அனுரகுமாரதிசநாயக்க

அனுரகுமாரதிசநாயக்க

ஊழல் மற்றும் இனவாத அரசியல்வாதிகள் அரசியலில் இருந்து ஒதுங்குவது அனுரகுமாரதிசநாயக்க ஜனாதிபதியானதற்கு கிடைத்த வெற்றி !

ஊழல் அரசியல்வாதிகள் அரசியலில் இருந்து ஒதுங்குவது அனுரகுமாரதிசநாயக்க ஜனாதிபதியானதற்கு கிடைத்த வெற்றி என தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பிமல்ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தோல்வியிலிருந்து தப்புவதற்காக ஊழல் மற்றும் இனவாத அரசியல்வாதிகள் இந்த முறை தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்துக்கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ள அவர் அடுத்த தேர்தலில் அவ்வாறான அரசியல்வாதிகள் வேட்பாளர்களாக நிற்காத நிலையை ஏற்படுத்தியமை பொதுத்தேர்தலிற்கு முன்னர் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த பெருவெற்றி என தெரிவித்துள்ளார்.

அனுரகுமாரவை ஜனாதிபதியாக தெரிவு செய்யதமைக்காக மக்களிற்கு நன்றி தெரிவிக்கவேண்டும்,இது இறுதியில் ஊழல் இனவாத அரசியல்வாதிகளின் அரசியல் வாழ்க்கையை முடித்துவைத்தது என அவர் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமாரவிற்கு வாக்களித்தன் மூலம் மக்கள் சிறந்த செயலை செய்தனர் இது இறுதியில் ஊழல் அரசியல்வாதிகளை அகற்றியது,தோல்வியi தவிர்ப்பதற்காக இந்த அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

 

மக்கள் எதிர்பார்க்கின்ற மாற்றத்தினை எங்களால் மட்டுமே ஏற்படுத்த முடியும் – அனுரகுமாரதிசநாயக்க

மக்கள் எதிர்பார்க்கின்ற மாற்றத்தினை தேசிய மக்கள் சக்தியினால் மாத்திரமே ஏற்படுத்த முடியும் என கட்சியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்களிற்கு மாற்றம் மிகவும் அவசியமாக தேவைப்படுகின்றது என தெரிவித்துள்ள அவர் தேசிய மக்கள் சக்தியினால் மாத்திரமே இந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்

வேட்புமனுதாக்கல் செய்த பின்னர் கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் கடந்தகாலங்களில் பல தேர்தல்கள் நடைபெற்றுள்ள போதிலும் மக்கள் பல வருடங்களாக துயரங்களை எதிர்கொண்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

எங்களால் இந்த தேர்தலில் வெற்றிபெற முடியும்,இந்த தேர்தலை மக்களையும் துன்பத்திலிருந்து மீட்பதற்காக காப்பாற்றுவதற்காக எங்களால் பயன்படுத்த முடியும்,தேசிய மக்கள் சக்தியால் அதன் வேட்பாளரால் மாத்திரம் இதனை செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.