அரியநேத்திரன்

அரியநேத்திரன்

அடுத்தடுத்து வெளியாகும் தேர்தல் முடிவுகள் – வன்னி தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாஸ பெற்ற வாக்குகளின் அரைவாசியை கூட பெறாத தமிழ்பொதுவேட்பாளர் !

இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில் அனுரகுமார திஸாநாயக்க தொடர்ந்தும் முன்னிலையில் இருந்து வருகின்றார். அண்மைய நிலவரப்படி 43.73 சதவித வாக்குகுளுடன் அனுரகுமார முன்னிலை வகிப்பதுடன் 30.24 சதவீத வாக்குகுளுடன் சஜித்பிரேமதாஸ இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இதேவேளை தமிழ்ப்பொதுவேட்பாளருக்கு பாரிய ஆதரவு இருப்பதாக பிரச்சார காலத்தில் கூறப்பட்ட போதிலும் கூட தமிழர்பபகுதிகளின் தேர்தல் முடிவுகளின் படி சஜித்பிரேமதாஸ பெற்ற வாக்குகுளின் அரைவாசியை கூட தமிழ்பொதுவேட்பாளரால் பெறமுடியவில்லை என்பதையும் வாக்கு விகிதங்கள் தெளிவாக காட்டிநிற்கின்றன.

Vanni District – Total
வன்னி மாவட்டம் – மொத்தம்
May be an image of 4 people, newsroom and text
Jaffna District – kopay Electorate
யாழ்ப்பாண மாவட்டம் – கோப்பாய் தேர்தல் தொகுதி
May be an image of 4 people, newsroom and text
Jaffna District – Udupiddy Electorate
யாழ்ப்பாண மாவட்டம் – உடுப்பிட்டி தேர்தல் தொகுதி
May be an image of 4 people, newsroom and text
Jaffna District – Manipay Electorate
யாழ்ப்பாண மாவட்டம் – மானிப்பாய் தேர்தல் தொகுதி
May be an image of 4 people, newsroom and text
யாழ்ப்பாண மாவட்டம் – வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி
May be an image of 4 people, newsroom and text
யாழ்ப்பாண மாவட்டம் – ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதி
May be an image of 4 people, newsroom and text
Jaffna District – Kankesanturai Electorate
யாழ்ப்பாண மாவட்டம் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதி
May be an image of 4 people, newsroom and text
Jaffna District – Chavakachcheri Electorate
யாழ்ப்பாணம் மாவட்டம் – சாவகச்சேரி தேர்தல் தொகுதி
May be an image of 4 people and text
Jaffna District – Kilinochchi Electorate
யாழ்ப்பாணம் மாவட்டம் – கிளிநொச்சி தேர்தல் தொகுதி
May be an image of 4 people, newsroom and text

தமிழ் அரசுக் கட்சி என்ன முடிவை எப்போது எடுத்தாலும் தனிப்பட்ட முறையில் எனது ஆதரவு அரியநேத்திரனுக்கு அளிக்கப்படும். – சிறீதரன்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உறுதியளித்தார்.

 

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் சந்தித்து கலந்துரையாடினார்.

 

சந்திப்புக்கு பின்னர் இருவரும் கூட்டாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

 

இலங்கை தமிழ் அரசுக் கட்சி என்ன முடிவை எப்போது எடுத்தாலும் தனிப்பட்ட முறையில் எனது ஆதரவு அரியநேத்திரனுக்கு அளிக்கப்படும். கட்சி என்ன முடிவை எடுக்கிறதோ எடுக்கவில்லையோ அது எவ்வளவு தூரம் எம்மை தள்ளப்போகிறதோ என்பதை தமிழ் மக்கள் தீர்மானிப்பார்கள்.

 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக எனது ஆதரவு அரியநேத்திரனுக்கு அளிக்கப்படும். தமிழ் மக்கள் காத்திரமான ஒரு செய்தியை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வழங்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

 

இதன்போது கருத்து தெரிவித்த அரியநேத்திரன், தான் களமிறங்கும் சங்கு சின்னத்தை சிபாரிசு செய்தவர் சிறீதரன் எம்பி என தெரிவித்தார்.

 

மேலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் தமக்காக குறியீடாக சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் கட்சி கூட்டங்களில் பங்கேற்க தடை – சுமந்திரன்

பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அரியநேந்திரன் அவர்களுக்கு விளக்கம் கோரி இரண்டு வார கால அவகாசம் கொடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன், அதுவரை கட்சிக் கூட்டங்களிலும் பங்கேற்ற தடை எனத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரதான வேட்பாளர்களுடன் போச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எமது அடிப்படை நிலைப்பாடு வடக்கு – கிழக்கு இணைந்த சமஸ்டி அடிப்படையிலான தீர்வு ஆகும்.

மூன்று பிரதான வேட்பாளர்களுடனும் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பாகவும், பேசிய விடயங்களையும் கூட்டத்தில் தெரியப்படுத்தினோம். சில முன்னேற்றகரமான கருத்துக்களை அவர்கள் தெரிவித்துள்ளார்கள். அவர்களது தேர்தல் அறிக்கை வெளிவந்த பின்னரே எமது இறுதி முடிவு எடுக்கப்படும்.

நாமல் ராஜபக்ஸ அவர்கள் என்னுடைய வீட்டிற்கு வந்து சந்தித்து இருந்தார். அவர்களிடம் உள்ள விடயங்களை தெரியப்படுத்தினார். அது அதி தீவிர சிங்கள வாக்குகளைப் பெற்றுக் கொள்வதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

அதற்கான வாய்ப்புக்கள் குறித்தும் கலந்துரையாடியிருந்தோம். தற்போது தெற்கில் சிங்கள பௌத்த பேரினவாதம் தலைத் தூக்காமல் உள்ளது. அது தொடர்பில் கலந்துரையாடினோம்.

எமது மக்களை வழிகாட்டுவதற்காக நாங்கள் ஆவணம் ஒன்றை தயாரிக்கவுள்ளோம். அதற்கான சிறு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. தெளிவாக மக்களை வழிப்படுத்துவற்காக தேர்தலுக்கு முன்பாக நாங்கள் ஆவணம் ஒன்றை தெளிவாக வழங்கவுள்ளோம்.

தமிழ் பொது வேட்பாளராக வர்ணிக்கப்பட்டுள்ள அரியநேந்திரன் சம்மந்தமாக கலந்துரையாடப்பட்டது. சென்ற கூட்ட தீர்மானத்தின் படி விளக்கம் கோரி இரண்டு வார கால அவகாசம் கொடுத்து அவருக்குக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதற்குரிய பதில் கிடைத்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம். அதுவரைக்கும் எமது கட்சியின் எந்தக் கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ள மாட்டார்.

அந்தப் பின்னணியில் எதிர்வரும் நாட்களில் இடம்பெறும் பிரசாரக் கூட்டங்கள் தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளது. கட்சி இது சம்மந்தமாக எமது ஆதரவாளர்களுக்குக் கொடுக்கும் அறிவுரை என்னவென்றால் ஒருவரிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்பியுள்ளோம்.

இதனால் மேடைகளில் ஏறி ஆதரித்துப் பேசும் போது அவதானமாக இருக்குமாறு கட்சி உறுப்பினர்களைக் கேட்டுக் கொள்கின்றோம். எமது கட்சி இது வரை யாருக்கு ஆதரவு வழங்குவது என எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை எனக் குறிப்பிட்டார்.