கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

மூன்று கோடியை தாண்டியது உலகில் கொரோனா பாதித்தோர் தொகை – 10இலட்சத்தை அண்மிக்கின்றது கொரோனா உயிர்ப்பலி !

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 44 ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 3 கோடியே 25 ஆயிரத்து 96 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவில் இருந்து 2 கோடியே 17 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 9 லட்சத்து 44 ஆயிரத்து 680 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-
அமெரிக்கா – 2,01,321
பிரேசில் – 1,34,174
இந்தியா – 82,066
மெக்சிகோ – 71,678

”கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒரு மாதத்தில் தயாராகி விடும்” – ஜனாதிபதி  டிரம்ப்

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு பலியானோர் எண்ணிக்கை நேற்றுடன்  2 லட்சத்தை கடந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டு பிடிப்பதில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கடந்த மாதம் ஜனாதிபதி  டிரம்ப் கூறும்போது, தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அக்டோபர் மாதத்தில் வந்து விடும் என்று தெரிவித்தார்.

நவம்பர் 3-ந்தேதி நடக்கும் அதிபர் தேர்தலுக்கு முன்பாக தடுப்பூசியை கொண்டு வந்து விடவேண்டும் என்று டிரம்ப் விரும்புகிறார்.

இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒரு மாதத்தில் தயாராகி விடும் என்று ஜனாதிபதி  டிரம்ப் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

நாங்கள் தடுப்பூசியை போடுவதற்கு மிக நெருக்கமாக இருக்கிறோம். இன்னும் 3 அல்லது 4 வாரங்களில் தடுப்பூசி தயாராகி விடும். நீங்கள் உண்மையை அறிய விரும்பினால் முந்தைய நிர்வாகம் தடுப்பூசிக்கு ஒப்புதல்களை பெற பல ஆண்டுகளை எடுத்திருக்கும். ஆனால் அந்த ஒப்புதலை நாங்கள் சில வாரங்களிலேயே பெற்றோம்.

இவ்வாறு ஜனாதிபதி  டிரம்ப் கூறினார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக தடுப்பூசியை வெளியிட்டால் அது தனக்கு சாதமாக அமையும் என்று டிரம்ப் கருதுகிறார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடி 15 லட்சமாக அதிகரிப்பு!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 213 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதிகட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் இறுதி கட்ட முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடி 15 லட்சத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 2 கோடியே 97 லட்சத்து 14 ஆயிரத்து 680 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 72 லட்சத்து 53 ஆயிரத்து 719 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 866 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 9 லட்சத்து 38 ஆயிரத்து 385 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆனாலும், உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 2 கோடியே 15 லட்சத்து 22 ஆயிரத்து 576 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-
அமெரிக்கா – 40,61,873
இந்தியா – 38,59,339
பிரேசில் – 36,71,128
ரஷியா – 8,84,305
கொலம்பியா – 6,07,978
தென் ஆப்ரிக்கா – 5,83,126
பெரு – 5,80,753
மெக்சிகோ – 4,75,795

முடிவெதுவுமின்றி அச்சுறுத்தும் கொரோனா! – கொரோனா உயிர்ப்பலி பிரேசிலில் 1,32,117.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் மற்றும்  பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 32 ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 2 கோடியே 94 லட்சத்து 33 ஆயிரத்து 477 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பரவியவர்களில் 72 லட்சத்து 36 ஆயிரத்து 106 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 676 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனாவில் இருந்து 2 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 9 லட்சத்து 32 ஆயிரத்து 390 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-
அமெரிக்கா – 1,98,974
பிரேசில் – 1,32,117
இந்தியா – 79,722
மெக்சிகோ – 70,821
இங்கிலாந்து – 41,637
இத்தாலி – 35624
பிரான்ஸ் – 30,950
ஸ்பெயின் – 29,848
பெரு – 30,812
ஈரான் – 23,313
கொலம்பியா – 23,123

