இரா.சாணக்கியன்

இரா.சாணக்கியன்

“மட்டக்களப்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டு வந்த நினைவு தூபிகள் அகற்றப்பட்டத்தை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன்.” – இரா.சாணக்கியன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டு வந்த நினைவு தூபிகள் அகற்றப்பட்டத்தை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன் என சாணக்கியன் பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (23) தெரிவித்தார்.

 

இந் நாட்டில் மக்களின் வரிகளை பெற்றுக்கொண்டு மாளிகைகளும் கோபுரங்களும் கட்டி வைத்துள்ள இராணுவ தளபதிகள் மற்றும் இராணுவ மேலதிகாரிகளின் பாதுகாப்புக்கென பாரிய நிதி செலவிடப்படுகின்றது.

 

இருப்பினும் இராணுவ சிப்பாய்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் யுத்தம் முடிந்த பின்னும் கோட்டாபயவினார் மேலதிகமாக இணைக்கப்பட்டு அவர்கள் மேசன், தச்சுத்தொழில் மற்றும் கூலி வேலைகளுக்க்காக அமர்த்தப்பட்டார்கள்.

 

இலங்கை மக்கள் அவர்களின் வேதனத்துக்கும் சேர்த்து தற்பொழுது பாரிய வரி செலுத்தும் நிலைமைக்கு தள்ளப்படுள்ளார்கள்.

 

இருப்பினும் இவர்களும் இப் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்படுள்ளனர். ஆனால் இவர்களின் தற்போதைய செயல்பாடுகள் ஆனது இன விரோதத்தை மென்மேலும் தூண்டும் விதமாகவும் அவமரியாதை செய்யும் விதமகாவும் அமைந்துள்ளது.

 

தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டுவந்த நினைவு தூபிகள் அகற்றப்பட்டதை நான் மிகவும் துக்ககரமான சம்பவமாக கருதுகின்றேன்.

 

ஓர் இனத்துக்காக இனத்தின் விடுதலைக்காக போராடிய வீரர்கள் துயிலும் இந்த இல்லங்களை அழிப்பது எமது சமூகத்துக்கு மிகவும் மன வேதனையளிப்பதாகும். அவர்களின் பெற்றபெற்றோர்கள் மற்றும் சகோதரர்கள் உறவினர்கள் பிள்ளைகளின் மனநிலையை யோசித்துப் பாருங்கள் என சாணக்கியன் மேலும் தெரிவித்தார்.

“அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களுக்கு ஏதாவது ஒரு நன்மை செய்வதாக இருந்தால் தன்னுடைய அமைச்சை இராஜினாமா செய்ய வேண்டும்.” – இரா.சாணக்கியன்

கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் ஏதாவது ஒரு நன்மை செய்வதாக இருந்தால் தன்னுடைய அமைச்சை இராஜினாமா செய்துவிட்டு வெறுமனே ஒரு பாராளுமன்ற உறுப்பினாக இருப்பதே சிறந்தது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்திய இழுவைப் படகு விடயம் குறித்து பிரதமர் மற்றும் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் எதிர்மறையான கருத்துகள் தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரதமர் இந்திய இழுவை படகுகளுக்கு பாஸ் அடிப்படையில் அனுமதி வழங்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். அதே நேரம் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஒரு துளியேனும் இந்திய மீனவர்களுக்கு அனுமதியில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனாலும் அத்துமீறிய மீன்பிடி இடம்பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது. இதனை எவ்வறு பார்க்கின்றீர்கள்?

டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் இழுவைப்படகு இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதுமட்டுமலல்லாது அவருக்கு மாதமொன்றுக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய் இலஞ்சம் கொடுப்பதாகவும் பாராளுமன்றத்திலே ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். இவ்வாறு அவர் தொடர்பான விடயங்கள் இருக்கின்றன.

