சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

கிளிநொச்சி லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தில் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

கிளிநொச்சி மாவட்டத்தின் திருநகர் பகுதியில் இயங்கி வரும் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகள் கடந்த 19.08.2023 அன்று நடைபெற்றது.

குறித்த நிகழ்வுகள் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் ஸ்தாபகர் திரு.தஜெயபாலன் தலைமையில் நடைபெற்றதுடன் சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்டத்தின் திட்டமிடல் பணிப்பாளர் திரு.அ.கேதீஸ்வரன், சமத்துவ கட்சியின் பொதுச்செயலாளர் முருகேசு சந்திரகுமார் , திரு.தவச்செல்வம், ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தில் கற்றல் நடவடிக்கைகளை முழுமையாக பூர்த்தி செய்திருந்த [பிரிவு 2022/LA/ A, பிரிவு 2022/LA/B, 2023/LA/ A ] 140 மாணவர்களுக்கான சான்றிதழ்களும் – சிறப்பு நிலைகளை பெற்ற மாணவர்களுக்கான பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வின் போது லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் மாணவர்களின் இணைவினால் உருவாக்கப்பட்டிருந்த கிளிநொச்சி மாவட்டத்தின் சுற்றுலாத்தலங்களினை ஆவணப்படுத்திய மூன்று மொழிக் கையேடு ஒன்று கிளிநொச்சி மாவட்ட திட்டமிடல் பணிப்பாளரால் வெளியிட்டு வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.