யாழ்ப்பாணம் போதைப்பொருள் பாவனை

யாழ்ப்பாணம் போதைப்பொருள் பாவனை

அதீத போதை; இளைஞன் சாவு!

அதீத போதை; இளைஞன் சாவு!

 

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் அதீத போதை காரணமாக கடந்த திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.

ஹெரோயின் போதைப்பொருளை அதீத அளவில் நுகர்ந்த நிலையிலேயே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாகவுலும், உயிரிழந்த இளைஞனுடன் இணைந்து போதைப்பொருளை நுகர்ந்த ஏனையவர்கள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழில் 75 கிலோ கஞ்சா மீட்பு !

யாழில் 75 கிலோ கஞ்சா மீட்பு !

யாழ். வல்வெட்டித்துறை பகுதியில் இராணுவப் புலனாய்வுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் பெருந் தொகையான கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட 75 கிலோ கிராமிற்கும் அதிகமான போதைப்பொருள் வல்வெட்டித்துறை காவல்துறையிடம் கையளிக்கப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் வல்வெட்டித்துறை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் ஜஸ் போதையுடன் போதை மாத்திரையும் சேர்ந்தது

யாழில் ஜஸ் போதையுடன் போதை மாத்திரையும் சேர்ந்தது

போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட இருவரை யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் மானிப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து 1600 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்களை வழிமறித்து சோதனையிட்ட போது அவர்களிடம் போதை மாத்திரைகள் கண்டு பிடிக்கப்பட்டது.

இருவரையும் பொலிஸார் கைது செய்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழில் பாடசாலை மாணவர்கள், மற்றும் இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க சமூகத்தின் அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும். பாடசாலைகள் இவ்விடயத்தில் சிறப்பு செயல்த்திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

யாழில் போதைப் பொருளுக்கு எதிரான புனர்வாழ்வு மையம் அமைக்கப்பட வேண்டும் ! பா உ சிறிபவானந்தராஜா

யாழில் போதைப் பொருளுக்கு எதிரான புனர்வாழ்வு மையம் அமைக்கப்பட வேண்டும் ! பா உ சிறிபவானந்தராஜா

 

யாழ் மாவட்டத்தில் போதைப் பொருட்களின் பாவனை அதிகரித்துள்ளதை நீதி அமைச்சு முப்படைகளின் துணையோடு கட்டுப்படுத்த வேண்டும். போதைவஸ்தால் பெருமளவு யாழ் மாவட்டம் பாதிக்கப்பட்டுள்ளதால் யாழில் போதைப்பொருளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு முகாம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என இன்று நடைபெற்ற குழநிலை விவாதத்தில் யாழ் மாவட்ட பா உ சிறி பவானந்தராஜா நீதி அமைச்சரைக் கேட்டுக்கொண்டார். அவர் பேசிக்கொண்டிருக்கின்ற போதே யாழ் சுதுமலையில் மிகப்பெரும் தொகையான போதைப்பொருள் படையினரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை சுதந்திரமடைந்தது முதல் ஆட்சிக்கு வந்தவர்கள் நீதியின்பால் செயற்படாமல் இனவாதங்களைத் தூண்டி நாட்டில் சமாதானத்தையும் ஒற்றுமையையும் அழித்துள்ளனர். எங்களுடைய ஆட்சியில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றும் இனிமேல் இனங்களிடேயேயான ஒற்றுமையைச் சீர்குலைக்க விடமாட்டோம் என சிறிபவானந்தராஜா தெரிவித்தார்.

அவர் தனது உரையில் அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட வேண்டும், நீதிமன்றங்களில் மொழிபெயர்ப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும், மனிதப்புதைகுழிகள் பற்றிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும், காணாமலாக்கப்பட்டவர்களுடைய பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் போன்ற விடயங்களையும் தனது உரையில் வலியுறுத்தினார்

அவர் மேலும் தெரிவிக்கையில் வன்முறைக்குளுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளது அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் யாழ் சிறைச்சாலையில் 200 வரையானோர் பணிக்கு தேவையான போதும் 120 வரையானோரே உள்ளனர் என்றும் இந்த வெற்றிடங்களை நிரப்புமாறும் பா சிறிபவானந்தராஜா கேட்டுக்கொண்டார். மேலும் மல்லாகம் நீதிமன்றத்துக்கு இன்னுமொரு நீதிபதியின் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

நுவரெலியாவிடமிருந்த முதலாவது ஸ்தானத்தை யாழ்பாணம் பறித்துவிட்டது – அமைச்சர் சந்திரசேகர்

நுவரெலியாவிடமிருந்த முதலாவது ஸ்தானத்தை யாழ்பாணம் பறித்துவிட்டது – அமைச்சர் சந்திரசேகர்

 

மதுபாவனையில் நுவரெலியாவிடமிருந்த முதலாவது ஸ்தானத்தை யாழ்பாணம் தட்டிப்பறித்துவிட்டது என கடற்தொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் நேற்று யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் நடந்த மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் தெரிவித்தார்.

