காசா

காசா

காசா பகுதியிலுள்ள இணைய சேவைகள் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை முடக்கியது இஸ்ரேல்!

இஸ்ரேலினால் காசா பகுதியிலுள்ள இணைய சேவைகள் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கடந்த 22 நாட்களாக தொடர்ந்து வரும் இஸ்ரேல் – ஹமாஸ் போரினால் பல்லாயிரக்கணக்கானோரின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

இந்தத் தாக்குதலில் பலியாகியோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் காசா பகுதினர் அத்தியாவசிய தேவைகளுக்கே போராடும் நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் இஸ்ரேல் அரசாங்கம் காசா பகுதியிலுள்ள இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் என அனைத்தையும் துண்டித்துள்ளது.

இதனால் இஸ்ரேலில் நடக்கும் எந்த ஒரு விடயமும் உலகத்திற்கு தெரிய வராது என மனித உரிமைகள் ஆர்வலர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் இதனால் காசா பகுதியிலுள்ள 2.2 மில்லியன் மக்கள் தொடர்பாக எந்த தகவலும் வெளிவராது. மக்களின் நிலை தான்? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாவதோடு அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை கூட வழங்க முடியாத சூழல் ஏற்படும் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல்- பாலஸ்தீன போர் நிறுத்த தீர்மானம் ஐ.நாவில் நிறைவேற்றம் !

மத்திய கிழக்கில் நீடித்த மனிதாபிமான போர் நிறுத்தம் மற்றும் காஸாவிற்கு உதவிகளை அணுகக் கோரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் அவசரகால சிறப்பு அமர்வின் போது இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

தீர்மானத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 14 வாக்குகளும் பதிவாகியிருந்த நிலையில், 45 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

 

தீர்மானத்திற்கு எதிராக இஸ்ரேல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வாக்களித்திருந்த நிலையில், ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீதான ஹமாஸின் தீவிரவாத தாக்குதலுக்கு வௌிப்படையான கண்டனத்தை தெரிவித்திருந்த கனடா இதில் வாக்களிக்கவில்லை..