கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

பதவி விலகுகிறார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ !

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ  பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

லிபரல் கட்சியின் அடுத்த தலைவர் தேர்வு செய்யப்படும் வரை தற்காலிக பிரதமராக தொடர்வதாக அவர் அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சர்வதேச அளவில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் கனடா பிரதமர் ட்ரூடோ, உள்நாட்டிலும் பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்.

ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக வேண்டும் என்று அவரது சொந்த கட்சியான லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களே போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

ட்ரூடோ மீண்டும் கனடா தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல், ட்ரூடோவை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, வேறு ஒருவரை நியமிப்பது குறித்தும் ஆலோசித்து வந்தனர்.

மேலும், ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்து வந்த என்.டி.பி., கட்சியும் ஆதரவை விலக்கி கொண்டது.

மேலும், அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அழைப்பு விடுத்தது.

இதேவேளை, வரவிருக்கும் அமெரிக்க நிர்வாகத்துடனான உறவுகள் உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரச்சினைகளை அவர் கையாள்வதை சுட்டிக்காட்டி, அவர் வெளியேற வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டது.

இந்த நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து இன்று ராஜினாமா செய்தார்.

கட்சித் தலைவர் பதவியுடன், பிரதமர் பதவியையும் ராஜினாமா செய்வதாக அறிவித்த அவர், புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை தானே பதவியில் நீடிப்பதாகவும் அறிவித்தார்.

வரும் 8ம் திகதி கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

கனடா செல்லவுள்ளோருக்கு புதிய சிக்கல் – ட்ரம்பின் மிரட்டலுக்கு பணிந்தது கனடா!

கனடா செல்லவுள்ளோருக்கு புதிய சிக்கல் – ட்ரம்பின் மிரட்டலுக்கு பணிந்தது கனடா!

சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் குற்றங்களை கண்காணிக்கும் பொருட்டு புதிய எல்லைப் பாதுகாப்பு விதிகளை கனடா அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் கனடாவுக்கு புலம்பெயர விரும்புவோருக்கு மேலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. கனடா, எல்லை பாதுகாப்பை வலுப்படுத்த 1.3 பில்லியன் கனேடிய டொலர்களை ஒதுக்கியுள்ளது. எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளில், ட்ரோன்கள், ஹெலிகாப்டர்கள், கண்காணிப்பு கோபுரங்கள், மற்றும் நாய்கள், குழுக்கள் பயன்படுத்தப்படவுள்ளன. மேலும், சர்வதேச சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க கூட்டு குழு உருவாக்கப்படவுள்ளது.

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் நடவடிக்கைகளைத் தடுக்காவிட்டால், கனடா மற்றும் மெக்சிகோ மீது 25 சதவீத வரிவிதிப்புகளை அதிகரிக்கப்போவதாக டிரம்ப் மிரட்டியதிலிருந்து கனடா கடும் அழுத்தத்தை சந்தித்து வருகின்றது. கனடா அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாகும் மற்றும் அதன் மொத்த ஏற்றுமதியில் சுமார் 75 சதவிகிதம் அமெரிக்காவையே சார்ந்துள்ளது. ட்ரம்ப்பால் விதிக்கப்படும் புதிய கட்டணங்கள் கனடாவின் பொருளாதாரத்திற்கு ஒரு அடியாக இருக்கலாம். இதனை சமாளிக்கும் வகையில் இந்த நடவடிக்கைகளை கனடா முன்னெடுத்துள்ளது.

கடந்த ஒக்டோபர் வரையிலான 12 மாத காலப் பகுதிக்குள் 23,000 க்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்க-கனடா எல்லைக்கு அருகில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனடாவின் புதிய விதிகள் காரணமாக கனடாவுக்கு புலம்பெயர விரும்புவோர் மற்றும் அகதி அந்தஸ்து கோருவோர் தொடர்பில் மேலும் கெடுபிடிகள் அதிகரிக்கப்படலாம். விண்ணப்பதாரர்களின் பின்புலம் மற்றும் ஆவணங்கள் கடுமையாக சரி பார்க்கப்படலாம், பொது நலனுக்காக ஆவணங்களை ரத்து செய்யும் உரிமை கொண்ட புதிய சட்டத்தால், குடியேற்றக் கொள்கைகள் இன்னும் கடுமையாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்குகிழக்கில் உள்ள தமிழர்கள் விடுதலைப்புலிகளின் ஒடுக்குமுறைகளால் அளவுக்கதிகமாக பாதிக்கப்பட்டனர் – கனடா பிரதமருக்கு இலங்கை பதில் !

முள்ளிவாய்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள அறிக்கையில் இனப்படுகொலை குறித்து குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை இலங்கை வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது.