அதில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் சந்திரசேகர்,

உலகத்தில் இரண்டாவது குடிகார நாடு இலங்கையாக உள்ளது. ஒரு காலத்தில் இலங்கை என்கின்ற இரண்டாவது குடிகார நாட்டில் கூடுதலான குடிகாரர்கள் நுவரெலியாவில் இருந்தார்கள். அது எங்களுடைய மாவட்டம். ஆனால் இன்றைக்கு எங்களிடமிருந்த முதலாவது ஸ்தானத்தை யாழ்ப்பாணம் தட்டிப் பறித்து விட்டது. யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகளுக்குப் பின்பும் 89 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதவைப் பெண்களின் ஓலம் ஒன்றும் கேட்கின்றது. அன்று 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிள்ளைகள் தங்களுடைய பெற்றோர்களை இழந்து அனாதை இல்லங்களில் இருக்கின்றார்கள்.

அண்மையில் என்னை சந்தித்த அனாதை இல்லம் ஒன்றின் தாயார், எங்களுடைய பிள்ளைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள் எங்களுடைய பண்புகள் பெண் பிள்ளைகளை பாதுகாத்துக் கொள்ள முடியாமல் நாங்கள் தவிக்கின்றோம் அவர்கள் சீரழிக்கப்படுகின்றார்கள் என்று கூறினார். கடந்த காலங்களில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் எங்களுடைய பெண்கள் எல்லாரையும் தேடித் தேடி கடன் வழங்கின. வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டவர்களில் கூடுதலானோர் வன்னி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதுதான் இன்று எங்களுடைய வட மாகாணம்.

பொதுப்போக்குவரத்தில் பயணிக்கும் பெண்களில் 99 வீதமானோர் வாழ்க்கையில் ஒரு நாளாவது பாலியல் இம்சைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்று சொல்லப்படுகின்றது. அதில் தான் எங்களுடைய மனைவி, தங்கைகள், மகள்கள் பயணிக்கின்றனர். இந்த நிலை நாளைக்கு தொடர வேண்டுமா? அந்த அளவுக்கு நிலைமை சீரழிந்து போயுள்ளது என்றார்

யாழ்ப்பாண மாணவர்களிடையே வேகமெடுக்கும் போதைப்பொருள் பாவனை – மௌனம் காக்கும் கற்ற சமூகம் !

யாழ்ப்பாண மாணவர்களிடையே வேகமெடுக்கும் போதைப்பொருள் பாவனை – மௌனம் காக்கும் கற்ற சமூகம் !

யாழ்ப்பாண நகர்ப்புற பாடசாலைகள் தொடங்கி பல பகுதிகளிலும் ஊசி உள்ளிட்ட போதைப்பொருள் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் இது தொடர்பில் யாழ்ப்பாண உயர் மட்ட அதிகாரிகள் தொடங்கி சமூக செயற்பாட்டாளர்கள் வரை யாரும் கவனம் செலுத்த முனைவதில்லை எனவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

அண்மையில் யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் இரு மாணவர்கள் அதீத போதையுடன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர். மாணவர்கள் இருவரும் போதை மாத்திரைகளை உட்கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்தது.

வாட்ஸ் அப் செயலி ஊடாக மாணவர்களை உள்ளடக்கிய குழுக்கள் ஊடாக போதை மாத்திரை விநியோகங்கள் நடைபெற்று வருவதாக யாழில் பரவலான குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றது. எனினும் இவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான பொலிஸாரின் நடவடிக்கைகள் அத்தனை காத்திரமானதாக இல்லை என்கிறார்கள் சமூக செயற்பாட்டாளர்கள்.

