அலி சப்ரி

அலி சப்ரி

இலங்கையின் நீதியமைச்சராக பொறுப்பேற்றார் அலி சப்ரி !

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷவின் இராஜிநாமாவை அடுத்து ஜனாதிபதியால் இந்த பதவிப் பிரமாணம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நிற்கும் – நாடாளுமன்றத்தில் அலி சப்ரி

அரசாங்கம் என்ற ரீதியில் இலங்கை பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நிற்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று நாடளுமன்றில் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய அவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஐக்கிய நாடுகள் சபையில் அதே நிலைப்பாட்டை தெளிவாக கூறியுள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தார்.

“தமிழ்த்தலைவர்களே புலம்பெயர்ந்தோரின் நிகழ்ச்சி நிரலுக்குள் நின்று மீண்டும் ஆயுதப்போருக்கு வழிசமைத்துவிடாதீர்கள்.” – அமைச்சர் அலி சப்ரி !

“ தமிழ் தலைவர்கள், புலம்பெயர் தேசங்களில் உள்ளவர்களின் வேறுபட்ட நிகழ்ச்சி நிரல்களுக்கு சிக்கிக்கொண்டு மீண்டும் ஆயுதப்போருக்கு வழிசமைத்துவிடாதீர்கள்.” என்று வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா ஒருபோதும் பிரிவினைக்கு அங்கீகாரம் வழங்காது என்ற யதார்த்தத்தினை புரிந்துகொண்டு முற்போக்கான சிந்தனைகளைக் கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் இனப் பிரச்சினைகளுக்கான தீர்வு உட்பட அனைத்து விடயங்களுக்கும் பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வினை காண்பதற்கு தற்போது அரிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் அடுத்தகட்டமாக முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் வீரகேசரியிடம் பிரத்தியேகமாக கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வினை காண வேண்டும் என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முனைப்புடன் உள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை  பொறுத்தவரையில் அவர் முற்போக்கான ஒரு தலைவர். அவருடைய காலத்தில் தேசிய பிரச்சினை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் முழுமையான தீர்வினை காண்பதற்கு மிகவும் அரிதான சந்தர்ப்பம் ஒன்று உருவாகியுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தினை தமிழ்த் தலைவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது எனது கோரிக்கையாக உள்ளது. ஏனென்றால், புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழ்த் தரப்பினர் மற்றும் அவர்கள் சார்ந்த சக்திகளுக்கு மாறுபட்ட நிகழ்ச்சி நிரல்கள் உள்ளன. அவர்கள் இலங்கையில் நிரந்தரமானதொரு தீர்வினை எட்டுவதற்கு இதயசுத்தியுடன் விரும்பவில்லை என்பது பல செயற்பாடுகள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்கள் சார்ந்துள்ள நாடுகளில் அவர்களது வகிபாகத்தினை தக்க வைத்துக்கொள்வதற்கான பல செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார்கள்.

அவ்வாறான செயற்பாடுகளை எமது நாட்டிலும் தமிழ் தலைவர்களை மையப்படுத்தி முன்னெடுக்கின்றார்கள். இந்த நிகழ்ச்சி நிரலுக்குள் தமிழ்த் தலைவர்கள் சிக்கிக்கொள்வதால் தமிழ் இளையோரின் எதிர்காலமே பாதிக்கப்படப் போகிறது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டியுள்ளது.

1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அப்போதைய தமிழ்த் தலைவர்கள் தனிநாட்டுக்கான கோரிக்கையை முன்னிலைப்படுத்தியே தேர்தலில் போட்டியிட்டார்கள். ஆனால், அத்தலைவர்களால் அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற முடிந்திருக்கவில்லை. இதனால் அந்தத் தலைவர்களுக்கு எதிராக இளைஞர்கள் மாறியதுடன், அவர்கள் தலைவர்களால் செய்ய முடியாததை தாம் ஆயுத வழியில் நிகழ்த்திக் காண்பிப்போம் என்று புறப்பட்டார்கள்.

இந்தத் தீர்மானம் கடந்த 30 ஆண்டுகளாக நாட்டை சிதைத்துவிட்டது. அதிலும், தமிழ் மக்களையும், அவர்கள் வசிக்கும் பகுதிகளையும் மிகவும் மோசமாக பாதித்துவிட்டது.

எனவே, இந்த விடயத்தில் தமிழ் தலைவர்கள் திறந்த மனதுடன் தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

அதேநேரம், இந்தியாவை பொறுத்தவரையில், தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஒருபோதும் அங்கீகாரமளிக்காது. ஏனென்றால், இந்தியாவின் தென்பிராந்தியங்களில் அவ்விதமான சிந்தனைகள் கடந்த காலங்களில் தோன்றியிருப்பதால், மத்திய அரசாங்கம் குறித்த விடயத்தில் மிகவும் தீவிரமாக இருக்கும் என்பதே யதார்த்தமானதாகும்.

ஆகவே, தற்போது ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தை முறையாக பயன்படுத்த வேண்டியுள்ளது.

