தேசிய மக்கள் முன்னணி

தேசிய மக்கள் முன்னணி

“நாங்கள் வெற்றியை நோக்கி இவ்வளவு தூரம் வந்தது ஆறு மாதங்களில் ஒரு அரசாங்கத்தை கைவிட அல்ல – நாம் ஆறு மாதங்களுக்குள் உறுதியாவோம்” – அனுர குமார திசாநாயக்க

நாம் ஆட்சியமைத்தால் ஆறு மாதங்களுக்குப் பின்னர் எமது அரசாங்கம் கவிழாது என தேசிய மக்கள் சக்தியின்  தலைவர் அநுரகுமார திஸாநாயக்க  உறுதியளித்துள்ளார்.

“முன்பு, நாங்கள் ஆட்சிக்கு வரமாட்டோம் என்று சொன்னார்கள். எங்கள் அரசாங்கம் ஆறு மாதங்கள் நீடிக்காது என்று சொல்ல ஆரம்பித்தார்கள். நாங்கள் வெற்றியை நோக்கி இவ்வளவு தூரம் வந்தது ஆறு மாதங்களில் ஒரு அரசாங்கத்தை கைவிட அல்ல ” என்று நேற்று(11) குருநாகலில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய திஸாநாயக்க கூறினார்.

அத்துடன் தனது தலைமையில் அமைக்கப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், நாட்டின் வரலாற்றில் வலுவானதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதிப் பத்து நாட்களில் போலிச் செய்திகள் மற்றும் தவறான செய்திகள் அலை வீசும் என திஸாநாயக்க தெரிவித்தார்.

இருந்த போதிலும், தேசிய மக்கள் சக்தியின் வெற்றியில் தான் நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“எங்கள் எதிரிகள் கலக்கமடைந்துள்ளனர். எமக்கு எதிரான பாரிய சதித்திட்டம் தொடர்பில் எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது, அதற்கு நாங்கள் பலியாக மாட்டோம்” என்று அவர் மேலும் கூறினார்.

ஒரு அமைச்சருக்கு மாதாந்தம் 270,000 கொடுப்பனவு – குறையுங்கள் வலியுறுத்தல் !

நாட்டின் உற்பத்தி வீழ்ச்சி மற்றும் அரசியல்வாதிகளின் ஊழல் நடவடிக்கைகளால் பொதுமக்கள் தற்போது சிரமங்களை அனுபவித்து வருவதாக  நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் ஹேரத் தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர்  இதனை தெரிவித்தார். மேலும் பேசிய அவர்,

நிதி நெருக்கடிக்கு மத்தியில் அமைச்சர்கள் தியாகங்களைச் செய்து முன்மாதிரியாக இருக்க வேண்டும் என அரசாங்கம் கூறுகின்றது. இருப்பினும் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது தனிப்பட்ட தேவைகளுக்காக அரச நிதியை பயன்படுத்துகின்றனர்.

ஒவ்வொரு அமைச்சருக்கும் மாதாந்த எரிபொருள் கொடுப்பனவில் இருந்து ஐந்து லீற்றரை குறைக்க நிதியமைச்சர் முன்மொழிந்ததார்.  எவ்வாறாயினும் ஒரு அமைச்சருக்கு மாதாந்தம் 270,000 கொடுப்பனவுகள் கிடைக்கும் நிலையில் எரிபொருளுடன் சேர்த்து இவற்றையும் குறைக்க முடியும் என விஜித் ஹேரத் தெரிவித்தார்.

அரசாங்கம் உண்மையில் மாற்றத்தையும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதிலும் ஆர்வமாக கொண்டிருந்தால் இவ்வாறான விடயங்களை செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.