப்பை யாழ் போதனா வைத்தியசாலையினது நிர்வாகம் உறுதி செய்யத் தவறியமையால், தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

பின்வரும் காரணங்களுக்காகவே நாம் எமது தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளோம்.

1.நோயாளர் அவசர சேவைகளுக்கான பிரிவுகளுக்கு ஆளணி பற்றாக்குறையாகவும் அதே நேரம், சாதாரண பிரிவுகளுக்கு அதிகமான ஆளணியும் பொருத்தப்பாடற்ற விதத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதனால் நோயாளரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் உள்ளது.

2. யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகத்தின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக விபத்து, அதி தீவிர சிகிச்சைப் பிரிவு (ATICU) இல் ஒரு ஆபத்தான பணியாளரைப் பொறுப்பிலிருத்தி, அர்ப்பணிப்பான பணியாளரை இடம் மாற்றியுள்ளமை நோயாளிகளின் உயிராபத்திற்கேதுவான பாதகமான நிலைமை நிலையை உருவாக்கியுள்ளது.

3. சில ஊழியர்களின் பொறுப்புணர்ச்சி அற்ற நடவடிக்கைகள் தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் சுட்டிக் காட்டியபோதும் அவர்களைத் திருத்துவதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

4. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மருத்துவ நிபுணர்களால் தகவல்கள் கோரப்படும் போது தவறான தகவல்களை வழங்குவதுடன் தகவல்களை வழங்குவதில் தாமதம் செலுத்துதல்.

5. மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ள அனைத்து நோயாளிகளினதும் பாதுகாப்பை உறுதி செய்யும் வரை தொழிற்சங்க நடவடிக்கையாக, அதிதீவிர சிகிச்சை தவிர்ந்த சாதாரண பணிகளையும் இடை நிறுத்த முடிவு செய்துள்ளோம்.

2.5: இது நோயாளரின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள முடிவு என்பதனால் நீண்டகால நோக்கிலான சரியான முடிவுகள் எட்டப்படும் வரை தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடர வாய்ப்புள்ளது.

2.6: இதனால் யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைகள் தவிர்ந்த ஏனைய சிகிச்சைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என்பதனை மன வருத்தத்துடன் நாம் தெரிவித்துக் கொள்கின்றோம்” என்றுள்ளது.

2.7: “மருத்துவர்களது போராட்டம் அரச மருத்துவமனைகள் மீது நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தி, தனியார் மருத்துவமனைக்கு நோயாளர்களை வரவழைக்கும் உத்தி” என பத்தி எழுத்தாளர் சி. கருணாகரன் குற்றஞ்சாடியுள்ளார்.

2.8: “நிர்வாக முறைகேடுகள், குறைபாடுகள் இருந்தால் அவற்றை உரிய ஆதாரங்களோடு வெளிப்படுத்தி, நிர்வாக ரீதியாகவும் சமூக ரீதியாகவும் போராட வேண்டும் என்றும் நோயாளிகளின் உயிரோடும் வாழ்க்கையோடும் விளையாடக்கூடாது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுரியூப்பர்ஸின் புதிய வியாபாரம்: ஹெல்ப்பிங் வீடியோ ( helping video ) சமூகச் சிதைவை வியாபாரமாக்கி தன்மானத்தைதொலைக்கும் யுரியூப்பர்ஸ்

யுரியூப்பர்ஸின் புதிய வியாபாரம்: ஹெல்ப்பிங் வீடியோ ( helping video ) சமூகச் சிதைவை வியாபாரமாக்கி தன்மானத்தைதொலைக்கும் யுரியூப்பர்ஸ்

 

சமீபகாலங்களில் சமூக ஊடகங்களில் உதவி கேட்கும் காணொலிளும் கோரிக்கைகளும் பரவிக்கிடக்கின்றன. உலகளாவிய ரீதியில் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி மற்றும் இணையப் பயன்பாடு போன்றனவே இதற்கு பின்னணியாக காணப்படுகிறது. உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் உதவி கேட்பதையே பெரும் கௌரவக் குறைவாக பார்த்த காலம் ஒன்றும் இருந்தது. மிகவும் நெருக்கடியான சூழ்நிலைகளில் மட்டுமே அடுத்தவர்களின் உதவியை நாடும் தலைமுறையினர் மத்தியில் அந்நியர்களிடம் உதவி கேட்பதை கூச்சமாகவே நினைக்காத தலைமுறையினர் உருவாகிவிட்டனர்.