அந்த விடயங்களெல்லாம் ஒருபுறம் இருக்க டக்ளஸ் தேவானந்தா அவர்களை மீன்பிடி அமைச்சராக நியமித்ததற்கான காரணமே வடக்கு கிழக்கிலே இருக்கும் தமிழர்களுக்கும் தென்இந்தியாவில் இருக்கும் தமிழர்களுக்கும் முரண்பாடு வரவேண்டும், அதன் காரணமாக தென்இந்திய முதலமைச்சருக்கோ, அரசியல்வாதிகளுக்கோ இலங்கையில் வடக்கு கிழக்கிலே வாழும் தமிழ் மக்கள் மீதான எதிரான சிந்தனை வரவேண்டும் என்பதற்;காகவே திட்டமிட்ட வகையிலே டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார் என்பது நான் அடிக்கடி சொல்லும் விடயம்.

கௌரவ அமைச்;சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உண்மையிலேயே வாயால் சொல்வது ஒன்று நடைமுறைப்படுத்துவது ஒன்று. அந்த அமைச்சிற்கு பொருத்தமில்லாத ஒருவர். அவர் மீனவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் ஏதாவது ஒரு நன்மை செய்வதாக இருந்தால் தன்னுடைய அமைச்சை இராஜினாமா செய்துவிட்டு வெறுமனே ஒரு பாராளுமன்ற உறுப்பினாகவோ அல்லது வேறு ஏதாவது அமைச்சுப் பொறுப்பை, எமது மாவட்டத்திலேயும் ஒரு திணைக்களம் கூட சுற்றுநிரூபம் வெளியிடப்படாத அமைச்சை வைத்திருக்கும் அமைச்சர்களைப் போல அவரும் ஏதாவது தன்னுடைய சலுகைகளை எடுக்கக் கூடிய வகையிலான அமைச்சைக் கேட்டெடுத்து பேசாமல் இருப்பதே பொருத்தம் என்று தெரிவித்துள்ளார்.

கிழக்கில் அபகரிக்கப்படும் தமிழர் நிலங்கள் – என்னால் ஒன்றுமே செய்ய முடியாது என்கிறார் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் !

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிற்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவர் குகதாசன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று நேற்று(24) இடம்பெற்றுள்ளது.

இதன்போது மயிலத்தமடு மாதவனை போன்ற பிரதேசங்களில் இடம்பெறும் தமிழருக்கு சொந்தமான காணி அபகரிப்பு தொடர்பில் கால்நடை அமைப்புக்கள், பண்ணையாளர்களினால் தொடர்ச்சியாக நடந்து வரும் அறவழிப் போராட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் பங்கேற்க வேண்டும் என்ற கோரிக்கை ஆவணம் கையளிக்கப்பட்டது.

எனிலும் குறித்த காணிகளானது மகாவலி அதிகார சபைக்கு உட்பட்டது என்பதனால் தன்னால் எந்தவித தீர்மானமும் மேற்கொள்ள முடியாது என ஆளுநர் கூறியுள்ளார்.

இதற்கான தீர்க்கமான முடிவை எடுக்கும் நோக்கில் அமைச்சரவை அமைச்சர் அல்லது ஜனாதிபதியை  நேரடியாக சந்திக்க தீர்மானித்திருப்பதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது.

அதோடு திருகோணமலை மாவட்டம் சம்பந்தப்பட்ட தொல்பொருள் மற்றும் காடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

“சிங்களவனை காட்டி தமிழ் மக்களை தமிழ்தேசிய அரசியல்வாதிகள் உசுப்பேற்றிக்கொண்டிருக்கிறார்கள்.” – சிவனேசதுரை சந்திரகாந்தன் 

“பாலம் கட்டினால் சிங்களவன் வருவான், ஏழை எழிய மக்களுக்கு சிங்களம் புகட்டக்கூடாது, என தமிழ் மக்களை தமிழ்தேசிய அரசியல்வாதிகள் உசுப்பேற்றிக்கொண்டிருக்கிறார்கள்.” என கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

புனரமைக்கப்பட்ட களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் வீதியை திறந்து வைக்கும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை(31) மாலை ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையியே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“அடுத்து வருகின்ற வரவு செலவுத் திட்டத்திலும், உலக வங்கி, மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகிய திட்டங்களிலும் அதிகளவு நிதி ஒதுக்கீடுகளை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுவே நாம் அடைய நினைக்கும் இலக்காகவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு சிக்கலான சூழ்நிலை இருந்தபோது எமது கட்சியை மட்டக்களப்பு மக்கள் மீட்டெடுத்தார்கள். அதன் பெறுமதியை நாம் அரசாங்கத்துடன் இணைந்து பல பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

