எழுத்தாளர் யாங் ஹெங்ஜூன்

எழுத்தாளர் யாங் ஹெங்ஜூன்

சீனாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட அவுஸ்ரேலிய எழுத்தாளருக்கு மரணதண்டனை !

சீனாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட அவுஸ்ரேலிய எழுத்தாளர் யாங் ஹெங்ஜூனிற்கு சீனா ஒத்திவைக்கப்பட்ட மரணதண்டனையை விதித்துள்ளதாக அவுஸ்ரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனை இரண்டு வருடங்களிற்கு பின்னர் ஆயுள்தண்டனையாக மாற்றப்படலாம் என அவுஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை சீனா விவகாரங்கள் குறித்து பதிவிட்டு வந்த எழுத்தாளர் யாங் உளவு பார்த்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.

இந்நிலையில் சீனாவின் தீர்ப்பினால் அதிர்ச்சியடைந்துள்ளதாக அவுஸ்ரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அனைத்து அவுஸ்ரேலியர்களும் யாங் தனது குடும்பத்துடன் இணைவதை விரும்புகின்றனர்.

எனவே அவர் விடுதலை செய்யப்படவேண்டும் என்ற பரப்புரையை நாங்கள் நிறுத்தப்போவதில்லை என அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

முன்னர் சீனாவின் மாநில பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியாற்றிய யாங் ஜனநாயக கடத்தல்காரர் என அழைக்கப்பட்டதனால் அவரது எழுத்துக்கள் அரசாங்கத்தை நேரடியாக விமர்சிப்பதை தவிர்த்துள்ளன.

2019ஆம் ஆண்டு குவாங்சோ விமான நிலையத்தில் சீனாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைதுசெய்து இவர் தடுத்துநிறுத்தப்பட்டார்.

அதன் பின்னர் இவர் குறித்த விசாரணைகள் மூடிய கதவுகளின் பின்னால் இடம்பெற்றுள்ளதாகவும் 2021இல் இரகசிய விசாரணையும் இடம்பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது.