கே.பி கைது! இலங்கைக்கு நாடு கடத்தப்படலாம்!!!

pathmanathan.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் சற்று முன் செய்தி வெளியிட்டுள்ளது. இவர் பாங்கொக்இல் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (ஓகஸ்ட் 5) காலை லண்டனில் இருந்து சென்றிருந்த ஒருவரையே கே பி இறுதியாகச் சந்தித்ததாகவும் அதன் பின்னர் அவருடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாகவும் கே பிக்கு நெருங்கிய வட்டாரங்கள் தேசம்நெற்றுக்கு தெரிவிக்கின்றன.

நேற்று மதியமளவில் மலேசியாவில் வைத்து கே பி உத்தியோகப்பற்றற்ற முறையில் கைது செய்யப்பட்டதாக மற்றுமொரு செய்தி தெரிவிக்கின்றது. இக்கைது இலங்கைப் புலனாய்வுத்துறையின் அறிவுறுத்தலிலேயே இடம்பெற்றதாகவும் அச்செய்தி தெரிவிக்கின்றது. ஆனால் இலங்கைக்கும் மலேசியாவிற்கும் கைதிகளைப் பரிமாறும் உடன்படிக்கை இல்லாததால் அவர் தாய்லாந்திற்கு நாடுகடத்தப்பட்டு பாங்கொக் விமான நிலையத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக கைது செய்யப்பட்டதாகவும் அச்செய்தி தெரிவிக்கின்றது. ஆனால் இச்செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை.

சட்டத்தரணி உருத்திரகுமார் தலைமைiயில் நாடு கடந்த தமிழீழ அரசை கே பி உருவாக்குவதற்கான செயற்குழுவை உருவாக்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராகவும் தன்னை நியமித்துக் கொண்டார். இவருக்கு எதிரான அணி ஒன்றும் தீவிரமாக இயங்கி வந்தமை தெரிந்ததே.

வே பிரபாகரன் மற்றும் கே பி விட்டுச் செல்லும் தலைமை வெற்றிடத்தை நிரப்புவதற்குத் தகுதியான முகங்கள் எதுவும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் இருப்பதாக தெரியவில்லை.

Show More
Leave a Reply to thambi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

29 Comments

  • மாயா
    மாயா

    கேபீயின் கைதை சிங்கள இணையங்கள் முதன்மை செய்தியாக வெளியிட்டுள்ள போதும் , மேலதிக தகவல்கள் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது.

    Reply
  • வள்ளுவன்
    வள்ளுவன்

    இச் செய்தி உண்மையாக இருக்கக்கூடாதா? 19ம் திகதிக்குப் பின்னரான பத்மநாதனின் கருத்துக்கள் கிட்டத்தட்ட புலித்தரப்பினர் இதுவரை காலமும் விட்ட தவறுகளை ஏற்றுக் கொள்ளுவதாகவும். மக்களின் உரிமைப்போராட்டத்தில் சகலதரப்பினரையும் இணைத்து சரியான பாதையில் செயல்படுவதற்கு பகிரங்க அழைப்பு விடுவதாகவும் காணப்கட்டது. ஆனால் எதிர்மாறாக சொற்ப நாட்களுக்குள்ளேயே புலம்பெயர் மண்ணில் வாழும் உருத்திரகுமார் போன்ற கோடரிக்காம்புகளின் வலைக்குள் விழுந்து புலம்பெயர் பிரதேசங்களில் உள்ள மக்களை திருப்படுத்துவதற்காகவும் மிச்ச சொச்ச சனத்தையும் நரபலி எடுப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் தயாராவதும் தெட்டத்தெள்வாக தெரிவதை அவதானிக்க முடிகின்றது. மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

    Reply
  • மாயா
    மாயா

    (CNN) — A leader of the defeated Tamil Tiger rebel group has been arrested in Bangkok, Thailand, state television in Sri Lanka reported Thursday.

    Selvarasa Padmanathan, also known as KP, was the “self-appointed … leader and chief arms dealer” of the Tamil Tigers, according to Lankapuvath, the national news agency of Sri Lanka. It also reported the arrest, citing the Sri Lankan government information department.

    The Sri Lankan military defeated the Tamil Tigers this year. The rebel group is formally known as the Liberation Tigers of Tamil Eelam. It fought a 25-year war seeking an independent state for minority Tamils in Sri Lanka. At least 70,000 were killed.

    Remnants of the battered Tamil Tiger group decided in July that Padmanathan would “lead us into the next steps of our freedom struggle,” according to a published account.

    That happened after the Sri Lankan military killed the group’s long-time leader, Velupillai Prabhakaran, in the final days of a bloody offensive that ended the war.

    http://www.cnn.com/2009/WORLD/asiapcf/08/06/tamil.arrest/index.html

    புலிகளது முக்கியஸ்தர்களாக இருந்த பிரபாகரன் – பொட்டு அம்மான் – கேபீ ஆகியோரை கைது செய்ய வேண்டும் அல்லது படுகொலை செய்யப்பட வேண்டும். அதுவே புலிகளது பலத்தையும் வளர்ச்சியையும் தடுக்கும் என்ற கருத்து இருந்தது. அது கேபீயின் கைதால் நிறைவேறியுள்ளது.

