வாள்வெட்டு குழுவினரை பாதுகாத்து பிணை எடுக்கும் சர்ச்சை பெண் சட்டத்தரணி சர்மினி
கொள்ளையை தடுக்க வந்த நபரின் கைவிரல் வெட்டிய சந்தேகத்திற்குரிய பிரதான வாள்வெட்டுக்காரர்கள் மூவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் 3ஆம் திகதி கொக்குவில் ஞானபண்டிதா பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற வாள் வெட்டில் நபரொருவரின் கைவிரல் வெட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, காயமடைந்த நபர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு கைவிரல் பொருத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் கைதான சந்தேக நபர்களிடமிருந்து வாள்கள் மற்றும் ஹெரோயின் போதைபொருள் கைபற்றப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை இந்த வாள்வெட்டு குழுவின் தலைவனாக செயற்படும் நபரை சட்டத்தரணி சர்மினி பொலிஸில் தன் சொந்த வாகனத்தில் கொண்டு வந்து பாரப்படுத்தியுள்ளார்.
சம்பந்தப்பட்ட வாள் வெட்டுக்குழுவின் வழக்குகளுக்கு சட்டத்தரணி சர்மினியே ஆஜராவதாகவும் தெரியவந்துள்ளது. வழமையாகவே சட்டத்தரணி சர்மினி பாலியல் குற்றவாளிகளுக்கும் , சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் சமூகவிரோதிகளுக்குமே வழக்குகள் பேசுவதாக கூறப்படுகிறது.
இஞ்தேவேளை யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் பல பகுதிகளிலும் சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோர் தம்முடைய பண பலத்தை பயன்படுத்தி பிணையில் வெளியே வருவது வாடிக்கையாகி விட்டதாக மக்கள் பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இவ்வாறு பிணையில் வெளியே வருபவர்கள் மீண்டும் தமது வாள்வெட்டு தொடங்கி போதைப்பொருள் கடத்தல் வரையான சமூக சீரழிவு செயற்பாடுகளிலும் தைரியமாக ஈடுபடுவதை அவதானிக்க முடிகிறது. காப்பாற்ற சட்டத்தரணி சர்மினி மற்றும் விஸ்வலிங்கம் திருக்குமரன் மற்றும் கனகரட்ணம் சுகாஷ் போன்றோர் இருக்கும்வரை சமூக விரோத நடவடிக்கைகள் தொடரும் .