புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம்

எதிர்வரும் நான்கு வருடங்களில் 330 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் !

எதிர்வரும் நான்கு வருடங்களில் 330 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தேசிய மின் உற்பத்திக்கு 2300 மெகாவோட் மின்சாரத்தை சேர்க்கும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிசக்தி எரிசக்தி அமைச்சில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அரச நிறுவனங்களால் அனுமதிக்கப்படும் திட்டங்களை விரைவுபடுத்தவும், அங்கீகாரம் பெற முடியாத திட்டங்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக உரிமங்களை இரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் முதலீடு செய்ய ஐக்கிய அரபு அமீரகம் ஆர்வம் !

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் எரிசக்தி துறையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலீடுகளுக்கு அபரிமிதமான சாத்தியங்கள் இருப்பதாக,ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதுவர் காலித் நாசர் அல்அமெரி தெரிவித்துள்ளார்.

இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் முதலீடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக பிரதமர் தினேஷ் குணவர்தனவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு மேலதிகமாக விவசாயம் மற்றும் தொழில் துறைகள் போன்ற புதிய துறைகளில் முதலீடு செய்வதற்கு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இப்போது வாய்ப்புகள் உள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்காகவும், தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்து விரைவாக மீள உதவுவதற்காகவும் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஆதரவு மற்றும் உதவிகளுக்கு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பிரதமர் தெரிவித்தார்.