    கேபீக்கு எதிராக இருக்கும் புலிகளது தகவல் காரணமாக கேபீயை கைது செய்ய இலகுவானதாக இலங்கை ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். அது ஒருவகையில் உண்மையாகவும் இருக்கலாம். காரணம் , அண்மைக் காலமாக கேபீக்கு எதிரான புலித் தரப்பினரோடு கேபீ கலந்துரையாடலில் இருந்தமையால் இவர் எங்கு உள்ளார் என்பதை அடையாளம் காண முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

    தவிரவும் புலத்தில் எஞ்சியுள்ள புலி முகவர்களையும் புலிகளையும் உருத்திரகுமார் வழி அடையாளம் காண அமெரிக்காவும் சிறீலங்காவும் முயன்று வருவதாகவும் ஒரு தகவல் வருகிறது. இது குறித்த நம்பகத் தன்மையை விரைவில் பார்க்க முடியும்.

    Reply
  • itam
    itam

    அம்மாள் ஆச்சித்தாயே அரோகரா உனக்கு நான் நேர்ந்த நேர்த்தி முழுவதும் செய்வேன் இனியாவது வன்னிச் சனத்துக்கு நல்ல காலம் பிறக்கட்டும்
    இதுவும் புலிகளின் உள்வீட்டு விளையாட்டாகத்தான் இருக்கும் எப்படியானாலும் அம்மாள் ஆச்சிக்கு அரோகரா அரோகரா ஆஆஆஆ

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    மகிழ்ச்சியான செய்தி. ஏற்கனவே பலமுறை கே.பி கைது என்ற செய்தி வந்த வேகத்தில் காணாமல் போனது போலல்லாமல், இம்முறையாவது முறையாக இலங்கை அரசு கோட்டை விடாமல் கே.பியை இலங்கைக்கு சட்டரீதியாக கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். அமெரிக்காவும்; அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக இயங்கிவரும் உருத்திரகுமாரிலும் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுத்து வன்னி மக்களை மீண்டும் புதைகுளிக்குள் கொண்டு செல்லும் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    Reply
  • muraly
    muraly

    Selvarasah Pathmanathan alias “KP” a.k.a Kumaran Pathmanathan was arrested by the Police in Thailand on Wednesday August 5th and brought to Sri Lanka on Thursday August 6th.

    KP in his capacity as General-Secretary of the re- structured Liberation Tigers of Tamil Eelam (LTTE) was the virtual global tiger chief.

    According to informed sources KP was arrested by the Thai Police at a house in the suburbs of Bangkok after nightfall on August 5th.

    Sri Lankan authorities were contacted and a “special” team from the Police Terrorist Investigation Department flew to Bangkok in the early hours of Thurasday August 6th.

    The team returned with Pathmanathan alias KP on a Thai Airways flight on the same day.

    KP was handcuffed and had a mask covering his head and face when disembarking from the plane at Katunayake Airport.

    He was whisked away in a vehicle with tinted glasses to a high-security , secret location run by the terrorism investigation dept personnel.

    KP is to be interrogated intensively by Sri Lankan anti-terrorist sleuths.

    It is widely believed that the arrest was made possible through “inside information” supplied by some members of the LTTE abroad who were opposed to KP donning the tiger leadership mantle after the demise of supremo Velupillai Prabhakaran.

    KP was at one time the chief arms procurer for the LTTE and headed a tiger division known as Overseas purchases dept or simply KP dept.

    He went into voluntary retirement in 2003 and married a Thai national

    In January this year, KP was appointed the LTTE’s international relations chief.

    As the senior most LTTE member alive, KP assumed leadership of the tigers after Prabhakaran’s demise.

    This was vehemently opposed by a section of the Diasporic tigers led by Perinbanayagam Sivaparan alias Nediyavan

    Reply
  • மகுடி
    மகுடி

    //புலத்தில் எஞ்சியுள்ள புலி முகவர்களையும் புலிகளையும் உருத்திரகுமார் வழி அடையாளம் காண அமெரிக்காவும் சிறீலங்காவும் முயன்று வருவதாகவும் ஒரு தகவல் வருகிறது. இது குறித்த நம்பகத் தன்மையை விரைவில் பார்க்க முடியும்.//

    இவற்றுக்கு இந்தியாவே முக்கிய பங்காற்றியுள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கை தமிழர்களது பணத்தைக் கொண்டு இந்தியாவில் (தமிழ்நாட்டில்) ஒரு குழப்ப நிலையை தோற்றுவித்து வருவதைத் தடுக்க இந்தியா , அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளை நாடியுள்ளது. ஈழத் தமிழரும் , இந்திய புலி ஆதரவு தமிழரும் இணைந்து சீனா – இந்தியா – பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்குள் ஒரு மோதலை உருவாக்க திட்டம் வகுத்து செயல்படுவது தொடராமல் தடுக்க புலத்து புலிகளை அழிப்பதில் சில நாடுகள் மறைமுகமாகவும் நேரடியாகவும் களத்தில் இறங்கியுள்ளதன் ஒரு அத்தியாயமே கேபீ கைது.

