யாழ்ப்பாண பல்கலைக்கழகம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகம்

யாழ் பல்கலைக்கழக ஆண்கள் ஒன்றியம் – பெண்களின் நிர்வாணத்தை அரசியலாக்கும் யாழ் ஆண் மையவாதம்!

யாழ் பல்கலைக்கழக ஆண்கள் ஒன்றியம் – பெண்களின் நிர்வாணத்தை அரசியலாக்கும் யாழ் ஆண் மையவாதம்!

 

“இந்த மண் எங்களின் சொந்த மண், இதன் எல்லைகள் மீறி யார் வந்தவன். நிலைகள் தளர்ந்து தலைகள் குனிந்து நின்றது போதும் தமிழா“ என்ற புலிகளின் பாடல் வரிகளுடன் யாழ்ப்பாண பல்கழகத்தின் அனைத்து பீட மாணவர் ஒன்றியத்துக்கான 2025ஆம் ஆண்டுக்கான நிர்வாக குழு அறிவிக்கப்பட்டுள்ளது. 75 வீதத்திற்கும் அதிகமான பெண் மாணவிகளைக் கொண்ட யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் மாணவர் ஒன்றிய நிர்வாகத் தெரிவில் வழமை போலவே இந்த ஆண்டிலும் பெண்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தொடர்ந்தும் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர் ஒன்றியமானது பெண்களை நிர்வாக பொறுப்புக்களில் இருந்து நிராகரித்து வருவது வடக்கின் உயர் கல்வி நிலையமானது ஆணாதிக்க சிந்தனையை கொண்டுள்ளது என்பதன் வெளிப்பாடேயாகும். சமூகத்துக்கு எடுத்துக்காட்டாகச் செயற்பட வேண்டிய எதிர்காலத் தலைவர்கள் தமிழ் தேசியக் கட்சிகளுக்கு நோட்டீஸ் ஒட்டுபவர்களாகி அவர்களுடைய உதவாக்கரை யாழ் ஆண் ஆதிக்க சைவ வெள்ளாளச் சிந்தனையில் ஊறிப்போய் விட்டதையே இது வெளிப்படுத்துகின்றது.

தங்களுடைய சக மாணவிகள் சுரண்டலுக்கு உள்ளாவது பற்றி எவ்வித கரிசனையும் இல்லாது, பேராசிரியர்களுக்கு கூட்டிக்கொடுக்கும் வேலையையே இவர்கள் செய்கிறார்களா என்று கேள்வி எழுப்புமளவிற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் உள்ளனர். அவர்களுடைய ஒன்றியத்தில் பெண்கள் குரலிழந்துள்ளனர்.

மேலும் ஆங்காங்கே சில பீடங்களுக்குரிய ஒன்றியங்களில் பெண் மாணவிகள் சிலர் உள்வாங்கப்பட்டாலும் அவர்கள் சுயமாக இயங்குவதற்குரிய சூழல்கள் இருப்பதில்லை. அவர்கள் ஒன்றியத்தினருக்கும் நிர்வாகத்தினருக்கும் ஜால்ரா அடிப்பவர்களாகவும், ஊடக சந்திப்பில் பின்னணியில் அமரவைக்கப்பட்டு பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது என்று காட்டவுமே பயன்படுத்தப்படுகின்றனர்.

ஈழத்தில் மேலெழுந்து வரும் ஆண் மையவாதத்துக்கு யாழ்ப்பல்கலைக்கழகும் சிறந்த சான்றாகிறது. ஏற்கனவே இலங்கையில் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் பரீட்சையில் சித்தியடைய வேண்டுமானால் மாணவிகள் பாலியல் இலஞ்சம் வழங்க வேண்டியிருப்பதாக கூறப்படுகிறது. பல்கலைக்கழக வாளகத்தில் மேற்கொள்ளப்படும் இந்த பாலியல் சுரண்டல் பற்றிய செய்திகளை சிங்கள தொலைக்காட்சி நாடகங்களில் கூட பதிவு செய்கின்றார்கள்.

