அமைச்சர் அலி சப்ரி

அமைச்சர் அலி சப்ரி

இலங்கையில் காலநிலை தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம் – அமைச்சர் அலி சப்ரி

காலநிலை நீதிக்கான மன்றத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட மூன்று முன்மொழிவுகளை ஐ.நா. காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் இலங்கை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

ஐ.நா.வின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை அரச தலைவர்கள், அரச மற்றும்-தனியார் துறை பிரதிநிதிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்களின் பங்கேற்புடன் டுபாய் எக்ஸ்போ நகரில் நடைபெறவுள்ளது.

 

இது தொடர்பாக விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் சந்திப்பொன்று நேற்று ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்றபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

காலநிலை மாற்றத்தை கையாள்வது ஒரு மாயை என்று சில தரப்பினர்கள் கூறுகின்றன. ஆனால் அது மாயை அல்ல. சுற்றுச்சூழல் சீர்கேடு தொடர்ந்தால், உலகத்தின் இருப்புக்கே பாதிப்பு ஏற்படும்.

 

குறிப்பாக காலநிலை மாற்றத்தால் இலங்கை உள்ளிட்ட வெப்பவலய நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றே கூற வேண்டும். வெப்ப வலயத்தில் 136 நாடுகள் உள்ளன. உலக சனத் தொகையில் 40 வீத மக்கள் அந்த நாடுகளில் வாழ்கின்றனர்.

கைத்தொழிற் புரட்சியுடன் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டது. கைத்தொழிற் புரட்சி செய்யும் நாடுகளை விட கைத்தொழிற் புரட்சியை குறைவாக செய்யும் நாடுகளிலே சுற்றுச்சூழல் மாசுபாட்டின் தாக்கம் குறைவாகக் காணப்படுகிறது.

 

எனவே, இந்த மாநாட்டில் சில புதிய கொள்கை ரீதியான பரிந்துரைகளை இலங்கை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளது.

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்தின்படி, இலங்கை தலைமை தாங்கி செயற்படுத்தும் காலநிலை நீதிக்கான மன்றத்தின் ஊடாக, காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்குத் தேவையான கொள்கைகளைத் தயாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

 

இதற்காக யோசனைகள் மற்றும் ஆலோசனைகளைப் பரிமாறிக்கொள்வதற்கும், சர்வதேச சமூகத்திடமிருந்து யோசனைகளை பெறுவதற்கும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

 

வெப்ப வலயத்திலுள்ள பல நாடுகள் இதற்கு ஆதரவளிக்க ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளன.

 

அத்துடன் ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.

“ஒரு வழக்கறிஞராக கோட்டாபய ராஜபக்சவை பாதுகாத்ததே எனது வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய சாதனை.” – அமைச்சர் அலி சப்ரி

“ஒரு வழக்கறிஞராக கோட்டாபய ராஜபக்சவை பாதுகாத்ததே எனது வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய சாதனை எனவும் கோட்டாபாய  பிரிவினைவாதத்தை தோற்கடித்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்திய தளபதி எனவும்  வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் அவரிடம் கேள்வி கேட்கப்பட்ட போது கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் தனது கருத்தை தீர்க்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச 2019 அதிபர்த் தேர்தலுக்குத் தயாராகிக்கொண்டிருந்தபோது, அவருடைய சட்ட விவகாரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர் நீங்கள். அப்போது செய்தது தப்பு என்று இப்போது நினைக்கவில்லையா?

இதற்கு பதிலளித்த அவர், “நிச்சயமாக இல்லை. ஒரு வழக்கறிஞராக, நான் யாரைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று யாரும் என்னிடம் சொல்லக்கூடாது. அது என் கடமை. கோட்டாபய ராஜபக்ச பொருளாதார ரீதியாக தோல்வியடைந்தார். ஆனால், இந்த நாட்டின் தேசிய பாதுகாப்பையும் இறையாண்மையையும் பாதுகாக்க அவர் செய்த பணியை புதிதாக வந்துள்ள மக்களுக்கு நினைவில் இல்லை. ஆனால் அது மக்களின் நினைவில் நீங்காத ஒன்று. அவரைப் பாதுகாத்ததே எனது வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகக் கருதுகிறேன்.”என்றார்.

