முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

“மஹிந்த ராஜபக்‌ஷவின் குடியுரிமையை பல சந்தர்ப்பங்களில் அழிக்க புலி ஆதரவாளர்கள் முயற்சித்தனர்.” – நாமல் ராஜபக்‌ஷ

மஹிந்த ராஜபக்‌ஷவின் குடியுரிமையை பல சந்தர்ப்பங்களில் அழிக்க புலி ஆதரவாளர்கள் உட்பட பல்வேறு குழுக்கள் முயற்சித்ததாக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் குடியுரிமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கையொப்ப சேகரிப்பு பிரசாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு பதிலளிக்கும் போதே நாமல் ராஜபக்‌ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புலிப் பயங்கரவாதிகளைத் தோற்கடித்து யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை இராணுவ நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற பின்னர் விடுதலைப் புலிகளின் அனுதாபிகள், சிவில் உரிமைகளை இல்லாதொழிக்க முயன்றனர் என்றார்.

அரகலயவின் போது மஹிந்த ராஜபக்‌ஷவை கொல்ல முயற்சித்தார்கள், தற்போது வரியை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கி பொருளாதாரத்தை வங்குரோத்து செய்ததாக கூறி குடியுரிமையை இல்லாதொழிக்க முயல்வதாகவும், இவை வெறும் பிரபலம் அடைவதற்காக எதிர்க்கட்சிகளின் நாடகங்கள் எனவும் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

பலஸ்தீன தூதரகத்திற்கு விஜயம் செய்தார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பலஸ்தீன மக்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கொழும்பில் உள்ள பலஸ்தீன தூதரகத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

பாலஸ்தீன தூதருடனான கலந்துரையாடலின் போது, ​​முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ, உலகில் எங்கும் பயங்கரவாதத்திற்கு இடமில்லை என்றும், போர் தீர்வு அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமைதியின் அவசரத்தை வலியுறுத்தியோதோடு இது இரு நாடுகளிலும் உள்ள பொதுமக்களுக்கு செழிப்புக்கான வாக்குறுதியைக் கொண்டுள்ளது என்றார்.

“பலஸ்தீனத்துடனான ஒற்றுமைக்கான இலங்கை சங்கத்தின் ஸ்தாபகராகவும் தலைவராகவும் நான் பலஸ்தீன நோக்கத்தை தொடர்ந்து ஆதரித்து வருகிறேன். யுத்தம் ஒருபோதும் தீர்வாகாது” என முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

“பலஸ்தீனம் சுயாதீன நாடாக இருப்பதற்கான சட்டப்படியான உரிமையை உறுதிப்படுத்த வேண்டும்.” – இலங்கை நாடாளுமன்றில் மகிந்த ராஜபக்ச !

பலஸ்தீனம் சுயாதீன நாடாக எழுவதற்கு சட்டப்படியான உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தாம் தொடர்ந்தும் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி  வேளையில் கிங்ஸ் நெல்சன் எம்பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

பலஸ்தீனத்தில் ஏழு தசாப்தங்களாக நிலவும் பிரச்சினையால் ஆயிரக்கணக்கான உயிர்களை அந்த நாடு இழந்துள்ளதுடன் மேலும் ஆயிரக் கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

சிறுவர்கள் முதல் அனைவரும் இந்த மோதல்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெருமளவான மக்கள் இன்னும் அகதிகளாகவே வாழ்கின்றனர்.அந்த அகதி முகாம்களை இலக்கு வைத்து தாக்குதல்களும் நடத்தப்படுகின்றன.

இதனை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதற்கு உலக நாட்டுத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அது தொடர்பில் இங்கே கலந்துரையாட வேண்டியது எமது கடமையாகும்.

பலஸ்தீனத்தை ஒரு நாடாக இலங்கை 1988 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொண்டது. அப்போதிலிருந்து இலங்கை அந்நாட்டு மக்களுக்காக குரல் கொடுத்து வருகின்றது. ஐ.நா மாநாட்டில் அரச தலைவராக உரையாற்றிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் அந்த மக்களுக்காக குரல் எழுப்பியுள்ளதுடன் அவர்களுக்கு உதவிகளையும் வழங்கியுள்ளோம்.

பலஸ்தீனம் சுயாதீன நாடாக எழுவதற்கு சட்டப்படியான உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் தொடர்ந்தும் உள்ளோம்.அந்த மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதனையும் நாம் வலியுறுத்துகின்றோம் என்றார்.