இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து உலகின் பலநாடுகளில் வசிக்கும் பெண்கள் சந்தித்து கருத்துக்களை பரிமாறவும், விவாதங்களை முன்னெடுக்கும் தளமாக அமையும் பெண்கள் சந்திப்பின் 29 ஆவது தொடர் எதிர்வரும் 11 ஆம் திகதி யேர்மனின் தலைநகரான பேர்லினில் நடைபெறவுள்ளது.
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து உலகின் பலநாடுகளில் வசிக்கும் பெண்கள் சந்தித்து கருத்துக்களை பரிமாறவும், விவாதங்களை முன்னெடுக்கும் தளமாக அமையும் பெண்கள் சந்திப்பின் 29 ஆவது தொடர் எதிர்வரும் 11 ஆம் திகதி யேர்மனின் தலைநகரான பேர்லினில் நடைபெறவுள்ளது.
karu
யாழ்ப்பாணத்தில் பெண்கள் உரிமைகள் தொடர்பாகவும் விதவைகள் வாழ்வு தொடர்பாகவும் பல வீதியோர நாடகங்கள் நடாத்தப்படுகின்றன இந்த அபல நிலைகள் பற்றி உங்கள் மாநாடு கதைப்பது விவாதிப்பது மட்டுமன்றி செயலிலும் இறங்கு வீர்களா? அல்லது கதைதானா? உங்கள் மாநாடு முடிந்ததும் அவதானித்து விமர்சனம் செய்கிறோம். karu jaffna
aman
எத்தனை இஸ்லாமியப் பெண்கள் உங்கள் அமைப்பில் உள்ளனர்? ஏன் அவர்கள் பற்றி எந்த ஊடகங்களிலும் காணவில்லை அதுவும் இருட்டடிப்பா? கொஞசம் உங்கள் கடந்தகால பெண்கள் அமைப்பின் செயறப்பாடுகள் வேலைத்திட்டங்கள் பற்றி எங்கே காணலாம்
T Constantine
//உங்கள் கடந்தகால பெண்கள் அமைப்பின் செயறப்பாடுகள் வேலைத்திட்டங்கள் பற்றி எங்கே காணலாம்???//
Sudha
இது ஒரு அமைப்பல்ல. விரும்பியவர்கள் (பெண்கள்)எவராயினும் கலந்து கொள்ளலாம். இச்சந்திப்பு புலம்பெயர்ந்து வாழும் பெண்கள் ஒன்று கூடிப் பேசுவதற்காக நடத்தப்படுவது. பெண்கள் சந்திப்பு நடக்கப் போவதாக அறிவிப்பு முதலில் வெளியிட்டார்கள். பிறகு நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டது. ஆகவே எப்பெண்ணும் தன் நிகழ்ச்சியை அங்கு செய்ய விரும்பினால் தொடர்பு கொள்ள முயற்சித்திருக்கலாம் என்பது தான்- நான் இக்கூட்டம் பற்றி அறிந்தவை. ஆகவே எவரும் என்ன செய்தீர்கள்? சாதித்தீர்கள் என்று கேள்வி கேட்கத் தேவையில்லை. அவர்கள் சந்திப்பார்கள்-பேசுவார்கள்-மீண்டும் சந்திப்பார்கள். நமக்கு இதிலென்ன நாட்டாமை?
விரும்பிய பெண்கள் கூட்டத்திற்குப் போய் அடுத்த சந்திப்பை பொறுப்பு எடுத்து நடத்தப் போவதாகச் சொன்னால் அந்த இடத்திலேயே வைத்து பொறுப்பு கேட்பவரிடம் ஒப்படைக்கப்படும். அவர்கள் பின் இடம்- திகதி- நிகழ்ச்சிநிரலைத் தயாரித்து அறிவிப்பை வெளியிடுவார்கள்.பெண்கள் சந்திப்புக்கு பொது நிதியா திரட்டப்படுகிறது கணக்குக் கேட்க? வேலை பற்றி விளக்கம் அறிய?