சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர்

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர்

“சீனா பச்சைக்கொடி – கடன் நிவாரண வேலைத்திட்டத்தை விரைவாக முன்னெடுக்க முடியும்.”- சர்வதேச நாணய நிதியம்

கடன் மறுசீரமைப்புக்கு சீனா ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இலங்கை போன்ற நாடுகளுக்கான கடன் நிவாரண வேலைத்திட்டத்தை விரைவாக முன்னெடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கையாள்வதற்கான வாய்ப்புகள் குறித்து கடந்த வாரம் சீனாவுடன் அவர் பேச்சு நடத்தியிருந்தார்.

ஆகவே குறித்த நாடுகள் எதிர்கொள்ளும் கடன் பிரச்சினைகளை கையாளமுடியும் என்றும் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

இருப்பினும் ஜி20 கட்டமைப்பின் கீழ் நிவாரணம் வழங்குவதில், சீனாவின் வகிபாகம் குறித்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகள் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“ஊழியர் மட்ட இணக்கப்பாட்டை எட்டியுள்ளமை மகிழ்ச்சி.”- சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர்

இலங்கையின் பொருளாதார கொள்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் சர்வதேச 2.9 பில்லியன் டொலரைப் பெற்றுக் கொள்வதற்கான ஊழியர் மட்ட இணக்கப்பாட்டை எட்டியுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலீனா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியக்குழு இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையினை மேற்கோற்காட்டி செய்துள்ள டுவிட்டர் பதிவிலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

இலங்கைக்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவினால் ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட விடயங்களின் அடிப்படையில் ஊழியர்மட்ட அறிக்கை தயாரிக்கப்படும். இது முகாமைத்துவத்தின் ஒப்புதலுக்குட்பட்டு, மேலதிக கலந்துரையாடல்களையும் தீர்மானங்களையும் எடுப்பதற்காக சர்வதேச நாணய நிதிய நிறைவேற்றுச் சபைக்குச் சமாப்பிக்கப்படும்.

பொருளாதார உறுதிப்பாட்டினையும் கடன் நிலைபேற்று தன்மையை மீட்டெடுக்கும் வகையிலும் , நிதியியல் உறுதிப்பாட்டினைப் பாதுகாத்தல், பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாத்தல், ஊழலினால் பாதிக்கப்படக்கூடிய தன்மைகளை நிவர்த்திசெய்தல், இலங்கையின் வளர்ச்சி வாய்ப்புக்களை வெளிக்கொணர்வதற்குக் கட்டமைப்புசார் மறுசீரமைப்புக்களை முன்னெடுத்தல் என்பன ஊழியர் மட்ட இணக்கப்பாட்டின் குறிக்கோள்களாகவுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தினால் ஆதரவானது பொருளாதாரத்தினை உறுதிப்படுத்தல், இலங்கை மக்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல் மற்றும் பொருளாதார மீட்சிக்கான தளத்தினைத் தயார்படுத்தல் மற்றும் நீடித்து நிலைத்திருக்கும் மற்றும் அனைத்தும் உள்ளடங்கிய வளர்ச்சியினை ஊக்குவித்தல் என்பவற்றினை நோக்காகக்கொண்டுள்ளது. இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் ஆதரவளிக்கும் முகமாக எமது ஈடுபாட்டினைத் தொடர்ந்தும் முன்னெடுக்க ஆவலுடன் இருக்கிறோம்.’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.