    புலிகள் இனியாவது வாலை சுருட்டிக் கொண்டு இருப்பது நல்லது.

    Reply
  • செல்வன்
    செல்வன்

    (daily news )KP arrested

    The self-appointed LTTE leader Shanmugam Kumaran Tharmalingam alias Kumaran Pathmanathan has been arrested in a foreign country, the sources said yesterday. He was in Interpol’s most wanted list for arms smuggling and criminal activities.

    He was accused of arms smuggling and conspiring the assassinations of VVIPs including former Prime Minister of India Rajiv Gandhi in 1991. Kumaran Pathmanathan popularly known as KP was reportedly earning billions of US$ per month from LTTE fund raising activities and was in the habit of disseminating misleading news to evade arreste when he was nabbed in a foreign country.

    Defence Spokesman and Foreign Employment Minister Keheliya Rambukwella told the Daily News yesterday that Sri Lanka is capable of arresting elements who are trying to sow the genesis of terrorism in Sri Lanka from foreign countries.

    “We are not reluctant to take action against the LTTE activists in foreign countries after the terrorism was completely wiped out from the country, he said.

    KP was entangled in an in fight with the US based LTTE activists for LTTE assets worth billions of US dollars after LTTE leader Velupillai Prabhakaran and his cronies were killed by the Security Forces in the Mullaitivu district and the Government declared the war on terrorism was over.

    It is reported that the Indian Government officials have informed several countries where KP was believed to be absconding to arrest him and hand over him to India in relation to the assassination of Prime Minister Rajiv Gandhi.

    According to defence sources KP played a major role in expanding the LTTE’s sea activities and had built up contacts with key officials in different countries.

    புலிகளின் தலைவரென உரிமை கோரும் கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் நேற்றிரவு அறிவித்தது.

    இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹனவும் இதனை ஊர்ஜிதம் செய்தார்.

    புலிகள் இயக்கத்தின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள் கொள்வனவு செய்வதிலும் நிதி திரட்டுவதிலும் இவர் ஈடுபட்டு வந்தவர்.

    இலங்கையில் பல்வேறு அரசியல் தலைவர்களின் கொலைகளுடன் தொடர்புள்ள கே. பி. சர்வதேச மட்டத்தில் தேடப்பட்டு வந்தவர். ‘இன்டர்போல்’ என்று அழைக்கப்படும் சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்டு வந்த குமரன் பத்மநாதன் உலகம் முழுவதும் பல்வேறு பெயர்களில் நடமாடியவரெனத் தெரியவந்துள்ளது.

    தாய்லாந்தில் இவரைக் கைது செய்த பொலிஸார் இவருடைய பெயரில் இருந்த பல்வேறு நாடுகளுக்குரிய 200 கடவுச் சீட்டுக்களைக் கைப்பற்றியுள்ளனர்.

    புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கே. பி. கைது செய்யப்பட்டார் என பாங்கொக் இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டது. புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதற்குப் பின்னர் அதன் தலைவராகத் தன்னைத்தானே உரிமை கோரி வருபவர் கே. பி. என்று அழைக்கப்படுகின்ற குமரன் பத்மநாதனாவார்.

    இலங்கையில் புலிகளின் பயங்கரவாதம் பூண்டோட அழிக்கப்பட்டதன் பின்பு இலங்கைக்கு வெளியில் செயற்படப் போவதாக கே. பி. அறிவித்திருந்தார்.

    கொலைகள், ஆயுதக் கடத்தல், சட்டவிரோத நிதி சேகரிப்பு, ரஜீவ் காந்தி கொலை உட்பட பல்வேறு கிரிமினல் செயற்பாடுகளுடன் தொடர்புடைய கே. பி., இலங்கை அரசாங்கத்தினால் தேடப்பட்டுவரும் முக்கிய கிரிமினலாவார். கே. பி. மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசாங்கம் உலக நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தன.

    1955 ஆம் ஆண்டு இலங்கையில் பிறந்த கே. பி.; செல்வராசா பத்மநாதன், குமரன் பத்மநாதன் போன்ற பல்வேறு பெயர்களில் உலக நாடுகளில் நடமாடித் திரிந்தாரென்பது குறிப்பிடத்தக்கது.

    பிரபாகரன் கொல்லப்பட்டதற்குப் பின்னர் தன்னைத் தானே தலைவராகப் கே. பி. பிரகடனப்படுத்தினார்.