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள கடுமையான குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் குறித்து கனடாவிலோ அல்லது உலகின் வேறு எந்த பகுதியிலோ உள்ள தகுதிவாய்ந்த அமைப்பும் புறநிலையான தீர்மானத்தை  அறிவிக்கவில்லை எனவும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தனிநாட்டிற்காக தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்திய ஆயுத பிரிவினைவாத பயங்கரவாத உள்நாட்டு போரின் இறுதிதருணங்கள் குறித்த இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் ஐக்கியநாடுகள் சபையின் பிரகடனத்திற்கு முரணாக காணப்படுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு கனடா உட்பட 33 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது எனவும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் நடந்த இனப்படுகொலை பற்றிய தவறான கதைக்கு கனடா பிரதமரின் ஒப்புதல் கனடாவில் உள்ள இலங்கை வம்சாவளியினரிடையே நல்லிணக்கத்தை சீர்குலைக்கின்றது எனவும் இலங்கையின்வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையின் அனைத்து சமூகங்களையும் சேர்ந்தவர்களும் மோதல்களால் பாதிக்கப்பட்டனர் வடக்குகிழக்கில் உள்ள தமிழர்கள் விடுதலைப்புலிகளின் ஒடுக்குமுறைகளால் அளவுக்கதிகமாக பாதிக்கப்பட்டனர் விடுதலைப்புலிகளின் ஈவிரக்கமற்ற பயங்கரவாத நடவடிக்கைகளால்  அனைத்து சமூகத்தினரும் பாதிக்கப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சு கனடா பிரதமரின் பாரபட்சமான கதை இலங்கை மோதலின் சிக்கலான யதார்த்;தத்தை புறக்கணிக்கின்றது இந்த கருத்துக்கள் இலங்கையர்கள் மத்தியில் பாதகமான விதத்தில் எதிரொலிக்கும் இலங்கையில் தேசிய ஐக்கியம் நல்லிணக்கம் முன்னேற்றத்துக்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளை சீர்குலைக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

“இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுப்பதை கனடா ஒருபோதும் நிறுத்தாது” – கனடா பிரதமர்

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கும் அத்துமீறல்களுக்கும் பொறுப்புக்கூறப்படவேண்டும் என நாங்கள் தொடர்ந்து கோருகின்றோம் மனித உரிமைகளுக்காக குரல்கொடுப்பதை கனடா ஒருபோதும் நிறுத்தாது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கறுப்பு ஜூலையின் 40வது ஆண்டை நினைவுகூர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

நாற்பது வருடங்களுக்கு முன்னர் இலங்கையெங்கும் தமிழர்களுக்கு எதிராக கொடுரமான கொலைகள் புரியப்பட்டன.இவற்றில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் உயிரிழந்து பெரும் எண்ணிக்கையானோர் காயமடைந்தார்கள் இடம்பெயர்ந்தார்கள் பாலியல்வன்முறைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

கறுப்பு ஜூலையின் கொடுமை பதற்றத்தை அதிகரித்து சில தசாப்தங்கள் நீடித்த ஆயிரக்கணக்கானோர் மரணமாகிய ஆயுதமோதலாக மாறியதுடன்  இதன் மனப்பாதிப்பை சமூகங்கள் தற்போதும் அனுபவிக்கின்றன.

சோகமான இந்த நாளில் நாம் தமிழ் கனேடியர்களுடனும் உலகம் எங்கிலும் உள்ள தமிழ் சமூகங்களுடனும் இணைந்து பாதிக்கப்பட்டவர்களை நினைவேந்தி தப்பிப்பிழைத்தோரை கௌரவிப்பதுடன் வெறுப்பிற்கும் வன்முறைக்கும் எதிராக எப்போதும் குரல்கொடுப்பதற்கு உறுதியுடன் இருப்பதை மீள வலியுறுத்துகின்றோம்.

மே 18ம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாக பிரகடனம் செய்யும் பிரேரணையை கனேடிய நாடாளுமன்றம் ஒருமனதாக அங்கீகரித்து இவ்வாண்டில் இந்த நாள் முதல்முறையாக கடைப்பிடிக்கப்பட்டது.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கும் அத்துமீறல்களுக்கும் பொறுப்புக்கூறப்படவேண்டும் என நாங்கள் தொடர்ந்து கோருகின்றோம். மனித உரிமைகளுக்காக குரல்கொடுப்பதை கனடா ஒருபோதும் நிறுத்தாது.

கனடா பிரதமரின் உருவ பொம்மைகளை எரித்து வவுனியாவில் போராட்டம் !

வவுனியாவில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சிங்கள –  தமிழ் – மற்றும் முஸ்ஸிம் தேசிய ஒற்றுமைக்கான இயக்கத்தில் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக நேற்று (24.06.2023) மதியம் 3.30 மணியளவில் இடம்பெற்றிருந்தது.

