மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா

மன்னார் குழந்தை நல மருத்துவர் எங்கே ? குழந்தைகள் வவுனியா மருத்துவமனைக்கு இடமாற்றம் ! மருத்துவரை கைது செய்யக் கோரிக்கை ! 

மன்னார் குழந்தை நல மருத்துவர் எங்கே ? குழந்தைகள் வவுனியா மருத்துவமனைக்கு இடமாற்றம் ! மருத்துவரை கைது செய்யக் கோரிக்கை !

 

மன்னார் மாவட்ட குழந்தை நல மருத்துவர் கடமைக்கு வராமல் தலைமறைவானதைத் தொடர்ந்து குழந்தைகள் பிரிவில் சிகிச்சைபெற்றுவந்த குழந்தைகள் வவுனியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். எவ்வித முன்னறிவித்தலுமின்றி தலைமறைவாகியுள்ள இந்த மருத்துவர் தனது நண்பரொருவருக்கு அனுப்பிய குறும்செய்தியில் வேலையிலிருந்து விலகியதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் இதனை பலநாட்களாகியும் நிர்வாகத்திடம் தெரிவிக்கவில்லை. தொலைபேசியையும் துண்டித்துவிட்டு தொடர்பில்லாமல் இருந்துள்ளார்.

இலவசக் கல்வியில் கற்று மருத்துவத்துறைக்கு வந்தவர்கள் சில லட்சங்களை மாத வருமானமாகப் பெறுகின்றனர். இவர்கள் வெளிநாடுகளில் மருத்துவத்துறைக்கு உள்ள பற்றாக்குறையால் அதிக சம்பளத்தால் ஈர்க்கப்பட்டு வெளிநாடுகளுக்கு செல்வது அதிகரித்து வருகின்றது. இது இலங்கை போன்ற நாடுகளில் மட்;டுமல்லாது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள போலந்து போன்ற நாடுகளிலும் பாரிய பிரச்சினையாக உள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் புதிய சட்டவிதிமுறைகளையும் அபராதங்களையும் கொண்டுவர வேண்டிய அவசியம் உள்ளது.

இலவசக் கல்வியில் கற்று வெளியேறுகின்ற இவர்கள் குறைந்தது 5 முதல் 8 ஆண்டுகள் அரச மருத்துவமனைகளில் மட்டும் பணி செய்ய வேண்டும் என்றும் அதற்கு முன்னரே இவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதாக இருந்தால் ஆரம்பப் பள்ளி முதல் மருத்துவர்களை உருவாக்குவதற்கான செலவின் இரட்டிப்புத் தொகையை அபராதமாகச் செலுத்தி அவர்களை விடுவிக்கலாம் என்பது போன்ற விதிமுறைகள் அவசியம் என்கிறார் பிரித்தானியாவில் வாழும் இலங்கை மருத்துவ கலாநிதி ஜோசப் பெர்னான்டோ.

அவர் மேலும் குறிப்பிடுகையில். குறித்த குழந்தை நல மருத்துவர் மருத்துவ அசட்டையீனத்துக்காக கைது செய்யப்பட்டு சட்டத்தின்முன் நிறுத்தப்பட வேண்டும் என மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குழந்தையின் தந்தை தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

மன்னார் வைத்தியசாலையில் பெண் உயிரிழந்த விவகாரம் – சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்கிறார் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் !

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 27 ஆம் திகதி உயிரிழந்த இளம் குடும்பப் பெண் மரணம் தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணைகள் இடம் பெற்று வருவதோடு, குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை முடிவடைந்த நிலையில் உரிய தரப்பினருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா தெரிவித்தார்.

 

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 27 ஆம் திகதி பட்டதாரி இளம் குடும்ப பெண் மரியராஜ் சிந்துஜா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினராலும் வன்மையான கண்டனங்கள் முன்வைக்கப்பட்டது.

 

குறித்த பெண்ணின் மரணம் சம்பவ தினம் நோயாளர் விடுதியில் இருந்த வைத்தியர் மற்றும் பணியாளர்கள் அசட்டையீனம் காரணமாக இடம் பெற்றுள்ளதாக குறித்த பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

 

குறித்த மரணம் தொடர்பில் நீதியான விசாரணைகள் இடம்பெற்று உரிய வைத்தியர் மற்றும் கடமையில் இருந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டது.

 

இந்த நிலையில் நேற்றைய தினம் மாலை பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சென்று வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் வைத்தியர்களுடன் இணைந்து கலந்துரையாடலை மேற்கொண்டார்.

 

மன்னார் பொது வைத்தியசாலைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அனுமதியின்றி நுழைந்து பெண்கள் மகபேற்று விடுதிக்குள் பணியாற்றிய வைத்தியருக்கு இடையூறு விளைவித்த துடன் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு இடையூரை ஏற்படுத்திய வைத்தியர் அர்ஜுனாவின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.

 

மேலும் குறித்த பெண்ணின் மரணம் குறித்து நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் உரிய தரப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து மக்கள் மத்தியில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை மீது உள்ள அவநம்பிக்கை தகர்த் தெரியப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.