பாடசாலை மாணவர்கள்

பாடசாலை மாணவர்கள்

இலங்கையில் வேகமாக பரவும் தொழுநோய் – நோயாளர்களின் 15 % மாணவர்கள்!

பாடசாலை மாணவர்களிடையே தொழுநோய் பரவுவது அதிகரித்துள்ளது என்று தேசிய தொழுநோய் பிரசாரம் கூறுகிறது.

இந்த வருடம் பதிவாகியுள்ள தொழுநோயாளிகளில் 15% பாடசாலை மாணவர்கள் என அதன் பணிப்பாளர் மருத்துவர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.

இந்த வருடத்தின் முதல் 7 மாதங்களில் இந்நாட்டில் இருந்து 450 தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அநுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் மேல் மாகாணத்திலும் இந்நோய் பரவும் அபாயம் அதிகம் எனவும் அவர் கூறினார்.