 

 

 

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை நிறுவ தீர்மானம் – அமைச்சர் அலி சப்ரி

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை நிறுவுவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

குறித்த ஆணைக்குழு நிறுவுதல் தொடர்பாக தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களை தெளிவுபடுத்துவதற்கான கலந்துரையாடல் நேற்று (26) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த ஆணைக்குழுவை நிறுவுவதன் மூலம் இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள சகல பிரிவினருக்கும் உண்மையைக் கண்டறிய வாய்ப்பு கிடைக்கும் என அலி சப்ரி தெரிவித்தார்.

குறித்த ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட வேண்டும் எனவும் அதற்கான வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

சட்டம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் ஆணைக்குழுவிற்கு முழுமையான அதிகாரம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

“நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய எதையும் ஜனாதிபதி செய்ய மாட்டார்.” – அமைச்சர் அலி சப்ரி

“நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய எதையும் ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ ஒருபோதும் செய்யமாட்டார்கள் என வலியுறுத்திய அமைச்சர், இந்த செயற்பாடுகளை பூரண புரிந்துணர்வுடனும் அனைத்து தரப்பினரின் இணக்கப்பாட்டுடனும் செயற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்..”  என  வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

இன்று உலகில் எந்தவொரு நாடும் தனித்து முன்னேற முடியாது. உலகில் உள்ள அனைத்து அபிவிருத்தியடைந்த நாடுகளும் பிராந்திய கூட்டாண்மை மூலம் அந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளன. இரு தரப்பினருக்கும் நன்மை பயக்கும் வகையில் இந்திய – இலங்கை உறவுகளை மேம்படுத்தி இலங்கையின் அபிவிருத்தி எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதே ஜனாதிபதியின் வேலைத்திட்டமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இரண்டு நாள் உத்தியோகபூர்வ இந்திய விஜயம் மற்றும் “இந்திய – இலங்கை பொருளாதார கூட்டாண்மையின் தொலைநோக்குப் பார்வை” குறித்து இன்று (22) முற்பகல் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்தார்.

மேலும் இங்கு கருத்துத் தெரிவித்த வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி,

இலங்கையின் நெருங்கிய மற்றும் நீண்டகால நட்பு நாடான இந்தியாவுடன் புரிந்துணர்வு உறவைக் கட்டியெழுப்புவது இரு நாடுகளுக்கும் அதேபோன்று பிராந்தியத்துக்கும் மிகவும் நல்லதொரு நிலையாகும் என்று நாங்கள் நம்புகிறோம். அடுத்த இரண்டு அல்லது மூன்று தசாப்தங்களில் உலகின் மொத்த வளர்ச்சியில் 2/3 ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் ஏற்படும் என்பது இன்று அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விடயம். மேலும் இந்தியாவும் சீனாவும் அதில் முன்னிலை வகிக்கும் என்பது எவ்வித விவாதமும் இன்றி சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ள உண்மையாகும்.

எனவே, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இந்த பாரிய அபிவிருத்தி வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும். ஐரோப்பிய ஒன்றியத்தை உற்றுநோக்கினால், அந்நாடுகள் இணைந்து செயற்பட்டதன் காரணமாக முழு ஐரோப்பிய பிராந்தியமும் வளர்ச்சியடைந்தது. மத்திய கிழக்கு நாடுகளைப் பொறுத்தவரையிலும் இதே நிலைதான். சீனாவைப் போலவே, அமெரிக்கப் பிராந்தியமும் அதே முறையில் அபிவிருத்தியடைந்தது. இந்த அபிவிருத்தி வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறுவதே எமது எதிர்பார்ப்பாகும்.

ஜனாதிபதி அண்மையில் இந்தியாவுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அப்போது, பல முக்கிய கலந்துரையாடல்களில் அவர் பங்கேற்றார். இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெயசங்கருடன் கலந்துரையாடிய பின்னர், இந்தியாவின் தலைமை பாதுகாப்பு ஆலோசகருடனும் கலந்துரையாடப்பட்டது. அதன் பின், ஜனாதிபதி, இலங்கை தூதுக்குழுவினருடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

