April

April

வடக்கில் 16,000 வேலை வாய்ப்புகள் மூன்று முதலீட்டு வலயங்கள் !

வடக்கில் 16,000 வேலை வாய்ப்புகள் மூன்று முதலீட்டு வலயங்கள் !

வடக்கு மாகாண அபிவிருத்தியை நோக்கி, அரசாங்கம் முன்மொழிந்துள்ள காங்கேசன்துறை, பரந்தன் மற்றும் மாங்குளம் ஆகிய மூன்று முதலீட்டு வலயங்கள் 2025ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டின் இறுதியில் செயல்படத் தொடங்கும் என இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் அர்ஜூன் ஹேரத் தெரிவித்துள்ளார். இத்திட்டங்கள் முழுமையாக செயல்பட்டால், குறைந்தது 16,000 பேருக்கு தொழில் வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு ஆளுநர் நா. வேதநாயகனின் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கலந்துரையாடலில், முதலீட்டுத் தளங்களில் போக்குவரத்து, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் நில உரிமைச் சிக்கல்கள் உள்ளிட்ட சவால்கள் பற்றிய விவாதங்கள் இடம்பெற்றன.

இந்த மூன்று வலயங்களையும் சுற்றுச்சூழல் நேயமான வகையில் அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக முதலீட்டுச் சபை தெரிவித்தது. குறிப்பாக, காங்கேசன்துறையில் புகையிரத பாதையை துறைமுகம் வரை விரிவுபடுத்துவது, மாங்குளத்தில் காணி விடுவிப்பு நடவடிக்கைகள், மற்றும் பரந்தனில் உள்ள சொந்தமாகும் இடங்களின் சிக்கல்கள் பற்றியும் தீர்வுகள் வகுக்கப்பட்டுள்ளன. வலயங்களை விரைவில் வேலியிட்டு அடையாளப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ள நிலையில், கடந்த கால அனுபவங்களைவிட இம்முறை திட்டங்கள் நடைமுறைக்கு வரும் என முதலீட்டாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் உறுதியளிக்கப்பட்டது.

பட்டதாரிகள் தனியே அரசாங்க வேலைகளில் மட்டும் தங்கியிருக்காமல் தனியார்த்துறைகளிலும் தொழில் முயற்சிகளிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என்று யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம. ரதீபன் தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல் துறையைச் சேர்ந்த இரண்டாம் வருட மாணவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அரச சேவைகள் பற்றி அறிந்துகொள்ள மாவட்ட செயலகத்திற்கு கள விஜயம் மேற்கொண்டிருந்தனர். அதன் போதே அரசாங்க அதிபர் மேற்கொண்ட கருத்தை வெளியிட்டு இருந்தார்.

பிரதமர் மோடியும், அனுரவின் மொழியில் தமிழ் மக்களுக்குத் தீர்வு: ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், கௌரவம் மற்றும் நீதியுடனான வாழ்க்கை !

பிரதமர் மோடியும், அனுரவின் மொழியில் தமிழ் மக்களுக்குத் தீர்வு: ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், கௌரவம் மற்றும் நீதியுடனான வாழ்க்கை !

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களையும் மலையகத் தமிழ் பிரதிநிதிகளையும் சந்தித்து முக்கியக் கலந்துரையாடல்கள் நடத்தினார்.

வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பு தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மோடி, “இலங்கையின் தமிழ் சமூக தலைவர்களை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சியான தருணம். தமிழ் தலைவர்களான இரா. சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு இச்சந்தர்ப்பத்தில் அனுதாபம் தெரிவித்தேன். அவர்கள் இருவருமே எனக்குத் தனிப்பட்ட முறையில் நன்கு தெரிந்தவர்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி எனும் மூன்று முக்கியத்துவமிக்க அம்சங்களுடனான வாழ்க்கையை உறுதி செய்வதற்கான இந்தியாவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மீண்டும் வலியுறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். தமது விஜயத்தின்போது ஆரம்பித்துவைக்கப்பட்ட பல திட்டங்களும் முன்னெடுப்புகளும் தமிழர்களது சமூக, பொருளாதார மற்றும் கலாசார முன்னேற்றத்துக்கான பங்களிப்பை வழங்கும் எனவும் மோடி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மலைய தமிழ் பிரதிநிதிகளுடனான சந்திப்பில், இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட மலையகத் தமிழர்களுக்காக 10,000 வீடுகள், சுகாதார வசதிகள், புனித சீதை அம்மன் ஆலய நிர்மாணம், மற்றும் சமூக அபிவிருத்தித் திட்டங்கள் போன்ற பல முக்கிய முயற்சிகளுக்காக இந்திய அரசு இலங்கை அரசுடன் இணைந்து செயல்படும் என பிரதமர் மோடி உறுதியளித்தார்.

 

அமெரிக்க சீன வர்த்தக மோதல் – மசகு எண்ணெய் விலை சரிவு!

