ஊழல் ஒழிப்பு அணி வன்னி

ஊழல் ஒழிப்பு அணி வன்னி

அர்ச்சுனா: பெண்களின் நிர்வாணத்தில் இருந்து ஹோமோபோபியா வரை !

அர்ச்சுனா: பெண்களின் நிர்வாணத்தில் இருந்து ஹோமோபோபியா வரை !

ஊழல் ஒழிப்பு அணி வன்னி, வடக்கு புலனாய்வு, ஊர்க்குருவி, யாழ்ப்பாண புலனாய்வு, மயிர் புலனாய்வு, மட்டை புலனாய்வு மற்றும் மண்ணாங்கட்டி புலனாய்வு என இன்ன பல போலி முகநூல் கணக்குகளில் ஒளிந்திருக்கும் கோழைகளின் கொட்டத்தை என்பிபி அரசாங்கம் உடனடியாக அடக்க வேண்டும். ஓரின சேர்க்கையாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் சட்டங்களை ஆளும் என்பிபி அரசாங்கம் இயற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சமூக வலைத்தளம் ஊடாக பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இப்படியான பதிவுகளை போலி முகநூல் கணக்குகளை இயக்குபவர்கள் ஓரினசேர்க்கையை சட்டபூர்வமாக அங்கீகரித்த நாடுகளிலேயே வாழ்கின்றனர். அவர்களுக்கு துணிவு இருந்தால் தமது முகங்களை காட்டி சொந்த முகநூல் கணக்கில் வந்து பதிவுகளை இட வேண்டும். அப்போது அவர்கள் வாழும் நாடுகளிலேயே அதற்கான வரவேற்பை பெறுவார்கள். கம்பி எண்ணுவார்கள். அது மட்டுமல்ல இவர்களது பிள்ளைகளும் குடும்ப உறுப்பினர்களுமே இவர்களைத் துரத்திவிடுவார்கள்.

ஊழல் ஒழுப்பு அணி வன்னி “ஓரினசேர்க்கை கழுதைகளை அடையாளம் காட்டி கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் பதிவையும் ஒரு சிலர் பகிர்ந்தும் ஆதரித்தும் கருத்திட்டும் உள்ளனர். எல்ஜிபிரிகியு (LGBTG) சமூகத்தினரை மிக இழிவாகவும், அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தலும் விடப்பட்டுள்ளது. பகிரங்கமாக இவ்வாறான கொலை அச்சுறுத்தல் விடுவதை இலங்கை அரசாங்கம் சாதாரணமாக கடந்து செல்ல முடியாது.

ஆரம்பத்தில் ஊழலை வெளிப்படுத்துகிறோம் என ஆரம்பித்து பெண்களின் நிர்வாணத்தை வெளியிட்டு கீழ்த்தரமான பிரபல்யம் தேடிய போலி முகநூல் கணக்குகள், இப்போது ஓரினச் சேர்க்கை வெறுப்பாகவும் பரிணமித்துள்ளது. பெண்கள் மீதான கருத்தியல் ரீதியான வன்முறையும் தொடர்கின்றது. இதுவும் யாழ்ப்பாண ஆண் மையவாத கருத்தியலின் நீட்சியாகவே தான் பார்க்க வேண்டியுள்ளது. சமூக ஊடகங்களில் துலங்கும் பெண்களை ஒடுக்கும் முனையும் இந்த போலி முகநூல் கணக்குகளும் அவற்றின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆண்களும் சீழ்பிடித்த பழமைவாத அழிவுச் சமூகத்தின் எச்சங்களேயாகும்.

மனவக்கிரமும் உளவியல் சிக்கல்களுமுடைய இந்த ஆண்களையும் இவர்களை ஆதரிக்கும் ஒரு சில பெண்களையும் அடையாளங் கண்டு விலக்குவதன் மூலமே ஆரோக்கியமான முற்போக்கான தமிழ்ச் சமூகத்தை வளர்த்தெடுக்கலாம். ஈழத்தமிழர்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடிய இனம். அந்தவகையில் எல்ஜிபிரிகியூ (LGBTG) சமூகத்தினர் சந்தித்து வருகின்ற ஒடுக்குமுறைகள் மற்றும் வன்முறைகள் எதிராக குரல் கொடுக்க வேண்டியது அவசியமானதாகும். துணிவோடு வெட்கமின்றி பிற்போக்குத்தனமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான ஹோமோபோவியோக் கருத்துக்களை பரப்புவர்களை சட்டத்தின் முன் நிறுத்த இலங்கை அரசாங்கம் சட்டம் கொண்டு வர வேண்டும். அதன்மூலம் எல்ஜிபிரிகியூ சமூகத்தினரின் நலன்கள் மற்றும் உரிமைகளை பாதுகாக்கப்பட வேண்டும்.