கடந்த காலத்தில் நாம் சந்தித்த பொருளாதார நெருக்கடியின்போது இந்தியா எங்களுக்கு பாரிய உதவிகளை வழங்கியது. நிதி நிவாரணம் வழங்கியதோடு குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கு தலைமைத்துவத்தையும் வழங்கியது. இந்தக் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை நாம் நிறைவு செய்ய வேண்டும். அதற்கான இந்தியாவின் ஆதரவை நாங்கள் தொடர்ந்து பெற்று வருகிறோம். இந்த அனைத்து நடவடிக்கைகளுக்காகவும் இந்திய பிரதமருக்கும் அரசாங்கத்துக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

மேலும், நமது இராஜதந்திர உறவுகளின் 75வது ஆண்டு நிறைவையொட்டி, நமது பொருளாதார, சமூக மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இலங்கை அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்கு முதலீடுகள் தேவைப்படுவதுடன், அந்த முதலீடுகளின் ஊடாக சந்தை வாய்ப்புகளையும் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. இந்தியாவும் இலங்கையும் இணைந்து செயற்பட்டால், இரு நாடுகளும் பெரும் நன்மைகளை பெற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்திய பிரதமருடன் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் அரசாங்கங்களுக்கிடையில் மாத்திரமன்றி தனியார் துறைகளுக்கிடையிலும் உடன்பாடுகளை எட்டுவதற்கு தேவையான பின்னணி குறித்து ஆராயப்பட்டது.

இந்திய ரூபாயை இலங்கையில் செல்லுபடியாகும் நாணயமாக பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இங்கு பரிசீலிக்கப்பட்டதுடன், அதற்கான ஏற்பாடுகள் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மீண்டும் மீண்டும் பணத்தை ஏனைய நாணய அலகுகளுக்கு மாற்றாமல் எளிதாக வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்பளிப்பதே இதன் நோக்கமாகும். இந்தியாவும் சிங்கப்பூரை இவ்விதம் கையாண்டு இரு நாடுகளும் பெரும் பயன்களை அடைந்துள்ளன.

மேலும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே மிகச் சிறந்த உறவை எவ்வாறு பேணுவது என்பது குறித்து விரிவாக கலந்துரையாடினோம். இப்போது இந்தியாவுக்கும் பலாலி விமான நிலையத்துக்கும் இடையில் தினசரி விமான சேவைகள் உள்ளன. எதிர்காலத்தில் பயணிகள் படகு சேவையை ஆரம்பிக்கவும் நாம் எதிர்பார்த்துள்ளோம். மேலும், உள்நாட்டு விமான சேவைகளை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்தும் நாம் ஆராய்ந்தோம்.

சுற்றுலாத்துறையின் வளர்ச்சி மற்றும் அதற்காக ஒத்துழைப்புடன் செயற்படுவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. சுற்றுலாத்துறையில் இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை மேம்படுத்துவதில் சுற்றுலா கப்பல் சேவையை (Cruise Tourism)  மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டினார். இது இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு துறையாக இருப்பதுடன், இதன் மூலம் இலங்கையில் சுற்றுலாத்துறையில் பெரும் முன்னேற்றம் ஏற்படும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

இன்று தென்னிந்திய பிராந்தியம் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சியை, இலங்கைக்கு பயனளிக்கும் வகையில், துறைமுகங்களுக்கிடையே தொடர்புகளை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை இரு நாட்டுத் தலைவர்களும் இனங்கண்டுள்ளனர்.

துறைமுகங்களுக்கு இடையே இந்த உறவுகளை எவ்வாறு ஏற்படுத்துவது என்பது பற்றி துறைசார் நிபுணர்கள் ஒன்றிணைந்து கலந்துரையாட வேண்டும். இது குறித்து கலந்துரையாடி விடயங்களை ஆராய்ந்து தீர்மானத்துக்கு வருவது குறித்து தலைவர்கள் இருவரும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்தனர். இவ்விடயங்கள் குறித்து அனைத்துக் கட்சிகளுடனும் விரிவாக கலந்துரையாடிய பின்னர், பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து தீர்மானிப்பதன் அவசியம் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.

