சஜித் பிரேமதாச

சஜித் பிரேமதாச

“தேசத்தின் உண்மையான சுதந்திரத்திற்காக முன்வருவோம்” – சஜித் பிரேமதாச

“தேசத்தின் உண்மையான சுதந்திரத்திற்காக முன்வருவோம்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது சுதந்திர தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

பிர்த்தானிய ஆட்சியிலிருந்து இலங்கை விடுபட்டு இன்றுடன் 73 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில்  , இலங்கையின் சுதந்திர தினத்துக்காக சஜித்பிரேமதாஸ வழங்கிய வாழ்த்துச்செய்தியலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறும் போது ,

ஒட்டுமொத்தமாக நாட்டின் வெற்றிகள், பின்னடைவுகள் மற்றும் தோல்விகள் கடந்த 73 ஆண்டுகளில் எங்களுக்கு அனுபவத்தை அளித்துள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டுகிறார்.

நாட்டின் இறையாண்மை வெளிப்புற குறுக்கீட்டால் பாதிக்கப் படுவதைத் தடுக்கவும் உள்ளூர் வளங்களைப் பாதுகாக்கவும், அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார, மத, ஊடகங்கள் போன்றவை பாதுகாப்பது நமது கடமை.

எமது தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக இனம், மதம், கட்சி, நிறம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ஒரே தாயின் பிள்ளைகளாக பணியாற்றிய வரலாறும் மிகவும் உணர்வுப்பூர்வமானது என அவர் தெரிவித்துள்ளார்.

இறையாண்மை கொண்ட நாட்டில் ஒரு கொடியின் நிழலில் வாழ வேண்டும் என்ற தூய்மையான நம்பிக்கை அவர்களுக்கு இருந்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தனது சுதந்திர தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

“எனது தந்தை உட்பட இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்ற பிரபாகரனின் மரணத்தில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை” – சஜித் பிரேமதாச

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ , ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அம்பாறை ஆற்றிய உரை தொடர்பாக பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்றை இன்று அனுப்பி வைத்துள்ளார் .

அண்மையில் அம்பாறை , உஹனவில் உள்ள லாத்துகல ள்ள லாத்துகல கிராமத்தில் இடம்பெற்ற ” கிராமத்துடன் உரையாடல் ” நிகழ்வில் ஜனாதிபதி ஆற்றிய உரையானது தனது உயிர் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் அமைந்துள்ளதாகவும் தனக்கு பாதுகாப்பினை வழங்குமாறும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் 82நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ ஆற்றிய உரைக்கு ஜனாதிபதி பதிலளித்தமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கண்டனம் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிடும் போது ,

ஜனாதிபதியின் இந்த ‘வலுவான’ பதிலை ஒரு ஜனநாயக நாட்டில் நடக்கக் கூடாத ஒரு தீவிர அறிக்கையாக தான் பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

எனது தந்தை உட்பட இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்ற பிரபாகரனின் மரணத்தில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பிரபாகரன் ஒரு பயங்கரவாதி.

ஆனால் ஹரின் பெர்னாண்டோ இந்த நாட்டின் இளம் தலைவர், இந்த நாட்டின் ஜனநாயக சட்டத்திற்குள் அச்சமின்றி தன்னை வெளிப்படுத்திக் கொண்டார் என சஜித் கூறினார். 8293ஷ

82963.ஹரின் பெர்னாண்டோவுக்கு விடுக்கப்பட்ட இந்த அச்சுறுத்தலை ஐக்கிய மக்கள் சக்தியின் முழு நாடாளுமன்றக் குழுவிற்கும் விடுக்கப்பட்டதாக கருதுவதாக குறிப்பிட்டார்.

மேலும் ஹரின் பெர்னாண்டோவுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் ஜனாதிபதியும் அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

“உதயன் பத்திரிகை மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளமை ஏற்கமுடியாதது.ராஜபக்ச  அரசு, ஊடகங்களை அடக்க முயற்சிக்கின்றது” – சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு !

“உதயன் பத்திரிகை மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளமை ஏற்கமுடியாதது.ராஜபக்ச  அரசு, ஊடகங்களை அடக்க முயற்சிக்கின்றது” என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள கண்டனத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ‘உதயன்’ பத்திரிகை மீது வழக்குத் தாக்கல் செய்தமைக்கு காவல்துறையினர் முன்வைத்துள்ள காரணம் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. இது ஊடக சுதந்திரத்தை – கருத்துச் சுதந்திரத்தை மழுங்கடிக்கும் செயலாகும்.

யார் ஆட்சிப்பீடத்தில் இருந்தாலும் ஊடகங்களுக்கான சுதந்திரம் மிகவும் அவசியம். அந்தச் சுதந்திரத்தை எவரும் சட்டங்கள் கொண்டு அடக்க முடியாது.

கடந்த நல்லாட்சியில் ஊடகங்களின் கருத்துச் சுதந்திரம் பேணிப் பாதுகாக்கப்பட்டது. ஆனால், இந்த ஆட்சியில் ஊடகங்களின் கருத்துச் சுதந்திரம் திட்டமிட்டுப் பறிக்கும் செயல்கள் இடம்பெறுகின்றன. இதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து குரல் கொடுக்கும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு, ஊடகங்களை அடக்க முயற்சிக்கின்றது. அதன் ஒரு வெளிப்பாடே ‘உதயன்’ மீதான வழக்கு. இது இந்த அரசின் ஜனநாயக விரோத செயலாகும். பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியில் இதை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்” – என்றுள்ளது.