அரசாங்கத்தினை பொறுத்தவரையில்  பொறுப்புக்கூறல், அதிகாரப்பகிர்வு ஆகிய விடயங்கள் சம்பந்தமாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு தயாராகவே உள்ளது.

தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, படிப்படியாக விடயங்கள் தீர்க்கப்படுவதற்கே நாமும் செயற்படுகின்றோம். ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம்,  அரசியல் கைதிகள் விடயத்தில் சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளது. எஞ்சிய சொற்ப அளவிலானவர்களை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று தான் காணிகளை வனப் பாதுகாப்பு திணைக்களம், தொல்பொருளியல் திணைக்களம் உள்ளிட்டவை கையகப்படுத்துவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பிரச்சினையானது அனைத்து சமூகங்களுக்குமானதாக உள்ளது. ஆகவே, அந்த விடயமும் உரிய அணுகுமுறையூடாக தீர்க்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் உள்ளோம்.

முன்னதாக, நான் நீதியமைச்சராக கடமையாற்றியபோது, காணாமலாக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்கு வடக்கு, கிழக்கில் நடவடிக்கைகளை எடுத்திருந்தேன். எனினும், அதற்கு சிறிய குழுவினர்கள் எதிர்ப்பினை வெளியிட்டார்கள்.

அதேநேரம், மாற்றுத்திறனாளிகளாக உள்ள முன்னாள் போராளிகளுக்கு உண்மையிலேயே உதவிகள் தேவையாக உள்ளன. அரசாங்கத்தினால் அளிக்கப்படுகின்ற பகுதியளவிலான உதவிகளை பெற்று, வாழ்க்கையை முன்னகர்த்துபவர்களும் உள்ளார்கள்.

எனவே, அரசாங்கம் என்ற வகையில் ஐக்கிய இலங்கைக்குள் அனைவரும் சமத்துவமாகவும், சமாதானமாகவும் வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளோம். இந்த விடயத்தில் தமிழ் தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

மார்ச் இறுதிக்குள் IMF உதவி கிடைக்காவிட்டால் நிலை மோசமடையும் – அலிசப்ரி

மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்தின் கடனைப் பெற்றுக் கொள்ளாள்ள வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அது தவறும் பட்சத்தில் மோசமான நாட்டின் பொருளாதாரத்தின் நிலைமை மேலும் மோசமடையும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அல் ஜசீரா தொலைக்காட்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதுவதை நீக்க வேண்டும் – உலகளாவிய கால ஆய்வு (UPR) செயற்குழுவில் பிரித்தானியா கோரிக்கை!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு (PTA) பதிலாக உண்மையைக் கண்டறியும் பொறிமுறையையும் புதிய பாதுகாப்புச் சட்டத்தையும் உருவாக்குவது இறுதிக்கட்டத்தில் உள்ளதாக வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி உறுதியளித்துள்ளார்.

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்றும், ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதுவதை நீக்க வேண்டும் என்றும் பிரித்தானியா மற்றும் அமெரிக்கா செய்த வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வகையில் சப்ரி இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நடைபெற்ற 42வது அமர்வின் போது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உலகளாவிய கால ஆய்வு (UPR) செயற்குழுவில் பிரித்தானியா மற்றும் அமெரிக்காவின் பிரதிநிதிகளால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

அதன்படி, உலகளாவிய கால ஆய்வு செயல்முறையின் கீழ் அடுத்த கட்ட கடப்பாடுகளை மேற்கொள்ள இலங்கை தயாராகி வரும் நிலையில், PTA ஐ மாற்றுவது உட்பட பல கொள்கை நடவடிக்கைகள் கவனிக்கப்பட உள்ளதாக சப்ரி உறுதியளித்தார்.

இலங்கையின் பிரச்சினைகளை IMF கடனால் கூட தீர்க்க முடியாது – அலி சப்ரி

சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவிக் கிடைத்தால்கூட, இலங்கையின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்துவிட முடியாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது உரையாற்றிய அவர்,

“இலங்கையின் கடன்மறுசீரமைப்புக்கு இந்தியா சாதகமான பதிலை வழங்கியுள்ளது.
அந்நாடு நேரடியாக ஐ.எம்.எப்.இற்கு இதனை அறிவித்துள்ளதாக த ஹிந்து பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவும் எமக்கு சாதகமான பதிலை வழங்கும் என்று நம்புகிறோம். எனவே, சிறந்த பெறுபேறு ஊடாக ஐ.எம்.எப்.உடன் எம்மால் பேச்சு நடத்த முடியும்.

எனினும், ஐ.எம்.எப். வழங்கும் 2.9 பில்லியன் டொலர் நிதியால் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது. ஆனால், நீண்ட காலமாக தீர்க்கமுடியாத பல தேவைகளை மற்றும் அத்தியாவசியத் தேவைகளை இதனால் நிறைவேற்ற முடியும் என நாம் நம்புகிறோம்.

நாம் படிப்படியாகத் தான் பிரச்சினைகளிலிருந்து வெளியே வர முடியும். குறுகிய கால பிரசித்தமான தீர்மானங்களை எடுத்து, இந்த நாட்டை மேலும் மேலும் சிக்கலுக்குள் தள்ளுவதல்ல எமது முயற்சி. மாறாக நடைமுறைச்சாத்தியமான விடயங்களைத்தான் நாம் மேற்கொள்ள வேண்டும்.“ எனத் தெரிவித்துள்ளார்.