    Reply
  • செல்வன்
    செல்வன்

    (Daily Mirror) New LTTE leader KP arrested

    The new self appointed LTTE leader and chief arms dealer Kumaran Pathmanathan also known as KP, who was wanted by INTERPOL, has been arrested, Foreign Secretary Dr. Palitha Kohona told Daily Mirror online.

    The LTTE last month announced that Kumaran Pathmanathan, will lead the struggle for Eelam now that its supreme leader V Prabhakaran has died in action without realizing his dream.

    The LTTE executive committee has said KP, who was made head of the international division by Prabhakaran,”will lead us into the next stage of our freedom struggle”.

    FACTS
    Born – April 6, 1955 (1955-04-06) (age 54)
    Alias(es)-Selvarasa Pathmanathan
    Kumaran Pathmanathan
    and many others
    Motive – Sri Lankan Tamil nationalism
    Charge(s) – Criminal conspiracy, arms smuggling and for the violation of the Indian Terrorist Act and the Indian Explosive Act. Assassination of Rajiv Gandhi.
    Status – Arrested on August 6th, 2009
    Occupation – Leader of LTTE

    Reply
  • செல்வன்
    செல்வன்

    பிந்திய தகவல்களின்படி செல்வராஜா பத்மநாதன் அவர்கள் நேற்று வானூர்தி முலம் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.ஆனால் இச் செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை

    Reply
  • selvan
    selvan

    Government Information Department, Breaking News – KP grilled in Colombo

    LTTE’s self proclaimed leader, Kumaran Pathmanathan alias KP, a well famous arms smuggler, murderer of several VVIPs and LTTE’s arms procurer is now being grilled in Colombo,

    Pathmanathan was arrested on wednesday night and Defense Spokesman, Minister,Keheliya Rambukwella said the government pursued all LTTE activists to see and end to the menace.

    With the arrest of KP alias Pathmanathan, the LTTE terror network overseas is reported to have collapsed, sources said.

    A section of the LTTE accuse Pathmanathan of having conspired to kill former Indian Premier,Rajiv Gandhi and several Sri Lankan political leaders including late President,Ranasinghe Premadasa.

    Reply
  • Murali
    Murali

    This is indeed a great news for peace lovers and also great news for peace brokers like Nediyavan.

    Who is going to take over undiyal?

    Reply
  • மெனிக் தாசன்
    மெனிக் தாசன்

    விடுதலை என்ற பெயரில் மக்களைக் காட்டிக்கொடுத்து அவர்களைக் கொன்றொழித்துப் பிழைப்பு நடத்தியவர்கள் இன்று அதே பிழைப்பைத் தொடர்வதற்காக ஒருவரையொருவர் காட்டிக் கொடுப்பது ஒன்றும் ஆச்சரியமில்லை. இந்தக் கதை கெ.பி.யுடன் நின்று விடப் போவதில்லை. இன்னும் பல சுவாரசியமான தொடர்கதைகளை நாம் எதிர்பார்க்கலாம்

    கஸ்ட்ரோவுடன் சேர்ந்து வசூல் செய்தவர்களில் பலர் (பணத்துடன்) தலைமறைவாகி விட்டார்களாமே, யாராவது கேள்விப்பட்டீர்களா? (இது உண்மையில் நம்பகமான ஒரு தரப்பிலிருந்து எனக்கு கிடைத்தது, கே. பி.யின் முட்டள்தனமான பிடிபடுதலுபக்கு முன்னதாக)!

    Reply
  • thurai
    thurai

    புலத்துத் தமிழர்களை தமிழீழம்,விடுதலை என்ற போலி வார்த்தைகளால் ஏமாற்ரி வாழும் கூட்டம் தலைவராக்கியவரே கே.பி. இவரிற்கும் இலங்கைத் தமிழர்களிற்கும் எந்தத் தொடர்புமில்லை. இறந்தவர் நடக்கிறார் என்பதைப் போலவே புலியின் ஊடகங்கள் இன்னுமுள்ளன.

    கே.பி பிடிபட்டார் என்போரும், பிடிபடவில்லை என்போரும் புலிகளிற்குள் தோன்றுவார்கள்.

    துரை

    Reply
  • chandran.raja
    chandran.raja

    கற்றவருக்கு சென்ற இடமெலாம் சிறப்பு. புலிகளால் தமிழருக்கு போன இடமெலாம் தவிப்பும் இழப்பும் கொலை அச்சுறுத்தலும். புலம்பெயர் நாட்டிலுள்ள தமிழருக்காக இலங்கை மக்களுக்காக இயங்குகிற பொது நிறுவனங்கள் எல்லாம் சுகந்திரமடையும். திருவிழாகாலங்ளில் நடத்துகிற தோசைகடை இட்டலிகடைகளும் தான். ஐரோபாவில்லிருந்து கனடாவரை நீண்டிருக்கிற சின்னச்சின்ன காடைகளும் கே.பீ வழி பின்தொடர்ந்து உரிய இடத்தை அடைவார்கள் என எதிர்பார்கலாம். இனி புலம்பெயர் தமிழன் அரசியலாலும் தனிமனிதத் தொண்டாலும் புதியதொரு வளர்ச்சியைக் காண்பான்.