வடக்கை பொறுத்தவரை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அதுவும் கலைப்பீடத்தில் இக்குற்றச் சாட்டு நீண்டகாலமாக இருந்து வருகிறது. இது தொடர்பில் இதுவரை பல்கலைக்கழக மட்டத்தில் கூட எந்த விசாரணைகளும் இடம்பெறவில்லை. யாழ்பல்கலைக்கழக துணைவேந்தர் சிவக்கொழுந்து ஸ்ரீசற்குணராஜா கூட இந்த விடயம் தொடர்பில் பேசியுள்ளார். அவர் சம்பந்தப்பட்ட பாலியல் தொல்லைகள் கொடுக்கும் விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கவில்லை. மாறாக பல்கலைக்கழக மாணவிகளையே கவனமாக இருக்கும்படி எச்சரிக்கிறார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை பெண் மாணவிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க பெண் விரிவுரையாளர்களும் தயாராக இல்லை. அவர்களும் கூட அதே ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பை உடைத்துக் கொண்டு வெளியே வர முடிவதில்லை.

இப்படியான பல்கலைக்கழக சூழலில் புதிய தலைமுறையைச் சேர்ந்த மாணவர்கள் கூட ஆணாதிக்க சிந்தனையுடைய பேராசிரியர்களால் வழிநடத்தப்படும் அபத்தம் யாழ்.பல்கலைகழகத்தில் தொடர்கிறது.

சிங்களவர்கள் எங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரவில்லை, எங்களுடைய சுயநிர்ணய உரிமையை வழங்க தயாராக இல்லை என குரல் கொடுக்கும் யாழ் பல்கலைக்கழகம். கணிசமானளவு சிங்கள மற்றும் முஸ்லிம் மாணவர்கள் படிக்கும் யாழ்ப் பல்கலைகழகத்தின் எந்த மாணவர் நிர்வாக அமைப்பிற்குள்ளும் சிங்கள மற்றும் முஸ்லிம் மாணவர்களையும் உள்வாங்க யாழ்ப்பாண பல்கலைகழகச் சமூகமானது தயாராக இல்லை. தம்மினத்திற்குள்ளேயே இருக்கும் பெண்களுக்கே உரிய பிரதிநித்துவம் கொடுக்க தயாராக இல்லாத யாழ்ப்பல்கலைக்கழக சமூகம் எப்படி ஏனைய இன, மத மாணவர்களை உள்வாங்கும் எனவும் கேள்வி எழுப்பப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் நடந்த காலத்தில் பல்வேறு இயக்களிலும் பெண்கள் உள்வாங்கப்பட்டிருந்தனர். குறிப்பாக புலிகள் இயக்கத்தில் பெண்கள் தளபதிகளாகவும், தனிப் படையணிகளையே வழிநடத்தும் வீரமங்கைகளாக திகழ்ந்திருந்தனர். ஆணாதிக்க கற்பிதங்களை கேள்விக்குட்பத்திய பெண் புலிகள் எடுத்துக்காட்டாக விளங்கியிருந்தனர். ஆனால் இந்நிலமை போரின் பின் தலைகீழாக மாறியுள்ளது.

இதனை எழுத்தாளர் பா. ரவீந்திரன் பின்வருமாறு தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். “ஆணாதிக்க கற்பிதங்களை நொருக்கிக்காட்டிய புலிகள் அமைப்பிலிருந்த பெண்களை பெருமையாக கொண்டாட வேண்டிய சமூகம், போரின் பின் அதே போர்க்குணத்தை, பெண்மைக்கு ‘எதிரானதாக நிறுத்திய அவலம் நடந்தது. அவர்களை திருமணம் செய்யவே பின்நின்றார்கள். இதன்வழி வந்த இன்றைய எம்பி அர்ச்சுனா போன்ற கலாச்சார காவலர்கள் யூரியூப் தொடக்கம் பாராளுமன்றம் வரை போய் பேசுகிற பேச்சுக்களில் யாழ்ப்பாண ஆண்மையவாத அறிவு கிழிந்து தொங்குகிறது” என எழுத்தாளர் ரவீந்தரனின் கூறுகிறார்.

