கர்தினால் மல்கம் ரஞ்சித்

கர்தினால் மல்கம் ரஞ்சித்

கோட்டாபய ராஜபக்சவினால் நான் ஏமாற்றப்பட்டேன் – கர்தினால் மல்கம் ரஞ்சித்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்;வினால் நான் ஏமாற்றப்பட்டேன் என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

 

2019 ஜனாதிபதிதேர்தலில் கோட்டாபய ராஜபக்சவிற்கு கத்தோலிக்க திருச்சபை ஆதரவளிக்குமளவிற்கு நிலைமை காணப்பட்டபோதிலும் பின்னர் ஏமாற்றப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

செய்தியாளர் மாநாட்டில் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

தான்அதிகாரத்திற்கு வந்ததும் 2019 உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதாக கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்தார் எனினும் அது இடம்பெறவில்லை என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த ஆணைக்குழுவின் அறிக்கையை பெற்றுக்கொண்ட பின்னர் கோட்டாபய ராஜபக்ச விசாரணைகளை காலவரையறையின்றி பிற்போட்டார் என மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

 

ஒரு கட்டத்தில் நாங்கள் ஏமாற்றப்பட்டோம் பதவியிலிருந்து அகற்றப்பட்ட ஜனாதிபதி என்னை ஏமாற்றினார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

2019 உயிர்த்த ஞாயிறுதாக்குதலின் பாரதூரதன்மையை அனைத்து கட்சிகளும் தலைமைகளும் உணர்ந்து இதுகுறித்து விசாரணைகளை மேற்கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கடற்பரப்பை பாதுகாப்பதை விடுத்து உள்நாட்டு பிரச்சினைகளிற்கு தீர்வை காணுங்கள் – கர்தினால் மல்கம் ரஞ்சித்

அரசாங்கம் சர்வதேச கடற்பரப்பினை பாதுகாப்பதற்கு முன்னர் உள்நாட்டில் காணப்படும் பிரச்சினைகளிற்கு தீர்வை காணவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் கருத்து வெளியிட்டுள்ளார்.

சர்வதேச கடற்பரப்பிற்கு கப்பலை அனுப்பும் அரசாங்கத்தின் தீர்மானத்தை விமர்சித்துள்ள அவர் உள்நாட்டில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன  என குறிப்பிட்டுள்ளார்.

பொரளைதேவலாயத்தில் இரண்டு வருடங்களிற்கு முன்னர் கைக்குண்டு மீட்கப்பட்டதை குறிப்பதற்காக இடம்பெற்ற விசேட ஆராதனையின்போது இதனை தெரிவித்துள்ள அவர் இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதிலும் கைக்குண்டினை வைத்த உண்மையான குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிப்பதற்கு அதிகாரிகள் தவறிவிட்டனர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

உயிர்த்தஞாயிறுதாக்குதல்களை மேற்கொண்டவர்கள் யார் ஊடகங்களை  துன்புறுத்தியவர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பதற்கு அதிகாரிகள் தவறியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன்நிறுத்தப்படுவார்களா என்பதை பார்ப்பதற்காக நாங்கள் காத்திருக்கின்றோம் பிரகீத்எக்னலிகொடவின் கொலைக்கு யார் காரணம் என்பதும் லசந்தவை யார் கொலை செய்தார்கள் என்பதும் எவருக்கும் இதுவரை தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்தும் மூடிமறைக்கப்பட்டுள்ளது அதிகாரிகள் உள்நாட்டு பிரச்சினைகளிற்குதீர்வை காண்பதற்கு பதில் சர்வதேச கடற்பரப்பை பாதுகாப்பதற்கே முன்னுரிமை வழங்குகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2024ம் ஆண்டு தேர்தல்களி;ன் ஆண்டு என அறிகின்றோம் இந்த தடவை சரியான தலைவர்களிடம் மக்கள் ஆட்சியை வழங்குவார்கள் என எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“கர்தினாலுக்கு எந்த அதிகாரமும் இல்லை.” – தலதாமாளிகையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரம் கர்தினாலுக்கு வழங்கப்படவில்லை.” என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்று (19) காலை சென்று வணக்கம் செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் அதிபர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதற்குரிய அதிகாரம் நீதித்துறை அல்லது பிரதம நீதியரசர் ஆகியோருக்கே உள்ளது.”

