இலங்கை போதைப்பொருள் பாவனை

இலங்கை போதைப்பொருள் பாவனை

யாழ்ப்பாணத்தில் 30 நாட்களுக்குள் ஹெரோயினுக்கு அடிமையான 183 பேர் அடையாளம் !

யாழ்ப்பாணத்தில் கடந்த மாதத்தில் மாத்திரம் 183 பேர் ஹெரோயினுக்கு அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைகளில் இருந்து மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டவர்களில் 155 பேரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை நீதிமன்றங்களினால் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டவர்களில் 28 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக என யாழ்.போதனா தகவல்கள் தெரிவிக்கின்றன.

“வடக்கில் போதைப் பொருள் பாவனையை தடுக்க நடவடிக்கை உடனே எடுப்பதற்கு நான் தயாராக உள்ளேன்.” – நீதி அமைச்சர் விஜயதாச ராஐபக்ச

போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு முப்படையினரால் மாத்திர முடியாது அனைவரதும் ஒத்துழைப்பு தேவை என நீதி அமைச்சர் விஜயதாச ராஐபக்ச தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான நடமாடும் சேவை நேற்று (31) திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்தது வைத்தார்.  இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 2 மாதத்திற்குள் யாழில் 508 பேர்  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். வடக்கில் அதிகரித்துள்ள போதை பொருள் பாவனை கட்டுப்படுத்துவதற்கு முப்படையினரால் மாத்திரம் முடியாது. அனைவரதும் ஒத்துழைப்பும் தேவை. தற்போது வடக்கில் ஒரு புதிய பிரச்சனை உருவாகி வருகிறது. இலங்கை முழுவதும் இந்த போதைப் பொருள் பிரச்சனை ஒரு பெரிய பிரச்சினையாக காணப்படுகின்றது. ஆனால் வடபகுதியில் அது மிகவும் அதிகளவில் காணப்படுகிறது.

கடந்த 2 மாதத்திற்குள் 508 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். எதிர்கால இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் செயற்பாடு தொடர்பில் ஒரு பொறுப்பாக செயற்பட வேண்டியுள்ளது.

அந்த விடயத்தை தடுப்பதற்கு நாங்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டியதாக உள்ளது. குறிப்பாக வடக்கு மாகாணத்தில் இந்த போதைப்பொருள் பாவனை மிக அதிக அளவில் காணப்படுகின்றது. கடந்த ஒரு சில மாதங்களாக போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல் போதைப் பொருள்களுடன் பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இது ஏனைய இடங்களோடு ஒப்பிடும் போது அதிகளவாக காணப்படுகின்றது.இது ஒரு விபரீதமான ஒரு செயல்பாடாக காணப்படுகின்றது. சிறுவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் பாரதூரமான செயற்பாடாக காணப்படுகிறது.

அத்தோடு இந்த விடயம் போதைப்பொருள் வியாபாரிகளால் உருவாக்கப்படுகிற செயற்பாடாக காணப்படுகின்றது. அதாவது குறிப்பாக யாழ் மாவட்டம் மிகவும் ஒரு பாதிப்பான நிலையில் காணப்படுகின்றது. இந்த நாட்டின் பிரஜை என்ற ரீதியில் போதைப் பொருள் பாவனைக்கு எதிராக நாங்கள் உடனடியாக ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக முப்படையினர் பொலிசார் அனைவரையும் இணைத்து இதனை தடுப்பதற்கான நடவடிக்கை உடனே எடுப்பதற்கு நான் தயாராக உள்ளேன்.

இந்த போதைப் பொருள் பாவனை கட்டுப்படுத்துவதற்கு உபரியான செயற்பாட்டை முன்னெடுக்க முடியும் என்பது தொடர்பில் நான் ஆராயவுள்ளேன் என்றார்.

பாடசாலை மாணவிகளிடத்தில் அதிகரித்துவரும் ICE போதை மருந்து பாவனை !

பெண்கள் மத்தியில் ICE எனப்படும் போதை மருந்துகளின் பயன்பாடு அதிகரித்து வருவதாக தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு சபை (NDDCB) தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாவதை தடுப்பதற்காக குளியாப்பிட்டிய கலால் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே NDDCB உதவி ஆலோசகர் லக்மி நிலங்கா  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அழகு நிலையங்கள் மூலம் பல பெண்கள் மற்றும் இளம் பெண்கள் போதைப்பொருள் பாவனைக்கு ஈர்க்கப்படுகிறார்கள்.  இதன்படி, தற்போது சிகிச்சை பெற்று வரும் பாடசாலை மாணவிகள் மற்றும் யுவதிகள் பலர், அழகு நிலையங்களில் இருந்து கொள்வனவு செய்து பயன்படுத்தக்கூடிய ICEக்கு அடிமையாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

குருநாகல் மாவட்டத்தில் ICE பரவலாகப் பயன்படுத்தப்படுவதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன என்றும் அவர் கூறினார்.