எம்பி அர்ச்சுனா ஒரு சாமானிய பெண் சாளினியை பாராளுமன்றத்தில் விபச்சாரி என்று கூறியதும் சட்டத்தரணியும் மற்றும் அரசியல் செயற்பாட்டாளருமான ஸ்சுவஸ்திகா அருளிங்கத்தை அரசியல் விபச்சாரி எனக் குறிப்பிட்டதும் யாழ்ப்பாண ஆணாதிக்க மொழி மற்றும் ஆணாதிக்க ஒழுக்கவாதத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது. எம்பி அர்ச்சனா பெண்கள் தொடர்பில் வெளிப்படுத்தி வரும் கருத்துக்களை தமிழ்த்தேசியம் பேசும் ஏனைய தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் கூட கண்டிக்கவில்லை. அவர்களும் அதே ஆண் மைய அரசியலையே முன்னெடுக்கின்றனர்.

தமிழரசுக் கட்சி உட்பட அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளிலும் கூட பெண்களுக்கு போதிய இடம் வழங்கப்படவில்லை. கட்சி நிர்வாகத்திலும் கூட பெண்கள் பிரதிநிதித்துவம் உரிய முறையில் வழங்கப்படவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் குறைந்தபட்சம் 25 வீதம் பெண்கள் உள்வாங்கப்பட வேண்டும். அப்படியிருந்தும் எ‌ந்த தமிழ்த் தேசியக் கட்சிகளும் கிராம மட்டத்திலிருந்து பெண்களை

கட்சிக்குள் உள்வாங்கி அரசியலில் ஈடுபடுத்துவது இல்லை. தேர்தல் சமயங்களில் மட்டும் வேட்பு மனுக்களில் பெண்கள் பெயர்களை காணலாம். பெரும்பாலும் வேட்பு மனுக்களில் பெயர் குறிப்பிடப்படும்

பெணகள் பிரதான ஆண் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து கொடுக்கவே பயன்படுத்தப்படுகின்றனர்.

 

இறுதியாக யாழ்ப்பாண ஆணாதிக்க மையவாதம் முகநூலில் போலிக் கணக்குகளைத் திறந்து பெண்களின் நிர்வாண படங்களை பகிர்ந்து பெண்ணடிமைத்தனத்தின் உச்சத்தை தொட்டிருக்கின்றது. இந்த போலிக் கணக்குகளில் பகிரப்படும் நிர்வாண படங்கள் மூலம் தமிழ்ப் பெண்களுக்கு ஒரு மிகப் பெரிய செய்தியை சொல்கிறார்கள். பெண்கள் ஆகிய நீங்கள் பொதுவெளியில் சுயமாக இயங்கினால் நீங்கள் முடக்கப்படுவீர்கள். அடித்து நொறுக்கி மூலையில் இருத்தப்படுவீர்கள். விபச்சாரிகள் என்று முத்திரை குத்தப்படுவீர்கள்.

 

யாழ்ப்பாண ஆணாதிக்க சமூகத்தின் பிரதிநிதியாக உமாச்சந்திரப் பிரகாஸ் மற்றும் கௌசல்யா நரேன் போன்ற தமிழ்ப் பெண்கள் இருக்கும் வரை ஆண்களுக்கு பிரச்சினை இல்லை. முகமூடி அணிந்த தமிழ் தலிபான்களான அர்ச்சுனா கும்பலின் நிர்வாணப்படுத்தலைக் கண்டு தமிழ் பெண்கள் அச்சப்படத் தேவையில்லை. தங்கள் நிர்வாணப் படங்களைப் போட்டு வாக்குச் சேர்க்கும் பொறுக்கிகள் தான் அச்சப்பட வேண்டும். அவமானப்பட வேண்டும். தமிழ்ப் பெண்கள் இந்தத் தருணத்தில் ஒன்று திரண்டு பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.

யாழ் பல்கலைக்கழகம் புதிய சிந்தனைக்கு திறக்கப்பட வேண்டும் ! புதிய தலைமை வேண்டும் !

யாழ் பல்கலைக்கழகம் புதிய சிந்தனைக்கு திறக்கப்பட வேண்டும் ! புதிய தலைமை வேண்டும் !