    Reply
  • மகுடி
    மகுடி

    New Tiger Chief “KP” arrested and brought to Sri Lanka
    (Lanka-e-News 07.Aug.2009 11.00AM) Selvarasah Pathmanathan alias “KP” a.k.a Kumaran Pathmanathan was seized in Malaysia on Wednesday August 5th and brought to Sri Lanka on Thursday August 6th

    KP in his capacity as General-Secretary of the re- structured Liberation Tigers of Tamil Eelam (LTTE) was the virtual global tiger chief…………..

    http://www.lankaenews.com/English/news.php?id=8143

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இறுதியாகக் கிடைத்த தகவல்களின்படி கே.பியை இலங்கைக்கு கொண்டு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள். கே.பியின் படமென இதுவரை வெளியிட்டு வந்த படங்கள் மிகவும் பழையன.

    Reply
  • மாயா
    மாயா

    //இனி புலம்பெயர் தமிழன் அரசியலாலும் தனிமனிதத் தொண்டாலும் புதியதொரு வளர்ச்சியைக் காண்பான். – chandran.raja //

    அப்பழுக்கற்ற உண்மை. ஏனைய புலி வால்களையும் சர்வதேசம் பிடித்துக் கொடுத்து பாதையை கிளியர் பண்ண வேணும். அதை அந்த சூரிய தேவன் வானிலிருந்து பார்த்து ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

    Reply
  • KP
    KP

    புலிகளின் தலைவரென உரிமை கோரும் கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தாய்லாந்தில் கடந்த புதனன்று இரவு கைது செய்யப்பட்டதாகத் தேசியப் பாதுகாப்புக்கான ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

    இவர் இப்போது கொழும்புக்கு அழைத்துவரப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

    புலிகள் இயக்கத்தின் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள் கொள்வனவு செய்வதிலும் நிதி திரட்டுவதிலும் இவர் ஈடுபட்டு வந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

    இலங்கையில் பல்வேறு அரசியல் தலைவர்களின் கொலைகளுடன் தொடர்புள்ள கே. பி., சர்வதேச மட்டத்தில் தேடப்பட்டு வந்தவர். `இன்டர்போல்` எனும் சர்வதேச பொலிஸாராலும் தேடப்பட்டு வந்த குமரன் பத்மநாதன், உலகம் முழுவதும் பல்வேறு பெயர்களில் நடமாடியவரெனத் தெரியவந்துள்ளது.

    இவர் கைது செய்யப்பட்டதையடுத்து சர்வதேச ரீதியிலான புலிகளின் வலைப்பின்னல்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    – வீரகேசரி

    Reply
  • இளங்கோ
    இளங்கோ

    தன்னினம் அழிவதை கண்டு ரசிக்கும் ஒரே இனம் தமிழினம் தான். வெட்கம் கெட்ட இனம்.

    Reply
  • மாயா
    மாயா

    இதுதாண்டா உலகம். சுவிஸ் புலிகள் சொல்கிறார்கள் தாங்கள் சிங்களவர்களது நேசங்களாம்.
    ________
    Media Unit,
    Tamil Forum Switzerland
    Freitag, 7. August 2009 15:29:41

    Dear Editor,

    Please find the media release as an attachment, by the Tamil Forum Switzerland .

    Krishna Ambalavanar
    (Coordinator, Tamil Forum, Switzerland)

    For further information : tamilforumswiss@gmail.com

    “We are not chauvinists. Neither are we lovers of violence enchanted with war. We do not regard the Sinhala people as our opponents or as our enemies. We recognise the Sinhala nation. We accord a place of dignity for the culture and heritage of the Sinhala people. We have no desire to interfere in any way with the national life of the Sinhala people or with their freedom and independence. We, the Tamil people, desire to live in our own historic homeland as an independent nation, in peace, in freedom and with dignity.”

    TAMIL FORUM SWITZERLAND
    POST FACH 6707
    CH 3001 BERN

    http://www.infotamil.ch

    Lasst die Tamilen leben
    Laissez vivre les Tamouls
    Lasciate vivere i Tamil
    Let the Tamils Live