9 லட்சத்தை கடந்தது கொரோனா உயிர்ப்பலி ! – அமெரிக்காவில் உயிரிழப்பு 1,94,011.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்துள்ளது.
கொரோனாவில் இருந்து 1 கோடியே 98 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 9 லட்சத்து 843 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-
அமெரிக்கா – 1,94,011
பிரேசில் – 1,27,517
இந்தியா – 71,642
மெக்சிகோ – 67,781
இங்கிலாந்து – 41,586
இத்தாலி – 35,563
பிரான்ஸ் – 30,764
ஸ்பெயின் – 29,594
பெரு – 29,976
ஈரான் – 22,542
கொலம்பியா – 21,817

ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம் ! – பரிசோதனை செய்யப்பட்ட நபருக்கு விவரிக்க முடியாத அளவிற்கான உடல்நலக் குறைவு. – ஏமாற்றத்தில் உலகம்.

பிரிட்டனின் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்ட ஒருவருக்கு அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதே இதற்கு காரணம்.

“விவரிக்க முடியாத அளவிற்கான உடல்நலக் குறைவு” ஏற்பட்டதால் பரிசோதனை நிறுத்திவைக்கப்பட்டதாக ஆஸ்ட்ராசெனகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி பரிசோதனை முன்னேற்றங்களை உலகம் கூர்ந்து கவனித்துவரும் நிலையில், ஆஸ்ட்ராசெனிகா மற்றும் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்த இந்த தடுப்பூசி மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், சந்தைக்கு வரக்கூடிய முதல் கொரோனா தடுப்பூசி இதுவாக இருக்கலாம் என கருதப்பட்டது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு மூன்றாம் கட்ட பரிசோதனை தொடங்கப்பட்டதில், அமெரிக்காவில் சுமார் 30,000 பேர், அதோடு பிரிட்டன், பிரேசில், மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்தும் மக்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.

தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை என்பது பொதுவாக பல ஆண்டு காலம் ஆயிரக்கணக்கான பேர் மீது செய்யப்படும்.

சர்வதேச அளவில் இந்த தடுப்பூசி பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை மீண்டும் தொடங்கலாமா வேண்டாமா என்பது குறித்து முடிவெடுப்பதற்கு முன்னால், தனிப்பட்ட விசாரணை மூலம் இது தொடர்பான பாதுகாப்பு தரவுகள் ஆய்வு செய்யப்படும்.

“பெரிய அளவில் பரிசோதனை நடத்தப்படும்போது, தற்செயலாக இவ்வாறு உடல்நலக்குறைவு ஏற்படலாம். ஆனால், அதனை கவனமாக தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்ய வேண்டும்” என்று ஒக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

பெரிய அளவில் பரிசோதனை செய்யப்படும் போது இது நடக்கக்கூடிய ஒன்றுதான் என்றும், பரிசோதனை செய்யப்படும் நபருக்கு உடனடியாக எந்த உடல்நலக்குறைவு ஏற்படாமல் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது எந்நேரத்திலும் நடக்கலாம்.

எனினும் இன்னும் சில நாட்களில் பரிசோதனை மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை முதல்முறையாக வெளியிட்ட ஸ்டாட் நியூஸ் என்ற சுகாதார வலைதளம் கூறுகையில், தடுப்பூசி செலுத்தப்பட்ட பிரிட்டன் நபர் ஒருவருக்கு பாதகமான விளைவு எப்படி ஏற்பட்டது என்று உடனடியாக தெரியவரவில்லை என்றும், ஆனால் அவர் அதில் இருந்து மீண்டு வருவார் என்று தகவல்கள் தெரிவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.