தொடர்ந்து பேசிய அவர்,

“நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து அபராதம் செலுத்த வேண்டியது கட்டாயமாகும். அபராதத்தை செலுத்தாவிட்டால், என்ன சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும்.

இதற்குரிய அதிகாரம் நீதித்துறைக்கு அல்லது பிரதம நீதியரசருக்கு உள்ளது, கர்தினாலுக்கு கிடையாது.” எனவும் தெரிவித்துள்ளார்.

“கிறிஸ்மஸ் தினத்தை கொண்டாடாது அதனை உங்கள் அருகில் உள்ள ஒரு ஏழை வீட்டிற்கு உணவுக்காக கொடுங்கள்.” – கர்தினால் மல்கம் ரஞ்சித்

“ஊடக அறிக்கையின்படி, இந்த நாட்டில் 6.1 மில்லியன் மக்கள் பசியுடன் உள்ளனர். நாடு இப்படிச் சிதைந்து கிடக்கும் போது, கிறிஸ்துமஸ் பண்டிகையை நாம் மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியாது.” என என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

களுத்துறை சிறி குருசா உயர்தரப் பாடசாலையில் நடைபெற்ற “நம்பிக்கையின் பிறப்பு” எனும் கிறிஸ்துமஸ் கரோல் கச்சேரியைத் தொடர்ந்து உரையாற்றிய கர்தினால் மல்கம் ரஞ்சித் இதனை தெரிவித்தார்.

 

ஆட்சியாளர்களின் மோசமான நடத்தையின் விளைவாகவே இந்த நாட்டிற்கு நேர்ந்துள்ளது. அவர்கள் உணவுக்காக உலக நாடுகளிடம் கையேந்துகிறார்கள். உணவுக்காக அந்நியர்களை அணுகுவதற்கு நாம் வெட்கப்பட வேண்டும்

இந்த ஆண்டு, மாட்டுத் தொழுவத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள். அதுதான் கிறிஸ்துமஸ் நடைபெறும் இடம். உங்கள் அருகில் உள்ள ஒரு ஏழை வீட்டிற்கு உணவு கொடுங்கள். கிறிஸ்துமஸ் என்பது பெறுவதை விட கொடுப்பது. அது தான் கிறிஸ்துவின் செய்தி என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஆதரவற்ற குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த சில திறமையான குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.

நாட்டு மக்கள் வறுமையில் இருக்கும் போது கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் தேவைதானா..?  – மல்கம் ரஞ்சித்

நாட்டு மக்களின் பொக்கட்டுக்கள் வெறுமையாக உள்ளன. இந்த நிலையில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் தேவைதானா..?  என கர்தினால் மல்கம் ரஞ்சித் கேள்வியெழுப்பியுள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலை காரணமாக மிகமோசமாக  பாதிக்கப்பட்டுள்ள மக்களிற்கு நிவாரணம் வழங்குவதற்கு பதில் அமைச்சர்கள் உட்பட சுற்றுலாத்துறையை சேர்ந்தவர்கள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களிற்காக பெருமளவு பணத்தை செலவிட தயாராகின்றனர்.

கிறிஸ்மஸ் வருகின்றது சுற்றுலாத்துறைக்குபொறுப்பான அமைச்சர் உட்பட  சுற்றுலாத்துறையின் முக்கிய அதிகாரிகள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களிற்காக கொழும்பை மின்விளக்குகளால் அலங்கரிக்க திட்டமிடுகின்றனர். இதன் மூலம் என்ன பயன்ஏற்படப்போகின்றது..? பொக்கட்கள் காலியாகவுள்ளன. இலங்கை உலகின் ஒவ்வொரு நாட்டிடமும்  உதவி கேட்கும் நாடாக மாறியுள்ளது.

மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளிற்கு தீர்வை காணாமல் தலைவர்கள் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்கின்றனர். ஒருவரையொருவர் குற்றம்சாட்டுகின்றனர். இதுதான் அவர்களின் பொறுப்புணர்வா..? ஆயிரக்கணக்கான மக்கள் பட்டினியில் சிக்குண்டுள்ளனர்.  போதிய அளவு உணவும் ஊட்டச்சத்தும் இல்லாததால் மாணவர்கள் பாடசாலைகளில் நோய்வாய்படுகின்றனர். ஆனால் தலைவர்கள் மக்களின் துயரங்கள் நெருக்கடிகளை பார்க்காதவர்கள் போல நடந்துகொள்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

“இறுதி யுத்தத்தின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோது கொழும்பு பேராயர், ஏன் மௌனமாக இருந்தார்.” – ஸ்ரீதரன் கேள்வி !