கனடாவின் ராஜபக்சக்கள் மீதான தடை குறித்து அமைச்சர் அலிசப்ரி விசனம் !

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் மீதான தடைக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கனடா பொருளாதார தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக இராஜதந்திர ஆட்சேபனை வெளியிடுவதற்காக, கனடா உயர்ஸ்தானிகர், இன்று(வியாழக்கிழமை) வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இதன்போது, நிலுவையில் உள்ள பிரச்சினைகளை தீர்த்து நல்லிணக்கத்தை அடையும் பொருட்டு, ஆழமாக வேரூன்றிய பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களில் இலங்கை ஈடுபட்டுள்ளது.

இந்த முக்கியமான தருணத்தில் முன்னாள் ஜனாதிபதிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது பயனற்றது என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“அரசாங்கம் வியாபாரம் செய்வதிலிருந்து தங்கள் கைகளை எடுக்க வேண்டும்.” – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி

“அரசாங்க அதிகாரிகள் மற்றும் தனியார் துறையினருடன் ஒன்றிணைந்து வேலைத்திட்டங்களை அமுல்படுத்தக்கூடிய ஒரு குழு மற்றும் பொறிமுறை இல்லாததே இலங்கையின் பிரச்சினையாகும்.” என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கொழும்பு சர்வதேச கடல்சார் மற்றும் மூலோபாய மாநாட்டில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

“நாங்கள் மிக நீண்ட காலமாக மூலோபாய இருப்பிடத்தைப் பற்றி பேசி வருகிறோம், அதைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அதில் அதிக கவனம் செலுத்த எதுவும் இல்லை என நான் நினைக்கிறேன். இருப்பிடம் மிக முக்கியமான விடயங்களில் ஒன்றாகும், ஆனால் அதைத் தாண்டி இன்னும் நிறைய விடயங்கள் உள்ளன. செய்ய வேண்டும். அப்படித்தான் உங்களை நீங்களே மேம்படுத்திக் கொள்கிறீர்கள்? என்ன சட்டங்கள் உள்ளன? மக்களை எப்படி அழைக்கிறீர்கள்?” என தெரிவித்துள்ளார்.

அரசாங்க அதிகாரிகள் மற்றும் தனியார் துறையினருடன் ஒன்றிணைந்து வேலைத்திட்டங்களை அமுல்படுத்தக்கூடிய ஒரு குழு மற்றும் பொறிமுறை இல்லாததே இலங்கையின் பிரச்சினையாகும்.

“அரசாங்கம் வியாபாரம் செய்வதிலிருந்து தங்கள் கைகளை எடுக்க வேண்டும். அரசாங்கம் வணிகம் செய்யும் நாட்கள் போய்விட்டன, அரசாங்கம் ஒரு வசதியாளராக, ஒழுங்குபடுத்துபவர் மற்றும் மூலோபாயங்களை வழங்குபவராக இருக்க வேண்டும் மற்றும் தனியார் துறையை போட்டியிட அனுமதிக்க வேண்டும்,” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

எவ்வளவு பாரிய நாடுகள் வளர்ச்சியடைந்துள்ளன என்ற உண்மையைக் குறிப்பிட்ட அமைச்சர், இலங்கை தற்போதைய நிலையை எவ்வளவு அதிகமாகப் பிடிக்கிறதோ, அந்த அளவுக்கு இந்த மாற்றங்களைச் செய்வது மிகவும் கடினமாகும் என்றார்.

“ஆனால் நம் நாட்டில் அமைச்சர்கள் மாறுகிறார்கள், தேர்தல்கள் வரலாம், உங்களுக்கு வேலை கொடுக்க வேண்டும், அவர்கள் 1994 இல் 600,000 ஆக இருந்த பொதுச் சேவையை இப்போது 1.5 மில்லியனாகக் கட்டுகிறார்கள். எங்கள் வரி வருவாயில் 90% ஓய்வூதியம், சம்பளம் மற்றும் சமுர்த்திகளுக்குச் செல்கிறது. ஒரு நமது நாட்டை இதிலிருந்து மீட்டெடுக்க நாம் இன்னும் கடினமாக உழைக்க வேண்டிய நேரம் இது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“மக்களின் கோவம் நியாயமானது.”- மன்னிப்பு கோருகிறார் ஒருநாள் நிதியமைச்சர் !

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்காக மக்களிடம் மன்னிப்புக் கோருவதாக முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இன்று (07) பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

வீட்டில் மின்சாரம், எரிவாயு, எரிபொருள் இல்லாதபோது, ​​​​மக்கள் அந்த அழுத்தத்தை வௌிப்படுத்துவது நியாயமானது என அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்டிற்கு அரசியலமைப்பே ஒரே தீர்வு என கடந்த காலங்களில் கூறியவர்கள் அரசியலமைப்பிற்கு புறம்பாக தீர்வுகளை காண முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.