நவம்பர் மூன்றாம் திகதி அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பு தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்று டொனால்டு டிரம்ப் கூறுகிறார். ஆனால், அரசியலுக்காக அவசர அவசரமாக தடுப்பூசி கண்டுபிடிப்பது என்ற விஷயம் பல தரப்பினருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவுக்கான தடுப்பூசி தயாரிப்பதில் அறிவியல்பூர்வமான தரநிலை மற்றும் நெறிமுறைகள் கடைபிடிப்போம் என “வரலாற்று உறுதிமொழி” ஒன்றை ஒன்பது தடுப்பூசி தயாரிப்பாளர்கள் குழுவினர் செவ்வாய்கிழமை அன்று எடுத்துள்ளனர்.

இதில் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனமும் ஒன்று.

மூன்று கட்ட முறையான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே ஒழுங்காற்று ஆணையத்தின் அனுமதிக்காக விண்ணப்பிக்கப்படும் என்ற உறுதிமொழியை அந்நிறுவனம் எடுத்துள்ளது.

ஜான்சன் அண்ட் ஜான்சன், பையோ என் டெக், கிளாக்ஸோஸ்மித் க்ளைன், Pfizer, மெர்க், மாடர்னா, சனோஃபி, மற்றம் நோவாநாக்ஸ் நிறுவனங்களும் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.

“தடுப்பூசி பரிசோதனை செய்யப்படும் நபர்களின் பாதுகாப்புக்கே முதல் முன்னுரிமை அளிக்கப்படும்” என்று அவர்கள் உறுதிமொழி ஏற்றுள்ளனர்.

உலகளவில் சுமார் 180 தடுப்பூசி தயாரிப்பாளர்கள், தங்கள் தடுப்பூசியை பரிசோதனை செய்துவருவதாகவும், ஆனால், இதில் யாரும் இன்னும் மருத்துவ பரிசோதனை கட்டத்தை முடிக்கவில்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

தடுப்பூசியை பாதுகாப்பாக பரிசோதிக்க அதிக காலம் எடுக்கும் என்பதால், செயல்திறன் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல் அனைத்தையும் பூர்த்தி செய்யும் ஒரு தடுப்பூசி இந்தாண்டு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

இந்நிலையில், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை செலுத்த தொடங்கிவிட்டன. ஆனால், இந்த தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனை நிலையில் இருப்பதாகவே உலக சுகாதார நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.

மறுபக்கம், மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனை முடிக்கும் முன்பே கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான அனுமதி வழங்கலாம் என அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு பரிந்துரைத்துள்ளது.

மேலும், நவம்பர் ஒன்றாம் தேதிக்குள் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்பதால், ஒரு சில நெறிமுறைகளை தளர்த்துமாறு அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு பல மாகாணங்களை வலியுறுத்தியுள்ளது.

தேர்தலுக்கு முன்னால் தடுப்பூசி கிடைத்துவிடும் என்று அதிபர் டிரம்ப் கூறிவந்தாலும், விஞ்ஞானிகளின் பேச்சை கேட்டு, வெளிப்படையான முறையில் இதுகுறித்து டிரம்ப் செயல்படுவாரா என எதிர்முனையில் இருக்கும் ஜோ பைடன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

“பாதுகாப்பானது என நிரூபிக்கப்படும் வரை எந்த ஒரு கொரோனா தடுப்பூசியையும், ஐ.நா. அங்கீகரிக்காது” – உலக சுகாதார அமைப்பு.

சீனாவும், ரஷ்யாவும் தங்களது கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தத் தொடங்கியிருந்தாலும், பாதுகாப்பானது என நிரூபிக்கப்படும் வரை எந்த ஒரு கொரோனா தடுப்பூசியையும், ஐ.நா. அங்கீகரிக்காது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

லண்டனில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம், தடுப்பூசிகளுக்கு எதிராக போராடுபவர்களின் கருத்துகளைக் கேட்டு மக்கள் குழப்பமடையக் கூடாது என தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக தடுப்பூசிகள் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், பெரியம்மை மற்றும் போலியோவை கட்டுப்படுத்தியதில், தடுப்பூசிகளுக்கு முக்கிய பங்கு உண்டு எனவும் தெரிவித்தார். முழுவதும் பாதுகாப்பானது என உறுதியாகும் வரை எந்த ஒரு தடுப்பூசியையும் அங்கீகரிக்க மாட்டோமெனவும் டெட்ரோஸ் அதனோம் உறுதியளித்தார்.