ஒட்டிசுட்டானில் பெண்ணுக்கு விழுந்த அடி அர்ச்சுனாவுக்கும் தமிழ்அடியானுக்கும் விழ வேண்டியது!

ஒட்டிசுட்டானில் பெண்ணுக்கு விழுந்த அடி அர்ச்சுனாவுக்கும் தமிழ்அடியானுக்கும் விழ வேண்டியது!

தமிழ்ப்பெண்களின் மீது அதிகரித்திருக்கிற வன்முறைகளின் உச்சகட்டம் ஒரு தமிழ் எம்பி அர்ச்சுனா இராமநாதன் பாராளுமன்றத்தில் ஒரு தமிழ்ப் பெண்ணை “ விபச்சாரி “ என்று சொன்னதாகும்.

அந்த வெட்டகக்கேடான செயலை கண்டிக்காத மற்றைய தமிழ்த் தேசியம் பேசும் அரசியல் வாதிகளும் எம்பிக்களும் என ஒரு மரத்துப்போன சமூகமே வேடிக்கை பார்த்தது. போதாக்குறைக்கு பெண்களின் நிர்வாணப் படங்கள் மற்றும் வீடியோக்களை “ ஊழல் ஒழிப்பு அணி வன்னி “ என்ற பெயரில் பதிவிட்ட போதும் அதனை வரவேற்ற தமிழ்அடியான் என்ற ரஜீவன் ராமலிங்கம் போன்றவர்களுமே “ ஒட்டிசுட்டான் “ சம்பவத்திற்கு பொறுப்பானவர்களாவார்கள்.

பாராளுமன்றம் போய் விபச்சாரி என்று சொன்ன எம்பி அர்ச்சுனாவிடம் நியாயம் கேட்க சாளினியின் குடும்ப ஆண்கள் யாரும் முன்வந்திருந்தால் நிலமை என்னவாகியிருக்கும் யோசித்து பார்க்க வேண்டும்.மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பிரிவில் பணியாற்றிய இரு பெண்களுக்கிடையிலான முரண்பாட்டில் , தனது மனைவிக்காக தலையீடு செய்த கணவன் , பொல்லுக்கட்டுடன் வந்து சம்பந்தப்பட்ட பெண்ணை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். சண்டை சச்சரவுகளில் வார்த்தை தடிக்கும் போது மனிதர்கள் வார்த்தைகளை சிதற விடுவது ஒன்றும் புதிதில்லை. ஆனால் இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் உண்மைத் தன்மைக்கு அப்பால் சட்டத்தை கையில் எடுக்கும் துணிவை யார் கொடுத்தது? . தாக்குதலை மேற்கொண்ட நபர் தன்னுடைய மனைவி இன்னாரா இன்னாரா? என்று கேட்டு அடிக்கிறார். இப்படியான இழிச் செயலை செய்ய ஒரு நபரை தூண்டியது வேறு யாருமல்ல, இந்த சமூகம் தான். குறையறிவுடையவர்கள் சமூகத்தில் கொட்டும் அபத்தமான கருத்துக்கள், எண்ணங்கள் மற்றும் செயல்கள் தான் இப்படியான பரிதாபமான சம்பவங்களை தோற்றுவிக்கின்றன.

சமீபத்தில் கூட ஊழல் ஒழிப்பு அணி வன்னி ஊடகவியலாளர் சங்கவியின் நடத்தை குறித்து அவதூறுகள் பரப்பியிருந்தது. சங்கவி மீதனா அந்த வசையை சங்கவியின் கணவர் பொதுவெளியில் வந்து சங்கவி உத்தமி , நான் அதை நம்புகிறேன் என உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ்அடியான் என்றழைக்கப்படும் எம்பி அர்ச்சுனாவின் ஜால்ரா ரஜீவன் ராமலிங்கம் வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இப்படியான பகுத்தறிவு அற்ற பெண்கள் விரோத “ஆண்மையை “கருத்தியல்கள் தமிழ்ச் சமூகத்தில் புரையோடிப் போய்யுள்ளன. இவை தணிக்கை குறைந்த சமூக வலைத்தளங்களினூடாக சமூகத்தில் மீள் வலியுறுத்தப்படுகின்றன. இந்த காலத்திற்கும் ஒவ்வாத காட்டுமிராண்டிக் கருத்துக்களால் கவரப்படும் ஒரு தமிழ்ச் சமூகம் வெடித்து வளர்ந்து வருகின்றது.