இந்நிலையில் மக்களுக்கு நாம் முன்வைத்த கோரிக்கைகயை நிறைவேற்றுவதில் பல தடைகள் உள்ளன. ஆனாலும் சற்றுக்காலம் தாழ்த்தியாவது அவற்றை நிறைவேற்றிக் கொடுப்போம் என நாம் நம்புகின்றோம். 1960 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பட்டிருப்பு பாலத்தை நாம் பார்வையிட்டோம். அப்பாலம் குண்டுகள் வைத்து தகர்க்கப்பட்ட பாலமாகும். அதனை செப்பனிடுவதற்கு 1300 மில்லியன் ரூபாய் நிதி தேவையாகவுள்ளது.

 

1956 ஆம் ஆண்டு ஸ்ரீ சட்டம் கொண்டு வரப்பட்டது. ஸ்ரீ சட்டத்தின் பின்னர்தான் சீ.மூ.இராசமாணிக்கம் ஐயாவும் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டார். ஒரு சிங்கள எழுத்துக்காகவேதான் அவர் அக்கட்சியில் இணைந்து கொண்டார். அதற்காக எமது தமிழ் தலைவர்கள் வாகனங்களில் ஸ்ரீ எழுத்தை நீக்கிவிட்டு அ எழுத்தை பொருத்திக் கொண்டு மட்டக்களப்புக்கு வந்தார்கள். பின்னர் பட்டிருப்புத் தொகுதியிலே சீ.மூ.இராசமாணிக்கம் ஐயா அவர்கள் நாடாளுமன்றத்திலே இருந்தார். தமிழரசுக் கட்சியின் நூற்றாண்டு வரலாறு தோற்றுப்போன வரலாறாகும். இரண்டு தலைமுறைகள் அழித்துவிட்ட வரலாறாகும். அழிந்துள்ள இந்த வரலாற்றிலேயேதான் நாம் நிற்கப்போகின்றோமா என சிந்திக்க வேண்டும்.

இராசமாணிக்கம் ஐயா பிறந்த இடம் மண்டூர் அவர் மண்டூருக்கு கட்டிக் கொடுத்த பாலம் எங்கே? அவரது காலத்தில் செய்யப்பட்ட அபிவிருத்திகள் எங்கே? அவர் மக்களுக்காக செய்த பணி ஒன்றுமே இல்லை. மாறாக பாலம் கட்டினால் சிங்களவன் வருவான், ஏழை எழிய மக்களுக்கு சிங்களம் புகட்டக்கூடாது, என சாதாரண மக்களை உசுப்பேற்றி விட்டார்கள்.

தற்போது 2 தலைமுறைகள் கடந்து தற்போது என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பொலிஸில்  சேரமுடியாது, சிங்களவர்களுடன் சேர்ந்து நிர்வாகம் செய்ய முடியாது, ஏனைய பணிகளைச் செய்யமுடியாது, போன்ற நிலமைகளை களுவாஞ்சிகுடி மக்கள் இன்னமும் நினைத்துப் பார்க்க முடியாமல் இருக்க முடியாது.

அழிந்து புதைக்கப்பட்ட எமது இளைஞர்களுக்குச் சொல்லும் கருத்து என்ன? அல்லது இந்த மக்களுக்கு நாம் கட்டும் வழி என்ன? இன்னமும் துவேசத்தனமாகப் பேசி இந்த மக்களை எந்த இடத்திற்குக் கொண்டு செல்லப்போகிறோம், அதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக என்றால் ஒன்றும் இல்லை.

இதுதான் பாரம்பரிய மேட்டுக்குடி அரசியல் வரலாறாகும். ஏனெனில் அவர்கள் அவர்களது வாரிசுகளுக்காகத்தான் செயற்படுகின்றார்களே தவிர மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் ஏற்றுக் கொள்வது கிடையாது. அதற்கு உதாரணம் இந்த மண்ணிலேயே நிகழ்ந்திருக்கின்றது.

