கிளீன் சிறீலங்கா

கிளீன் சிறீலங்கா

கடமை நேரத்தில் போதையுடன் தள்ளாடும் பொலிஸ் பிரிவும் கிளீன் சிறீலங்காவுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் !

கடமை நேரத்தில் போதையுடன் தள்ளாடும் பொலிஸ் பிரிவும் கிளீன் சிறீலங்காவுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் !

பொலிஸ் கழிப்பறையில் வைத்து பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஐஸ் வகை போதைப்பொருள் பயன்படுத்தி கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட நபர் அனுராதபுரம் பொலிஸ் தலைமையகத்தில் பணியாற்றும் 39 வயதுடைய கான்ஸ்டபிள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வடக்கு இலங்கையில் அண்மைய காலத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை தொடர்பான குற்றங்களுக்கு பின்னணியிலும் பொலிஸார் செயற்பட்டுவருவதாக கடந்த வார நாடாளுமன்ற அமர்வில் தமிழ் எம்.பிக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். இந்த நிலையில் இலங்கை பொலிஸ்பிரிவு முழுமையாக கிளீன் சிறீலங்கா திட்டத்துக்குள் கொண்டுவரப்பட்டு கிளீன் செய்யப்படவேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சாணக்கியன் – செல்வம் கிளீன் சிறிலங்கா விசாரணைக்குள் வருகிறார்களா ?

சாணக்கியன் – செல்வம் கிளீன் சிறிலங்கா விசாரணைக்குள் வருகிறார்களா ?

கடந்த ஆண்டு யூலை 25 அபிவிருத்திக்காக இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு கிடைத்த 400 மில்லியன் நிதியை அவர் திறம்பட செலவழியாமல் மோசடி செய்ததாக குற்றம் சாட்டுகிறார் ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்ரனிசில் ராஜ்குமார்.

அதேசமயம் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வந்துள்ளது.

அநுரவின் கிளீன் சிறிலங்கா திட்டத்தின் மூலம் சாணக்கியனின் ஊழலை விசாரிக்கும் படி நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் அறை கூவல் விடுத்தார். சாணக்கியனின் அநுசரணையில், கல்லாத்தில் ஒரு கூட்டுறவுச் சங்க கட்டடம் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு 50 இலட்சம் ரூபாய்களே செலவிடப்பட்டதாக தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது என கூறும் அன்ரனிசில். பூரணமாக கட்டி முடிக்கப்படாத கட்டத்திற்கு 50 இலட்சம் செலவானதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது என்கிறார். பூரணமாகாத கட்டத்தின் படங்களையும் செய்தியாளர் மாநாட்டில் காட்டினார் அன்ரனிசில். அவர் மேலும் தான் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெற்றுக்கொண்ட ஆவணங்களின் அடிப்படையில் புள்ளிவிபரங்களை குறிப்பிட்டு மட்டக்களப்பு மாவட்டம் புறக்கணிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும் விநோதமான ஒரு கோரிக்கையை அனைத்து மத குருமார்களிடம் முன்வைத்தார். அதாவது மக்களை கசக்கி பிழிந்து பெறப்பட்ட வரிப்பணத்தையே நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பன்முகப்படுத்தப்பட்ட நிதி மூலம் மத ஸ்தாபனங்களுக்கு ஒதுக்குகிறார்கள். எனவே அந்த கொடைகளை பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தந்தார் என ஒலிபெருக்கியில் பிரச்சாரம் செய்வது ஏனைய கட்சி உறுப்பினர்கள் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். ஏனவே சாணக்கியனுக்கு இலவச விளம்பரம் செய்ய வேண்டாம் என மறைமுகமாக கேட்டுக் கொண்டார்.

 

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் – வீழ்ச்சி வீதிவிபத்து மரணங்கள் வீழ்ச்சி !

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் – வீழ்ச்சி வீதிவிபத்து மரணங்கள் வீழ்ச்சி !

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் போக்குவரத்து நடவடிக்கைகளினால் வாகன விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதைத் தெரிவித்துள்ளார்.

வீதி விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களில் நாளொன்றுக்கு ஒன்பதாக இருந்தது. தற்போது அது நான்கு தொடக்கம் இரண்டாகக் குறைந்துள்ளது. அத்துடன் சில நாட்களில் எந்தவித உயிரிழப்பும் வீதி விபத்துக்களினால் பதிவாகவில்லை.

பொலிஸ் புள்ளிவிபரப்படி வீதிவிபத்துக்களால் தினமும் 10 தொடக்கம் 15 பேர் வரை நிரந்தரமாக ஊனமடைகின்றனர். இது போரின் போது ஒரு நாளைக்கு ஊனமுற்றவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.