அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ

அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ

சிறைகளில் இன்னும் 14 அரசியல் கைதிகளே விடுதலை செய்யப்படாமல் உள்ளனர் – வவுனியாவில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ!

கந்தக்காடு முகாமில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (17) வவுனியாவில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.

 

வவுனியா, வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்திற்கு விஜயம் செய்த நீதி அமைச்சர், பிரபா மற்றும் கௌதமன் ஆகியோரின் ஏற்பாட்டில் ஆலய பரிபாலனசபை மற்றும் தமிழ் விருட்சம் அமைப்பு என்பவற்றின் ஒழுங்கமைப்பில் திவாகரக் குருக்கள் தலைமையில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டதன் பின்னர் அவர் ஊடகங்க சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

 

“கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகளை செய்ய ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அங்கு புனர்வாழ்வு பெறுபவர்கள்,போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் மற்றும் யுக்திய நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்கள் போன்றோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

 

இந்த கந்தக்காடு முகாமானது இவ்வாறு மூன்று பிரிவுகளாக இயங்கி வருகின்ற நிலையில், அண்மையில் அங்கு இடம்பெற்ற சம்பவங்களையடுத்து அதன் நிர்வாக அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை இடமாற்றம் செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனை காரணமாக இளம் சமுதாயம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

 

இதனை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக யுக்திய நடவடிக்கை மூலம் போதைப் பொருள் விற்பனை மற்றும் போதைப் பொருள் மாபியாக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, தவிரவும் யுக்திய நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கும் தாக்கல் செய்யப்படவுள்ளது.

மேலும், அரசியல் கைதிகள் விடயத்தில் 5 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் இன்னும் 14 அரசியல் கைதிகளே விடுதலை செய்யப்படாமல் உள்ளனர், அவர்களுக்கு எதிராக வழக்கு விசாரணைகளும் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றன.

 

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பேசப்படுகிறது, யாருக்கு ஆதரவு என கட்சி இன்னும் முடிவு எடுக்காத நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியும் தமக்குள் பேசுகிறார்கள், இன்னும் யார் வேட்பாளர் என்பதை உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை, கட்சியுடன் கலந்துரையாடியே அது தொடர்பில் முடிவு எடுக்க முடியும்.”என்றார்.

சட்ட முறைமை பற்றிய அறிவை பாடசாலை மாணவர்களுக்கு வழங்க திட்டம் !

நாட்டின் சட்ட முறைமை பற்றிய அறிவை பாடசாலை மாணவர்களுக்கு வழங்கும் வேலைத்திட்டம் நடைமறைப்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும், சாதாரண மாணவர்களுக்கு சட்ட அறிவை வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“தற்போது 7-8 ஆண்டுகளாக, நாட்டின் அடிப்படை சட்ட முறைகள் பற்றிய கல்வியை சாதாரண தர மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைத்துள்ளோம்.

இது தொடர்பாக அமைச்சர்கள் குழு முடிவுவெடுத்துள்ளதுடன் அதை தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான கல்விப் பாடத்திட்டம், சாதாரண தர மாணவர்களுக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

2023ல் நடைமுறைப்படுத்துவோம் என நம்பினோம். ஆனால் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படுமா..? எனத் தெரியவில்லை.

இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டுக்குள் இந்த பாடத்திட்டம் மாணவர்களிடத்தில் கொண்டு சேர்க்கப்படும். ஏனெனில் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நாட்டின் அடிப்படை சட்டம் மற்றும் அவர்களின் உரிமைகள் என்ன என்பதைப் பற்றிய புரிதலை கொண்டிருக்க வேண்டும்.

நம் நாட்டில் உள்ள பலருக்கு அவர்களின் உரிமைகள் என்னவென்று தெரியாது. அதனால்தான் சில நேரங்களில் அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகளை சாதகமாக்கிக் கொள்கிறார்கள். அதனால் பல புதிய சட்டங்களை இயற்ற வேண்டியுள்ளது” என தெரிவித்தார்.

சோதனைகளின் போது கைப்பற்றப்படும் போதைப்பொருட்களே மீண்டும் மக்கள் கைகளுக்கு செல்கிறது – சட்டநடவடிக்கை அவசியம் என்கிறார் நீதியமைச்சர் !