எந்தப் அப்பாவிப் பிள்ளைகளை உசுப்பேற்றி துப்பாக்கிகளைக் கொடுத்து மரணிக்க வைத்தார்களோ, எந்தப் பிள்ளைகளை சிங்களமும், ஆங்கிலுமும் கற்கக் கூடாது என உசுப்பேற்றினார்களோ அவர்களுடைய பிள்ளைகள் தற்போதிருக்கும் நிலமைகளை நினைத்துப் பார்த்தால் மக்களுக்கு விளங்கும் என நினைக்கின்றேன்.

சாமானிய மனிதர்களை வாழவைப்பதுதான் அரசியல் என“ அவர் இதன்போது தெரிவித்தார்.

“தமிழ் மற்றும் சிங்கள மக்களிடையே இனமுரண்பாட்டை ஏற்படுத்தி ஆட்சிக்கு வரும் எண்ணத்தில் ஜனாதிபதி ரணில்…” – இரா. சாணக்கியன்

“தமிழ் மற்றும் சிங்கள மக்களிடையே இனமுரண்பாட்டை ஏற்படுத்தி ஆட்சிக்கு வரும் எண்ணத்தில் ஜனாதிபதி ரணில் செயற்படுகிறார். இதனால் தமிழ் மக்களுக்கு ஆபத்தான காலம் உருவாகலாம்.” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் எச்சரித்துள்ளார்.

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று(01)சமகால அரசியல், பொருளாதார நிலவரங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

பௌத்த மக்களையும் தமிழ் மக்களையும் ஒரு முறுகல் நிலைக்கு உட்படுத்தி தாங்கள் ஆட்சிக்கு வரலாம் என்ற எண்ணத்தில் ஜனாதிபதி செயற்படுகின்றார். ஆட்சியைக் கைப்பற்றும் முதல்கட்டமாக வடக்கு கிழக்கிலே இடம்பெறும் சில சம்பவங்களை பார்க்க கூடியதாக இருக்கின்றது. அண்மையில் திருகோணமலையில் ஜனாதிபதியும் இந்தியாவும் செய்த சில ஒப்பந்தங்களைப் பற்றி சில ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இவ்வாறாக இந்த விடயங்களை அவதானிக்கும் போது முல்லைத்தீவு மாவட்டத்திலே குருந்தூர் மலையிலே மாபெரும் எதிர்ப்பு பேரணியிலேயே தமிழ் மக்கள் ஈடுபட்டனர். பிக்குமார் அவ்விடத்தில் முரண்பட்டனர். அதனைத் தொடர்ந்து திருகோணமலையில் ஆளுநருடைய அலுவலகத்துக்குள் அடாவடித்தனமாக பிக்குமார்கள் சென்றனர்.

அந்த விகாரை கட்டுவதை ஒரு பெரிய பூகம்பமாக தெற்கிலே பரபரப்பாக செய்திகள் பரப்பினர். இவ்வாறான சில விடயங்களில் இன முறுகலுக்கான ஆரம்ப நிலையை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.”எனத் தெரிவித்துள்ளார்.

இரா.சாணக்கியனை எச்சரித்து பௌத்த பிக்கு அடாவடி!

மட்டக்களப்பு, பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்கு வருகைதந்த பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை பௌத்த மதகுரு தலைமையிலான காணி அபகரிப்பு குழுவானது நேற்று (22) சிறைப்பிடித்த சம்பவத்தின் போது அங்கு அடாவடி நடவடிக்கையில் ஈடுபட்ட பிக்கு சாணக்கியன் பெயரை சொல்லி அங்கு சென்றவர்களுக்கும் பாரிய எச்சரிக்கை ஒன்றை சாணக்கியனுக்கு வழங்கியிருந்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இரா.சாணக்கியன் ;

இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடும் பிக்குகளுக்கும் அவரை சார்ந்த பெரும்பான்மை இனத்தவர்களுக்கும் பொலிஸ் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் சர்வதேச குற்றவியல் சட்டம் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சு ICTR – International Criminal Law and Hate Speech சட்டம் மூலம் இவ் பிக்குவானது கைது செய்யப்பட வேண்டும் எனவும் தமிழருக்கு ஒரு நீதி சிங்களவர்களுக்கு ஓர் நீதியா? எல்லா வகையிலும் காலம் காலமாக பாதிக்கப்படுவது தமிழ் பேசும் மக்களே.