விரிவான ஆய்வுகளுக்கு முன்னரே ரஷ்யா மற்றும் சீனா தங்களது தடுப்பூசியை பயன்படுத்தி வருவதாக விஞ்ஞானிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், பிரிட்டனும் கொரோனா தடுப்பூசியை முன்னரே பயன்படுத்த சட்டத்திருத்தம் கொண்டு வரவுள்ளதாக, கடந்த வாரம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் சுமார் 8 லட்சத்து 72 ஆயிரத்தை கடந்தது கொரோனா மனித உயிர் பலியெடுப்பு !

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 72 ஆயிரத்தை கடந்துள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இறுதிகடத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 72 ஆயிரத்தை கடந்துள்ளது.

குறிப்பாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,043 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 1,082 பேரும் பிரேசிலில் 830 பேரும் உயிரிழந்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, 2 கோடியே 64 லட்சத்து 56 ஆயிரத்து 806 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 69 லட்சத்து 38 ஆயிரத்து 22 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 961 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 1 கோடியே 85 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 8 லட்சத்து 72 ஆயிரத்து 492 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா – 1,91,046
பிரேசில் – 1,24,729
இந்தியா – 67,376
மெக்சிகோ – 65,816
இங்கிலாந்து – 41,527
இத்தாலி – 35,507
பிரான்ஸ் – 30,706
பெரு – 29,405
ஸ்பெயின் – 29,234
ஈரான் – 21,926
கொலம்பியா – 20,618

உலகம் முழுவதும் சுமார் 7,000 சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர்! – ஆம்னெஸ்டி அறிக்கை.

உலகம் முழுவதும் சுமார் 7,000 சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர் என்று சர்வதேச தன்னார்வ அமைப்பான ஆம்னெஸ்டி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆம்னெஸ்டி வெளியிட்ட அறிக்கையில், “கரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் சுமார் 7,000 சுகாதாரப் பணியாளர்கள் பலியாகி உள்ளனர். அனைத்து அரசாங்கங்களும் சுகாதாரப் பணியாளர்களைக் கதாநாயகர்கள் என்று பாராட்டியுள்ளன. ஆனால், அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தவறிவிட்டன” என்று தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 2.5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

ஆனால்,கொரோனா வைரஸ் பொது முடக்கத்தால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். ஐரோப்பிய நாடுகளில் மாணவர்களுக்குப் பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன.

கொரோனா ஊரடங்குகளால் சுமார் 100கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு.

கொரோனா வைரஸ் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக  ஐக்கிய நாடுகள்சபை  தெரிவித்துள்ளது.

“வரலாற்றில் இல்லாதவகையில் கல்வியில் பெரும் பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. 160க்கும் அதிகமான நாடுகளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளன. இதன் காரணமாக 100 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று ஐக்கிய நாடுகள்சபை தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் பரவிய கொரோனா  வைரஸ் ஐந்து மாதங்களைக் கடந்து 180க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. இதன் காரணமாக  கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கும் பணியில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்தின் முதல் சுற்றுப் பரிசோதனை முடிவுகள் வெற்றி அடைந்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இத்துடன் ஐக்கிய அமீரகம், பிரிட்டன் மட்டுமல்லாது அமெரிக்கா  உள்ளிட்ட நாடுகள்  கொரோனாவுக்குத் தடுப்பூசி மருந்தைக் கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டுள்ளன.

கொரோனாதடுப்பு மருந்துக்கான அனைத்துக் கட்டப் பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்துவிட்டதாகவும், ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் ரஷ்யா சமீபத்தில் தெரிவித்தது.