மேலும் 2030ஆம் ஆண்டுக்குள் நாட்டின் தேசிய மின்சாரத் தேவையில் 70% புதுப்பிக்கத்தக்க வலுசக்தியைக் கொண்டு பூர்த்தி செய்யும் திறன் உள்ளது. அதன் பிறகு மேலதிகத்தை ஏற்றுமதி செய்ய ஒரு சந்தை வேண்டும். எனவே இதன் மூலம் பாரிய நிதியை பெற்றுக்கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும். நமது சூரிய சக்தி மற்றும் காற்று வலு போன்றவற்றை ஏற்றுமதிக் கைத்தொழிலுக்கு பயன்படுத்திக்கொள்ளத் தேவையான சூழலை எவ்வாறு உருவாக்குவது என்பது தொடர்பில் எமக்குப் பாரிய தேவை உள்ளது. அதுபற்றி இங்கு விரிவாக கலந்துரையாடினோம்.

மேலும், இதன்போது இணைந்து பணியாற்றுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது. நவீன தொழில்நுட்பங்கள் மூலம் பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அமோனியா ஆகிய துறைகளில் ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் நாம் கலந்துரையாடினோம்.

இந்நாட்டு விவசாயத்துக்காக தொழில்நுட்ப அறிவைப் பெறுவது மிகவும் முக்கியம். கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி உள்ளிட்ட துறைகளுக்கான தொழில்நுட்ப அறிவைப் பெறுவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டோம். இன்று இந்தியா டிஜிட்டல்மயமாக்கலில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. இலங்கையில் டிஜிட்டல்மயமாக்கலை விரைவுபடுத்துவதற்கு இந்தியாவிடமிருந்து தொழில்நுட்ப உதவிகளை பெறுவது குறித்தும் நாம் ஆராய்ந்தோம்.

மேலும், இந்திய பல்கலைக்கழகங்களுக்கும் இலங்கை பல்கலைக்கழகங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதுடன், இந்திய முன்னணி பல்கலைக்கழகம் ஒன்றை இலங்கையில் அமைப்பதற்கு அவசியமான முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையக மக்கள் இந்நாட்டுக்கு வந்து சுமார் 200 வருடங்கள் கடந்துள்ளன. அவர்களின் முன்னேற்றத்துக்காக பல திட்டங்களை செயல்படுத்த இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதுடன், இந்திய அரசாங்கம் அதற்காக 750 மில்லியன் இந்திய ரூபாயை முதலீடு செய்யவும் விருப்பம் தெரிவித்துள்ளது.

அத்துடன், நுவரெலியா பிரதேசத்தில் பல்கலைக்கழகமொன்றை ஆரம்பிப்பது குறித்தும், அது தொடர்பான உடன்படிக்கையை ஏற்படுத்துவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் மீனவ சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. வடக்கில் இழுவைப் படகுகளை கொண்டு மீன்பிடிப்பதை நிறுத்துவதற்கான வாய்ப்பு தொடர்பில் இதன்போது ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தினார். இலங்கை மீனவர்களுக்கு இந்திய எல்லையைத் தாண்டி அதற்கு அப்பால் செல்வதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்தோம். இரு தரப்பினரும் ஒன்றிணைந்து தொடர்ந்து கலந்துரையாடுவதன் மூலம் இந்த பிரச்சினைகளை தீர்க்க நாம் எதிர்பார்க்கின்றோம்.

இந்து சமுத்திர பிராந்தியம் முழுவதையும் பாதுகாப்பான வலயமாக எவ்வாறு பராமரிப்பது மற்றும் பரஸ்பர பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாத விடயங்களை மேற்கொள்வதற்கு அர்ப்பணிப்புடன் கூட்டாக செயல்படுவது குறித்தும் இரு தரப்பும் இணக்கப்பாட்டுடன் கலந்துரையாடப்பட்டது என்றும் அலி சப்ரி தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட தரப்பினர் அரசாங்கத்தை நம்பவேண்டும் என்று நீங்கள் எவ்வாறு எதிர்பார்க்கின்றீர்கள்? – அமைச்சர் சப்ரியிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கேள்வி !