இவர்கள் வெறும் உணர்ச்சி கொந்தளிப்புகளால் உந்தப்பட்டு காரியங்களில் இறங்குகிறார்கள். ஊடகவியலளர் சங்கவியின் கணவர் தனது மனைவிக்கு நற்சான்றிதழ் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கும் சமூகத்தில் ஒட்டிசுட்டான் சம்பவங்கள் நடக்கும். இலங்கையில் மட்டுமல்ல ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் இப்படி நடக்கிறது. பிரான்ஸ்சில் பாரிஸில் வைத்து , ரிக்ரொக் பெண்ணான சுஜி கூல்லை’ லாச்சப்பல் வர்த்தக சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் தமிழ்க் காவாலிகள் கொஞ்சப் பேர் என கூடித் தாக்கியமை குறிப்பிடத்தக்கது. அந்த தாக்குதல் வீடியோவுக்கு புலிகள் ஆனையிறவு இராணுவ முகாமை வெற்றி கொண்ட வெற்றிப்பாடலை பின்னணி இசையாக போட்டு சமூவ வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தனர்.

“சுஜி கூல் “என்ற பெண் தாக்கப்பட்ட போது பாரிஸில் ஈழத்தமிழர்கள் எப்படி வேடிக்கை பார்த்தார்களோ அப்படியே ஒட்டிசுட்டானில் நடக்கின்றது. மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பிரிவில் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்யும் பெண்ணுக்கு கூட வேலை செய்கிறவர்கள் உட்பட யாரும் உதவ முன்வரவில்லை. அடியின் கொடூரம் தாங்காது கதறும் பெண்ணிடம் மன்னிப்பு கேளடி என இன்னுமொரு பெண்மணியும் ஆணும் அறிவுறுத்துகிறார்கள். இன்னும் பலர் மறிப்பமா? வேண்டாமா ? என வாகனத்திற்குள் இருந்து கலந்துரையாடுகிறார்கள். வேறுயாரோ நபர்கள் நடப்பதை வீடியோ எடுக்கிறார்கள். வீடியோ காட்சியின்படி தாக்குதலில் ஈடுபடும் நபர் தனது மனைவி இன்னாரா? இன்னாரா?
கேட்டு அடிக்கிறார் .

அதாவது தமிழ் அடியான் ரஜீவன் ராமலிங்கம் ஆலோசனைப்படி தனது மனைவிக்கு நற்சான்றிதழ் கொடுக்கிறார். இதேமாதிரியே பாரிஸில் தாக்கப்பட்ட சுஜி கூலிடம் ரிக்ரொக்கில் தமிழீழம் பிடிக்க புறப்பட்ட நபர் ஒருவர் என்னுடைய அம்மா இன்னாரா? இன்னாரா? என்று கேட்டு அடிக்கிறார்.

பெண் சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகளை கடும் கண்காணிப்புடன் பாதுகாக்கும் புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து கொண்டிப்பவர்களே பிரான்ஸில் தமிழ்ப் பெண்கள் மீது வன்முறையில் ஈடுபடுகிறார்கள். புலம்பெயர் நாடுகளில் பெரும்பாலான ஈழத்தமிழர்கள் மேற்கத்தைய சாராயத்தையும் , உணவையும் மற்றும் நவநாகரீக உடையையும் தான் கற்றுக் கொண்டுள்ளார்கள். மேற்கத்தைய நாடுகளின் முற்ப்போக்கு கருத்துக்களான பாலினச் சமத்துவம், சகோதரத்துவம், சாதியற்ற சமூகம் , பல்லினச் சமூக ஒழுங்கமைப்புக்கள் என எவ்வளவோ விடயங்கள் இருக்கின்றன. அவற்றைப் படிக்கவில்லை.

இலங்கையைப் பொறுத்தவரை போருக்குப் பிந்திய ஈழத்தமிழர் வாழ்வியல் மாறிவிட்டது. இதனை ஊடகவியலாளர் மற்றும் சூழலியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் இவ்வாறு தனது முகநூலில் கருத்துப் பதிவிட்டுள்ளார். “ சட்டவிரோதிகளுக்கு இருக்கும் சட்ட பாதுகாப்பும் செல்வாக்கும், அதனை தட்டிக்கேட்பவர்களுக்கு இன்மையே வேடிக்கை பார்ப்பவர்கள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது “ என்கிறார்.


கடந்த வருடம் தமிழ்ச்செல்வன் ஏ9 வீதியில் வைத்து கறுப்பு வாகனத்தில் வந்தவர்களால் தாக்கப்பட்டு கடத்திச் செல்ல முற்பட்ட போதும் மக்கள் ஒட்டிசுட்டானில் நடந்தது போன்று வேடிக்கை பார்த்தனர் என வேதனையுடன் பதிவு செய்துள்ளார். சமூகத்தின் இந்த மனப்பாங்கு ஆபத்தானது. ஏன் ?இந்த சமூகப் பிரக்ஞை அற்ற மாற்றம். நீண்ட காலமாக வன்முறைகளை மட்டுமே பார்த்து வந்த சமூத்தில் “ வன்முறைகளுக்கு இசைவாக்கம்” அடைந்து விட்டார்களா? அல்லது யுத்தம் முடிந்தும் இராணுவ முற்றுகையில் ஆயுத முனையில் கண்காணிப்பில் அவர்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளமையா? என கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகிறது.