 

பாலியல் சுரண்டல் , பாலியல் இலஞ்சம் கோரும் யாழ் பல்கலை நிர்வாகம் கிளீன் செய்யப்பட வேண்டும்

யாழ் பல்கலைக்கழக முதலாவது மாணவர் ஒன்றியத்தை ஆரம்பித்தன் பின்நின்ற சமூக அரசியல் செயற்பாட்டாளர் நல்லதம்பி ஜெயபாலன்

 

யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்களுக்கிடையில் கைகலப்பு – இருவர் மருத்துவமனையில்.

யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்களுக்கிடையில் கைகலப்பு – இருவர் மருத்துவமனையில்.

 

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர்களிடையே நேற்றுமுன்தினம் ஏற்பட்ட மோதலில் இரண்டு மாணவர்கள் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வின்போது 3ஆம் மற்றும் 4ஆம் ஆண்டு மாணவர்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் இருவர் காயடைந்துள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இவ்வாறான மோதல் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன. புதுமுக மாணவர் வரவேற்பு நிகழ்வு, கலைவாரம் உட்பட்ட நிகழ்வுகள் சுமூகமாக இடம்பெறுவதே சவாலாக காணப்படுகின்றது. கலைவார நிகழ்வுகளுக்கு தொடர்ச்சியாக நிர்வாகம் தடைவிதித்த வரலாறுகளும் உண்டு.

“யாழ் பல்கலையில் தேசியக் கொடியை இறக்கி கறுப்புக்கொடி ஏற்றியவர்கள் கைது செய்யப்பட வேண்டும்” மொட்டு பா உ சரத் வீரசேகர

“யாழ் பல்கலையில் தேசியக் கொடியை இறக்கி கறுப்புக்கொடி ஏற்றியவர்கள் கைது செய்யப்பட வேண்டும்” மொட்டு பா உ சரத் வீரசேகர

யாழ். பல்கலைக்கழகத்தில் தேசியக் கொடியை கீழே இறக்கி கறுப்புக் கொடியை ஏற்றிய சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் உரிய தரப்பினருக்கு எதிராக அரசாங்கம் கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தேசியக் கொடியை கீழே இறக்கி அங்கு கறுப்புக்கொடியேற்றியமை நாட்டுக்கு மாத்திரமல்ல ஆங்கிலேயர்களிடமிருந்து நாட்டை மீட்க போராடிய இராணுவ வீரர்களுக்கு செய்யும் அகௌரவமாகும். வக்கிர குணம் உள்ளவர்களால் மாத்திரமே இவ்வாறு நடந்துகொள்ள முடியும்.

யாழ். பல்கலைக்கழகம் ஏனைய பல்கலைக்கழகங்களை போன்று இந்த நாட்டு மக்களின் வரிப்பணத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது. எனவே இவ்வாறு நடந்துகொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்கு அனுமதி அளித்தமை தொடர்பில் யாழ். பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மற்றும் அதன் நிர்வாகம் பொறுப்புக்கூற வேண்டும். விடயத்துடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்றார்.

நடிகர் திலகம் ரகுராமின் ராஜினாமா நாடகம் முடிவுக்கு வந்தது – தமிழோ சிங்களமோ அதிகாரம் நன்றாக நாடகம் போடும் !