இலங்கையைப் பொறுத்தவரை முப்பது வருடங்களுக்கு மேல் நடந்த யுத்தம் இந்த நிலமைக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் புலம்பெயர்ந்து ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு சென்றதையையும் குறிப்பிடலாம்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை காணப்பட்டது. அப்போது புலம்பெயர் உறவுகள் தாயகத்து உறவுகளுக்கு அன்றாடம் உயிர்வாழ உதவிகள் புரிந்தனர். தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னி மாவட்டம் மற்றும் கிழக்கு மாகாணத்தின் பகுதிகளில் புலம்பெயர் நாடுகளில் உறவுகளை கொண்டிருந்தவர்கள் மிகக் குறைவாகவே காணப்பட்டிருந்தனர். அப்படியிருந்தும் போர்க்காலத்தில் கிடைத்த நிவாரணங்கள் மற்றும் உள்ளூரில் மேற்கொண்ட சுயதொழிலில் முயற்சிகள் மூலம் தன்னிறைவாக வாழ்ந்தார்கள். தமக்கு அன்றாடப் பயன்பாட்டுக்கு தேவையான காய்கறிகளை அவர்களே வீட்டுத்தோட்டங்களில் பயிரிட்டனர்.

யுத்தம் முடிவடைந்த 15 வருடங்களில் நிலமை மிக மோசமாகி விட்டது. தன்னிறைவுப் பொருளாதாரம் மறைந்து தங்கியிருத்தல் பொருளாதார சமூக முறைமையொன்று உருவாகியுள்ளது. அடுத்தவர்களிடம் கையேந்துவது என்பது ஈழத்தமிழர்களின் கலாச்சாரத்தில் ஒன்றாகிக் கலந்து வருகிறது துரதிர்ஷ்ட வசமானது என சமூகவியலாளர்கள் கவலையடைந்துள்ளனர். இந்தக் கலாச்சாரம் சாமானிய மக்களிடம் மட்டுமல்ல இலங்கை அரசாங்கமும் அதற்கு விதிவிலக்கல்ல. இலங்கையை மாறி மாறி ஆண்டு வந்த ஆட்சியாளர்களும் உலகவங்கி, சர்வதேச நாணய நிதியம், சீனா, இந்தியா மற்றும் ஜரோப்பிய ஒன்றியம் என உலகெங்கும் கையேந்தி கடன் வாங்கியுள்ளது.

இது ஒருபுறம் இருக்க, உதவிகளை புலம்பெயர் மக்களிடம் வாங்கிக் கொடுக்க தரகர்களும் உருவாகி விட்டார்கள். சிலர் தாமாகவே உதவி கோரும் காணொளிகளை மற்றும் கோரிக்கைகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டு உதவி பெறுகின்றனர். பலரால் அது முடிவதில்லை. ஆனால் இதற்கெனவே யுரீயூப் சனல்கள் நடத்துபவர்கள், இதில் இடைத்தரகர்களாக செயல்படுகின்றனர்.

யுரீயூப்பில் உதவி வீடியோக்களைப் போடுபவர்களால் பல்வேறு சர்ச்சைகள் ஏற்படுகின்றன. உதவி வீடியோக்கங்கள் போடுபவர்கள் தன்னிச்சையாக செயற்படுகின்றார்கள். அவர்களை ஒழுங்குபடுத்தும் கட்டுப்படுத்தும் எந்த விதிமுறைகளும் இல்லை.

இவ்வாறான உதவி வீடியோக்களை தயாரிக்கும் போது தனிநபர் தகவல்ப் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விடையங்களில் கவனம் செலுத்தப்படுவதில்லை. சம்பந்தப்பட்ட காணொளிகளில் தோன்றும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையும் ஏற்படுத்தப்படுகிறது. பல சமூகச் சீரழிவுகள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்களும் இவ்வாறான உதவிக் காணொளிகளை யுரியூப்பில் தயாரிப்பவர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. துஸ்பிரயோகங்கள் இடம்பெறும் போது பொறுப்புக் கூறலும் இல்லாமல் போகின்றது.

சமீப நாட்களில் இவ்வாறான உதவி வீடியோக்களை வெளியிடும் யுரீயூப்பர்களுக்கிடையேயான வாய்க்கால் சண்டையால் பல அதிர்ச்சிகரமான விடயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இந்த விடயம் எப்படி ஒரு பணம் கொட்டும் தொழிலாக மாறியுள்ளது. அப்பாவி பெண்கள், ஆதரவற்றோர் மற்றும் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் சுரண்டப்படுகிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இப்படி வீடியோக்கள் போட்ட யுரீயூப்பர்ஸ் பெரும் செல்வந்தர்களாகவும் மாறியுள்ளனர். ஆடம்பர செலவுகளையும் செய்கின்றனர்.

இவ்வாறான குற்றச்சாட்டுக்களை பல தமிழ் யுரீயூப்பர்கள் வடக்கு கிழக்கில் எதிர்கொள்கின்றனர். அதில் கிருஸ்ணா என்பவர் முக்கியமானவர். கிருஸ்ணா தான் இலங்கையின் சுதந்திர தினத்தில் யாழ்ப்பாணத்தில் இலங்கைக் கொடியுடன் முன்னணியில் ஊர்வலமாக சென்றவர். எப்படி உதவிக் காணொளிகளை வெளியிட்டு மோசடி நடப்பதாக கிருஸ்ணாவே இவ்வாறு கூறுகிறார்.

மோசடிக் குற்றச்சாட்டுக்களை யுரீயூப்பர்ஸ் மாறி மாறி குற்றம்சாட்டுகின்றனர். எஸ். கே . கிருஸ்ணா மீது தமிழ் புறோ ( Tamil Bro) என்றவரும் டி. கே. கார்த்தி வன்னி என்ற யுரீயூப்பரும் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கிடையில் எஸ். கே . கிருஸ்ணாவின் ஆடம்பர பிறந்தநாள் கொண்டாட்டமும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திடீர் பணக்காரனான எஸ். கே . கிருஸ்ணா ஆடம்பர வீடொன்றை கட்டி வருவதாகவும் சமூக ஊடகங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. எஸ். கே . கிருஸ்ணாவுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த புலம்பெயர் தமிழர் ஒருவர் கிருஸ்ணாவின் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம் இருப்பதாக குறிப்பிடுகிறார். அவர் மேலும் கூறும் போது கிருஸ்ணாவின் குடும்பத்தாரின் தகவலின்படி கிருஸ்ணா ஹெல்ப்பிங் வீடியோ போடுவதன் மூலம் மாதாந்தம் 25 இலட்சம் வருமானம் ஈட்டுவதாகவும் கூறுகிறார்.

இந்த ஹெல்ப்பிங்  வீடியோக்கள் எந்தவிதமான தணிக்கையும் இன்றி தயாரிக்கப்படுகின்றன. இப்படியான வீடியோக்களை தயாரிப்பவர்கள் பயன்படுத்தும் மொழியிலும் பிரச்சினை காணப்படுகிறது. இரட்டை அர்த்த வசனங்களில் பேசுவது அந்தரங்க தனிநபர் விடயங்களை கிழறி வெளிச்சம் போட்டு காட்டுதல் என பல ஆபாசங்களும் ஒரு சில யுரீயூப்பர்ஸ்சால் அரங்கேற்றப்படுகின்றது.

இப்படியான நபர்கள் உதவி கோரும் காணொளிகளை தயாரித்து புலம்பெயர் மக்களிடம் உதவி கோருகின்றனர். சமீபத்தில் ஒரு பிரபல்யமான யுரீயூப்பர் மூலம் புலம்பெயர் நாட்டில் வாழும் ஒரு நபர் வன்னியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றுக்கு உதவி புரிந்துள்ளார். உதவி வழங்கிய நபர் இலங்கைக்கு சுற்றுலா வந்தசமயம் குறிப்பிட்ட குடும்பத்தினரை சந்தித்து பழகியுள்ளார். வெளிநாட்டிலிருந்து வந்தவர் திரும்பிச் சென்று விட்டார். உதவி வாங்கிய குடும்பத்தில் கணவனை இழந்த தாயையும் பதின்ம வயது மகளையும் திருமணம் செய்வதாக கூறி துஸ்பிரயோகம் செய்துள்ளார். இறுதியில் தலைமறைவாகிய புலம்பெயர் நபரை அறிமுகம் செய்த யுரீயூப்பரை அணுகிய போது அவரும் தனக்கும் சம்பந்தப்பட்ட நபருடன் தொடர்பு இல்லை என கையை விரித்துவிட்டார்.

இப்படியான சமூகச் சீரழிவுகளும் பெருமளவில் நடக்கின்றன. புலம்பெயர் நாடுகளிலிருந்து உதவி புரிகிறோம் என்ற பெயரில் சில ஆண்கள் ஹெல்பிங் வீடியோ மூலம் அறிமுகமாகும் பெண்கள் மீது பாலியல் சுரண்டல்களிலும் ஈடுபடுகின்றனர். ஈழத்து எம்ஜிஆர் தியாகி தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் உதவி வழங்குவதாக ஏழை மக்களை வரவழைத்து அவர்களை வரிசையில் மணிக்கணக்கில் காக்க வைத்து அடித்த கூத்துக்கள் போலவே எஸ். கே . கிருஸ்ணாவின் நடவடிக்கைகளும் அமைந்துள்ளன.

உதவி செய்ய வேண்டும். அந்த உதவியால் நன்மை விளைய வேண்டும். ஒரு உழைக்க திராணியற்ற சோம்பேறிச் சமுதாயத்தை உருவாக்க வழிசமைக்க கூடாது. அதேநேரம் உதவி வாங்கிக்கொடுக்கும் இடைத்தரகர்கள் விடயத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.