தமிழ்ச் சமூகத்துக்கு எதிராக பல்வேறு மீறல்கள் இடம்பெற்றுவரும் பின்னணியில் ‘சமாதானத்தை கட்டியெழுப்புதல்’ என்பதால் நீங்கள் கருதுவது என்ன? என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுவரும் நிலையில், இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிஸுகொஷி ஹிடேகி, சுவிற்ஸர்லாந்து தூதுவர் மொமினிக் ஃபக்ளெர் மற்றும் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் சன்டைல் எட்வின் ஸ்கால்க் ஆகியோருக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்புவதை முன்னிறுத்தி இவ்வனைத்து தரப்புக்களுடனும் மிக நெருக்கமாக பணியாற்றுவதற்கான வழிமுறைகள் குறித்தும், இந்த இலக்கை அடைந்துகொள்வதில் இலங்கைக்கு வழங்கக்கூடிய உதவிகள் குறித்தும் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் அலி சப்ரி அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அப்பதிவை மேற்கோள் காட்டி, தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே அம்பிகா சற்குணநாதன் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

“அமைச்சரே, தமிழ்ச் சமூகத்துக்கு எதிராக பல்வேறு மீறல்கள் இடம்பெற்றுவரும் பின்னணியில் ‘சமாதானத்தைக் கட்டியெழுப்புதல்’ என்பதால் நீங்கள் கருதுவது என்ன என்று விளக்க முடியுமா? உண்மையைக் கண்டறியும் நோக்கில் கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் எவையும் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், பாதிக்கப்பட்ட தரப்பினர் அரசாங்கத்தை நம்பவேண்டும் என்று நீங்கள் எவ்வாறு எதிர்பார்க்கின்றீர்கள்?” என்றும் அவர் வினவியுள்ளார்.

மேலும், “நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்குரிய அடிப்படை நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் ஊடாக உங்களுடைய அரசாங்கம் அதன் நம்பகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும் அல்லவா? பாதிக்கப்பட்ட தரப்பினரை மையப்படுத்திய எந்தவொரு செயன்முறை என்றாலும், அதுகுறித்து அவர்களுடன் கலந்துரையாடப்பட வேண்டும் அல்லவா?

சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான செயன்முறை செயற்திறன் மிக்கதாக அமைய வேண்டுமாயின், தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை முடிவுக்கு கொண்டுவருவது அவசியமல்லவா?” என்றும் அம்பிகா சற்குணநாதன் கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்தின் 247ஆம் ஆண்டு நிறைவு விழா இலங்கையில் !

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்தின் 247ஆம் ஆண்டு நிறைவினையும், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான மற்றும் நீடித்த பங்காண்மையின் 75ஆம் ஆண்டு நிறைவினையும் குறிக்கும் வகையில், ஜூன் 22ஆம் திகதி கொழும்பில் ஒரு வைபவத்தினை நடத்தினார்.

இதில் பிரதம அதிதியாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கலந்து கொண்டார்.

அமெரிக்காவின் ஸ்தாபகத் தந்தைகள் 1776 ஆம் ஆண்டு பென்சில்வேனியாவிலுள்ள பிலடெல்பியாவில் சுதந்திரப் பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்காக ஒன்றுகூடிய ஜூலை 4 ஆம் திகதியினை உலகெங்கிலுமுள்ள அமெரிக்க குடிமக்கள் சுதந்திர தினமாகக் கொண்டாடுகிறார்கள்.

 

அப்பிரகடனத்துடன், வாழ்க்கை, சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியைப் பின்தொடர்தல் மற்றும் ஆளப்படும் மக்களின் ஒப்புதலுடன் பெறப்பட்ட அரச அதிகாரங்கள் உட்பட சில பராதீனப்படுத்தவியலாத உரிமைகளின் அடிப்படையிலமைந்த தன்னாட்சியினை நோக்கி அமெரிக்கா தனது முதல் படியினை எடுத்து வைத்தது.

இவ்வைபவத்தில் உரையாற்றிய தூதுவர் சங்,

 

“ஒரு நாட்டை அபிவிருத்தி செய்யக்கூடிய விசையாற்றல் மற்றும் தொழில்முயற்சியாண்மை ஆகியவற்றுடன் இணைந்து அதைப் பாதுகாக்கும் அரசியல் மற்றும் சமூக ஸ்திரத்தன்மை என்பன சுதந்திரம், தனியுரிமை மற்றும் மகிழ்ச்சியைப் பின்தொடர்தல் ஆகியவற்றிலிருந்தே ஊற்றெடுப்பதாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அமெரிக்காவிலும், இலங்கையிலும், மற்றும் எல்லா நாடுகளின் விடயத்திலும் அது உண்மையாகும்.” எனக் குறிப்பிட்டார்.