    _____________

    Freitag, 7. August 2009

    An Urgent Appeal to the International Community and Human rights Organizations

    Detention of Sevarasa Pathmanathan (KP) In Sri Lanka
    We Tamil Diaspora in Switzerland profoundly shocked and dismayed by the arrest of Sevarasa Pathmanathan (KP) in Malaysia and his hand over to the Sri Lankan authorities where he faces torture and execution.
    In the past silence of international community during the annihilation of thousands of Tamil people in Tamil homeland encouraged Sri Lankan government to continue their military onslaught that resulted in tragic death of tens of thousands of Tamil civilians with callous disregard for human rights and humanitarian laws. Today more than 300,000 people are languishing in Sri Lankan death camps behind barbed wires. Access to these camps for humanitarian and UN agencies is highly restricted Worldwide call for an international inquiry commission to investigate the war crimes and crimes against humanity was ignored due to the geo political interests of major players in the region. Tamils in the island of Sri Lanka have become unsung victims of crimes against humanity and war crimes.
    In this backdrop Mr. Sevarasa Pathmanathan (KP) has came forward to spearhead the Tamil people’s struggle for self-determination and recognition of their homeland in non-violent peaceful means replacing the armed freedom struggle of Liberation Tigers of Tamil Eelam. He publicly declared that Liberation Tigers of Tamil Eelam has relinquished its armed struggle and willing to go forward through political and democratic means.

    He has made efforts and repeatedly requested the international community to release Tamil people from the internment camps and assist them to resettle in their homeland with international monitoring and rehabilitation. He is a strong advocate of politico democratic path to achieve Tamil people’s political aspirations. Instead of encouraging this new form of democratic peaceful means aiding to arrest him and transferred him to Sri Lanka in the pretext of terrorism is politically motivated biased act and serious violation of international human rights law. It is obvious in Sri Lanka where impunity for serious crimes such as torture, executions and disappearances prevail he will face torture and execution. Sri Lankan law enforcement agencies are well known for their brutal degrading inhuman treatment of Tamil political prisoners that was time and again well documented by the human rights organisations including Amnesty International and Human Rights Watch.
    In this tragic circumstances We Tamil Diaspora urgently bring this issue to the international spotlight and earnestly request international community, human rights organisations, activists and International Committee of Red Cross to urge Sri Lankan government to release him as he apparently face torture, inhuman treatments and death and allow him to enjoy his fundamental human rights.

    Yours truly,

    ………………………
    Krishna Ambalavanar
    (Coordinator, Tamil Forum, Switzerland)

    For further information : tamilforumswiss@gmail.com

    நன்றி: என் தனி மெயிலுக்கு….

    Reply
  • Uthayakumar
    Uthayakumar

    இளங்கோ on August 7, 2009 1:49 pm

    கொலைகாரர்களும் கடத்தல்காரர்களும் அராயகவதிகளும் அழிவதை பார்த்து எந்த இனமாக இருந்தாலும் மகிழ்வார்கள்.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /ஈழத் தமிழரும், இந்திய புலி ஆதரவு தமிழரும் இணைந்து சீனா – இந்தியா – பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்குள் ஒரு மோதலை உருவாக்க திட்டம் வகுத்து செயல்படுவது தொடராமல் தடுக்க புலத்து புலிகளை அழிப்பதில் சில நாடுகள் மறைமுகமாகவும் நேரடியாகவும் களத்தில் இறங்கியுள்ளதன் ஒரு அத்தியாயமே கேபீ கைது./- சரியானது!!.

    நான் ஏற்கனவே எழுதியிருந்தேன்!, கே.பி. ஏற்கனவே கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்று!, அந்த பொம்மையை வைத்து மோடிவித்தை அதிகாரிகள் காட்டுகிறார்கள் என்று!. தொல்.திருமாவளவன், “தடயவியல் துறையில் (மதுரையில்) பணிப் புரிந்தவர், அவர் “கேழ்வரகில்(குரக்கனில்) நெய் வடிகிறது என்று ஐரோப்பா வந்து சொன்னபோது, “இந்தியாவை நம்பாதீர்கள் என்று சொன்ன போது”!, விஸ்வநாதன். உருத்திரக் குமரன் போன்ற மெத்தப் படித்தவர்களுக்கு “கேட்பாருக்கு மதி எங்கே போனது??!!”,அல்லது இதில் அவருக்கும் பங்கு உண்டா??!.

    Reply
  • thambi
    thambi

    புலிகளும் புலிகளின் ஆதரவாளர்களும் தமது தவறகளை விமர்சிப்பார்கள் என் எதிர்பார்ப்பதோ? இவர்கள் திருந்துவார்கள் என எதிர்பார்ப்பதோ தவறானது பலிகளே இவ்வளவு தமிழர்களின் அழிவிற்கும் ஒற்றுமையின்மைக்கும் ஏன் தமிழ் இனத்தின் போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்களுமாவர் இவர்களில் ஒருவர் தான் தான் தலைவர் என்று உச்சரிப்பதே ஆபத்தானவர் இவர் மட்டுமென்ன நெடியவன் கூட இந்த ரகம்தான். இவர்கள் முற்று முழுதாக அழிந்தொழியப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

    புலம்பெயர் நாடகளில் உள்ள மக்களின் பணத்தை தமதாக்கிக் கொண்டிருக்கும் புலிகளின் கர்மவாதிகள் மேலும் பல இன்னல்கள் அனுபவிக்கும் காலம் வெக தூரத்தில் இல்லை.

