அமைச்சர் பிமல் ரத்நாயக்க

அமைச்சர் பிமல் ரத்நாயக்க

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐந்து லட்சம் கொடுத்து விட்டு ஹெகலியவுக்கு கோடிகளை கொட்டிக்கொடுத்துள்ளார்கள் – கிளிநொச்சியில் அமைச்சர் பிமல் !

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐந்து லட்சம் கொடுத்து விட்டு ஹெகலியவுக்கு கோடிகளை கொட்டிக்கொடுத்துள்ளார்கள் – கிளிநொச்சியில் அமைச்சர் பிமல் !

கெஹலியவுக்கு ரம்புக்வெல்ல பெற்ற நட்டஈடாக பெற்றுக்கொண்ட பணத்தில், கிளிநொச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கிராமம் ஒன்றையே அமைத்திருக்கலாம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கிளிநொச்சியில் தெரிவித்தார். அமைச்சர் பிமல் ரத்னாயக்க கிளிநொச்சி ரயில் நிலையத்தை நேற்று பார்வையிட்டார். ‘க்ளீன் ஶ்ரீலங்கா’ திட்டத்தை முன்னெடுக்கும் வகையில் அமைந்த இந்த விஜயத்தில் பயணிகளுடனும் கலந்துரையாடினார்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகபட்சமாக 5 இலட்சம், 7 இலட்சம், இறுதியாக 10 இலட்சம் ரூபாவே வழங்கப்பட்டது. ஆனால், கடந்த கால அமைச்சர்கள் பல இலட்சங்களை அவர்களது வீடுகளுக்காக நட்டஈடாக பெற்றுக்கொண்டுள்ளனர். உதாரணமாக கெஹெலிய ரம்புக்வெல்ல பெற்ற நட்டஈட்டுத் தொகையை வைத்து இங்கு கிராமம் ஒன்றையே அமைத்திருக்கலாம் என்றார்.

கிளிநொச்சி வைத்தியசாலையில் மின்பிறப்பாக்கி இயங்காத விடயம் தொடர்பில் எமது மாவட்ட அமைப்பாளர் பார்வையிட்டு, சுகாதார அமைச்சுக்கு தகவல் வழங்கியதும் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்

கிளிநொச்சியில் பொலிஸார் கள்ளச் சாராயம், கள்ளமரம் கடத்துவது, கள்ளமண் அகல்வதற்கு உடந்தை ? அமைச்சர் பிமல் ரத்நாயக்க

கிளிநொச்சியில் பொலிஸார் கள்ளச் சாராயம், கள்ளமரம் கடத்துவது, கள்ளமண் அகல்வதற்கு உடந்தை ? அமைச்சர் பிமல் ரத்நாயக்க

கிளிநொச்சியில் பொலிஸார் கள்ளச்சாராயம், கள்ளமரம் கடத்துவது, கள்ளமண் அகல்வதற்கு எல்லாம் உடந்தையாக இருக்கின்றனர், தமிழரசுக் கட்சியின் பா உ எஸ் சிவஞானம் சிறிதரனின் இடது வலது கரங்களும் இவற்றுடன் தொடர்புற்றிருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்து வந்தார். தற்போது அவர் பொலிஸார் மீது வைத்த குற்றச்சாட்டுக்களை யாழ் பா உ க இளன்குமரனும் முன்வைத்துள்ளார். இதே குற்றச்சாட்டுக்களை அமைச்சர் பிமல் ரத்நாயக்காவும் கிளிநொச்சி பொலிஸார் மீது வைத்துள்ளார்.

கிளிநொச்சி – இராமநாதபுரம், வவுனியா – ஈச்சங்குளம் பகுதி பொலிஸாரின் செயற்பாடுகளால் பொலிஸ் நிலையங்களை மூடுமாறு மக்கள் விரக்தியில் தன்னிடம் தெரிவித்ததாக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் வியாபாரம் உள்ளிட்ட சட்டவிரோத வியாபாரங்களை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை என குற்றம் சாட்டியிருந்தார்.

அதன்போது கருத்து தெரிவித்த பிமல் ரத்நாயக்க, வடக்கில் விரும்பத்தகாத செயற்பாடுகளால் பொலிஸார் மீது நம்பிக்கை இழந்து விரக்தி நிலையில் உள்ளனர். சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தால்இ உடனேயே சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு அந்த தகவல் செல்கின்றன. தமது பகுதியில் பொலிஸ் நிலையம் இருந்தும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் எதற்காக பொலிஸ் நிலையம், அதனை மூடிவிடுங்கள் என என்னிடம் தெரிவித்தனர் என்றார்.

அதற்கு பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் பதில் அளிக்கையில்இ கீழ்நிலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது நம்பிக்கையீனம் இருந்தால், மேலதிகாரிகளுக்கு தகவல் வழங்க முடியும் என குறிப்பிட்டிருந்தார்.

மக்களோடு மக்களாக உலவும் என்.பி.பி பா உ க்கள், அமைச்சர்கள் !

மக்களோடு மக்களாக உலவும் என்.பி.பி பா உ க்கள், அமைச்சர்கள் !

தொடருந்து சேவையில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மக்களோடு மக்களாக தொடருந்தில் பயணித்துள்ளார்.

இதன்போது, தொடருந்தில் தன்னுடன் பயணித்த பயணிகளிடம் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க கலந்துரையாடிய காணொளி பலருடைய கவனத்தையும் ஈர்த்துவருகிறது.

அடிக்கடி இடம்பெறும் தொடருந்து தாமதங்கள், மின் விசிறிகள் பழுது, தொடருந்துகளில் ஏறுவதில் மாற்றுத் திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள், தண்டவாளங்கள் மற்றும் தொடருந்து நிலையங்களில் சுகாதார சீர்கேடு, பாதுகாப்பற்ற பாழடைந்த தொடருந்தை தொடர்ந்து பயன்படுத்தல் போன்ற பிரச்சினைகளை பொதுமக்களிடம் இருந்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேட்டறிந்துள்ளார்.

இதே போன்று யாழ் பா உ க இளங்குமரன் யாழ் பஸ்தரிப்பு நிலையத்திற்குச் சென்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்து கொண்டார்.

முன்னதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மழைவெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நேரடியான கள ஆய்வு மூலம் ஆராய்ந்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தது மீனவர்கள் பலரையும் மகிழ்ச்சிப்படுத்தியிருந்தது.