இலங்கை போதைப்பொருள் பாவனை

இலங்கை போதைப்பொருள் பாவனை

இலங்கையில் சுமார் 50,000 ஐஸ் போதைப்பொருள் பாவனையாளர்கள்!

நாட்டில் ஐஸ் போதைப்பொருள் பாவனையாளர்கள் சுமார் 50,000 பேர் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தேசிய தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

 

அதன் தலைவர் சட்டத்தரணி சாக்கிய நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார்.

 

இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் பரவி மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில், ஏனைய போதைப்பொருட்களுடன் ஒப்பிடும் போது, ​​அதன் பரவல் கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அதேநேரம் பாடசாலை அமைப்பில் புகையிலை பாவனையின் போக்கு காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

பாடசாலை அமைப்பில் நாம் அடிக்கடி புகையிலை பாவனையை பார்க்கிறோம். வீட்டிலேயே புகையிலையைச் செய்து சுண்ணாம்புடன் கலந்து வாயில் வைக்கும் பழக்கம் மாணவர்கள் இடையே காணப்படுகின்றது. புகையிலையால் ஏற்படும் போதைக்கு அவர்கள் பழக்கப்பட்டுள்ளதாக தேசிய தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகர் உட்பட ஐவருக்கு குவைத்தில் தூக்குதண்டனை !

இலங்கையைசேர்ந்த போதைப்பொருள் வர்த்தகர் உட்பட ஐவருக்கு குவைத் தூக்குதண்டனையை நிறைவேற்றியுள்ளது.

 

இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகர் 2015 இல் மசூதியொன்றின் மீதுஇடம்பெற்ற தாக்குதலின் சூத்திரதாரி உட்பட ஐந்துபேருக்கு தூக்குதண்டனையை நிறைவேற்றியுள்ளதாக குவைத் தெரிவித்துள்ளது.

 

குவைத்தின் மத்திய சிறைச்சாலையில் தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

மசூதி தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்டவர் போதைப்பொருள் வர்த்தகர் இலங்கையை சேர்ந்த தண்டனை வழங்கப்பட்ட போதைப்பொருள் வர்த்தகர் உட்பட ஐவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது எனஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் ஒருவர் எகிப்தை சேர்ந்தவர் மற்றையவர் இலங்கையை சேர்ந்தவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏழு மாத போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளின் போது 78,169 பேர் கைது !

நாடளாவிய ரீதியாக, இந்த ஆண்டு ஆரம்பம் முதல் கடந்த 15ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளின் போது 78 ஆயிரத்து 169 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, 32 ஆயிரத்து 334 சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 389 கிலோ 721 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 32 ஆயிரத்து 361 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட 34 ஆயிரத்து 709சோதனை நடவடிக்கைகளில் 5 ஆயிரத்து 654 கிலோகிராம் கஞ்சாவுடன், 34ஆயிரத்து 486 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரம் ஹெரோயின் , ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஏனைய போதைப்பொருட்களுடன் 11 ஆயிரத்து 322 பேர் குறித்த காலப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஹெரோயின் போதைப்பொருள் கடத்திய குடும்பஸ்தருக்கு மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்த நீதிபதி மா.இளஞ்செழியன் !

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி விற்பனைக்காக 1கிலோ 135 கிராம் தூய்மையான ஹெரோயின் போதைப்பொருளை கொண்டு சென்ற குடும்பஸ்தருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 09 திகதி வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, வவுனியா பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ஸ தலைமையில் பொலிசார், அன்றைய தினம் இரவு 8.30 மணியளவில் வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேரூந்துக்ளை சோதனையிட்டனர்.

இதன் போது பேரூந்து ஒன்றில் பயணித்த குடும்பஸ்தர் தன் வசம் உடமையில் வைத்திருந்த பை ஒன்றில் இருந்து ஹெரோயின் போதைப் பொருள் கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து ஹெரோயின் போதைப் பொருள் பொலிசாரால் மீட்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த குடும்பஸ்த்தரும் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டு வவுனியா நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று விளக்கமறியில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டுருந்தார்.

குறித்த வழக்கு விசாரணைகளில் குறித்த நபர் ஓரு கிலோ 135 கிராம் தூய ஹெரோயினை உடமையில் வைத்திருந்தமை மற்றும் விற்பனைக்காக எடுத்து சென்றமை என்பன எந்தவித சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தப்பட்டமையால் குறித்த நபருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரண தண்டனை வழங்கி இன்று தீர்ப்பளித்தார்.

யாழ் நாவற்குழியை சேர்ந்தவரும், தற்போது வவுனியாவில் வசித்து வருபவருமான கந்தையா தியாகராஜா என்ற 55 வயது குடும்பஸ்தருக்கே 6 வருடங்களின் பின் இவ்வாறு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த விசேட பாராளுமன்ற குழு !

நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் கடமையாற்றுவதற்காக டிரான் அலஸ் அவர்களின் தலைமையில் பின்வரும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (01) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

 

அதற்கமைய, சட்டத்தரணி சிசிர ஜயகொடி, (வைத்திய கலாநிதி) சீதா அரம்பேபொல, புத்திக பத்திறண, (வைத்திய கலாநிதி) கயாஷான் நவனந்த, துஷார இந்துனில் அமரசேன, (வைத்திய கலாநிதி) உபுல் கலப்பத்தி, (மேஜர்) சுதர்ஷன தெனிபிடிய, அசங்க நவரத்ன, உபுல் மஹேந்திர ராஜபக்ஷ, தவராஜா கலை அரசன் மற்றும் மஞ்சுலா திசாநாயக ஆகியோர் இந்தக் குழுவில் கடமையாற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

6000 இற்கும் அதிக போதை வில்லைகளுடன் மூவர் கைது !

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் 6000 இற்கும் அதிக போதை வில்லைகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீதுவ – லியனகேமுல்லயிலும் மன்னாரிலுமே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லியனகேமுல்லயில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 5488 போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 52 வயதான சந்தேகநபர் புத்தளத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, 62 போதை வில்லைகளுடன் மன்னாரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 27 மற்றும் 30 வயதான இருவர் மன்னார் – தோட்டவௌியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் பாவனை – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட 17 பேர் கைது !

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட 17 பேர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனும் குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடாத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளர்.

இதேவேளை அவர்களில் இருவர் போதைப்பொருள் வியாபாரிகள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொலிஸார் கைதானவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாடுகளிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருளை அனுப்பும் நபர்களுக்கு அதிகபட்ச தண்டனை – நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ

அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் போதை பொருள் களஞ்சியத்தில், 3 ஆயிரம் கிலோகிராம் எடையுடைய போதை பொருட்கள் உள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

சர்வதேச நாடுகளிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருளை அனுப்பும் நபர்களுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

மேலும், அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திடம் காணப்படுகின்ற போதை பொருளை எரித்து அழிப்பதற்கு சட்ட ரீதியாக புதிய முறையொன்று உருவாக்கப்படும் என குறிப்பிட்டார்.

போதைப்பொருளுக்கு அடிமையாகி சிறை செல்லும் இளைஞர்களுக்கு வெளிநாட்டு வேலைவாயப்பு – சிறைச்சாலை ஆணையாளர் நாயகம்

போதைப்பொருளுக்கு அடிமையாகி புனர்வாழ்விற்காக சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்படும் இளைஞர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

 

சிறைச்சாலை திணைக்களத்தின் கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் எதிர்வரும்  வருடங்களுக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில் நீதியமைச்சுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக  அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

போதைப் பொருட்களுக்கு அடிமையாகி புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து  வைக்கப்பட்டுள்ள கைதிகளை தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு சிறைச்சாலை திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, 16 முதல் 22 வயதுக்கு இடைப்பட்டவர்கள் இவ்வாறு வெளிநாடுகளுக்கு தொழில்வாய்பிற்காக அனுப்பவும், அவர்களுக்கு தேவையான வேலைவாய்ப்பு தொடர்பான பயிற்சி நெறிகளை தனியார் பல்கலைக்கழகங்கள் ஊடாக வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன் முதற்கட்டமாக புனர்வாழ்வு நிலையங்களில் உள்ள பயிற்சி பெற்ற 50  இளைஞர்களை இவ்வாறு வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பிற்காக அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளோம்.

மேலும், இச் செயல் திட்டத்தை முன்னெடுக்க தனியார் பிரிவினரின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம்  கைதிகளுடைய தொழில்முறை திறன்களை மேம்படுத்துவதுடன் ஊடாக அவர்களுடைய குடும்பங்களின் வருமானத்தை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை உதவும்.அதேவேளை,  முகாம்களில் தடுத்த வைக்கப்பட்டுள்ள மற்றைய கைதிகளின் தொழில்முறை திறன்களை மேம்படுத்த பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது  என்றார்.

போதைப்பொருள் கொள்வனவுக்காக பணம் செலுத்தாத இரு இளைஞர்கள் கொலை – பொலிசார் விசாரணை!

போதைப்பொருளை கொள்வனவு செய்ததாக கூறப்படும் இரு இளைஞர்கள் அதற்கான பணத்தைக் கொடுக்காமையால் அவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ரம்புக்கனை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொல்லப்பட்டதாக கூறப்படும் இரு இளைஞர்களும் கொலை செய்யப்பட்டு சம்பவம் இடம்பெற்ற தோட்டத்திலேயே புதைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.