ஐ.சி.சி

ஐ.சி.சி

இலங்கை கிரிக்கெட் மீது விதிக்கப்பட்ட தடையை விரைவில் நீக்குவதற்கு எதிர்பார்ப்பதாக ஐ.சி.சி அறிவிப்பு !

இலங்கை கிரிக்கெட் மீது விதிக்கப்பட்ட தடையை விரைவில் நீக்குவதற்கு எதிர்பார்ப்பதாக கிரிக்கட் சம்மேளனம் அறிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட் அணிக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் நேற்று (19) வெளியிட்ட அறிக்கைகள் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று (20)  அறிவித்தலை விடுத்துள்ளது.

சர்வதேச கிரிக்கட் பேரவையின் அரசியலமைப்பின் பிரகாரம், அரசாங்கத்தின் செல்வாக்கு இன்றி ஸ்ரீலங்கா கிரிக்கட் சுயாதீனமாக செயற்படுவது அவசியமானது எனவும், அனைத்துப் பணிப்பாளர்களின் பங்குபற்றுதலுடன் கூடிய கூட்டத்தில் உரிய தீர்மானத்தை சபை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அவ்வாறானதொரு தடையை கோரியதாக அமைச்சர் முன்வைத்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ள கிரிக்கட் சம்மேளனம், குறித்த தடையை விரைவில் நீக்குவதற்கு எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு தற்போதுள்ள சட்ட நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு, ஊடகங்கள் மூலம் பொதுமக்களின் கருத்தை தாக்கி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து இலங்கை கிரிக்கெட்டின் கட்டுப்பாட்டை அமைச்சர் கைப்பற்றியதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் குற்றம் சாட்டியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் தலையீடுகள் – விசாரணைகளை ஆரம்பித்த ஐ.சி.சி !

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் தலையீடுகள் உள்ளதா..? என்பதை ஆராய்வதற்காக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பிரதித் தலைவர் இம்ரான் கவாஜா உள்ளிட்ட இரு பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர்.

குழுவின் ஏனைய உறுப்பினராக பங்களாதேஷ் துடுப்பாட்ட சபையின் தலைவர் நஸ்முல் ஹசன் உள்ளார்.

இலங்கை வந்துள்ள ஐ.சி.சி. அதிகாரிகள், விளையாட்டுத்துறை அமைச்சர், இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் உள்ளிட்ட ஏனைய தரப்பினருடன் கலந்துரையாடி விசாரணைகளை முன்னெடுத்து தகவல்கள் கண்டறிவார்.

அரசியல் தலையீடுகள் குறித்து சிறிலங்கா கிரிக்கெட் தரப்பில் இருந்து பலமுறை முறைப்பாடுகள் எழுந்ததையடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜெய்ஷா தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை ஐ.சி.சி. நியமித்திருந்தது.

இதன் பின்னர் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, ஐ.சி.சி தலைவர் கிரே பார்க்லேவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியதுடன் சிறிலங்கா கிரிக்கெட் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி சந்திப்பொன்றை மேற்கொள்ள சந்தர்ப்பமொன்றை கோரினார்.

இந்நிலையிலேயே இந்த இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. 2022ல் அரசியல் தலையீடு இலங்கை கிரிக்கெட்டில் நிரூபிக்கப்படுமாயின் ஐசிசி உறுப்புரிமை ரத்து செய்யப்படலாம்.

ஐ.சி.சி.யின் விதிகளின்படி, விளையாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் இறுதி நோக்கத்துடன் உறுப்பினர்கள் அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அதியுயர் விருது பெறுவுள்ள இன்னுமொரு இலங்கை வீரர் !

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்தன, இங்கிலாந்தின் ஜென்னெட் பிரிட்டின், தென்னாப்பிரிக்காவின் ஷோன் பொலோக் ஆகியோர் ஐ.சி.சி.யின் ஹோல் ஒஃப் ஃபேம்க்கு தெரிவாகியுள்ளனர்.

இதற்கு முன்னர் இந்த பட்டியில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார மற்றும் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஆகியோர் இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம்பிடிக்கும் மூன்றாவது இலங்கை வீரர் என்ற பெருமையை மஹேல ஜயவர்தன பெற்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பங்காற்றிய சிறந்த வீரர்களுக்கு ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் விருதை வழங்கி கௌரவித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

After Kumar Sangakkara and Aravinda de Silva, Mahela Jayawardene questioned in Sri Lanka World Cup 2011 probe - Sports News