கிளிநொச்சி போதைப்பொருள் பாவனை

கிளிநொச்சி போதைப்பொருள் பாவனை

“நான் போதைப்பொருள் பாவனைக்கு எதிரானவன் / எதிரானவள்” என்ற தொனிப்பொருளிலான கவனயீர்ப்பு செயற்திட்டத்துக்கு லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தினர் அழைப்பு !

போதைப்பொருள் பாவனைக்கு எதிரான கை அடையாள கவனயீர்ப்பு செயற்திட்டம்.

 

எதிர்வரும் 17.12.2023 அதாவது ஞாயிற்றுக்கிழமை அன்று கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் இலவச தொழில் கல்வி நிறுவனமான லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையமானது கிளிநொச்சியில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான கை அடையாள கவனயீர்ப்பு செயற்திட்டம் ஒன்றை கிளிநொச்சி பொதுச் சந்தை மற்றும் கிளிநொச்சி பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளை மையப்படுத்தி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பில் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் பணிப்பாளர் ஹம்சகௌரி அவர்கள் தேசம் நெட் இற்கு வழங்கிய செய்தியில் பின்வருமாறு குறிப்பிட்டார். “அண்மைய நாட்களில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை இளைஞர்களை தாண்டி நம் சமூக பாடசாலை மாணவர்கள் இடையேயும் ஊடுருவி எதிர்கால சந்ததியை அச்சுறுத்த ஆரம்பித்துள்ளது. எனவே கிளிநொச்சி மக்களாக நாம் விழித்துக்கொள்ள வேண்டிய ஓர் கட்டத்தில் இருக்கிறோம்.

 

எனவே “நான் போதைப்பொருள் பாவனைக்கு எதிரானவன் அல்லது எதிரானவள்” என்ற தொனிப்பொருளிலான நமது கை அடையாள கவனயீர்ப்பு செயற்திட்டத்தில் கலந்து கொண்டு நமது சமூக மாற்றத்திற்கான செயற்திட்டத்தில் பங்கு கொள்ளுங்கள்” என கிளிநொச்சி மக்களுக்கு லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் பணிப்பாளர் அழைப்பு விடுத்துள்ளார்.

 

இடம் :- கிளிநொச்சி பொதுச் சந்தை – கிளிநொச்சி பொது பேருந்து நிலையம்.

திகதி:- 17.12.2023

நேரம் :- காலை 10.00 மணி

“கிளிநொச்சியை போதையால் அழிக்க இலங்கை அரசாங்கம் முயற்சி.” – சுகாஷ் குற்றச்சாட்டு!

கிளிநொச்சியை போதையால் அழிக்க இலங்கை அரசாங்கம் முனைவதாக சட்டத்தரணி சுகாஸ் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“திட்டமிடப்பட்ட இன அழிப்பை மேற்கொண்ட இலங்கை அரசு, அதன் தொடர்ச்சியாக இவ்வாறான செயல்பாகளையும் முன்னெடுத்துள்ளது.

போதைப்பொருள், சட்டவிரோத மதுபான சாலைகளை அமைத்து கிளிநொச்சியை போதையால் அழிக்க முனைப்பு காட்டியுள்ளது.

பிரதேச அமைப்புக்கள், பொது மக்களின் எதிர்புக்களையும் தாண்டி மக்கள் குடியிருப்புக்குள் இவ்வாறு மதுபான சாலைகளை அமைத்துள்ளனர்.

இதற்கான முறையான அனுமதி பெறப்படாததனை பிரதேச செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது. இதேவேளை, உணவுக்கான அனுமதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச சபையும் தெரிவித்துள்ளது.