கிளிநொச்சி பூநகரி

கிளிநொச்சி பூநகரி

பூநகரியில் அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலையை திறப்பதற்கு நிரந்தர தடையுத்தரவு !

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலையை திறப்பதற்கு நிரந்தர தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றினால் குறித்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

மதுபானசாலை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் பாடசாலை ஆலயம், ஆசிரியர் விடுதி மற்றும் பொது விளையாட்டு மைதானம் போன்றவை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 

இதன்படி குறித்த மதுபானசாலையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் மற்றும் பொது அமைப்புகளினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

 

மதுபானசாலை தொடர்பில் கடந்த 06ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

 

விசாரணைகளின் பின்னர் இன்று வரை மதுபானசாலையை திறப்பதற்கான இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

இந்த நிலையில், குறித்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மதுபானசாலையை திறப்பதற்கான நிரந்தர தடையுத்தரவை பிறப்பித்து கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கிளி/முழங்காவில் பகுதியில் தங்ககத்துடன் கூடிய மதுபானசாலையை அகற்றுமாறு பொதுமக்கள்,பொது அமைப்புக்களால் எதிர்ப்பு தெரிவித்து நீதி மன்றத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி M.A சுமந்திரனூடாக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு இடைக்கால தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது.  இன்றையதினம் (20.07.2023) ஜனாதிபதி சட்டத்தரணி M.A சுமந்திரன் அவர்களின் வாதப்பிரதி வாதங்களை ஆராய்து கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் நிரந்தர தடை உத்தரவாக்கி தீர்ப்பு வழங்கியுள்ளது.