 

இதற்கான தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எம்மால் இயன்ற அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றோம். அவ் பிக்கு சொல்வதை போன்று எமது மக்களின் இவ் பிரச்சனைக்கு தமிழரசுக் கட்சியும் நானுமே அழுத்தம் கொடுத்து வருகின்றோம் மற்றைய குறிப்பாக அரச சார் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் மௌனம் மிகுந்த சந்தேகத்தை உண்டு செய்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய இணைப்பு !

மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக மயிலத்தனை மடு , மாதவனை பிரதேசத்துக்கு இன்று (22) சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது அவர்கள், மேய்ச்சல் தரை தொடர்பாக பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை நேரில் அவதானித்ததுடன், பண்ணையாளர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

 

இந்நிலையில் பௌத்த மதகுரு ஒருவரின் தலைமையில் அப்பகுதியில் சட்டவிரோதமாக காணிகளை அபகரித்துள்ள சிலர் கலந்துரைடாடலில் ஈடுபட்டிருந்தவர்களை வழிமறித்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

இதனால் அப்பகுதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் சிறைப்பிடிக்கப்படுள்ளவர்களை மீட்பதற்குரிய நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் ஊடகவியலாளர்களும் உள்ளடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“குருந்தூர்மலையில் பானையை காலால் தட்டியதை ஜனாதிபதியிடம் கூறிய போது அதனை பொலிஸ் சம்பந்தப்பட்ட விடயம் என கூறிவிட்டார்.” – இரா.சாணக்கியன்

ஒரு தீர்வினை வலியுறுத்திப் பெற்றுக் கொள்வதாக இருந்தால் அது எமது தமிழ் மக்களைக் காப்பாற்றக் கூடியதாகவும் அதற்கான அதிகாரங்களைப் பெற்றுத்தரக் கூடியதுமாக இருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

துறைநீலாவணை தமிழரசுக்கட்சியின் வட்டாரக்கிளையின் ஏற்பாட்டில் கறுப்பு ஜீலை தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பதாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பொலிஸ் அதிகாரம் இல்லாத அதிகார பரவலாக்கலில் நாம் எவ்வாறு எமது மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து பாதுகாக்க முடியும்? கறுப்பு ஜூலை போன்றதொரு  நிலைமை மீண்டும் வந்தால் மக்களைக் காப்பாற்றுவதற்கு தமிழ்த் தலைவர்களிடம் எந்த அதிகாரங்களும் இல்லை.

தற்போதைய தலைவர்கள் மக்களை காப்பாற்ற முடியாத நிலையிலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அரசாங்கம் போடும் பிச்சைகளைப் பெற்று அபிவிருத்தி செய்வதாக சிலர் மக்களை ஏமாற்றி வருகின்றனர். மக்கள் இதனைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

அத்துடன் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் குண்டு வெடிப்பு சம்பவமானது அரசியல் இலாபம் ஈட்டும் வகையில் திட்டுமிட்டு செய்யப்பட்ட விடயமாக தற்போது வரையில் பேசப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கறுப்பு ஜூலை போன்றதொரு நிலைமை மீண்டும் வந்தால் மக்களைக் காப்பாற்றுவதற்கு தமிழ்த் தலைவர்களிடம் எந்த அதிகாரங்களும் இல்லை.

அதனடிப்படையிலேயே நாங்கள் ஜனாதிபதியுடனான அனைத்துச் சந்திப்புக்களிலும் தமிழர்களுக்கான அதிகாரங்கள் தொடர்பில் அழுத்தம் கொடுத்து வருகின்றோம். நாங்கள் ஒரு தீர்வினை வலியுறுத்திப் பெற்றுக் கொள்வதாக இருந்தால் அது எமது தமிழ் மக்களைக் காப்பாற்றக்கூடியதாகவும் அதற்கான அதிகாரங்களைப் பெற்றுத்தரக் கூடியதுமாக இருக்க வேண்டும்.