 

அமெரிக்காவானது இலங்கையின் மிகவும் பழமையான பங்காளர்களில் ஒன்று என்பதை முன்னிலைப்படுத்திக்கூறிய தூதுவர் சங், பரஸ்பர மதிப்பீடுகள் மற்றும் நெருக்கமான ஒத்துழைப்பு என்பன இரு நாடுகளும் இணைந்து வெற்றிபெற முடியும் என்பதை நிரூபித்துள்ளன என வலியுறுத்தினார்.

 

“அமெரிக்காவின் தேசிய சுதந்திரம் மற்றும் எமது இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவு ஆகியவற்றை நாம் கொண்டாடுகையில், உண்மையில் அனைத்து குடிமக்களுடனும் இலங்கை அரசாங்கத்துடனும் எமக்கிருக்கும் ஒரு குறிப்பிடத்தக்க பங்காண்மையினை நாம் கொண்டாடுகிறோம். அமெரிக்கர்களைப் பொறுத்தவரை, எங்கள் ஸ்தாபகர்கள் அதைத் தெளிவாகக் கூறியுள்ளனர், இன்றுவரை, அவர்கள் வகுத்த பாதையினை நாங்கள் பின்பற்றுகிறோம் – மிகவும் பூர்த்தியான ஒரு இணைப்பினை உருவாக்குவதற்காக எங்கள் அரசியலமைப்பை நாங்கள் மரியாதையுடன் பின்பற்றுகிறோம். இலங்கையுடன் அமெரிக்கா கொண்டுள்ள பங்காண்மையின் குறிக்கோள் அதற்குச் சற்றும் குறைந்ததல்ல.” என அவர் மேலும் கூறினார்.

 

அமெரிக்கர்களுக்கும் இலங்கையர்களுக்கும் நன்மைகளை வழங்கும் இரு நாட்டு அரசாங்கங்களுக்கும் மற்றும் மக்களுக்கும் இடையிலான உறவுகளில் எங்களது பங்காண்மை செழித்து வளர்கிறது.

 

1956 ஆம் ஆண்டு முதல், போசாக்கு, சுகாதாரம், கல்வி, மனித உரிமைகள் மற்றும் ஆட்சி, அனர்த்தங்களின் போதான பதிலளிப்பு மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் USAIDஆனது 2 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான பெறுமதியுடைய உதவிகளை வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டில், இலங்கை பொருளாதார நெருக்கடியின் மத்தியில்

இருந்தபோது, விவசாயிகளுக்கு உரம் வழங்கியது முதல் சிறு வணிகங்களுக்கு வழங்கிய நிதி உதவிகள் வரை 270 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான பெறுதியுடைய புதிய உதவிகளை அமெரிக்க அரசாங்கம் வழங்கியுள்ளது.

பல ஆண்டுகளாக நிலையாக வளர்ச்சியடைந்துள்ள எமது இராணுவங்களுக்கிடையிலான உறவானது, இருதரப்பு பயிற்சி, பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்கள் ஆகிய விடயங்களில் கவனம் செலுத்துகிறது.

இவையனைத்தும் இறுதியில் ஒரு திறந்த, சுதந்திரமான மற்றும் அமைதியான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உறுதி செய்வதற்கு பங்களிப்புச் செய்யக்கூடிய ஒரு மீண்டெழும் தன்மையுடைய படையினை கட்டமைப்பதற்கு உதவி செய்யும்.

இலங்கை சமூகங்களில் திறன்களை வளர்த்து, வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் உறவுகளை வளர்ப்பதற்காக 500இற்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்கள் தமது வாழ்வின் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்களை அர்ப்பணித்துப் பணியாற்றியது உட்பட 1962 ஆம் ஆண்டு முதல் மிகப்பெரிய கலாச்சாரங்களுக்கிடையிலான உறவுகளை உருவாக்குவதற்கு Peace Corps உதவி செய்துள்ளது.

2022 ஆம் ஆண்டில் மாத்திரம் 3.3 பில்லியன் டொலர் பெறுமதியான ஏற்றுமதியுடன், இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதிச் சந்தையாக அமெரிக்கா விளங்குகிறது. இலங்கையின் திறமையான மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளுக்காக தெரிவு செய்யும் விருப்பத்திற்குரிய இடங்களில் அமெரிக்காவும்  ஒன்றாகும்.