அமெரிக்க சீன வர்த்தக மோதல் – மசகு எண்ணெய் விலை சரிவு!

சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக மோதல்கள் உலக சந்தைகளை சிக்கலான நிலைக்கு கொண்டு சென்றதால் நேற்று வெள்ளிக்கிழமை எண்ணெய் விலைகள் சடுதியாக 8வீத வீழ்ச்சியடைந்துள்ளன. கோவிட் பெருந்தொற்று உச்சகட்டத்திலிருந்த காலங்களில் ஏற்பட்ட வீழ்ச்சிக்குப் பின் பதிவாகிய சடுதியான வீழ்ச்சி இதுவென தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வரிவிதிப்புக்கு பதிலடியாக சீனா ஏப்ரல் 10 முதல் அனைத்து அமெரிக்கப் பொருட்களுக்கும் 34% கூடுதல் வரி விதிக்கும என அறிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாசா மீண்டும் தெரிவு!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாசா மீண்டும் தெரிவு!

கடந்த 3 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் இடம்பெற்றுள்ளது . இந்த மாநாட்டை எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தலைமை தாங்கினார். இம்மாநாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாஸ மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தேசியக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து வந்த சஜித் பிரேமதாஸ தலைமையில் 2020 இல் உருவாக்கப்பட்டதே ஐக்கிய மக்கள் சக்தியாகும். அவர் சந்தித்த பாராளுமன்றத் தேர்தலிலும் சரி ஜனாதிபதித் தேர்தலிலும் சரி அவரால் வெற்றி பெற முடியவில்லை.

சஜித் பிரேமதாஸவை பொறுத்தவரை இலங்கை அரசியலில் தோல்வியடைந்த ஆளுமையற்ற தலைவராக காணப்படுகிறார். வெறுமனே தந்தையான பிரேமதாஸ ஜனாதிபதியாக இருந்தார் என்ற நெப்போரிஸத்தினூடாக அரசியலுக்குள் நுழைந்தவர். தெற்காசியாவின் சாபக்கேடான வாரிசு அரசியலின் விளைவுதான் தேசிய மக்கள் சக்தி தவிர்ந்த அனைத்து சிங்கள தேசிய கட்சிகளிலும் காணக் கூடியதாக உள்ளது.

கடந்த இரு தேர்தல்களிலும் இலங்கை மக்கள் குடும்ப அரசியலுக்கு சாவு மணியடித்த போதும் மக்கள் ஆணையை கருத்தில் கொள்ளாத ஐக்கிய மக்கள் சக்தி சஜித் பிரேமதாஸவை மீண்டும் கட்சித் தலைவராக்கியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அரசியலில் முகவரி வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

இந்தியப் பிரதமர் மோடி சேடம் இழுக்கும் தமிழ்த் தேசிய அரசியலுக்கு ஒட்சிசன் கொடுப்பாரா? !

இந்தியப் பிரதமர் மோடி சேடம் இழுக்கும் தமிழ்த் தேசிய அரசியலுக்கு ஒட்சிசன் கொடுப்பாரா? !

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கைக்கான அரச விஜயமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்று இரவு வந்தடைந்தார்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்டோர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இராஜதந்திரிகள் குழுவினருக்கு சிறப்பு வரவேற்பு அளித்தனர். கொழும்பில் இந்திய சமூகத்தினரும் மோடிக்கு வரவேற்பு அளித்தனர்.

இந்தியப் பிரதமர் மோடியைச் சந்திப்பதற்காக தமிழ் தேசியத் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கொழும்பு சென்றுள்ளதாக தேசம்நெற்க்குத் தெரியவருகின்றத, தமிழ் தலைவர்களை தனித்தனியாக சந்திப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என்றும் அவர்கள் குழுவாகவே சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் இச்சந்திப்புக்காக கொழும்புவந்துள்ள செல்வம் அடைக்கலநாதனின் பிரித்தானிய பிரதிநிதி சாம் சம்பந்தன் தேசம்நெற்றுக்கு நேற்றுத் தெரிவித்தார். தமிழ் தலைமைகள் இதுவரை இந்திய பிரதமருடன் என்ன பேசப்போகின்றோம் என்பது பற்றி கலந்துரையாடவில்லை என சாம் சம்பந்தன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

ஆனாலும் சந்திப்பு நேரங்கள் தங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டதும் தாங்கள் சந்திப்புக்கு முன்னதாக அங்கேயே இதுபற்றி கலந்துரையாடிய பின் சந்திப்போம் என சாம் சம்பந்தன் குறிப்பிடுகின்றார். மாகாண சபை வேண்டாம், இந்தியப் பிரதமர் இது பற்றி கதைக்காமல் இருப்பதே நல்லது எனக் கருதும் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் இச்சந்திப்பில் கலந்துகொள்வாரா அவர் என்னத்தை கேட்பார் பேசுவார் என்பது சுவாரஸியமான விடயமாக இருக்கும். ஏற்கனவே முன்னாள் பா உ எம் ஏ சுமந்திரன் இந்தியப் பிரதமரைச் சந்திப்பதற்கு நேரம்கோரியுள்ளார்.