ஒட்டிசுட்டானில் தாக்குதலுக்குள்ளான பெண்ணுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். பெண்கள் மீதான வன்முறை எந்த வடிவமாக இருந்தாலும் கண்டிக்கப்பட வேண்டும். இந்த விடயத்தில் மகளிர் விவகார அமைச்சு உரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

வன்முறைக்கு பின்னான வாழ்க்கையை எதிர்கொள்ள பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உளவள ஆலோசனை மற்றும் சமூக பாதுகாப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். ஒட்டிசுட்டான் பெண், ரிக்ரொக் சாளினி, ஊடகவியலாளர் சங்கவி போன்றோருக்கு உரிய உதவிகளை வழங்க பெண்கள் உரிமைகளுக்காக போராடும் அமைப்புகள் முன்வர வேண்டும்.

ஒட்டிசுட்டான் பெண் பணியாற்றும் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் இந்தவிடயத்தில் கண்டிக்கப்பட வேண்டும். தன்னுடைய நிறுவன ஊழியரை பாதுகாக்கத் தவறியுள்ளது. சம்பந்தப்பட்ட பிணக்கில் தாக்குதல் மேற்கொண்ட நபரின் மனைவி மீது விசாரணைகளை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்குதலுக்குள்ளான பெண் வேலைக்கு அணியும் சீருடையில் உள்ளார். அவர் பணியிலிருக்கும் போதே அவர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். எனவே சம்பந்தப்பட்ட நிறுவனம் தாக்குதலுக்குள்ளான பெண்ணுக்கு உரிய இழப்பீடு மற்றும் நிவாரணத்தை வழங்க வேண்டும். வேலையிடங்களில் பணியாளர்களிடையே மனஸ்தாபங்கள் பிணக்குகள் வரும் போது மூன்றாம் நபர் பணியிடத்திலேயே தலையீடு செய்து சுமூகமாக தீர்க்கும் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா , காலாச்சார காவலர்கள் என சமூக ஊடகங்களில் வாயாடுபவர்கள் மற்றும் சமூகம் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். ஒட்டிசுட்டானில் பொல் கொண்டு பெண்ணைத் தாக்கிய நபர் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்திலுள்ள பெண்களின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
ஒட்டுசுட்டான் பெண் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலில் பூச்சியம் சகிப்புத் தன்மை கூட கடைப்பிடிக்கப்படக் கூடாது. இந்த விடயத்தில் பரப்பப்படும் காணொளியில் பெண்ணின் தனிநபர் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். அவருடைய ஆள் அடையாளம் மறைக்கப்படுதல் வேண்டும்.

விபச்சாரி மற்றும் பாலியல்த் தொழிலாளி என்ற முத்திரை குத்தல்களை எதிர்கொள்பவர்கள் அவமானம் அடையத் தேவையில்லை. இவ்வாறான பிரச்சினைகளை வன்முறையால் அல்ல அறிவார்ந்த ரீதியில் எதிர்கொள்ள வேண்டும். அந்தவகையில் பெண் உரிமைகளுக்காக குரல் கொடுப்போர் சமூக ஊடகங்களில் போராடுவது மட்டுமன்றி களத்தில் பணியாற்ற வேண்டும் என்பதே சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.

சைபர் பொறுக்கிகள்: எம்பி அர்ச்சுனா, ஊழல் ஒழிப்பு அணி வன்னி, அர்ச்சுனா அடியான் , Ana Than ( அனா தன்)

தமிழ் சமூகத்தில் பொதுவெளியில் முன்னேறி வரும் பெண்களை சாதாரணர்களையும் கூட இலகுவாக வீழுத்துவதற்கு ஆணகள் கையில் எடுக்கும் பாரிய ஆயுதம் தான் நிர்வாணம் சார்ந்த வசையாடல்கள். இதனை பா உ அர்ச்சுனா போன்ற மருத்துவ கலாநிதிகளும் ஊழல் ஒழிப்பு அணி வன்னி, லண்டன் தமிழ் அடியான், பாதிக்கப்பட்ட ஆண்கள் கட்சி சுண்ணாகம் போன்ற கல்லாநிதிகளும் வேறுபாடின்றி செய்கின்றனர். அதனைச் செய்ய முடியாதவர்கள் இவ்வாறு செய்பவர்களுக்கு லைக் போட்டு சிற்றின்பம் காண்கின்றனர்.