    ஜரோப்பாவிலிருந்து புலிகளின் கொள்ளையர்களையும் கொழும்புக்கு ஏற்ற வேண்டும்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    ‘…..ஈழத் தமிழரும், இந்திய புலி ஆதரவு தமிழரும் இணைந்து சீனா – இந்தியா – பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்குள் ஒரு மோதலை உருவாக்க திட்டம் …..’

    ஆமாம், இப்போது ஆளை ஆள் கட்டித்தழுவி முத்தமிட்டுக்கொண்டிருக்கின்றனர். இனித்தான் மோதல் வரவேணுமாக்கும். நீங்கள் ஆகத்தான் ஈழத்தமிழரின் ரலன்றை உயர்வாகப் பார்க்கிறீர்கள்!

    Reply
  • peter
    peter

    பயங்கர வாதிகளின் பிடிகளில் இருந்து இலங்கையை காப்பாற்றிய ராஜபக்சே சகோதரர், பொருளாதார ரீதியிலும் இலங்கையை வெகு விரைவில் கட்டிஎளுப்புவதை நாங்கள் எல்லாரும் கண்கூடாக பார்க்கத்தான் போகிறோம்

    Reply
  • mahendran
    mahendran

    புலிகளால் தினசரி இலங்கையில் புதைகுழிக்குள் இலங்கையரின் பிள்ளைகள் பிணமாக அனுபப்படுவதை வீ.பீக்கு உடையயும் உரித்து பிடரியில் கோடாலியால் கொத்தி தடுத்தி நிறுத்திய துணிச்சல்மிக்க வீரர்கள் ராஜபக்சே சகோதரர்கள்.

    புலி பினாமிகளால் புலன்பெயர்ந்த இலங்கையரிடம் கோடிக்கணக்கில் பணத்தை கொள்ளை அடிக்கப்படுவதை கே.பீயின் கைது மூலம் நிறுத்தி புலன் பெயர்ந்த இலங்கையரை காப்பாற்றியதும் இலங்கை மண்மீது உண்மையான பாசம்மிக்க ராஜபக்சே சகோதரர்தான்.

    வாழ்க ராஜபக்சே சகோதரர்
    வளர்க இலங்கை மக்களின் ஐக்கியம்

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /புலம்பெயர் நாடகளில் உள்ள மக்களின் பணத்தை தமதாக்கிக் கொண்டிருக்கும் புலிகளின் கர்மவாதிகள் மேலும் பல இன்னல்கள் அனுபவிக்கும் காலம் வெக தூரத்தில் இல்லை. ஜரோப்பாவிலிருந்து புலிகளின் கொள்ளையர்களையும் கொழும்புக்கு ஏற்ற வேண்டும்.–thambi.

    ஆமாம், இப்போது ஆளை ஆள் கட்டித்தழுவி முத்தமிட்டுக்கொண்டிருக்கின்றனர். இனித்தான் மோதல் வரவேணுமாக்கும். நீங்கள் ஆகத்தான் ஈழத்தமிழரின் ரலன்றை உயர்வாகப் பார்க்கிறீர்கள்!–சாந்தன்/

    இலங்கைத் தமிழர்களின் “TALENT டை” உயர்வாக மதிக்காவிட்டாலும், குறைவாக யாரும் மதிக்கவில்லை!. “லாஜிக்காக” சிந்தித்துப் பாருங்கள், பறையர்களுக்காக, பறையர்களால், ஒரு பறையன் நடத்தும் கட்சி, “விடுதலை சிறுத்தைகள்” அமைப்பு, எந்த இலங்கைத் தமிழனாவது இலங்கையில் உள்ள தாழ்த்தப்பட்ட? மக்களின் நலனுக்காக அரசியல் நடத்தியிருக்கின்றானா?. “வன்னியிலுள்ள மக்களே இதற்கு உதாரணம்”. அவர்கள்தான் உண்மையான தொப்புள் கொடி உறவு”, யாராவது கண்டுக் கொண்டீர்களா?, கண்டுக் கொள்டிருக்கிறீர்களா?. தமிழன் என்ற பெயரால், அரசியலை ஆளுக்கொரு திசையில் சுயநலமாக நடத்திவிட்டு, பள்ளத்தில் விழும் போது ஒட்டு மொத்த தமிழினமே அழிகிறது என்று கத்துகிறீர்கள்!. தமிழ் நாட்டு தாழ்த்தப் பட்டவர்கள் மீது மட்டுமேன் இந்த அக்கறை. தமிழ் நாட்டில் புலிகளை சுரண்டி பண்த்தை “அசையும் அசையா சொத்துக்களில்” சிலர் முதலீடு செய்துள்ளனர், அதை பாதுகாக்க, கீழ்மட்ட “ரவுடிகள்” தேவை, “அதற்கு ஏற்ற இந்திய ஆதரவு, “குத்துப் பாட்டு” அரசியல் தேவை, அதற்கு “திருமாவளவன்” கிடைத்துவிட்டார். உங்களுக்கு தாழ்த்தப் பட்டவர்கள் மீது அக்கறையென்றால், நீங்கள் துவங்க வேண்டியது வட இந்தியாவிலிருந்து, தைரியமிருக்கிறதா?. இலங்கை அரசாங்கத்தின் பக்கம் இருப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள்!, “முட்டாள் தனமான, அழிவுமிக்க “ஐடியாவாக” இருந்தால்” அதை “கொழும்பும்” ஆதரிக்கும்!, அதற்காக அதுதான் தற்போதைய உலகத்திம் நடைமுறையான “வெற்றிக்கான ஃபார்முலா” என்று அர்த்தத்தை தோக்கிக் கொண்டு வந்து உங்க்களுக்கான “அரசாங்க சலுகைகளை” இந்தியாவரை நீடிப்பதற்காக, எங்கள் கழுத்தை அறுக்காதீர்கள்!.