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை மையப்படுத்தி மோடி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்திய பிரதமர் இந்நாட்டிற்கு விஜயம் செய்யும் நான்காவது சந்தர்ப்பம் இதுவென்பதுடன், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் பொருளாதார, கலாச்சார மற்றும் வரலாற்று தொடர்புகளையும் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புக்களை பலப்படுத்திக்கொள்வதும் விஜயத்தின் நோக்கமாகும்.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்திய பிரதமர் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளது.இந்திய ஒத்துழைப்புடன் இலங்கையின் முன்னெடுக்கப்படும் பல வேலைத்திட்டங்களையும் மோடி திறந்து வைக்கவுள்ளார்.

இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்ட இந்திய அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

சம்பூர் மின்னுற்பத்தி நிலையம் உட்பட்ட பல்வேறு உடன்படிக்கைகளிலும் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. மகோ சந்தி ரெயில் பாதையையும் திறந்து வைக்க உள்ளார். இலங்கையின் கலாச்சாரத் தலைநகரமான அநுராதபுரத்தின் மாகா போதிக்கும் இந்தியப் பிரதமர் விஜயம் செய்ய உள்ளார்.

தமிழ்நாடு மாநில அரசின் ஆதரவைப் பெறுவதற்காவே கடந்த காலங்களில் இந்திய மத்திய அரசு இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் கூடிய கவனம் எடுத்து வந்தது. அந்நிலை தற்போது முற்றாக மாறியுள்ளதை யாழ் ஈழநாடு பத்திரிகை அண்மைய ஆசியர் தலைப்பில் சுட்டிக்காட்டியுள்ளது. தற்போது தமிழக மாநில் அரசுக்கும் இலங்கைத் தமிழர்களுக்குமான உறவு நீர்த்துப்போன நிலையிலேயே உள்ளது. ஒரு பகுதி தமிழர்கள் பாலியல் காமுகனாகியுள்ள சீமானுக்கு ஆதரவாகச் செயற்படுகின்றனர். அண்மையில் தமிழகத்தில் நடைபெற்ற அயலவர் திருவிழாவிற்குச் சென்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பார்வையாளர்களாக இருந்து விட்டு நாடு திரும்பினர். முதல்வர் மு கா ஸ்டாலினை சந்திக்கவே முடியவில்லை.

இப்பேர்ப்பட்ட முகவரியற்ற அரசியல்வாதிகளாக தமிழ் தேசியவாதிகள் செயற்படுகின்றனர். முதலமைச்சர் மு கா ஸ்டாலினை அவருடைய மாநிலத்துக்குச் சென்றே சந்திக்க முடியாத தமிழ் தேசியத் தலைமைகள் தற்போது சேடம் இழுத்துக்கொண்டுள்ளனர். பிரதமர் மோடியைச் சந்தித்து தங்களுக்கு ஒட்சிசன் ஏற்றுவதற்கு அவர்கள் கொழும்பில் காத்திருக்கின்றனர்.

தமிழ்நாட்டுக்கும் பிரதமர் மோடிக்குமிடையே பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. திராவிடக் கட்சிகளை ஓரம்கட்ட பிரதமர் மோடி ஈழத்தமிழர்களை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. ஈழத்தமிழர்கள் இந்திய மத்திய அரசின் நலன்களுக்காக மீண்டும் பயன்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அதனைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு தீவிர வலதுசாரிகளாக இருக்கும் தமிழ் தேசியவாதிகளுக்கு போதுமான அரசியல் அறிவு இருப்பதாகத் தெரியவில்லை.

இலங்கை அரசியலைப் பொறுத்தவரை பாராதிய ஜனதாக் கட்சி புத்தரை கிருஸஷ்ண பகவானின் அவதாரங்களில் ஒன்றாகவே பார்க்கின்றது. இலங்கையில் உள்ள சிங்கள – தமிழ் மக்கள் பௌத்தர்களும் – இந்துக்களும் உறவுகள். கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களுமே சர்ச்சைக்குரியவர்கள் கையாளப்பட வேண்டியவர்கள். இதனை பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கலாநிதி அண்ணாமலை வவுனியாவில் மிகத் தெளிவாகத் தெரிவித்திருந்தார். வலதுசாரித் தமிழ் தேசியத் தலைமைகளின் வங்குரோத்து அரசியலால் தமிழ் மக்கள் தங்களுக்குள் சாதி, மாதம், பிரதேசம் என்று பிரிந்துள்ளவர்கள் ஏனைய சமூகங்களுடன் மட்டுமல்ல தமிழகத்துடனும் முரண்பட வேண்டிய நிலைக்குச் சென்றுள்ளனர்.