கடந்த ஆண்டில் 3,000 இலங்கை மாணவர்கள் அமெரிக்காவிற்கு கல்வி கற்பதற்காகப் பயணித்துள்ளனர். Fulbright மற்றும் International Visitor Leadership Programs போன்ற பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்கள் ஊடாக ஏனைய கல்வி மற்றும் தொழில்சார் பயிற்சிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் நேரடியாக உதவி செய்கிறது. கடந்த 75 வருடங்களாக இந்த நிகழ்ச்சிகளில் ஏறக்குறைய 3,000 இலங்கையர்கள் பங்குபற்றியுள்ளனர்.

எதிர்காலத்தில் எமது மக்களுக்கிடையிலான உறவுகளின் இன்னும் பெரிய வளர்ச்சிக்கும்; பொருளாதார, அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கும்; மற்றும் புவியியல் ரீதியாக எவ்வளவு முக்கியமானதாக இப்பிராந்தியம் இருக்கிறதோ அதேயளவு சுதந்திரமாகவும் திறந்ததாகவும் அது இருப்பதற்கும் நாம் கட்டமைத்துள்ள பங்காண்மையானது அடித்தளமாக அமையும்.

இலங்கையில் அமெரிக்காவின் நட்பு, அர்ப்பணிப்பு மற்றும் உதவி என்பன கடந்த 75 வருடங்களில் கொண்டாடுவதற்குத் தகுதியான பல சாதனைகளைப் படைத்துள்ளன. அந்த நட்பும், அர்ப்பணிப்பும், உதவியும் தொடர்ந்தும் நீடித்திருக்கும் என்பதுடன், ஒன்றாக இணைந்து இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை எம்மால் உருவாக்க முடியும்.

வெளிநாட்டுப்பயணங்களுக்காக 5 கோடி ரூபாய்களை செலவிட்ட அமைச்சர் அலி சப்ரி..?

வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் 5 கோடி ரூபாய்களை தாம் செலவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மறுத்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, வெளிநாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணங்களுக்காக மில்லியன் கணக்கான ரூபாவை செலவிட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

அமைச்சர் இந்த பணத்தை 7 வெளிநாட்டு பயணங்களுக்கு செலவிட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் இந்த தகவல் தவறானது என்று அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை உட்பட்ட ஐந்து உத்தியோகபூர்வ தேசிய தூதுக்குழு பயணங்களுக்கும், அமெரிக்காவிற்கும் சவுதி அரேபியாவிற்குமான இரு தரப்பு பயணங்களின் மொத்த செலவாகும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பயணங்களின்போது தாம் தூதுக்குழுக்களுக்கு தலைமை ஏற்றுச் சென்றதாக தெரிவித்துள்ள அலி சப்ரி, தம்மை தவிர மேலும் 22 அதிகாரிகள் இந்த பயணங்களில் இணைந்திருந்ததாகவும் ட்விட் செய்துள்ளார்.

ஈழத்தமிழர்களுக்காக வாதிடுவதை கனடா ஒரு போதும் நிறுத்தாது என கூறிய கனடா பிரதமர் – அதிருப்தியில் அமைச்சர் அலி சப்ரி!

யுத்த வெற்றியின் 14ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று வெளியிட்ட அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கம் மீண்டும் கனடாவுடனான இராஜதந்திரப் போரில் இறங்கியுள்ளது.

நேற்றைய தினம் கனடா பிரதமர் 14 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் தமிழர் இனப்படுகொலை நினைவு தினம் மற்றும் யுத்தம் நிறைவடைந்த தினத்தை நினைவுகூரும் வகையில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து, உள்நாட்டில் நல்லிணக்கச் செயற்பாட்டிற்கு உதவாது எனக் கருதும் கனடா பிரதமரின் அறிக்கையை இலங்கை கண்டிப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கனடா பிரதமர் தனது அறிக்கையில்,

இலங்கையில் 14 ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு வந்த ஆயுதப் போரின் போது ஏற்பட்ட துயரமான உயிர் இழப்புகளை இன்று நாம் நினைவுகூருகிறோம்.

முள்ளிவாய்க்கால் உயிரிழப்புகள் உட்பட, மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். காயமடைந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், உயிர் பிழைத்தவர்கள் மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்கள், இந்த அர்த்தமற்ற வன்முறையால் ஏற்படும் வலியுடன் தொடர்ந்து வாழ்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

மோதலில் பாதிக்கப்பட்ட தமிழ்-கனேடியர்களின் கதைகள் – நான் பல ஆண்டுகளாக நாடு முழுவதும் உள்ள சமூகங்களில் சந்தித்த பலர் உட்பட – மனித உரிமைகள், அமைதி மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதை ஒரு நிலையான நினைவூட்டல். மோதலில் பாதிக்கப்பட்ட தமிழ்-கனேடியர்களின் கதைகள் உட்பட, கடந்த பல ஆண்டுகளாக நான் நாடு முழுவதும் உள்ள சமூகங்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து கவனத்தில் எடுத்துக் கொண்டேன்.

இதன்காரணமாகவே, கடந்த ஆண்டு மே 18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அனுசரிக்கும் பிரேரணையை பாராளுமன்றம் ஏகமனதாக நிறைவேற்றியது. மோதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களின் உரிமைகளுக்காகவும், அத்துடன் இலங்கையில் தொடர்ந்து இன்னல்களை எதிர்நோக்கும் அனைவருக்காகவும் கனடா வாதிடுவதை நிறுத்தாது என்று குறிப்பிட்டிருந்தார்.

ஜிஎஸ்பி பிளஸ்  வரிச்சலுகைக்காக விண்ணப்பிக்கும் இலங்கை !

2024 -34 காலப்பகுதிக்கான ஜிஎஸ்பி பிளஸ்  வரிச்சலுகைக்காக இலங்கை விண்ணப்பிக்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்பி வரிச்சலுகைக்கான விண்ணபிப்பதற்கான அனுமதியை கோரும் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு செயற்பாடுகள் சேவைப்பிரிவின் ஆசியா பசுபிக்கின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் பவோலா பம்பலோனியுடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக  அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்த கரிசனைகள் காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

பிளஸ்  வரிச்சலுகைக்காக இலங்கை விண்ணப்பிக்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்பி வரிச்சலுகைக்கான விண்ணபிப்பதற்கான அனுமதியை கோரும் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு செயற்பாடுகள் சேவைப்பிரிவின் ஆசியா பசுபிக்கின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் பவோலா பம்பலோனியுடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக  அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்த கரிசனைகள் காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்

“முஸ்லிம்களையும் ராஜபக்‌ஷக்களையும் எந்த சக்திகளாலும் பிரிக்க முடியாது.” – அமைச்சர் அலி சப்ரி

ராஜபக்‌ஷக்களைப் புறந்தள்ளி எடுக்கப்படும் எந்தத் தீர்வுகளும் எந்தச் சமூகங்களுக்கும் நிரந்தரமாக இருக்காதென வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் விஜேராம இல்லத்தில் (19) இடம்பெற்ற இப்தாரில் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர்கள், வெளிநாடுகளின் தூதுவர்கள், சமய பெரியார்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந்த இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

முஸ்லிம்களையும் ராஜபக்‌ஷக்களையும் எந்த சக்திகளாலும் பிரிக்க முடியாது. இவ்வாறு பிரிப்பதற்கு எடுக்கப்பட்ட சில முயற்சிகள் தற்காலிகமாத்தான் சில சமயங்களில் வெற்றியடைந்திருக்கிறன.பின்னர்,இதற் குப்பின்னாலிருந்த சக்திகளை முஸ்லிம்கள் அடையாளம் கண்டுவிடுவர்.கடந்த காலகங்களிலும் இவ்வாறுதான் நிகழ்ந்தன.இலங்கை அரசியலில் ராஜபக்‌ஷக்கள் தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்கின்றனர்.இதனால்,இவர்களைப் புறந்தள்ளி எடுக்கப்படும் எந்த அரசயல் தீர்வுகளும் நிரந்தரமாக இருக்காது.

நாட்டின் ஐந்தாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்க்ஷ, இளம் வயதிலிருந்தே பலஸ்தீன முஸ்லிம்களின் அபிலாஷைகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகிறார்.ஒடுக்கப்படும் மக்களுக்காக குரலெழுப்பும் மஹிந்த ராஜபக்‌ஷவை, மிதவாதமாகச் சிந்திக்கும் சிறுபான்மைச் சமூகங்கள் நன்கு புரிந்துவைத்துள்ளதாகவும் அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.