இலங்கை போக்குவரத்து சபை

இலங்கை போக்குவரத்து சபை

யாழ்ப்பாணத்தில் தொடரும் அரச பேருந்து சாரதிகளின் கவனயீனமான செயற்பாடு – பாடசாலை மாணவன் விபத்தில் பலி !

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிாிழந்துள்ளார்.

 

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதியதில் குறித்த மாணவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

 

சம்பவத்தில் கல்வி பொதுத்தராதர உயா்தரத்தில் கல்வி பயிலும் மாணவனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடா்பிலான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளின் சாரதிகளின் கவனயீனத்தால் A9 சாலைகளில் அண்மையில் அதிகமான விபத்துக்கள் ஏற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

மது போதையில் பயணிகள் பேருந்தை செலுத்தி சென்ற இ.போ.ச சாரதி கைது !

மது போதையில் பயணிகள் பேருந்தை செலுத்தி சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி மற்றும் நடத்துனர் புளியங்குளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (11) வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்றில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த பேருந்தினை செலுத்திய சாரதி மதுபோதையில் இருந்துள்ளார்.

சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர் புளியங்குளம் பகுதியில் மாலை 6 மணியளவில் குறித்த பேருந்தை மறித்து சாரதியை பரிசோதித்துள்ளனர். அதன்போது சாரதி மதுபோதையில் இருந்ததையடுத்து அவரை கைது செய்துள்ளனர்.

பேருந்தை புளியங்குளம் காவல் நிலையத்திலும் சாரதி மற்றும் நடத்துனர் இருவரையும் பரிசோதனை செய்வதற்காக வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.