இலங்கைத் தமிழர்களுடைய பிரச்சினையைத் தவிர்த்து கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தியப் பிரதமர் மோடியின் கரங்களை இறுகப் பற்றி கரையேற வேண்டும் என ஜனாதிபதி அனுரவுக்கு மனோகணேசன் அறிவுரை வழங்கியுள்ளார்.

இலங்கைக்கு வருகை தரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் வடக்கு கடற்றொழிலாளர்களின் விவகாரம் குறித்து பேசுவது மிகவும் முக்கியமானது என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமருடன் கடற்றொழில் அமைச்சர் மற்றும் வடக்கு கிழக்கு தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் உரையாடுவார்களா என்பதும் அரசியலில் முக்கிய பேசுபொருளாக அமையும். வலதுசாரி தமிழ் தேசியத் தலைமைகளும் பிரதமர் மோடியைச் சந்தித்து வடக்கு கிழக்கு தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் கடற்றொழில் அமைச்சரும் மோடியைச் சந்தித்தால் அது தமிழ் தேசிய கட்சிகளின் நிலையை கீழுறக்குவதாகவே கணிக்கப்படும். இந்தியப் பிரதமர் மோடியின் விஜயம் இலங்கை அரசியலிலும் பார்க்க ஈழத்தமிழர்களின் அரசியலிலேயே கூடிய தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது.

மோடி – தமிழ் தேசியம் – ஜிஎஸ்பி பிளஸ் – உள்ளுராட்சித் தேர்தல் 2025: இந்தியாவுக்காக சீனாவை எதிர்க்கும் அரசியல் சரியானதா ?

மோடி – தமிழ் தேசியம் – ஜிஎஸ்பி பிளஸ் – உள்ளுராட்சித் தேர்தல் 2025: இந்தியாவுக்காக சீனாவை எதிர்க்கும் அரசியல் சரியானதா ?

தமிழீழ விடுதலை இயக்கத்தின் லண்டன் பிரதிநிதி சாம் சம்பந்தனுடன் ஒரு உரையாடல்

 

ஒட்டிசுட்டானில் பெண்ணுக்கு விழுந்த அடி அர்ச்சுனாவுக்கும் தமிழ்அடியானுக்கும் விழ வேண்டியது!

ஒட்டிசுட்டானில் பெண்ணுக்கு விழுந்த அடி அர்ச்சுனாவுக்கும் தமிழ்அடியானுக்கும் விழ வேண்டியது!

தமிழ்ப்பெண்களின் மீது அதிகரித்திருக்கிற வன்முறைகளின் உச்சகட்டம் ஒரு தமிழ் எம்பி அர்ச்சுனா இராமநாதன் பாராளுமன்றத்தில் ஒரு தமிழ்ப் பெண்ணை “ விபச்சாரி “ என்று சொன்னதாகும்.

அந்த வெட்டகக்கேடான செயலை கண்டிக்காத மற்றைய தமிழ்த் தேசியம் பேசும் அரசியல் வாதிகளும் எம்பிக்களும் என ஒரு மரத்துப்போன சமூகமே வேடிக்கை பார்த்தது. போதாக்குறைக்கு பெண்களின் நிர்வாணப் படங்கள் மற்றும் வீடியோக்களை “ ஊழல் ஒழிப்பு அணி வன்னி “ என்ற பெயரில் பதிவிட்ட போதும் அதனை வரவேற்ற தமிழ்அடியான் என்ற ரஜீவன் ராமலிங்கம் போன்றவர்களுமே “ ஒட்டிசுட்டான் “ சம்பவத்திற்கு பொறுப்பானவர்களாவார்கள்.

பாராளுமன்றம் போய் விபச்சாரி என்று சொன்ன எம்பி அர்ச்சுனாவிடம் நியாயம் கேட்க சாளினியின் குடும்ப ஆண்கள் யாரும் முன்வந்திருந்தால் நிலமை என்னவாகியிருக்கும் யோசித்து பார்க்க வேண்டும்.மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பிரிவில் பணியாற்றிய இரு பெண்களுக்கிடையிலான முரண்பாட்டில் , தனது மனைவிக்காக தலையீடு செய்த கணவன் , பொல்லுக்கட்டுடன் வந்து சம்பந்தப்பட்ட பெண்ணை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். சண்டை சச்சரவுகளில் வார்த்தை தடிக்கும் போது மனிதர்கள் வார்த்தைகளை சிதற விடுவது ஒன்றும் புதிதில்லை. ஆனால் இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் உண்மைத் தன்மைக்கு அப்பால் சட்டத்தை கையில் எடுக்கும் துணிவை யார் கொடுத்தது? . தாக்குதலை மேற்கொண்ட நபர் தன்னுடைய மனைவி இன்னாரா இன்னாரா? என்று கேட்டு அடிக்கிறார். இப்படியான இழிச் செயலை செய்ய ஒரு நபரை தூண்டியது வேறு யாருமல்ல, இந்த சமூகம் தான். குறையறிவுடையவர்கள் சமூகத்தில் கொட்டும் அபத்தமான கருத்துக்கள், எண்ணங்கள் மற்றும் செயல்கள் தான் இப்படியான பரிதாபமான சம்பவங்களை தோற்றுவிக்கின்றன.