ர – தேசம்

பா உ அர்ச்சுனாவுக்காகக் களமிறங்கியுள்ள களமிறக்கப்பட்டுள்ள ஊழல் ஒழிப்பு அணி வன்னி என்ற முகமூடி அணிந்த ஆண்ணாதிக்க கருத்தியல் கொண்ட மற்றுமொருவர் தான் ‘Ana Than’, என்ற முகம்மூடிய முகநூல் நபரால் உருவாக்கப்பட்ட “பாதிக்கப்பட்ட ஆண்கள் கட்சி – சுண்ணாகம்” என்ற முகநூல் பக்கம். இது கடந்த ஆண்டு 2024 லில் தேசம்நெற் பார்வைக்கு கொண்டுவரப்பட்டது.

சட்டத்தரணி சுவாஸ்திகா, ஊடகவியலாளர் சங்கவி, ரிக்ரொக் பெண் சாளினி ஆகியோருக்கு எதிராக அவர்கள் விபச்சாரிகள் என்ற வசையாடல் பரப்பப்பட்டது. பா உ அர்ச்சனா, கௌசல்யா நரேன், ஊழல் ஒழிப்பு அணி வன்னி, அர்ச்சுனா அடியான் ஆகியோர் கூட்டாக இணைந்து இந்தாக்குதலை மேற்கொண்டனர். இதே பாணியில் சாளினியின் நிர்வாணப்படங்கள் பரப்பப்பட்டது போல் அனா தன் என்ற முகமூடியோடு முகநூலில் உலாவரும் யோகா என்ற யாழ் சங்கானையைச் சேர்ந்தவரும் தனது காதலி அல்லது மனைவியின் அரை நிர்வாணப்படங்களை முகநூலில் வெளியிட்டு இருந்தார். குறித்த நபர் லண்டன் லூட்டனில் வாழ்பவர்.

Ana Than ஆல் 2024 ஏப்ரல் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள குறித்த முகநூல் கணக்கில் திட்டமிட்ட வகையில் ஒரு பெண் மீதான தங்களுடைய வக்கிரத்தை கொட்டித் தீர்ப்பதற்காக அந்த கணக்கு உருவாக்கப்பட்டுள்ளதை தெளிவாக காண முடிகின்றது. நேரடியான கணக்கில் இருந்து பிரச்சினையை வெளிப்படுத்த தைரியம் இல்லாத இந்த ஆண்கள் குழு ஒன்று போலி கணக்கில் இருந்து பெண் ஒருவரின் நிர்வாணத்தை தாக்கி தங்களை வீரர்களாக காட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதனையே ஊழல் ஒழிப்பு அணி வன்னியும் செய்கின்றது.

இதில் ஆகப்பெரிய கொடுமை என்னவென்றால் அந்த பெண்ணை நிர்வாணம் சார்ந்து கொச்சைப்படுத்தும் குறித்த பேஸ்புக் கணக்கில் சுமார் 4000 வரையானவர்கள் நட்பு பட்டியலில் உள்ளனர். Ana Than என்ற முகநூல் கணக்கிலுள்ளவர் குறித்த பெண் தொடர்பான நிர்வாண படங்களை அதிகம் பதிவேற்றி பகிர்ந்துள்ளார். இதே நேரம் தேசம் ஜெயபாலன் குறித்த முகநூல் பக்கத்தில் அதிகமான பதிவுகளை இட்ட குறித்த கணக்கில் பின்தொடர்பவர்களாக உள்ள Ana Than மற்றும் Thabesan Krishna ஆகியோருடன் தொடர்பு கொள்ள முற்பட்டும் பதில் ஏதும் கிடைக்கவில்லை.

Ana Than என்ற பெயரில் முகநூலைக் கொண்டுள்ள நபரே குறித்த பெண் பற்றிய மோசமான பதிவுகளை வெளியிட்டுள்ளார். இவர் தான் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் பணியாற்றுவதாகக் கூறி இட்ட பதிவுக்கு 93 பேர் லைக் இட்டுள்ளனர். குறித்த நபர் தான் சுண்ணாகத்தைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இத்தகவல்கள் உண்மையா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் அனா தன் என்ற இந்நபர் குறித்த பெண்ணை நன்கு அறிந்தவராக உள்ளார். அப்பெண் மீது காதல் கொண்டது போல் வசனங்கள் பாடல்கள் என்பவற்றை பெப்ரவரி மார்ச் மாதத்தில் வெளியிட்டு பதிவிட்டுள்ளார். அதன் பின் 2024 ஏப்ரல் மாதம் முதல் அப்பெண் பற்றி தாறுமாறான பதிவுகளை வெளியிட்டு வருகின்றார். பாதிக்கப்பட்ட ஆண்கள் கட்சி சுண்ணாகம் என்ற முகநூல் பற்றிய விபரம் அந்நூல் திறக்கப்பட்டதும் இவருடைய முகநூல் தளத்திலேயே வெளியிடப்பட்டுள்ளது.

