சிறுமி துஷ்பிரயோகம்

சிறுமி துஷ்பிரயோகம்

தாயின் 2ஆவது கணவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த சிறுமி – யாழ்ப்பாணத்தில் சம்பவம்!

தாயின் கணவரால் 13 வயது சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக , கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் , இரண்டாம் தாரமாக திருமணம் செய்துள்ளார். தனது முதல் தாரத்தின் மூன்று பிள்ளைகளுடன் , இரண்டாம் தாரத்துடன் குடும்பம் நடாத்தி வந்துள்ளார்.

 

இந்நிலையில் தாயின் இரண்டாவது கணவர் , சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , பொலிஸார் சிறுமியை மீட்டு வைத்திய பரிசோதனைக்காக வைத்திய சாலையில் அனுமதித்துள்ளதுடன் , சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

10 வயது பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்து சிகரெட்டினால் சூடு வைத்த கொடூரம் !

கொழும்பில் உள்ள பிரபல மகளிர் கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் பத்து வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததுடன் சிறுமியின் உடலின் சில இடங்களில் சிகரெட்டினால் சூடுவைத்த சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் நேற்று வியாழக்கிழமை (22) நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

இந்த வருடம் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள சிறுமியை கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை அளிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமி தொடர்பில் வெல்லம்பிட்டி பொலிஸாரால் பெறப்பட்ட சட்ட வைத்திய அறிக்கைகள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவ அறிக்கைகளை கருத்தில் கொண்டு, சிறுமியை அவரது தாயின் பராமரிப்பில் வைத்தியசாலையில் சேர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட மாணவியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதைக் கண்ட வகுப்பு ஆசிரியர் சிறுமியை வெல்லம்பிட்டி பொலிஸாரிடம் அழைத்துச்சென்றார்.

இதன்படி, சிறுமியை சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, சிறுமி எட்டு தடவைகள் பாரிய பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

எட்டு வயது சிறுமி மீது பாலியல் பலாத்காரம் – சந்தேகநபரான பௌத்த மதகுருவை தாக்கி கொலை செய்த உறவினர்கள் !

எட்டு வயது சிறுமி ஒருரைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் சந்தேக நபரான 70 வயதுடைய பௌத்த மதகுரு ஒருவர் தாக்கப்பட்டதில் மரணடைந்துள்ளார்.

குருநாகல் வைத்தியசாலையில் மரணமடைந்த மேற்படி மதகுரு ஹெட்டிப்பொல பிதேசத்தைச் சேர்ந்த விகாரை ஒன்றில் வசித்து வந்துள்ளார்.

குறித்த பௌத்த மதகுரு சம்பவ தினம் “போதி பூஜா” ஒன்றுக்காக வந்திருந்த சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியே சிறுமியின் உறவினர்களால் குறித்த மதகுரு தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான மதகுரு சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். ஹெட்டிப்பொல பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பருத்தித்துறையில் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் !

பருத்தித்துறை நகர் பகுதியில் நேற்று அதிகாலை மீட்கப்பட்ட சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸாரால் மீட்கப்பட்ட சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை, சட்ட வைத்திய அதிகாரியிடம் சிறுமி ஒப்படைக்கப்பட்ட நிலையில் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் அவர் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸாரினால் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.இதனையடுத்து இரண்டு சந்தேகநபர்களையும் எதிர் வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.