நடிகர் திலகம் ரகுராமின் ராஜினாமா நாடகம் முடிவுக்கு வந்தது – தமிழோ சிங்களமோ அதிகாரம் நன்றாக நாடகம் போடும் !
பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரகுராமின் பதவி விலகல் நாடகம் முடிவுக்கு வந்துள்ளது. தேசம்நெற்றில் குறிப்பிட்டது போலவேஇ மீண்டும் ரகுராம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடாதிபதியாக தொடரவுள்ளார். கலைத்துறையின் காமுகப் பேராசிரியர்களுக்கு இருந்த பதட்டங்கள் தணிந்தது. பீடாதிபதி ரகுராம் இருக்கும் வரை அவர்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை. கடந்த காலங்களில் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக மாணவர்கள் மேற்கொண்ட போராட்டங்கள் எடுபடவில்லை. பல லட்சம் சம்பளத்தோடு அதிகார மையங்களாக இவர்கள் மாணவியரிடம் பாலியல் லஞ்சம் கோரி முகர்ந்து எறிந்துவிடுகின்றார்கள். பல பெண்கள் தற்போதைய நிலையால் அச்சமடைந்து போயுள்ளனர். முத்தையா யோகேஸ்வரி வலிந்து காணாமலாக்கப்பட்டது போல் தங்களுக்கும் நிகழுமோ என அஞ்சுகின்றன.
மாணவர்கள் சிலருக்கு விதிக்கப்பட்டிருந்த வகுப்புத்தடையை பேரவை நீக்கியதையடுத்து பேரவையின் முடிவில் தாம் அதிருப்தியுறுவதாக தெரிவித்து ரகுராம் பதவி விலகியிருந்தார். கலைப்பீடாதிபதி ரகுராமுக்கும் கலைப்பீடத்தில்லிருந்த எஸ் சிவகஜன் அணிக்கும் இருந்த முரண்பாடு போதைவஸ்து எதிரான ரகுராமின் முயற்சிகளுக்கான தடையாக மாற்றப்பட்டு பல்கலைக்கழக காமுகர்களின் செல்வாக்கினால் ஆசிரியர் சங்கம் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்தது. ரகுராமுக்கு சார்பான கலைப்பீட மாணவர் ஒன்றியமும் தனது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தது.
இதையடுத்து இந்த விவகாரத்தில் கல்வி அமைச்சு தலையிட்டு மாணவர்களுடைய கல்விச் செயற்பாடுகளை சிதைக்க வேண்டாம் எனச் சுட்டிக்காட்டி வேலைநிறுத்தத்தை கைவிடுமாறும் கலந்துரையாடல் மூலம் தீர்வு காணப்படும் என்றும் அறிவித்திருந்தது. சம்பவம் தொடர்பிலான அறிக்கையொன்றையும் கல்வி அமைச்சு கோரியிருந்தது.
சம்பவம் தொடர்பான அறிக்கை கல்வி அமைச்சுக்கு அனுப்பிவைக்கபட்டுள்ளது என்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனவும் துணைவேந்தர் சிறிசற்குணராஜா தனியார் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். விரிவுரையாளர்கள் பேராசிரியர்கள் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்கிறார்கள் என்று வெளிப்படையாகக் குற்றம்சாட்டிய துணைவேந்தர் சிவக்கொழுந்து சற்குணராஜாவால் கூட யாழ் பல்கலைக்கழகத்தின் காமுகர்களுக்கு எதிராகச் செயற்பட முடியவில்லை.
ஆசிரியர் சங்கம் வேலைநிறுத்தத்தை கைவிட்டுள்ளதாகவும் துணைவேந்தரை பதவியிலிருந்து நீக்கும் முயற்சிகள் வெற்றிகரமாக மாணவர் ஒன்றியத்தால் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்த சிவகஜன் தனது முகநூலில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் நீதிமன்ற நடவடிக்கைகளை நோக்கி நகரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கலைப்பீட மாணவர் ஒன்றியத்திலிருந்து அதன் செயலாளர் ச. ரிசிவரன் மற்றும் பொருளாளர் ச. கிருத்திகன் விலகியுள்ளனர். கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் ம.சோமபாலன் ரகுராமுக்கு ஆதரவாக நடத்திய ஊடகசந்திப்பில் வெளியிட்டுள்ள கலைப்பீடத்தின் அனைத்து அணி மாணவர்களும் தகவல்களை மறுப்பதாகவும், அதற்கு எதிர்ப்பினையும் கண்டனங்களையும் வெளியிடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் மாணவர்கள் போடும் குழாயடிச் சண்டையில் அவர்களது வண்டவாளங்கள் எல்லாம் வெளிவர ஆரம்பித்துள்ளன. ரகுராமுக்கு ஆதரவு தெரிவித்த சோமபாலன் சக மாணவர்களுக்கு போதைப்பாக்கு வாங்கி கொடுத்தே பதவிக்கு வந்துள்ளதாகவும் சக மாணவர் ஒருவர் முகநூலில் தெரிவித்துள்ளார். மேலும் சோமபாலன் கலைப்பீடாதிபதி ரகுராமிடம் மதுப் போத்தல்களுடன் கையும்களவுமாக பிடிபட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
வெளிவிவருகின்ற தகவல்கள் எல்லாம் கலைப்பீடம் எந்தளவு தூரம் சீரழிந்துபோயுள்ளது என்பதையே வெளிப்படுத்துகின்றன. மாணவர்களை வழிப்படுத்த வேண்டியவர்களும் அதிகாரத்திலிருப்பவர்களும் பாலியல் குற்றவாளிகளாகவும், ஊழல்வாதிகளாகவும், சமூகப் பொறுப்பற்றவர்களாகவும் இருந்தமையால் மாணவர்களின் குற்றங்களை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.
என்.பி.பி அரசாங்கம் கிளீன் சிறிலங்காவின் ஒரு அங்கமாக கிளீன் யப்னா (Clean Jaffna) யுனிவெசிற்றி என்ற திட்டத்தை அமுல்படுத்தி ஒட்டுமொத்த பல்கலைக்கழகத்தையும் திருத்தி எடுக்க வேண்டும். ஒரு பெண் ஹரிணி அமரசூரிய பிரதமராகவும் உயர் கல்வி அமைச்சராகவும் உள்ள இந்த சூழலில் யாழ் பல்கலைக்கழகத்தில் பெண்கள் எவ்வித ஆபத்தும் இல்லாமல பாலியல் லஞ்சம் கேட்டு கொடுமைப்படுத்தப்படாமல் போதைப் பொருள் பயமற்ற ஒரு கல்வி மையமாக யாழ் பல்கலைக்கழகம் மாற்றப்பட வேண்டும். அதற்கு பல்கலைக்கழகத்தில் பாலியல் லஞ்சம் கேட்ட விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், பீடாதிபதிகள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட வேண்டும். வாய்மையைப் பொய்மை என்றென்றும் வெல்லலமோ ? பாதிக்கப்பட்ட பெண்களின் பாவம் பீடாதிபதி ரகுராமை விடாது துரத்தும்