சமீபத்தில் கூட ஊழல் ஒழிப்பு அணி வன்னி ஊடகவியலாளர் சங்கவியின் நடத்தை குறித்து அவதூறுகள் பரப்பியிருந்தது. சங்கவி மீதனா அந்த வசையை சங்கவியின் கணவர் பொதுவெளியில் வந்து சங்கவி உத்தமி , நான் அதை நம்புகிறேன் என உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ்அடியான் என்றழைக்கப்படும் எம்பி அர்ச்சுனாவின் ஜால்ரா ரஜீவன் ராமலிங்கம் வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இப்படியான பகுத்தறிவு அற்ற பெண்கள் விரோத “ஆண்மையை “கருத்தியல்கள் தமிழ்ச் சமூகத்தில் புரையோடிப் போய்யுள்ளன. இவை தணிக்கை குறைந்த சமூக வலைத்தளங்களினூடாக சமூகத்தில் மீள் வலியுறுத்தப்படுகின்றன. இந்த காலத்திற்கும் ஒவ்வாத காட்டுமிராண்டிக் கருத்துக்களால் கவரப்படும் ஒரு தமிழ்ச் சமூகம் வெடித்து வளர்ந்து வருகின்றது.

இவர்கள் வெறும் உணர்ச்சி கொந்தளிப்புகளால் உந்தப்பட்டு காரியங்களில் இறங்குகிறார்கள். ஊடகவியலளர் சங்கவியின் கணவர் தனது மனைவிக்கு நற்சான்றிதழ் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கும் சமூகத்தில் ஒட்டிசுட்டான் சம்பவங்கள் நடக்கும். இலங்கையில் மட்டுமல்ல ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் இப்படி நடக்கிறது. பிரான்ஸ்சில் பாரிஸில் வைத்து , ரிக்ரொக் பெண்ணான சுஜி கூல்லை’ லாச்சப்பல் வர்த்தக சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் தமிழ்க் காவாலிகள் கொஞ்சப் பேர் என கூடித் தாக்கியமை குறிப்பிடத்தக்கது. அந்த தாக்குதல் வீடியோவுக்கு புலிகள் ஆனையிறவு இராணுவ முகாமை வெற்றி கொண்ட வெற்றிப்பாடலை பின்னணி இசையாக போட்டு சமூவ வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தனர்.

“சுஜி கூல் “என்ற பெண் தாக்கப்பட்ட போது பாரிஸில் ஈழத்தமிழர்கள் எப்படி வேடிக்கை பார்த்தார்களோ அப்படியே ஒட்டிசுட்டானில் நடக்கின்றது. மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பிரிவில் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்யும் பெண்ணுக்கு கூட வேலை செய்கிறவர்கள் உட்பட யாரும் உதவ முன்வரவில்லை. அடியின் கொடூரம் தாங்காது கதறும் பெண்ணிடம் மன்னிப்பு கேளடி என இன்னுமொரு பெண்மணியும் ஆணும் அறிவுறுத்துகிறார்கள். இன்னும் பலர் மறிப்பமா? வேண்டாமா ? என வாகனத்திற்குள் இருந்து கலந்துரையாடுகிறார்கள். வேறுயாரோ நபர்கள் நடப்பதை வீடியோ எடுக்கிறார்கள். வீடியோ காட்சியின்படி தாக்குதலில் ஈடுபடும் நபர் தனது மனைவி இன்னாரா? இன்னாரா?
கேட்டு அடிக்கிறார் .

அதாவது தமிழ் அடியான் ரஜீவன் ராமலிங்கம் ஆலோசனைப்படி தனது மனைவிக்கு நற்சான்றிதழ் கொடுக்கிறார். இதேமாதிரியே பாரிஸில் தாக்கப்பட்ட சுஜி கூலிடம் ரிக்ரொக்கில் தமிழீழம் பிடிக்க புறப்பட்ட நபர் ஒருவர் என்னுடைய அம்மா இன்னாரா? இன்னாரா? என்று கேட்டு அடிக்கிறார்.

பெண் சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகளை கடும் கண்காணிப்புடன் பாதுகாக்கும் புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து கொண்டிப்பவர்களே பிரான்ஸில் தமிழ்ப் பெண்கள் மீது வன்முறையில் ஈடுபடுகிறார்கள். புலம்பெயர் நாடுகளில் பெரும்பாலான ஈழத்தமிழர்கள் மேற்கத்தைய சாராயத்தையும் , உணவையும் மற்றும் நவநாகரீக உடையையும் தான் கற்றுக் கொண்டுள்ளார்கள். மேற்கத்தைய நாடுகளின் முற்ப்போக்கு கருத்துக்களான பாலினச் சமத்துவம், சகோதரத்துவம், சாதியற்ற சமூகம் , பல்லினச் சமூக ஒழுங்கமைப்புக்கள் என எவ்வளவோ விடயங்கள் இருக்கின்றன. அவற்றைப் படிக்கவில்லை.

