அமைச்சர் பந்துல குணவர்தன

அமைச்சர் பந்துல குணவர்தன

பல்கலைக்கழகங்களுக்குள் ஒழுக்கமற்ற செயற்பாடுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை – அமைச்சர் பந்துல

பல்கலைக்கழகங்களுக்குள் ஒழுக்கமற்ற செயற்பாடுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதன் மூலமே பல்கலைக்கழக அமைப்பைப் பாதுகாக்க முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களுக்குள் போதைப்பொருள் உட்புகுந்தமை தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் அச்சம் இன்றி பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் வகையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சக்திகளால் இலங்கை தேசத்தை அழிப்பதற்காக பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக போதைப்பொருள் விற்கப்படுகிறது – அமைச்சர் பந்துல குணவர்தன

பருப்பு இறக்குமதிக்காக அவுஸ்ரேலியாவிடமிருந்து இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் கடன் !

அவுஸ்திரேலியாவிடமிருந்து 200 மில்லியன் டொலர் கடன் வசதியை இலங்கை அரசாங்கம் கோரியுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த கடனை பயன்படுத்தி பிரதானமாக பருப்பு மற்றும் பார்லி ஆகியவற்றை இறக்குமதி செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மீதமுள்ள பணத்தில் ஏனைய அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் இருந்தே பருப்பு மற்றும் பார்லி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. எதிர்வரும் புத்தாண்டு காலம் மற்றும் அடுத்து வரும் மாதங்களுக்கு நாட்டிற்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியாவிடம் இருந்து ஒரு பில்லியன் கடன் உதவி கிடைக்க உள்ளது.

இந்த தொகையானது அடுத்த ஆறு மாதங்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய போதுமானதாக இருக்கும். இதனை தவிர சீனாவிடம் 10 லட்சம் மெற்றிக் தொன் அரியை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.