சட்டத்தரணி சுவஸ்திகா மீது அர்சுனா மோசமான விமர்சனம் - Jaffna Muslim

இதுவே சட்டத்தரணி சுவாஸ்திகா, ஊடகவியலாளர் சங்கவி, சாளினி விடயத்திலும் நடந்துள்ளது. இவர்களுடைய முன்னாள் காதலர்கள், இவர்களை ஒரு தலையாகக் காதலித்தவர்கள் தங்களுடைய உறவு முறிந்ததும் அல்லது தங்களுடைய நோக்கங்களுக்கு அப்பெண்கள் உடன்படவில்லையென்றதும் முகமூடி முகநூல் கணக்கை ஆரம்பித்து அப்பெண்களின் அந்தரங்க விடயங்களைப் பதிவிடுவதும் அல்லது அவ்வாறு செய்யப் போவதாக மிரட்டி தங்கள் நோக்கங்களுக்குப் பணிய வைப்பது. இதனையே பா உ அர்ச்சனா, கௌசல்யா நரேன், ஊழல் ஒழிப்பு அணி வன்னி, அர்ச்சுனா அடியான் ஆகியோர் தொடர்ந்தும் செய்து வருகின்றனர். இவ்வாறாக நூற்றுக்கணக்கான பெண்கள் இந்த ஆணாதிக்க வெறியர்களால் உளவியல் ரீதியில் கொடுமைப்படுத்தப்படுகின்றனர்.

இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால் பாதிக்கப்பட்டவராகவும் ஒரு சட்டத்தரணியாகவும் பெண்ணாகவும் இருக்கும் கௌசல்யா நரேன்இ தமிழ் தலிபான்களாகச் செயற்படும் பா உ அர்ச்சுனா, ஊழல் ஒழிப்பு அணி வன்னி, அர்ச்சுனா அடியான் மற்றும் Ana Than போன்றவர்களோடு இணைந்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விபச்சாரப்பட்டம் வழங்குகின்றார்.

Ana Than முகநூல் தளத்தில் 3200 பேர் நட்பாக உள்ளனர். இவர்களில் பலரும் இவருடைய முகநூலைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் பலநூறு பேர் மோசமான பதிவுகளைப் பார்த்துவிட்டு, அப்பெண்ணை அரை நிர்வாணக்கோலத்தில் அனா தன் எடிட் செய்த படங்களை போட அதற்கும் லைக் கொடுத்துள்ளனர். ராம் சன்ட் என்பவர் மட்டும் கண்டித்து ஒரு பதிவை இட்டதைப் பார்க்கக் கூடியதாக இருந்தது. இந்த நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான ஈழத் தமிழ் ஆண்களின் ஈனத்தனமும் பாலியல் வக்கிரமும் ஆண்களுக்கே அவமரியாதையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

இவர்களுக்கு தாய், சகோதரிகள், பெண் பிள்ளைகள் உறவு எதுவும் இல்லாமல் இவர்கள் வானத்தில் இருந்தா குதித்தார்கள் என்று கேள்வியை எழுப்புகின்றது. இந்த மனநோயாளிகளை யாரோ ஒரு அப்பாவிப் பெண் மணம் முடித்து தன் வாழ்க்கை அழிக்கப் போகின்றாளே என்ற அச்சம் என் போன்ற சகோதரர்களுக்கும் பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கும் ஏற்படுகின்றது என்கிறார் இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் சகோதரன்.

என்னுடைய பெயரை நான் சொல்லிவிடுவேன் ஆனால் அடுத்தநாள் என் தங்கையை விபச்சாரி என்று பாராளுமன்றத்தில் எமது பா உ அறிவித்துவிடுவார். ஊழல் ஒழிப்பு அணி ஒரு பேகடகான நிர்வாண உடலை வெளியிடும். தமிழ் அடியான் உங்கள் தங்கையின் கணவரை வரவழைத்து உங்கள் தங்கை நல்லவள் வல்லவள் என்று சொல்லச் சொல்லுங்கள் என்று பதிவிடுவார் என்றார். சட்டத்தரணியும் மனிதஉரிமை வாதியுமான சுவாஸ்திகாவையே விபச்சாரி பல ஆண்களோடு திரிகிறார், அவரை உயிரோடு விட்டதே தவறு என்று சொல்லும் பா உ அர்ச்சுனாவும் அவருக்கு பொழிப்புரை வழங்குகிறார் சட்டத்தரணி தங்கா கௌசல்யா நரேன். நிலைமை இப்படி இருக்கையில் சாதாரணர்கள் எம்மாத்திரம்.

பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் அதிகம் உள்ள தாயகத்தில் ஈழத்துப் பெண்களின் நிலைமை இதுவென்றால். புலம்பெயர்ந்த ஈழத்து ஆண்கள் சிலர் ஈழத்தில் வாழும் சில ஆண்களிலும் பார்க்க மோசமான காட்டுமிராண்டிகளாக உள்ளதை நாங்கள் ஏற்கனவே பார்த்துள்ளோம்.