இலங்கையைப் பொறுத்தவரை போருக்குப் பிந்திய ஈழத்தமிழர் வாழ்வியல் மாறிவிட்டது. இதனை ஊடகவியலாளர் மற்றும் சூழலியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் இவ்வாறு தனது முகநூலில் கருத்துப் பதிவிட்டுள்ளார். “ சட்டவிரோதிகளுக்கு இருக்கும் சட்ட பாதுகாப்பும் செல்வாக்கும், அதனை தட்டிக்கேட்பவர்களுக்கு இன்மையே வேடிக்கை பார்ப்பவர்கள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது “ என்கிறார்.


கடந்த வருடம் தமிழ்ச்செல்வன் ஏ9 வீதியில் வைத்து கறுப்பு வாகனத்தில் வந்தவர்களால் தாக்கப்பட்டு கடத்திச் செல்ல முற்பட்ட போதும் மக்கள் ஒட்டிசுட்டானில் நடந்தது போன்று வேடிக்கை பார்த்தனர் என வேதனையுடன் பதிவு செய்துள்ளார். சமூகத்தின் இந்த மனப்பாங்கு ஆபத்தானது. ஏன் ?இந்த சமூகப் பிரக்ஞை அற்ற மாற்றம். நீண்ட காலமாக வன்முறைகளை மட்டுமே பார்த்து வந்த சமூத்தில் “ வன்முறைகளுக்கு இசைவாக்கம்” அடைந்து விட்டார்களா? அல்லது யுத்தம் முடிந்தும் இராணுவ முற்றுகையில் ஆயுத முனையில் கண்காணிப்பில் அவர்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளமையா? என கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகிறது.

ஒட்டிசுட்டானில் தாக்குதலுக்குள்ளான பெண்ணுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். பெண்கள் மீதான வன்முறை எந்த வடிவமாக இருந்தாலும் கண்டிக்கப்பட வேண்டும். இந்த விடயத்தில் மகளிர் விவகார அமைச்சு உரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

வன்முறைக்கு பின்னான வாழ்க்கையை எதிர்கொள்ள பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உளவள ஆலோசனை மற்றும் சமூக பாதுகாப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். ஒட்டிசுட்டான் பெண், ரிக்ரொக் சாளினி, ஊடகவியலாளர் சங்கவி போன்றோருக்கு உரிய உதவிகளை வழங்க பெண்கள் உரிமைகளுக்காக போராடும் அமைப்புகள் முன்வர வேண்டும்.

ஒட்டிசுட்டான் பெண் பணியாற்றும் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் இந்தவிடயத்தில் கண்டிக்கப்பட வேண்டும். தன்னுடைய நிறுவன ஊழியரை பாதுகாக்கத் தவறியுள்ளது. சம்பந்தப்பட்ட பிணக்கில் தாக்குதல் மேற்கொண்ட நபரின் மனைவி மீது விசாரணைகளை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்குதலுக்குள்ளான பெண் வேலைக்கு அணியும் சீருடையில் உள்ளார். அவர் பணியிலிருக்கும் போதே அவர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். எனவே சம்பந்தப்பட்ட நிறுவனம் தாக்குதலுக்குள்ளான பெண்ணுக்கு உரிய இழப்பீடு மற்றும் நிவாரணத்தை வழங்க வேண்டும். வேலையிடங்களில் பணியாளர்களிடையே மனஸ்தாபங்கள் பிணக்குகள் வரும் போது மூன்றாம் நபர் பணியிடத்திலேயே தலையீடு செய்து சுமூகமாக தீர்க்கும் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா , காலாச்சார காவலர்கள் என சமூக ஊடகங்களில் வாயாடுபவர்கள் மற்றும் சமூகம் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். ஒட்டிசுட்டானில் பொல் கொண்டு பெண்ணைத் தாக்கிய நபர் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்திலுள்ள பெண்களின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
ஒட்டுசுட்டான் பெண் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலில் பூச்சியம் சகிப்புத் தன்மை கூட கடைப்பிடிக்கப்படக் கூடாது. இந்த விடயத்தில் பரப்பப்படும் காணொளியில் பெண்ணின் தனிநபர் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். அவருடைய ஆள் அடையாளம் மறைக்கப்படுதல் வேண்டும்.

