இலங்கை பொலிஸார்

இலங்கை பொலிஸார்

போதையில் பொலிஸார் – 17 பேர் பணி நீக்கம் !

போதையில் பொலிஸார் – 17 பேர் பணி நீக்கம் !

ஹெரோயின் மற்றும் ஐஸ் போன்ற சட்டவிரோத போதைப்பொருட்களை உட்கொண்டதற்காக கடந்த நான்கு மாதங்களில் 17 அதிகாரிகளை இலங்கை பொலிஸ் பணிநீக்கம் செய்துள்ளதாகவும் இலங்கை பொலிஸ் பிரிவில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் அதிகாரிகளின் பட்டியலை புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு தொகுத்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் எஸ்எஸ்பி புத்திக மனதுங்க தெரிவித்தார்.

குறித்த அதிகாரிகள் பரிசோதிக்கப்பட்டு பொலிஸ் திணைக்களத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதேபோன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் பல அதிகாரிகள் மீது விசாரணைகள் நடந்து வருவதாகவும், அவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்எஸ்பி மனதுங்க உறுதிப்படுத்தினார்.

இதேவேளை வடக்கு மாகாணத்தின் பல நகர்ப்புற பாடசாலை மாணவர்கள் தொடங்கி இளைஞர்கள் வரை மிகத் தீவிரமாக போதைப்பொருள் பாவனை பரவி வருவது தொடர்பிலும் இவற்றை கட்டுப்படுத்த வடக்கு மாகாண பொலிஸார் பாராமுகமாக செயற்படுவதாகவும் பல தரப்பினரும் குற்றச்சாட்டி வருகின்றனர்.

நிறைவெறியில் தள்ளாடும் இலங்கை பொலிஸ் அதிகாரிகள் – இடமாற்றம் போதுமா?

நிறைவெறியில் தள்ளாடும் இலங்கை பொலிஸ் அதிகாரிகள் – இடமாற்றம் போதுமா?

இரு நாட்களுக்கு முன்பாக, கிளிநொச்சி ஏ9 பிரதான வீதியில் அம்மாச்சி உணவகத்திற்கு முன்பாக உள்ள பாதசாரி கடவையில் வீதியின் மறுபக்கத்திற்கு கடக்க முற்பட்ட வயோதிப பெண் ஒருவரை உந்துருளியில் பயணித்த பொலீஸார் மோதியத்தில் தலையில் படுகாயமடைந்த பெண் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். உந்துருளியில் பயணித்த இரண்டு போலீஸாரும் அதிக மது போதையில் காணப்பட்டனர். அவர்கள் பயணித்த உந்துருளியில் மதுபானங்கள் இருந்தன என தகவல்கள் வெளியாகியிருந்தன.

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக யாழில் குடி போதையில் சிவிலில் வந்த பொலிஸார் போட்ட ரவுடித்தனம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

வரகாபொல, தொலங்கமுவ பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றின் மீது பொலிஸ் கெப் வண்டியால் மோதிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற குற்றத்திற்காக உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டபோது சந்தேகநபரான உப பொலிஸ் பரிசோதகர் மதுபோதையில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

அண்மையில் பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரிகள் சிலர் மது போதையில் உறங்குவது போன்ற காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பாரிய சர்ச்சையா மாறியிருந்தது. எனினும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்திருந்தார்.

இதேவேளை பொலிஸ் அதிகாரிகள் சட்டத்துக்குப் புறம்பான வகையில் செயற்படுகின்ற போது வெறுமனே இடமாற்றம் மட்டுமே தண்டனையாக வழங்கப்படுவதாக பலரும் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.

இந்த வருடத்தில் மட்டுமே பொலிஸ் அதிகாரிகளின் நடத்தைக்கு எதிராக மொத்தம் 11,450 புகார்கள் பதிவு !

பொலிஸ் அதிகாரிகளின் நடத்தைக்கு எதிராக மொத்தம் 11,450 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

இந்த வருடத்தில் இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

பொலிஸாருக்கு எதிரான 9,774 பொது புகார்கள் 1960 ஹொட்லைன் எண் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

 

இதேவேளை, சுமார் 1800 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

 

ஆணைக்குழுவின் கூற்றுப்படி, சந்தேக நபர்களுக்கு எதிராக பலாத்காரத்தைப் பயன்படுத்துதல், பொது மக்களிடமிருந்து புகார்களை ஏற்றுக் கொள்ளாமை மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகளை தவறாகப் பயன்படுத்துதல் போன்றவை புகார்களில் அடங்குகின்றன.

 

1960 என்ற தொலைபேசி இலக்கமானது 24 மணி நேரமும் செயற்படுவதாகவும், எனவே பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பான எந்தவொரு விடயம் தொடர்பிலும் பொதுமக்கள் உடனடியாக முறைப்பாடு செய்ய முடியும் எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.