சுஜிகூல் விடுதலைப் புலிகளின் தலைவரை மதித்தே அவருடைய படத்தை தன்னுடைய அறையில் மாட்டியிருந்தார். ஆனால் சுஜிகூலைத் தாக்கிய அக்கா கடை உரிமையாளர் முரளி மற்றும் பதினைந்துவரையான ஈழத்து ஆண்கள் உட்பட முப்பதினாயிரம் வரையானோர் ரிக்ரொக்கில் அப்பெண்ணின் மாலை மயக்கத்தில் இருந்துள்ளனர். இந்த ஈழத்து ஆண்கள் சுஜிகூலை கொழும்பாள், வடக்கத்தையாள் என்றெல்லாம் பிரதேசவாதத்தை இழுத்து அவருடைய பெண்ணுடல் சார்ந்த வசையாடல்களைப் பொழிய சுஜிகூல் அவர்களுடைய வசையாடல் மொழியிலேயே பதிலடி கொடுத்தார். அந்த உரையாடல்களில் பாலியல் வக்கிரத்துடன் தாங்கள் பேசியவற்றை நீக்கிவிட்டு சுஜிகூலின் வசையாடலை மட்டும் பதிவிட்டு தங்களை ஆனையிறவுத் தாக்குதலில் இருந்து திரும்பிய மாவீரர்களாக படம் காட்டினர் லாச்சப்பல் அக்கா கடைச் சருகு புலிக் கும்பல்.

சில மாதங்களுக்கு முன் யாழில் ஒரு ரவுடிக்கும்பல் ஒரு இளம் பெண் இன்னுமொருவரை காதலிக்கின்றார் என்று தெரிந்தும் அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது தெரிந்தும் அவரைப் பலாத்காரப்படுத்தி காதலிக்க வைக்க முயன்றுள்ளனர். இறுதியில் அக்கும்பல் வன்முறையில் இறங்கி பொலிஸ் அழுத்தங்களை ஏற்படுத்தி அக்காதல் தம்பதியின் திருமணத்தை குழப்புவதற்கு முழு முயற்சியும் எடுத்தனர். இறுதியில் அப்பெண் பற்றி முகநூலில் வசையும் பாடினர். இத்தனைக்கும் அப்பெண்ணின் தந்தை ஒரு நீதிபதி, முற்போக்குத் தளத்தில் நன்கு அறியப்பட்ட சமூக செயற்பாட்டாளர். ஒரு ஆண் நினைத்தால் குறிப்பாக ஈழத்து ஆண், எதனையும் செய்யலாம் என்ற நிலையில் தான் ஈழத்துப் பெண்கள் தாயகத்திலும் புலத்திலும் வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலையுள்ளது.

மேலும் ஆண்கள் தங்களுக்குள் பிரச்சினைகள் வருகின்ற போது அவர்கள் மோதிக்கொள்வதை விடுத்து மறு தரப்பினரின் குடும்பப் பெண்களின் படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பாலியல் வக்கிரத்துடன் எழுதுவதை தினம் தினம் காண்கின்றோம்.

குறித்த பெண்கள் சரியானவரோ? பிழையானவரோ? என்பது தேவையற்ற விவாதம். இங்கு தேவையான கேள்வி: இவர்கள் யார்..? யாரோ ஒரு பெண்ணை பொதுவெளியில் வைத்து நிர்வாணப்படுத்தவும் – அந்த பெண்ணுடைய தொலைபேசி இலக்கத்தை பகிரவும் – வீட்டு விலாசத்தை பகிரவும் – குடும்பத்தை பற்றி பொதுவெளியில் பேசவும் யார் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது. ஆண் என்பதைத்தவிர எவ்வித மனிதத்துவ விழுமியங்களுமற்ற இவர்கள் ஈழத்தமிழ் சமூகத்தின் தீவிரமாகப் பரவிவரும் ஒரு புற்றுநோய். ஈழத் தமிழ் பெண்க்ளை அவர்கள் தாயகத்தில் வாழ்ந்தாலென்ன புலத்தில் வாழ்ந்தாலென்ன இவ்வாறான ஈழத்து பாலியல் வக்கிரம் கொண்ட சில ஆயிரம் ஆண்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டியுள்ளது.

யாரோ ஒரு பெண் தானே என் கடந்து விட முடியாது. ஏனெனில் இது தான் நாளை நமது வீட்டு பெண்களுக்கும் நடக்கும். யாரோ ஒரு ஆண் நினைத்தால் ஒரு பெண்ணை பொதுவெளியில் எத்தனை தரக்குறைவாகவும் பேசி விடலாம் என்ற தைரியத்தை குறித்த பதிவுக்கு லைக் போட்ட 400 வரையான முதெகெழும்பு அற்ற ஆண்களும் வழங்குகிறார்கள். இங்கு பெண் யார் என்பது பற்றிய விபரங்கள் தேவையற்றது. ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி ஒருவரை சமூக வலைத்தளங்களில் தரக்குறைவாக நிர்வாணம் சார்ந்த வசையாடல்களால் விவரிப்பது என்பது உங்களுடைய பக்குவப்படாத மனநிலையை அது காட்டுவதுடன் யார் யாருக்கு எதிராக அதை செய்தாலும் தவறு தான்.

