அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க சீன வர்த்தக மோதல் – மசகு எண்ணெய் விலை சரிவு!

அமெரிக்க சீன வர்த்தக மோதல் – மசகு எண்ணெய் விலை சரிவு!

சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக மோதல்கள் உலக சந்தைகளை சிக்கலான நிலைக்கு கொண்டு சென்றதால் நேற்று வெள்ளிக்கிழமை எண்ணெய் விலைகள் சடுதியாக 8வீத வீழ்ச்சியடைந்துள்ளன. கோவிட் பெருந்தொற்று உச்சகட்டத்திலிருந்த காலங்களில் ஏற்பட்ட வீழ்ச்சிக்குப் பின் பதிவாகிய சடுதியான வீழ்ச்சி இதுவென தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வரிவிதிப்புக்கு பதிலடியாக சீனா ஏப்ரல் 10 முதல் அனைத்து அமெரிக்கப் பொருட்களுக்கும் 34% கூடுதல் வரி விதிக்கும என அறிவித்துள்ளது.

அமெரிக்காவை தோற்கடிப்போம் – கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி !

அமெரிக்காவை தோற்கடிப்போம் – கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி !

இலங்கைக்கு வெளியே தமிழ் மக்கள் அதிகம் வாழும் கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால் ட்ரம் கனடாவை தங்களுடைய 51வது மாநிலம் என்று குறிப்பிட்டதும் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20 வீத இறக்குமதி வரியை அறிவித்ததும் தெரிந்ததே. இந்நிலையில் புதிய பிரதமர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிரான வர்த்தக போரில் பெறுவோம் எனச் சூளுரைத்துள்ளார்.

அமெரிக்கர்கள் எங்களை தவறாக எடைபோடக்கூடாது ஹொக்கியை போல வர்த்தகப்போரிலும் அமெரிக்காவை தோற்கடிப்போம் என தெரிவித்துள்ள மார்க் கார்னி, அமெரிக்காவின் வரிகளிற்கு பதில் வரிகளை விதிக்கப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2007 இல் அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட பொருளாதார வீழ்ச்சி அலை உலகைத் தாக்கிய காலகட்டத்தில்இ மார்க் கார்னி கனடாவின் மத்திய வங்கியின் தலைவராக இருந்தவர். அதனைத் தொடர்ந்து பிரித்தானியாவின் மத்திய வங்கியான பாங்க் ஒப் இங்கிலன்டின் தலைவராகவும் இருந்தவர். உலகின் இரு செல்வந்த நாடுகளின் மத்திய வங்கிகளின் தலைவராக இருந்த ஒரேயொருவர் மார்க் கார்னி.

இவருடைய ஆட்சியின் கீழ் கனடா பொருளாதார ரீதியில் மீட்சிபெற நிறைய வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரமின் பொருளாதாரக் கொள்கைகள் அமெரிக்காவை எல்லை நாடாகக் கொண்ட கனடாவை மிகப் பாரிய அளவில் பாதிக்க வாய்ப்புகள் உள்ளது. மார்க் கார்னியின் ஆட்சி எவ்வாறு இதனை எதிர்கொள்ளப் போகின்றது என்பதை ஐரோப்பிய தலைவர்கள் உன்னிப்பாக கவனிக்கின்றார்கள்.

மார்க் கார்னி குடிவரவாளர் தொடர்பில் என்ன நடவடிக்கைகளை எடுப்பார் என்பதை இலங்கைத் தமிழர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். வன்னிப் பெருநிலப்பரப்பில்: கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் தொகையிலும் பார்க்க அதிகமான தமிழர்கள் ரொறன்ரோ ஸ்காபரோவில் வாழ்கின்றனர். இவர்களுடைய எதிர்காலம் என்னவாகும் என்பதெல்லாம் வரும் நாட்களில் தெரியவரும்.

 

கழிசறை நாடாக அம்மணமாகும் அமெரிக்கா: சர்வதேச நீதிமன்றத்தின் மீது பொருளாதார தடையை அறிவித்தது அமெரிக்கா !

கழிசறை நாடாக அம்மணமாகும் அமெரிக்கா: சர்வதேச நீதிமன்றத்தின் மீது பொருளாதார தடையை அறிவித்தது அமெரிக்கா !

2025 பிப்ரவரி 5 அன்று, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, இருவரும் காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றி, அங்குள்ள பாலஸ்தீனியர்களை வேறு நாடுகளில் குடியேற்றும் திட்டத்தை அறிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு பிடியாணை பிறப்பித்து இருப்பதன் மூலம் தனது அதிகாரத்தை சர்வதேச நீதிமன்றம் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அமெரிக்காவின் புதிய உத்தரவு காரணமாக சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நீதிமன்றத்தின் விசாரணைகளுக்கு உதவியதாகக் கருதப்படும் எவருக்கும் எதிராக சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடைகள் பிறப்பித்துள்ளது.

முன்னதாக பாரிஸ் காலநிலை ஒப்பந்தம், உலக சுகாதார அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் ஆகியவற்றிலிருந்து அமெரிக்கா அடுத்தடுத்து விலகியதுடன் பலஸ்தீன அகதிகளுக்கு உதவி வழங்கும் நிறுவனத்திலிருந்தும் விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட டொனால்ட் ட்ரம்ப்பிற்கு தடை !

2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவதற்கு கொலராடோ(Colorado) உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

 

அரசியலமைப்பின் கிளர்ச்சி என்ற வாக்கியத்தை குறிப்பிட்டுக்காட்டி, ட்ரம்ப் ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமான வேட்பாளர் அல்லவென நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

அமெரிக்க அரசியலமைப்பின் 14 ஆவது திருத்தத்தின் 3 ஆவது பிரிவின் கீழ், ஜனாதிபதி வேட்பாளரொருவர் தகுதி நீக்கம் செய்யப்படுவது இதுவே முதல்தடவையாகும் என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

 

எவ்வாறாயினும் இந்த தீர்ப்பு மீதான மேன்முறையீடு அடுத்த மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன் இந்த தீர்ப்பு கொலராடோ மாநிலத்திற்கு வௌியே எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

 

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை 2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தடுப்பதற்கு பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.