பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ்

பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ்

இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத சில நபர்களுக்காக சுமார் 5400 விசேட பாதுகாப்பு அதிகாரிகள் !

அமைச்சர்கள் அல்லது பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத சில நபர்களுக்காக சுமார் 5400 விசேட பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை கோரியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த விவகாரம் மறுஆய்வு செய்யப்படும் என்றும், அதன் பின்னர் விசேட பாதுகாப்பு அதிகாரிகள் நீக்கப்படுவார்கள் அல்லது சேவைத் தேவையின் அடிப்படையில் குறைக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் .