அண்மைய காலங்களில் இலங்கையில் மேற்குறித்த பெண்ணுக்கு நடந்தது போன்றுதான சமூக வலைத்தளங்களில் நடக்கும் துஷ்பிரயோகங்கள் இலங்கையில் சடுதியாக அதிகரித்து வருவதையும் பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர். கிட்டத்தட்ட ஒரு லட்சம் வரையான முறைப்பாடுகள் கடந்த ஆண்டு பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான இணைய சமூக வலைத்தள துஷ்பிரயோகம் தொடர்பில் பதிவாகியுள்ளதாக அறிய முடிகிறது.

 

ஊழல் ஒழிப்பு அணி வன்னி’ பின்னாலுள்ளவர்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும் ! பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நட்டஈடு வேண்டும் !

ஊழல் ஒழிப்பு அணி வன்னி’ பின்னாலுள்ளவர்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும் ! பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நட்டஈடு வேண்டும் !

‘ஊழல் ஒழிப்பு அணி வன்னி’ முடக்கப்படக் கூடாது. பின்னாலுள்ளவர்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும். சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டும்.

“ஊழல் ஒழிப்பு அணி வன்னி“ என்கின்ற பேஸ்புக் வலைத்தள கணக்கு தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது. ஆரம்பத்தில் நியாயமான முறையில் மக்களின் பிரச்சினைகளை பேசியதிலும், ஊழல் குற்றவாளிகளையும் பகிரங்கப்படுத்தியதிலும், அரசியல்வாதிகளின் ஊழல்களை பகிரங்கப்படுத்தியதிலும் அதன் பங்களிப்பு பாராட்டும் விதத்திலிருந்தது. ஆனால் மிகக்குறுகிய காலத்தில் அத்தளம் யாழ் சைவ வேள்ளாள ஆண்களின் அபிலாசைகளை நிறுவுவதற்கான தளமாக மாறியது.

வம்பன் நெற் போல ஆபாச செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஊழலையும் – மக்கள் பிரச்சினைகளையும் பேசாமல் பகிரங்கப்படுத்தாமல் தனிநபர்களின் – தனிப்பட்ட வாழ்க்கை தவறுகளை பற்றி பேசுவதிலும், காலாதிகாலமாக தமிழர்களிடம் புதைந்து போயுள்ள ஆணாதிக்க மனோநிலையில் நின்றும் தனது பதிவுகளை பகிர ஆரம்பித்துள்ளமையானது பலரிடமும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தளத்தின் உண்மை முகத்தை தேசம்நெற் ஆம்பலப்படுத்தி இருந்தமையும் இவர்களை தமிழ் தலிபான்கள் என வர்ணித்து இருந்ததும் தெரிந்ததே.

இதேவேளை குறித்த முகநூல் பக்கத்தில் என்.பி.பி கட்சியினருக்கு ஆதரவான பல பதிவுகளும் அவ்வப்போது வெளியான நிலையில், இந்த முகநூல் பக்கமானது என்.பி.பியினரால் இயக்கப்படுவதாக பலரும் குற்றஞ்சாட்டி வந்த நிலையில், ஊழல் ஒழிப்பு அணி வன்னி – எனும் பெயரில் இயங்கும் முகநூல் லைக் பக்கத்துக்கும், தேசிய மக்கள் சக்திக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.

இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், ஊழல் ஒழிப்பு அணி வன்னி எனும் பெயரில் இயங்கும் முகநூல் லைக் பக்கத்துக்கும், தேசிய மக்கள் சக்திக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இப்பக்கத்தக்கு எதிராக நீங்களும் முறைப்பாடுகளை முன்வைக்கலாம். ஊழல், மோசடிகள், அநீதிகள் இடம்பெறுமாயின் அதனை துணிவுடனும், நேர்மையுடனும் சுட்டிக்காட்டும் தைரியம் எமது தேசிய மக்கள் சக்தியினருக்கு உள்ளது. எனவே, போலி முகநூல் ஊடாக உலாவ வேண்டிய எவ்வித தேவைப்பாடும் எமக்கு கிடையாது. போலிகளுக்கு பதிலளித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. எனினும், ஏதேனும் மோசடிகள் இடம்பெறக்கூடும் என்பதாலேயே இந்த முன்னெச்சரிக்கை பதிவு என தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.