“கொரோனா எவ்வளவு கடுமையானதோ அதை விட மக்களின் பசி கடுமையானது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் ” – பாராளுமன்றத்தில்  சஜித் பிரேமதாச !

“கொரோனா எவ்வளவு கடுமையானதோ அதை விட மக்களின் பசி கடுமையானது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் ” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில்  தெரிவித்துள்ளார்.

இடைக்கால கணக்கறிக்கை தொடர்பில் இன்று(11.12.2020) பாராளுமன்றத்தில் உறையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக  அவர் மேலும் பாராளுமன்றத்தில் தெரிவிக்கையில்,

“அரிசி விலை குறைப்பதாகக் கூறினார்கள், பருப்பு, சமன் மற்றும் சீனியின் விலையை குறைப்பதாகக் கூறினார்கள். போட்டிபோட்டு வர்த்தமானி பத்திரங்களை வெளியிட்டார்கள். ஆனால், வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறலைப் போன்று விலை அதிகரிக்குமென்றால் குறைகின்றது. விலை குறையுமென்றால் அதிகரிக்கிறது.

பொருட்களை விலை குறைப்பு குறித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும் போது முழு நாட்டு மக்களும் கட்டாயம் பொருட்களின் விலை அதிகரிக்கப்போகின்றது என்பதை தெரிந்துகொண்டார்கள். விசேடமாக பிரதமரிடம் ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். கொரோனா என்பது கடுமையானது என எம் அனைவருக்கும் தெரியும். ஆனால், மக்களின் பசியும் கடுமையானது என்பதை ஞாபத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். பொது மக்களின் பசியை புரிந்துகொள்ளாத அரசாங்கம் என்பதை இன்று நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் குறிப்பிட்டார்.

சஜித் பிரேமதாச ஏழைகளின் தோழன் – பதுளை மாவட்ட வேட்பாளர் அ.அரவிந்தகுமார்.

இந்த தேர்தலில் ஏற்படும் ஆட்சி மாற்றத்தின் ஊடாகவே மலையகத்தில் சுபீட்சம் ஏற்படும். எனவே, ஐக்கிய மக்கள் சக்திக்கு பேராதரவை வழங்கி அந்த மாற்றத்தை ஏற்படுத்துமாறு மலையக மக்கள் முன்னணியின் அரசியல் பிரிவு தலைவரும், பதுளை மாவட்ட வேட்பாளருமான அ.அரவிந்தகுமார் அறைகூவல் விடுத்துள்ளார்.

லுணுகலை ஹொப்டன் பகுதியில் இன்று [01.08.2020] நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடும் போது,

” கடும் குளிர், மழை என்பவற்றைக்கூட பொருட்படுத்தாமல் எமக்காக மக்கள் அணிதிரள்கின்றனர். கூட்டம் நடைபெறும் இடங்களிளெல்லாம் இதனைக்காணக்கூடியதாக இருக்கின்றது. இது அன்பால் சேர்ந்த கூட்டம், ஆதரவாளர்களின் ஒருமித்தக் குரலோடு சங்கமித்த கூட்டம். இவ்வாறான ஆதரவும், ஒற்றுமையுமே மலையகத்துக்கு தேவைப்படுகின்றது.

நாம் வெவ்வேறான தொழிற்சங்கங்களில் அங்கம் வகித்தாலும் சமூகம் என வரும்போது இணைந்து பயணித்தால்தான் இலக்கை நோக்கி பயணிக்ககூடியதாக இருக்கும்.

பிரச்சாரங்களுக்காக தோட்டங்களுக்கு செல்லும்போது ஆயிரம் ரூபா தொடர்பில் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த ஆட்சி நீடிக்கும் வரை ஆயிரம் ரூபா கிடைக்கப்போவதில்லை என்பதுதான் எனது பதிலாக இருக்கின்றது. எனவே, கிடைக்காத ஒன்றை கிடைக்கும் என கூறி மக்கள் மத்தியில் ஏமாற்றுகாரனாக வலம் வருவதற்கு நான் தயாரில்லலை.

உண்மையை பேசினால் சிலர் அபசகுணம் என விமர்சிக்கின்றனர், ஆயிரம் ரூபா கிடைக்க வேண்டும் என்றால், மலையகத்தில் மாற்றம் ஏற்படவேண்டும் என்றால் இந்த ஆட்சிமாற வேண்டும். அதன் ஊடாகவே மலையகத்தில் சுபீட்சம் ஏற்படும்.

சஜித் பிரேமதாச என்பவர் ஏழைகளின் தோழன், அனைத்து இன மக்களையும் அரவணைத்துக்கொண்டு பயணிக்க கூடியவர், அவர் பிரதமரானால் மாத்திரமே சிறுபான்மையின மக்களின் அரசியல் இருப்பும் பாதுகாக்கப்படும். ஏனெனில் இன்று இனவாதிகள் பலகோணங்களில் கொக்கரிக்க தொடங்கியுள்ளனர்.

அதேவேளை, இன்று அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உச்சம் தொட்டுள்ளன. சாதாரண மனிதன் குறித்து சிந்திக்காத கொடூங்கோல் அரசாங்கத்தை வீட்டுக்கு விரட்டவேண்டும். ” – என்றார்.