வெறுமனே அரசாங்கம் அபிவிருத்தி என்ற போர்வையில் வீதிகளைப் போடுவதும் வீடுகளைக் கட்டிக் கொடுப்பதும் எமது இனத்திற்கான நிரந்தரத் தீர்வுகள் அல்ல. எனவேதான் நாம் அதிகார பலத்தினைக் கோரி நிற்கின்றோம். குருந்தூர் மலை விவகாரத்தில் என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். பொலிஸ் அதிகாரிகளின் தயவில் அந்தப் பொங்கல் நிகழ்வுகள் தடுக்கப்பட்டன.

பானையைக் காலால் எட்டி உதைத்தார்கள். இந்த விடயத்தினையே ஜனாதிபதியிடம் நாம் கூறியிருந்தோம். அவர் இதற்கு அது பொலிஸ் சம்பந்தப்பட்ட விடயம் எனக் கூறியிருந்தார். இந்த அதிகாரம் எங்களிடம் இருந்தால் இவ்வாறான விடயங்கள் இடம்பெறாது. எனவே இதற்குத் தான் நாம் எமக்கான பொலிஸ் அதிகாரமும் தேவை என்பதனை வலியுறுத்துகின்றோம்” என அவர் மேலும் குறிப்பிட்டாhர்.

“தமிழருக்கும் இந்நாட்டில் உரிமை உண்டு. ஆகவே பிச்சை போட வேண்டாம்.” – இரா.சாணக்கியன்

தான் ரணில் ராஜபக்ஷ அல்ல, நான் ரணில் விக்கிரமசிங்க என்று அண்மையில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேலும் தான் வழங்க போவதை நீங்கள் ஏற்று கொள்ள போகிறர்களா இல்லையா என்று ஜனாதிபதி கேட்கிறார் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

 

தமிழருக்கு இவ் நாட்டில் உரிமை உண்டு, எமக்கு நான் இதுதான் தருவேன் எடுத்துக் கொள்ளுங்கள் என்று எமக்கு பிச்சை போட்டு எம்மை ஏமாற்ற வேண்டாம் எனவும் பாராளுமன்றத்தில் உரையாற்றிய சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதியும் விரைவில் வீடு செல்ல வேண்டி வரும், எமக்கான உரிமைகளை சரியான முறையில் தராவிடின் நாட்டுக்கான கடன் அதிகரிக்குமே தவிர முதலீடுகள் கிடையாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் ஊழலால் நாட்டில் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோர் இறந்து கொண்டிருக்கிறார்கள் – இரா.சாணக்கியன்

சுகாதார அமைச்சரின் ஊழல் காரணமாகவே நூற்றுக்கணக்கானோர் நாட்டில் இறந்து கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் முன்னால் இன்று டெங்கு ஒழிப்பு ஊழியர்களை நிரந்தர நியமனம் செய்யுமாறு கோரி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“சுகாதார அமைச்சரின் ஊழல் காரணமாக தரம் குறைந்த ஊசிகளை கொண்டுவந்த விடயங்களால் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர்.

 

நாடளாவிய ரீதியில் உள்ள ஆயிரம் டெங்கு ஒழிப்பு உதவியாளரர்கள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேல் தங்களை நிரந்தரமாக்குமாறு கோரி வருகின்றனர்

 

பேராதனை வைத்தியசாலை இலங்கையில் இருக்கும் 2 வது வைத்தியசாலையாகும். அந்த வைத்தியசாலையில் 10 எம்.எம் ஊசி இல்லை என்றால் எமது கிராமப்புற வைத்தியசாலைகளில் அந்த ஊசி இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.

 

அமைச்சரின் ஊழலால் நாற்றுக்கணக்கான மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர் ஆனால் இந்த டெங்கு ஊழியர்கள்; மக்களை காப்பாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

 

இவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். ஜனாதிபதி பிரதமராக இருந்த காலப்பகுதியில் தான் இவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது.

 

அவர் இன்று மொட்டுகட்சியின் அரசியல் கைதியாக இருந்தாலும் கூட நீதியை நடைமுறைப்படுத்த ஜனாதிபதிக்கு பொறுப்பு இருக்கின்றது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“ஓர் தமிழ் பாராளுமன்ற உறுப்பினருக்கே இந்த கதி என்றால் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களின் நிலைமையினை யோசித்துப்பாருங்கள்” – நாடாளுமன்றில் இரா.சாணக்கியன் !