    Reply
  • மாயா
    மாயா

    உலகம் சுற்றும் வாலிபன் உருத்திரகுமாரின் அறிக்கை ஒன்றையும் காணோமே?
    புலிகள் பூனைகளாகி விட்டார்களா? புலிகள் இனி மியாவ் என்றாலும் புலிகளின் சர்வதேச மட்ட முக்கியஸ்தர்களுக்கு ஆபத்து உண்டு. அது எந்த வகையில் என்பதைத்தான் நிச்சயிக்க முடியவில்லை. எதிர்காலத்தில் அவர்கள் கைதாகலாம், கடத்தப்படலாம் , கொல்லப்படலாம். கேபீ மூலம் விசாரணையில் , சர்வதேச மட்ட புலி முக்கியஸ்தர்களது தகவல்களும் , சொத்து விபரங்களும் அதிகமாகவே பெறப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

    தவிரவும் காஸ்ரோவின் வெளிநாட்டு முக்கியஸ்தர்களது பெயர்களும் , அவர்களது நடத்தைகள் ,வதிவிடங்கள் மற்றும் சொத்து விபரங்களும் கேபீயால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இது பெரும்பாலும் புலம்பெயர் புலிகளை மறைவு வாழ்வுக்கு தள்ளிச் செல்லும். ஆனாலும் அது இலேசான காரியமல்ல? காற்று புகாத இடங்களுக்குள் சிறீலங்கா புலனாய்வு துறை புகுந்து , சத்தமேயில்லாமல் பிடித்தவர்களை கடத்தியும் கொண்டு போயுள்ளது வியப்பை அளித்துள்ளது. கேபீயோடு உறவு வைத்துள்ள வெளிநாடுகள் தொடர்பான தகவல்களை கேபீ கக்கும் போது , அந்த நாடுகள் தம்மை காத்துக் கொள்ள புலத்தில் உள்ள புலி முக்கியஸ்தர்களை சந்தடியின்றி பிடித்து சிறீலங்காவுக்கு கொடுத்து தம்மை காத்துக் கொள்ளலாம்.

    சாகா வரம் பெற்றவர் என நம்பிய பிரபாகரனது மரணத்தின் பின் புலிகளின் கட்டமைப்பு தற்சமயம் குலைந்து விட்டது. எதிர்வரும் மாவீரர் தின பிரபாகரனது பேச்சை எதிர்பார்த்து இருப்பவர்களது எதிர்பார்ப்பு தகரும் போது பெரும்பாலும் புலிகள் மேல் இருந்த நம்பிக்கை சிதைந்து போகும். இலங்கை தமிழர்கள் வெடிச் சத்தம் வரும் திசையை மட்டும் பார்த்து கைதட்டி மகிழ்ந்தவர்கள். அதை ஆரம்ப இயக்கங்களின் போது எவர் தாக்குதல் நடத்துகிறார்களோ, அவர்களை மெச்சும் ரசிகர் கூட்டம் எனும் மனநிலை கொண்டவர்கள் என்பதை பலராலும் உணர முடியும். உணர்ச்சிளோடு சங்கமாகும் மனநிலையிலிருந்து யதார்த்தத்தை சிந்திக்கும் மன நிலை எம்மவரிடம் மிகக் குறைவு. எனவே அப்படியான கோஸங்கள் குறைந்துவிடும்.

    முன்னர் எல்லாம் புலிகள் புலம் பெயர் தமிழரை வெருட்டி வந்தார்கள். அதே போன்ற நிலமை சிறீலங்கா அரசால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதைத்தான் வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும், ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் என கண்ணதாசன் சொன்னாரோ?

    ஏப்ரலில் உருத்திரகுமார் நாடு கடந்த தமிழீழ தேர்தலை வைப்பாரா? அவரும் நாடு கடத்தப்படுவாரா? பார்க்கலாம்.

    Reply