விபச்சாரி மற்றும் பாலியல்த் தொழிலாளி என்ற முத்திரை குத்தல்களை எதிர்கொள்பவர்கள் அவமானம் அடையத் தேவையில்லை. இவ்வாறான பிரச்சினைகளை வன்முறையால் அல்ல அறிவார்ந்த ரீதியில் எதிர்கொள்ள வேண்டும். அந்தவகையில் பெண் உரிமைகளுக்காக குரல் கொடுப்போர் சமூக ஊடகங்களில் போராடுவது மட்டுமன்றி களத்தில் பணியாற்ற வேண்டும் என்பதே சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.

மாவட்டசபையை எதிர்த்த காலம் போய் உள்ளுராட்சித் தேர்தலில் நீயா? நானா? போட்டி !

மாவட்டசபையை எதிர்த்த காலம் போய் உள்ளுராட்சித் தேர்தலில் நீயா? நானா? போட்டி !

நாடு அனுரவோடு. யாழ்ப்பாணம் யாரோடு..?

மயில்வாகனம் சூரியசேகரம் சமூக அரசியல் செயற்பாட்டாளர்

சாமி என்ற பெயரில் உலாவந்த மோசடி காமுக ஆசாமி புளிக்களுக்கு 7 ஆண்டுகள் சிறை ! : த ஜெயபாலன்

தன்னைக் கடவுள் என்று சித்தரித்து வயது வேறுபாடின்றி பெண்களைப் பாலியல் பொருளாக நுகர்ந்து தூக்கியெறியும் புளிக்கள் முரளி கிருஷ்ணணுக்கு இன்று ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக புளிக்கள் முரளிகிருஷ்ணணின் காம லீலைகளை அம்பலப்படுத்தி லண்டன் மக்களை விழிப்படையச் செய்வதில் தேசம்நெற் முன்நின்றது. இன்றைய தீர்ப்பு கடவுளையும் மதத்தையும் வைத்துக் கொண்டு கல்வியை வைத்துக்கொண்டு பதவிநிலைகளை வைத்துக் கொண்டு பாலியல் லஞ்சம் கோருகின்றவர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட மிகச்சிறந்த தீர்ப்பாக அமைந்துள்ளதாக தேசம்நெற் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் மிகத்துணிச்சலுடன் போராடி இந்தத் தீர்ப்பினை பெறுவதற்கு முன் வந்த இரு பெண்களுக்கும் தமிழ் சமூகம் மிகவும் கடமைப்பட்டுள்ளது என்றும் தேசம்நெற் தெரிவிக்கின்றது.

ஆலயங்களுக்குள்ளும் சாமி வேடத்திலும் பல்கலைக்கழகங்களிலும் பேராசிரியர் வேடத்திலும் இன்னும் பல அயோக்கியர்கள் ஒழிந்துள்ளனர் அவர்களும் விரைவில் களையெடுக்கப்பட வேண்டும்.

மார்ச் 24 முதல் ஆரம்பமான புளிக்கள் முரளிகிருஷ்ணணுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று ஏப்ரல் 3 மாலை முடிவுக்கு வந்தது. இன்று மாலை மூன்று மணிக்குப் பின் வூட்கிரீன் நீதிமன்னத்தில் நீதபதி 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கினார். நீதி மன்றத்துக்கு புன்முறுவலோடு வந்து சென்ற புளிக்கள் முரளிகிருஷ்ணன் தன்னுடைய ஈனச் செயல்களுக்கு எவ்விதமான மனவருத்தத்தையும் காட்டிக்கொள்ளவில்லை.

புளிக்கள் முரளிகிருஷ்ணன் மீது பாலியல் வன்புணர்வு மற்றும் பாலியல் வன்புணர்வுக்கு முயற்சித்த இரு குற்றங்களும் நிரூபிக்கப்பட்டு அவருடைய குற்றச்செயல்களுக்கு 7 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படக் கூடாதென்பதை நீதிமன்றம் மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளது.

புளிக்கள் முரளிகிருஷ்ணனுக்கு எதிராக மற்றுமொரு பெண் வைத்து மூன்று பாலியல் தாக்குதல் வழக்குகளில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. குறித்த பெண் இந்த மோசடி ஆசாமிக்கு £128,000 பவுண்களையும் வழங்கியிருந்தார். அதாவது அந்த ஆசாமியின் செயரிற்றிக்கு நன்கொடையாகக் கொடுத்திருந்தார். அந்த மோசடிக் குற்றச்சாட்டும் முன்னரே கைவிடப்பட்டது.

லண்டன் பானற் பகுதியில் கோயில் அமைத்து மக்களை ஏமாற்றி வருகின்ற இந்தக் கள்ளச்சாமியை வணங்குவதற்கு லண்டனின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் பக்தைகள் சென்று வருகின்றனர். கும்பிடுகின்றனர். இன்றைய தீர்ப்பைக் கேட்டு இந்தக் கூட்டம் நீதிமன்றில் கண்ணீரும் விட்டது. இந்தக் கூட்டங்களையும்இ காமுகனாக அறியப்பட்ட பிரேமானந்தாவைக் கும்பிட்ட முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனையும் மற்றுமொரு காமுகனான சீமானையும் களையெடுக்க எங்களுக்கு ஒரு ஈவேராப் பெரியார் போதாது என்றும் அவர் இன்னும் நூறு பெரியார் உருவாகி எம் தமிழ் சமூகத்தை காக்கவேண்டும்.