இதேவேளை ஊசிமூலம் போதைப்பொருளை கையில் நாளத்தினூடாக ஏற்றி பாவித்தன் மூலம் பாதிக்கப்பட்ட பருத்தித்துறையை சேர்ந்த 14 வயது பாடசாலை மாணவன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

சமூகத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு தொடர்பில் தமிழ்தேசிய தலைவர்கள் சின்ன அழுத்தத்தை கூட வழங்குவதில்லை என அண்மையில் தேசம் திரை நேர்காணலில் ஊடகவியலாளர் தமிழ்செல்வன் குற்றஞ்சாட்டியிருந்தார். கண்முன்னே எதிர்கால தலைமுறையினர் போதைப்பொருள் பாவனையால் அழிந்து போவதை தடுக்க திராணியற்ற இந்த தலைவர்கள் தமிழ்தேசியம் என்ற பெயரால் பெறப்போகும் நிலத்தில் வாழ யாரும் மிஞ்சியிருக்க மாட்டார்கள் எனவும் தமிழ்செல்வன் விசனம் வெளியிட்டிருந்தார்.

20 கிலோ 175 கிராம் கஞ்சா போதை பொருட்களுடன் யாழ்ப்பாணத்தில் இளைஞன் கைது !

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் (02) குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்ட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், வவுனியா பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.

மேலும் இளைஞனிடம் இருந்து 20 கிலோ 175 கிராம் கஞ்சா போதை பொருட்களையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட கஞ்சா போதைப்பொருட்களையும் , கைது செய்யப்பட்ட இளைஞனையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண காவல் நிலையத்தில் விசேட அதிரடி படையினர் ஒப்படைத்துள்ளனர்.

 

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை !

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஆறு பேரை புதன்கிழமை (03) புதன்கிழமை யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

கைது செய்யப்பட்டவர்கள் குருநகர் மற்றும் நாவாந்துறை பகுதியை சேர்ந்த 18 வயதிற்கும் 21 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என்றும் , பொலிஸ் நிலையத்தில் அவர்களைத் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலைக்கு அருகில் வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் கும்பல் ஒன்று ஈடுபட்டு வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் குழுவினர் , போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இருவரை மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் மூவரைக் கைது செய்தனர்.

 

பாடசாலைக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்ட ஐவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள் ளனர்.

 

அதேவேளை . நாவாந்துறை பகுதியில் முச்சக்கர வண்டியில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட வேளை முச்சக்கர வண்டியுடன் தப்பியோடியவரை பொலிஸார் துரத்திய போது , முச்சக்கர வண்டியை , நாவாந்துறை சந்தை பகுதியில் கைவிட்டுத் தப்பி செல்ல முற்பட்ட வேளை பொலிஸார் அவரை கைது செய்தனர்.

 

அவ்வேளை முச்சக்கர வண்டியை சோதனையிட்ட போது அதனுள் இருந்து 300 போதை மாத்திரைகளை பொலிஸார் மீட்டனர்.

 

அதனை அடுத்து சந்தேக நபரைக் கைது செய்த பொலிஸார் , முச்சக்கர வண்டியையும் மீட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்று சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழில். மாணவர்களுக்கு போதைப்பாக்கு விற்பனை – பெண் ஒருவர் கைது !

யாழில். மாணவர்களுக்கு போதைப்பாக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

அச்சுவேலி மற்றும் வல்லை பகுதிகளில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பாக்கு விற்பனையில் பெண்ணொருவர் ஈடுபட்டுள்ளார் என அச்சுவேலி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலையே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

பெண்ணை கைது செய்யும் போது , அவரது உடைமையில் இருந்து ஒன்றரை லீட்டர் கசிப்பு மற்றும் கஞ்சா கலந்த மாவா பாக்கு ஒரு தொகை என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருள் வாங்குவதற்கு பணம் இல்லை – யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் கொள்வனவு செய்ய பணம் கிடைக்காதமையால் குடும்பஸ்தர் ஒருவர் உயிர்மாய்த்துள்ளார்.

 

போதைப்பொருள் வாங்குவதற்காக தனது சகோதரி மற்றும் தாயாரிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) பணம் கேட்டு, வீட்டில் குழப்பத்தில் ஈடுபட்ட குடும்பஸ்தருக்கு, வீட்டார் பணம் கொடுக்காததால், தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.

 

குறித்த குடுப்பஸ்தருக்கு திருமணமாகி 05 வயதில் பிள்ளை இருக்கும் நிலையில், அதீத போதைப்பொருள் பாவனையால், குடும்ப வன்முறைகளிலும் ஈடுபட்டு வந்தமையால், அவரது மனைவி பிள்ளை அவரை விட்டு பிரிந்து வாழ்வதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.