“இறுதி யுத்தத்தின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோது கொழும்பு பேராயர், ஏன் மௌனமாக இருந்தார்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏப்ரல் தாக்குதலின் போது பல உயிர்களை காவு கொண்டமைக்கு பொறுப்புக் கூற வேண்டிய மைத்திரிபால சிறிசேன அவர்களே இதற்காக நீங்கள் வெக்கப்படவில்லையா? ஆடை அணிந்திருக்கிறீர்களா ? என்று பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் அண்மையில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் நாடாளுமன்றில் இன்று (06.04.2021) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில்  இது தொடர்பாக பேசிய பேசிய ஸ்ரீதரன், இறுதி யுத்தத்தின்தின் போது கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்களின்  மௌனம் தமிழர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மீது, மதம் கடந்து, மதத் தலைவர் என்ற அடையாளத்தை கடந்து மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் உதிர்க்கப்படும் வார்த்தைகள் இன்று பல மக்களுடைய புருவங்களை உயர்த்த வைத்துள்ளது என்றும் ஸ்ரீதரன் சுட்டிக்காட்டினார்.

மேலும் கொழும்பு பேராயர், சிங்கள கிறிஸ்தவர்களுக்காக பேசுகின்றாரா அல்லது உலகத்தில் வாழ்கின்ற கிறிஸ்தவர்களுக்காக பேசுகின்றாரா என்ற கேள்வி காணப்படுவதாகவும் ஸ்ரீதரன் குறிப்பிட்டார்.

“மைத்திரிபால சிறிசேன அவர்களே இதற்காக நீங்கள் வெக்கப்படவில்லையா? ஆடை அணிந்திருக்கிறீர்களா ? ” – பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் கேள்வி !

பல உயிர்களை காவு கொண்டமைக்கு பொறுப்புக் கூற வேண்டிய மைத்திரிபால சிறிசேன அவர்களே இதற்காக நீங்கள் வெக்கப்படவில்லையா? ஆடை அணிந்திருக்கிறீர்களா ? என்றும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று (4.04.2021) ஈஸ்டர் ஞாயிறு திருப்பலியின் பின்னரே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், ஈஸ்டர் பயங்ரவாதம் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைவில் செயற்படுத்துங்கள். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த தற்கொலை தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை இன்று நினைவு கூறுகிறோம்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவை குற்றவாளியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளார்.

எனவே அவருக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு மேலும் தாமதிக்க வேண்டிய அவசியம் இல்லை. அத்துடன் இந்த தாக்குதலுடன் தொடர்புடைய அமைச்சர்கள் மற்றும் ஏனைய சிலர் தற்போது சுதந்திரமாக நடமாடுகின்றனர்.

இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். எனவே நடுநிலையாக அதனுடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“நாட்டில் மீண்டும் இன்னொரு மோதலை தூண்ட முயன்றவர்கள் யார் என்பதை வெளிப்படுத்தவேண்டும்” – கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை மூடிமறைப்பதற்கு முயலவேண்டாம் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

73 வது சுதந்திரதினத்தை குறிக்கும் வகையில் இடம்பெற்ற ஆராதனையின் போதே  கர்தினால் மல்கம் ரஞ்சித் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழுவின் அறிக்கையை அரசாங்கம் பகிரங்கப்படுத்தும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

30வருட கால யுத்தத்திலிருந்து மீண்ட இலங்கை நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் அபிவிருத்தி செய்துவருகின்றது என தெரிவித்துள்ள அவர் நாட்டில் மீண்டும் இன்னொரு மோதலை தூண்ட முயன்றவர்கள் யார் என்பதை வெளிப்படுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளது என குறிப்பிட்டுள்ள மல்கம் ரஞ்சித் கடந்த காலத்தில் தலைவர்கள் ஆணைக்குழுக்களின் அறிக்கையை மறைத்தது போல இதனையும் மறைக்கவேண்டாம் என கோரியுள்ளார்.