முன்னைய பதிவுகள்:

சாமி என்ற பெயரில் உலாவந்த மோசடி காமுக ஆசாமி புளிக்களுக்கு 7 ஆண்டுகள் சிறை !

சாமி என்ற பெயரில் உலாவந்த மோசடி காமுக ஆசாமி புளிக்களுக்கு 7 ஆண்டுகள் சிறை !

தன்னைக் கடவுள் என்று சித்தரித்து வயது வேறுபாடின்றி பெண்களைப் பாலியல் பொருளாக நுகர்ந்து தூக்கியெறியும் புளிக்கள் முரளி கிருஷ்ணணுக்கு இன்று ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக புளிக்கள் முரளிகிருஷ்ணணின் காம லீலைகளை அம்பலப்படுத்தி லண்டன் மக்களை விழிப்படையச் செய்வதில் தேசம்நெற் முன்நின்றது. இன்றைய தீர்ப்பு கடவுளையும் மதத்தையும் வைத்துக் கொண்டு கல்வியை வைத்துக்கொண்டு பதவிநிலைகளை வைத்துக் கொண்டு பாலியல் லஞ்சம் கோருகின்றவர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட மிகச்சிறந்த தீர்ப்பாக அமைந்துள்ளதாக தேசம்நெற் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் மிகத்துணிச்சலுடன் போராடி இந்தத் தீர்ப்பினை பெறுவதற்கு முன் வந்த இரு பெண்களுக்கும் தமிழ் சமூகம் மிகவும் கடமைப்பட்டுள்ளது என்றும் தேசம்நெற் தெரிவிக்கின்றது.

ஆலயங்களுக்குள்ளும் சாமி வேடத்திலும் பல்கலைக்கழகங்களிலும் பேராசிரியர் வேடத்திலும் இன்னும் பல அயோக்கியர்கள் ஒழிந்துள்ளனர் அவர்களும் விரைவில் களையெடுக்கப்பட வேண்டும்.

மார்ச் 24 முதல் ஆரம்பமான புளிக்கள் முரளிகிருஷ்ணணுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று ஏப்ரல் 3 மாலை முடிவுக்கு வந்தது. இன்று மாலை மூன்று மணிக்குப் பின் வூட்கிரீன் நீதிமன்னத்தில் நீதபதி 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கினார். நீதி மன்றத்துக்கு புன்முறுவலோடு வந்து சென்ற புளிக்கள் முரளிகிருஷ்ணன் தன்னுடைய ஈனச் செயல்களுக்கு எவ்விதமான மனவருத்தத்தையும் காட்டிக்கொள்ளவில்லை.

புளிக்கள் முரளிகிருஷ்ணன் மீது பாலியல் வன்புணர்வு மற்றும் பாலியல் வன்புணர்வுக்கு முயற்சித்த இரு குற்றங்களும் நிரூபிக்கப்பட்டு அவருடைய குற்றச்செயல்களுக்கு 7 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படக் கூடாதென்பதை நீதிமன்றம் மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளது.

புளிக்கள் முரளிகிருஷ்ணனுக்கு எதிராக மற்றுமொரு பெண் வைத்து மூன்று பாலியல் தாக்குதல் வழக்குகளில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. குறித்த பெண் இந்த மோசடி ஆசாமிக்கு £128,000 பவுண்களையும் வழங்கியிருந்தார். அதாவது அந்த ஆசாமியின் செயரிற்றிக்கு நன்கொடையாகக் கொடுத்திருந்தார். அந்த மோசடிக் குற்றச்சாட்டும் முன்னரே கைவிடப்பட்டது.

லண்டன் பானற் பகுதியில் கோயில் அமைத்து மக்களை ஏமாற்றி வருகின்ற இந்தக் கள்ளச்சாமியை வணங்குவதற்கு லண்டனின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் பக்தைகள் சென்று வருகின்றனர். கும்பிடுகின்றனர். இன்றைய தீர்ப்பைக் கேட்டு இந்தக் கூட்டம் நீதிமன்றில் கண்ணீரும் விட்டது. இந்தக் கூட்டங்களையும்இ காமுகனாக அறியப்பட்ட பிரேமானந்தாவைக் கும்பிட்ட முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனையும் மற்றுமொரு காமுகனான சீமானையும் களையெடுக்க எங்களுக்கு ஒரு ஈவேராப் பெரியார் போதாது என்றும் அவர் இன்னும் நூறு பெரியார் உருவாகி எம் தமிழ் சமூகத்தை காக்கவேண்டும்.