அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ

கடந்த முப்பது வருடங்களாக இலங்கையில் முறையான நிதிக் கொள்கை இல்லை – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ !

குற்றச் செயல்களில் ஈடுபட்டு சம்பாதிக்கும் பணத்தை பறிமுதல் செய்வதற்கான புதிய சட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நான்கு நாள் கைத்தொழில் கண்காட்சியுடன் இணைந்து கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் தெரிவித்தார்.

கடந்த முப்பது வருடங்களாக இலங்கையில் முறையான நிதிக் கொள்கை இல்லை என தெரிவித்த அமைச்சர், அதனை அடிப்படை விடயமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் நாட்டின் நான்கில் ஒரு பகுதி மக்கள் நிகர நிதி நிறுவனங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பங்குபெற்றுதலுடன் நல்லிணக்க தைப்பொங்கல் !

யாழ்ப்பாணம் காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயத்தில் தேசிய நல்லிணக்க தைப்பொங்கல் விழா திங்கட்கிழமை (15) காலை இடம்பெற்றது.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பங்குபெற்றுதலுடன் இடம்பெற்ற பொங்கல் விழாவில், வியாவில் வாழ் மக்கள் வர்த்தக சமூகத்துடன் வெளிநாட்டு வாழ் உறவுகளும் இணைந்து சிறப்பாக இடம்பெற்றது.

 

 

 

 

 

“வட, கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றும் பொலிஸ் அதிகரிகளுக்கு தமிழ் மொழியை கற்பிக்கும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும்.” – அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ

வட, கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றும் பொலிஸ் அதிகரிகளுக்கு தமிழ் மொழியை கற்பிக்கும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என்று நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நேற்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 

வரவு – செலவுத் திட்டக் குழு விவாதத்தின் இரண்டாம் நாளான நேற்று பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகிய இரு அமைச்சுக்களின் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

கடந்த 30 வருட யுத்த கால சூழ்நிலையின் போது, வடக்கில் எந்தவொர இளைஞர் யுவதிகளுக்கும் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. அதனால் அப்பிரதேசத்தை பிரதிநிதிதித்துவப்படுத்தி எவரையும் இச்சேவையில் இணைத்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் நாம் 2016 ஆம் ஆண்டு புதியதொரு நடைமுறையைக் கொண்டு வந்திருந்தோம்.

 

பொலிஸ் அதிகரிகளுக்கு தமிழ் மொழியை புகட்டும் பல வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தினோம். ஆனால் அவ்வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் செயற்படவில்லை. எனவே அவ்வேலைத்திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்துவோம் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.