“ஓர் தமிழ் பாராளுமன்ற உறுப்பினருக்கே இவ் கதி என்றால் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களின் நிலைமையினை.” என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக இன்று நாடாளுமன்றில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த செயற்பாடு மிகவும் தவறான ஒன்றாகும். ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நேர்ந்த ஒரு இடையூறான செயற்பாடாகவே இது கருதப்படுகிறது.

நாடாளுமன்றுக்கு வருகைத் தந்து, உரையாற்றிவிட்டு நீதிமன்றில் முன்னிலையாவதாக அவர் கூறிய நிலையிலேயே இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த காலங்களில் கொலை குற்றத்திற்காக நீதிமன்றில் தண்டனை பெற்ற பிரேமலால் ஜயசேகர, நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டிருந்தார். ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலைக் குற்றத்திற்காக தண்டனை அனுபவித்த சிவநேசத்துறை சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு சிறையில் இருக்கும்போதுகூட வருகைத் தந்தார்.

இவ்வாறான பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு இன்று நாடாளுமன்றுக்கு வருகை தருவதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் பின்னணியை நீதிமன்றம் விசாரிக்கட்டும். எனினும், கட்சி பேதம் பாராமல் அவரது சிறப்புரிமை மீறப்பட்டமைக்கு எதிராக நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸாரைப் பார்த்து அடையாளத்தை உறுதிப்படுத்துமாறுக் கூறுவது நியாயமான ஒன்றாகும். ஏனெனில், அவரது தந்தையார் இரண்டு பொலிஸாரினால்தான் கொழும்பில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

எனவே, தன்னை பின் தொடர்ந்து பொலிஸார் வருவது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு சந்தேகம் எழுவதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

அத்தோடு, இன்று நாடாளுமன்றுக்கு வருகைத்தந்து உரையாற்றிவிட்டு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு சபாநாயகர் அறிவித்திருக்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் இன்று இதுதொடர்பாக கருத்து வெளியிட்டிருந்தார். ஆனால், ஏனைய உறுப்பினர்களும் இதற்கெதிராக குரல் கொடுத்திருக்க வேண்டும்.

நாம் இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். கடந்த காலங்களில் நாடாளுமன்றில் தாக்குதல் நடத்தினார்கள். முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய மீது தண்ணீர் போத்தல்களினாலும், புத்தகங்களினாலும் தாக்குதல் நடத்தினார்கள்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வில் சில்வா, அரச அதிகாரியொருவரை மரத்தில் கட்டி வைத்தார். இவையணைத்துக்கும் காணொளி ஆதாரங்கள்கூட இவற்றுக்கெதிராக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை என்ன?

ஏன், கடந்தாண்டு மே 9 ஆம் திகதி பிரதிபொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுடன் மஞ்சள் நிற டி சேட் அணிந்து வந்த நபர் ஒருவர், போராட்டக்கார்கள் மீது தாக்குதல் நடத்தினார். இவர் கைது செய்யப்பட்டரா?

அத்தோடு, வெறுப்பு பிரசாரம் குறித்து இன்று சமூக செயற்பாட்டாளர் புருனோ திவாகர கைது செய்யப்பட்டுள்ளார். உண்மையான வெறுப்புப் பிரசாரத்தை பார்க்க வேண்டுமாக இருந்தால், அன்று மஹிந்த ராஜபக்ஷ அலரிமாளிகையில் வைத்து ஆற்றிய உரையைப் பாருங்கள்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனக்காக பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவரைக்கூட பயன்படுத்தாத ஒருவர். ஓர் தமிழ் பாராளுமன்ற உறுப்பினருக்கே இவ் கதி என்றால் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களின் நிலைமையினை இவ்வளவு காலம் அவர்கள் அனுபவிப்பதை யோசித்து பாருங்கள்.

இன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு நேர்ந்த நிலைமையை பார்த்தால், நாட்டுக்கு எவ்வாறு முதலீட்டளார்கள் வருவார்கள்? என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.