குஷானி ரோஹந்தீர

குஷானி ரோஹந்தீர

பாராளுமன்றத்தில் பணிப்பெண்களாக கடமையாற்றுவோர் மீது பாலியல் துன்புறுத்தல்கள் !

பாராளுமன்றத்தில் பணிப்பெண்களாக கடமையாற்றும் பெண்கள், பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக பாராளுமன்ற உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சில முக்கிய அதிகாரிகளிடம் இருந்து முறைகேடுகள் நடப்பதாக, சமீபகாலமாக, உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், இவ்வாறான சம்பவங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடம்பெறுவதாகவும், அதற்கு இணங்காவிட்டால் பல்வேறு பழிவாங்கல்களுக்கு உள்ளாக நேரிடும் எனவும் அந்த முறைபாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குறித்த இவ்விடயத்தில் தங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டுமென பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

 

அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

மேலும் சில ஊழியர்கள் தமது வேலைகளை பாதுகாப்பதற்காக இது தொடர்பில் முறைப்பாடு செய்ய பயப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதனிடையே, இது தொடர்பாக பாராளுமன்ற மகளிர் மன்றத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் செய்ய, அதே ஊழியர்கள் தயாராக உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தின் புதிய பொதுச் செயலாளராக குஷானி ரோஹந்தீர !

தலைமைப் பணியாளர் மற்றும் பாராளுமன்ற துணைப் பொதுச் செயலாளரான குஷானி ரோஹந்தீர பாராளுமன்றத்தின் புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசியலமைப்புச் சபையின் அங்கீகாரத்துடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மே மாதம் 23ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், குஷானி ரோஹந்தீரவை அந்தப் பதவிக்கு நியமித்துள்ளார்.

சட்டத்தரணி குஷானி ரோஹந்தீர, 2020 டிசம்பரில் பாராளுமன்றத்தின் தலைமைச் செயலாளராகவும் பிரதிச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.

2012 ஆம் ஆண்டு முதல் பாராளுமன்றத்தின் உதவி பொதுச் செயலாளர் (நிர்வாக சேவைகள்) ஆகவும் பணியாற்றினார்.

1999 ஆம் ஆண்டு பாராளுமன்ற அதிகாரியாக பாராளுமன்ற சேவையில் இவர் இணைந்தார்.