சரத்வீரசேகர

சரத்வீரசேகர

“ குருந்தூர் மலை விவகாரத்தில் நாம் பலவந்தமாக செயற்பட வேண்டிய நிலையை உருவாக்காதீர்கள்.” – சரத்வீரசேகர எச்சரிக்கை !

“ குருந்தூர் மலை விவகாரத்தில் நாம் பலவந்தமாக செயற்பட வேண்டிய நிலையை உருவாக்காதீர்கள்.”  என நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

மஹகர பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதால் நாடு முழுவதும் பௌத்த சின்னங்கள் மற்றும் மரபுரிமைகள் காணப்படுகின்றன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் தொல்பொருள் மரபுரிமைகளை அடிப்படையாக கொண்டு எவ்வித முரண்பாடுகளும் தோற்றம் பெறவில்லை.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகளை அந்த மாகாணங்களின் அரசியல்வாதிகள் தமது அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அரசியல்வாதிகளின் அனுசரணையுடன் தொல்பொருள் மரபுரிமைகள் அழிக்கப்படுகின்றன.

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் தலைமையில் கடந்த எட்டாம் திகதி இடம்பெற்ற சந்திப்பின் போது அதிபர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குறிப்பிட்ட விடயம் பொய் என்பதை தொல்பொருள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுர மனதுங்க தெளிவுபடுத்தவில்லை.

குருந்தூர் மலையில் தமிழர்கள் விவசாயம் செய்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் குறிப்பிட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. குருந்தூர் மலையில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகள்,அடையாளப்படுத்தப்பட்ட நடுகை தூண்களை அகற்ற எவருக்கும் உரிமை இல்லை.

குருந்தூர் மலை விவகாரத்தில் தோற்றம் பெற்றுள்ள முரண்பாடுகளுக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண தயாராக உள்ளோம். அதனை விடுத்து பலவந்தமான முறையில் செயற்பட்டால் நாங்களும் அந்த வழியில் செல்ல நேரிடும் என தெரிவித்தார்.

“தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் உண்மையான நோக்கம் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு கிடையாது.” – சரத்வீரசேகர

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் உண்மையான நோக்கம் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தை புறக்கணித்தமை தொடர்பில் ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதிகார பகிர்வு என்பது சாத்தியமற்றது அதனால் ஜனாதிபதி தலைமையில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக் கொள்ளவில்லை என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

நாட்டை பிளவுபடுத்தும் சமஷ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வு சாத்தியமற்றது எனவும் சரத் வீரசேகர கூறியுள்ளார். பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நாட்டின் ஒருமைப்பாட்டை விட்டுக் கொடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை பிளவுபடுத்த பெரும்பான்மையான மக்கள் இணக்கம் தெரிவிக்கமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சமஷ்டி அடிப்படையில் நாட்டை பிளவுப்படுத்துவது தமிழ் மக்களின் நோக்கமல்ல எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

“போராட்டங்களில் ஈடுபட மக்களுக்கு உரிமை உண்டு.” – அமைச்சர் நாமல்ராஜபக்ஷ

நாட்டில் அரசுக்கெதிரான போராட்டங்கள் ஐக்கியமக்கள் சக்தி , ஜே.வி.பி ஆகிய கட்சிகளினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் போராட்டங்களில் ஈடுபடுவோர் கொரோனா தனிமைப்படுத்தல் சடடத்தை காரணம் காட்டி தொடர்ந்து கைது செய்யபடபடுகின்றனர்.

கடந்த 8ஆம் திகதி கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் குறித்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை  நாடாளுமன்றத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை பெண் காவல்துறை உத்தியோகத்தர் அச்சுறுத்தியிருந்ததுடன் ஊடகவியலாளர்களின் கமரா மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதே நேரம் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீதான பொலிஸாரின் அடக்குமுறைகள் தொடர்பாக நேற்றைய பாராளுமன்ற அமர்விலும் சலசலப்புக்கள் ஏற்பட்டிருந்தன. இதற்கு பதிலளித்திருந்த பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர “பொதுக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளதால் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோர் தொடர்ந்து கைது செய்யப்படுவர் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் போராட்டங்களில் ஈடுபட மக்களுக்கு உரிமை உண்டு என்றாலும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீற முடியாது என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியினர் மற்றும் ஆசிரியர் சங்கம் முன்னெடுத்த போராட்டங்களில் பொலிஸாரின் நடவடிக்கைகள் குறித்த கேள்வி பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பொலிஸார் கைது செய்யும் நடவடிக்கையை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் நல்லாட்சி அரசாங்கத்திலோ அல்லது தற்போது ஆட்சியில் இருக்கும் கோட்டாபய-மஹிந்த அரசாங்கத்திலும் சரி இந்த நடவடிக்கையை நான் என்றும் ஏற்றுக்கொள்ளவில்லை.

கொரோனா தொற்றுக்கு எதிராக உலகமே எதிர்த்துப் போராடிவரும் நிலையில் பொதுமக்கள் பொறுப்பான முறையில் செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

“இந்தியா எங்களை மாகாணசபை தேர்தலை நடாத்துமாமாறு கூறி நிர்ப்பந்திக்க முடியாது” – அமைச்சர் சரத்வீரசேகர

“இந்தியா எங்களை மாகாணசபை தேர்தலை  நடாத்துமாமாறு கூறி நிர்ப்பந்திக்க முடியாது.இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுகின்றார் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எங்கள் உள்விவகாரங்களில் தலையிட முடியாது”  எனவும் அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

அவர் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“இந்தியா எங்கள் நட்பு நாடு என்பது உண்மை . இந்தியா சர்வதேச அரங்கில் எந்த விடயத்தையும் எழுப்பலாம் ஆனால் அவர்கள் எங்களை அதனை செய்யுமாறு கூறி நிர்ப்பந்திக்க முடியாது என சரத்வீரசேகர  குறிப்பிடடுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன 13வது திருத்தத்தை எங்கள் மீது திணித்துள்ளார்.13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறோ அல்லது மாகாணசபை தேர்தல்களை நடத்துமாறோ இந்தியா எங்களிற்கு அழுத்தம் கொடுக்க முடியாது . அவர்கள் யோசனைகளை முன்வைக்கலாம் ஆனால் நாங்களே தீர்மானிப்போம் அரசியல் தலைவர்கள் தீர்மானிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலை காணப்படவில்லை. அரசாங்கம் புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் வரை காத்திருப்பதற்கு தீர்மானித்துள்ளது. புதிய அமைப்பு தேர்தல் முறைகளில் மாற்றத்தை மேற்கொள்ளும். இதன் காரணமாக மாகாணசபை முறை மாற்றப்படவேண்டும்” எனவும் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.