நிகழ்நிலை சட்ட மூலம்

நிகழ்நிலை சட்ட மூலம்

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இரத்து செய்யுமாறு தொழிற்சங்கங்கள் கோரிக்கை!

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இரத்து செய்யுமாறு 41 முன்னணி தொழிற்சங்கங்கள் கோரியுள்ளன.

இது தொடர்பில் குறித்த தொழிற்சங்கங்கள் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன.

இந்தச் சட்டம் நாட்டின் பிரஜைகளினது கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் ஒரு சட்டம் எனவும், நிகழ்நிலை சுதந்திரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை ஆட்சேபித்து சுமந்திரன் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் !

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் உறுதிப்படுத்தியுள்ளதை ஆட்சேபித்து பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை முழுமையாக பின்பற்றாமலேயே இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் பரிந்துரைத்த திருத்தங்கள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டிருந்தால் மாத்திரமே சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய, சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டதன் மூலம் தாம் உள்ளிட்ட பிரஜைகளின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.