நீதிபதி ரீ.சரவணராஜா

நீதிபதி ரீ.சரவணராஜா

“நீதிபதி T.சரவணராஜா நாட்டை விட்டு வெளியேற நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவே காரணம்.” – ஐனநாயக அமைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர முல்லைத் தீவு நீதிபதியை விமர்சித்த நிலையில், அதற்கு ஐனாதிபதி, பாதுகாப்பு துறை அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களமோ நடவடிக்கை எடுக்காமையினாலேயே முல்லைத்தீவு நீதிபதி T.சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறக் காரணம் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஐனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

1983ஆம் ஆண்டு இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் இதுவரையில் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்காமையினாலேயே இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெறுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

அத்துடன், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி மேன்;முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஐந்து வழக்குகளில் பிரதிவாதியாக உள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிக்கும் கருத்து உண்மைக்கு புறம்பானது எனவும் நீதிபதி சரவணராஜாவுக்கு எதிராக எந்தவித தனிப்பட்ட குற்றச்சாட்டுகளும் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

குருந்தூர்மலையில் ஆதிசிவன் மலை தொடர்பான வழக்கில் நீதியை வழங்கிய நீதிபதி ஒரு தமிழர் என்பதால் அவர் அச்சுறுத்தப்பட்டதாகவும், ஊடகங்களை சுதந்திரமாக இயங்கவிடமால் செய்வதற்காக பயங்கரவாத சட்டத்தை அமுவ்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாகவும் மு.தம்பிராசா குற்றம் சுமத்தியுள்ளார்.

 

“ரீ.சரவணராஜாவுக்கு ஏற்படுத்தப்பட்ட உயிர் அச்சுறுத்தல் நீதித்துறை மீதான தமிழ் மக்களின் நம்பிக்கையை இல்லாதாக்கியுள்ளது.”- மு. சந்திரகுமார்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா தனக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ள செய்தி இலங்கையின் நீதி துறைக்கு கழுவு முடியாத கறையாக  படிந்துள்ளது. நீதித்துறை  மீதான தமிழ் மக்களின் நம்பிக்கை உடைக்கப்பட்டுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

குருருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து  உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தான் வகித்து வந்த நீதிபதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார் என ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளன.

குருந்தூர்மலை வழக்கில் நீதிபதி வழங்கிய கட்டளைகளை மாற்றியமைக்குமாறு தொடர்ச்சியாக அரச தரப்பால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாகவும். அண்மையில் தனக்கான (நீதிபதிக்கான) பொலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டதாகவும்  அவர் தெரிவித்துள்ள அவர் தான் நீதிபதி பதவியினை இராஜினாம் செய்துள்ளார்.

இந்த நிலைமை இலங்கை நீதித்துறைக்கு மிகப்பெரும் அவமானம் என்பதோடு, தமிழ் மக்கள் இலங்கையின் நீதித்துறை மீது முழுமையான நம்பிக்கை இழக்கும் நிலைமைக்கு இட்டுச் செல்லும் சம்பவமாகவும் காணப்படுகிறது.

எனவே, இவ்வாறான நிலைமைகள் இனியும் நாட்டில் இடம்பெறாத வகையில் நீதித்துறையின் சுயாதீனம்  பாதுகாக்கப்படுவதோடு, நீதிதுறை பணியாளர்களின் சுதந்திரமான பணிகளுக்கும் அச்சுறுத்தல் இல்லாத சூழல் உருவாக்கப்படல் வேண்டும். தவறின்  நாடு மேலும் மேலும் நெருக்கடியான சூழல் நிலைக்குள் தள்ளப்படுவதோடு, எக்காலத்தில் நிலையான சமாதானமும், இனங்களுக்களுக்கிடையே நல்லிணக்கமும் ஏற்படாது போய்விடும் என முன்னாள் நாடாளுடன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.