‘இலங்கையின் இறையாண்மைக்கு கைகொடுங்கள், கனடா இனவாதத்தை பற்ற வைக்காதீர்கள் அது குற்றம்’ போன்ற பல்வேறு பதாதைகளை தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கனடா

இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி ஆகியோரின் உருவ பொம்மைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் பயங்கரவாதம் எங்களுக்கு வேண்டாம் , ஜஸ்டின் ட்ரூடோ இதை கேள் உங்களுடைய சுதந்திரத்தினை எங்களுக்கு தா , படுகொலை எங்கே நடந்தது.? ஜஸ்டின் ட்ரூடோ இதை கேள் உனக்கு தேவை பயங்கரவாதம் , எங்களுடைய நாட்டில் கை போடாதே ஜஸ்டின் ட்ரூடோ போன்ற கோசத்தினை எழுப்பியவாறும் இலங்கையின் இறையாண்மைக்கு கைகொடுங்கள் , கனடா இனவாதத்தை பற்ற வைக்காதீர்கள் அது குற்றம் போன்ற பல்வேறு பதாதைகளை தாங்கியவாறும் போராட்டம் நடைபெற்றிருந்தது.

இவ் போராட்டத்தில் தமிழ் , முஸ்ஸிம் , சிங்கள இனத்தினை சேர்ந்த 30க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

 

“கனடா பிரதமர் முள்ளிவாய்க்காலை நினைவுகூர்ந்தால் நாம் கனடா படுகொலையை நினைவுகூருவோம்.” – விமல் வீரவன்ச

“கனடாவில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் 1996 ஆம் ஆண்டு  ஜூன் மாதம் 21 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார்கள். ஆகவே  எதிர்வரும் ஜூன் 21 ஆம் திகதியை ‘கனடா படுகொலை தினம்’ என நாம்   அனுஷ்டிக்க வேண்டும்.” என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சபையில் சுட்டிக்காட்டினார்.

சபாநாயகர் தலைமையில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

மே 18 இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளது என குறிப்பிட்டு கனடா நாட்டு பிரதமர் இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி  நாட்டை அவமதித்துள்ளார். இலங்கை தொடர்பில் கருத்துரைக்கும் கடனாவின் வரலாற்று பக்கத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

1996 ஆம் ஆண்டு  ஜூன் மாதம்  21 ஆம் திகதி  கனடா  நாட்டில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். கனடாவில் தான் உண்மையில் இனப்படுகொலை இடம்பெற்றது. எதிர்ரும் மாதம் 21 ஆம் திகதி அந்த தினத்தை நாம் ‘கனடா இனப்படுகொலை தினம்’ என பாராளுமன்றத்தின் ஊடாக அனுஷ்டிக்க வேண்டும்.

இலங்கையில் இடம் பெறாத இனப்படுகொலையை கனடா அனுஷ்டிக்கும் போது கனடாவில் இடம்பெற்ற இனப்படுகொலையை நாம் அனுஷ்டிக்க வேண்டும். அதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

ஈழத்தமிழர்களுக்காக வாதிடுவதை கனடா ஒரு போதும் நிறுத்தாது என கூறிய கனடா பிரதமர் – அதிருப்தியில் அமைச்சர் அலி சப்ரி!

யுத்த வெற்றியின் 14ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று வெளியிட்ட அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கம் மீண்டும் கனடாவுடனான இராஜதந்திரப் போரில் இறங்கியுள்ளது.

நேற்றைய தினம் கனடா பிரதமர் 14 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் தமிழர் இனப்படுகொலை நினைவு தினம் மற்றும் யுத்தம் நிறைவடைந்த தினத்தை நினைவுகூரும் வகையில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து, உள்நாட்டில் நல்லிணக்கச் செயற்பாட்டிற்கு உதவாது எனக் கருதும் கனடா பிரதமரின் அறிக்கையை இலங்கை கண்டிப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கனடா பிரதமர் தனது அறிக்கையில்,

இலங்கையில் 14 ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு வந்த ஆயுதப் போரின் போது ஏற்பட்ட துயரமான உயிர் இழப்புகளை இன்று நாம் நினைவுகூருகிறோம்.

முள்ளிவாய்க்கால் உயிரிழப்புகள் உட்பட, மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். காயமடைந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், உயிர் பிழைத்தவர்கள் மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்கள், இந்த அர்த்தமற்ற வன்முறையால் ஏற்படும் வலியுடன் தொடர்ந்து வாழ்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

மோதலில் பாதிக்கப்பட்ட தமிழ்-கனேடியர்களின் கதைகள் – நான் பல ஆண்டுகளாக நாடு முழுவதும் உள்ள சமூகங்களில் சந்தித்த பலர் உட்பட – மனித உரிமைகள், அமைதி மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதை ஒரு நிலையான நினைவூட்டல். மோதலில் பாதிக்கப்பட்ட தமிழ்-கனேடியர்களின் கதைகள் உட்பட, கடந்த பல ஆண்டுகளாக நான் நாடு முழுவதும் உள்ள சமூகங்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து கவனத்தில் எடுத்துக் கொண்டேன்.

இதன்காரணமாகவே, கடந்த ஆண்டு மே 18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அனுசரிக்கும் பிரேரணையை பாராளுமன்றம் ஏகமனதாக நிறைவேற்றியது. மோதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களின் உரிமைகளுக்காகவும், அத்துடன் இலங்கையில் தொடர்ந்து இன்னல்களை எதிர்நோக்கும் அனைவருக்காகவும் கனடா வாதிடுவதை நிறுத்தாது என்று குறிப்பிட்டிருந்தார்.