அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

மின்சார கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

பொருளாதார மறுசீரமைப்பை அமுல்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

உத்தேச மின்சாரக் கட்டண உயர்வு என்பது சர்வதேச நாணய நிதியத்தால் முன்வைக்கப்பட்ட நிபந்தனை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் சில நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யத் தவறினால் IMF தவணை தொடர்பில் சிக்கல்கள் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இணங்கத் தவறினால் நாடு சர்வதேச ஆதரவையும் இழக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் விலையேற்றத்தை அமுல்படுத்துவதற்கு ஆதரவாக இல்லை எனவும் அதற்கு பதிலாக பல சலுகைகளை வழங்க விரும்புவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சலுகைகள் தன்னிச்சையாக வழங்கப்பட்டால் சர்வதேச உதவிகள் பெறப்படாது என்றும் கடன் மறுசீரமைப்பும் நடைபெறாது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

பகிடிவதை என்பது ஒரு மனநோய் – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

எதிர்காலத்தில் பகிடிவதைக்கு எதிராக கடுமையான தீர்மானங்களை எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

புதிய மாணவர்கள் மீதான அடக்குமுறை துன்புறுத்தலுக்கு எதிராக பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மனக் குழப்பத்தின் காரணமாக அறிக்கைகளை வெளியிட்டமை சாதகமான நிலைமை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். பகிடிவதை என்பது ஒருவித மனநோய் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

“முடிந்தால் ஒரு விமானத்தையேனும் இந்தியாவில் இருந்து பலாலிக்கு கொண்டுவந்து காட்டுங்கள்.“ – கூட்டமைப்பினருக்கு அமைச்சர் நிமல் சிறிபால சவால் !

பலாலி விமான நிலையத்திற்கு முடிந்தால் ஒரு விமானத்தையாவது கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் இன்று (22) வியாழக்கிழமை சிவில் விமான சேவைகள் மீதான ஒழுங்குவிதிகள் மற்றும் இலங்கை தொலைக்காட்சி சேவைகள் மீதான ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்

பலாலி விமான நிலையத்திற்கு  பெருமளவான நிதி செலவழிக்கப்பட்டுள்ளது. அந்த விமான நிலையத்திற்கு விமானங்களை கொண்டு வருவதற்காக அதனை திறந்து வைத்தோம். பலாலி விமான நிலையத்தின் சேவைகளுக்காக யாழ்ப்பாணத்தில் வசிக்கும் இளைஞர்களையே நியமித்தோம்.

விரைவில் அதனை  திறக்குமாறும் விமான நிலையத்திற்கு விமானங்களை கொண்டு வருவதாகவும் பல்வேறு நிறுவனங்கள் உறுதியளித்தன. ஆனால் கடந்த காலங்களில் எவரும் விமானத்தை கொண்டு வரவில்லை.விமானங்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்க முடியுமென்றால் முதலில் விமானங்களை கொண்டு வாருங்கள். அதற்கு பின்னர் தேவையான வேலைகளை நாங்கள் செய்கின்றோம் என்றார்.

இதன்போது  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சிறிதரன் குறுக்கிட்டு இந்தியாவின் இந்திய எயார்வேஸ் நிறுவனம் மற்றும் இண்டிக்கா என்பன விமானத்தை கொண்டு வர தயாராகவே இருக்கின்றன. இதனால் யாரும் விமானத்தை கொண்டு வரவில்லை என்று கூற வேண்டாம்.  என்றார்.

மீண்டும் உரையாற்றிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறுகையில்,

விமானம் வரும் என்று நாங்கள் பார்த்துக்கொண்டே இருந்தோம். பல்வேறு செய்திகளையும் அனுப்பினோம். ஆனால் வரவில்லை. பிரச்சினைகள் இருந்தால் பேசி தீர்த்துக்கொள்ளலாம். உண்மையிலேயே விமானங்களை கொண்டு வர முடியுமென்று உறுதிப்படுத்தினால் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம். அங்கு பெருமளவில் செலவழிக்கப்பட்டுள்ளது.

வேண்டுமென்றால் இந்தியாவுடன் மற்றும் இந்திய விமான சேவையுடன் கதைத்து விமானங்களை அனுப்புமாறு கூறுங்கள். பிரச்சினைகள் இருந்தால் எங்களுடன் கதைக்குமாறு கூறுங்கள். முடிந்தால் ஒரு விமானத்தையேனும் கொண்டுவந்து காட்டுங்கள். நாங்கள் எங்கள் பக்கத்தில் செய்ய வேண்டியவற்றை செய்துள்ளோம். ஆனால் அந்தப் பக்கத்தில் எதுவும் செய்யப்படவில்லை என்றார்.