‘கல்விச் செயற்பாடுகளைத் சீர்குலைக்க வேண்டாம் – வேலை நிறுத்தத்தை நிறுத்துங்கள்’ அமைச்சர் உத்தரவு

‘கல்விச் செயற்பாடுகளைத் சீர்குலைக்க வேண்டாம் – வேலை நிறுத்தத்தை நிறுத்துங்கள்’ அமைச்சர் உத்தரவு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விவகாரத்தில் அரசாங்கம் தீர்வை வழங்கும். எனவே வேலை நிறுத்தங்களில் ஈடுபடாது கல்வி செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்ல ஒத்துழைக்குமாறு அரசாங்கம் கோரியுள்ளது. நேற்று செவ்வாய்கிழமை (28) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து அறிக்கையொன்றைக் கோருவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது. கல்வி அமைச்சு வெகு விரைவில் இவ்விவகாரத்தில் தலையிட்டு பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கும். எனவே எவ்வித வேலை நிறுத்தங்களும் இன்றி பல்கலைக்கழக நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லுமாறு கோருகின்றோம். எந்தவொரு பிரச்சினைக்கும் வேலை நிறுத்தங்களுக்குச் செல்வதற்கு முன்பு எம்முடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முடியும் எனவும் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

விரிவுரையாளர்களானாலும், மாணவர்களானாலும் எந்த சந்தர்ப்பத்திலும் எம்முடன் கலந்துரையாட முடியும். அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதற்கு யாருக்கும் எவ்வித தடைகளோ கட்டுப்பாடுகளோ இல்லை. கடந்த காலங்களில் பல்வேறு காரணிகளுக்காக வேலை நிறுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதால் கல்வி கற்பதற்குரிய சந்தர்ப்பங்கள் இழக்கப்பட்டுள்ளன. எனவே பல்கலைக்கழக கட்டமைப்பில் எவ்வித பிரச்சினைகளையும் ஏற்படுத்தாமல், கல்வி செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே எமது தேவையாகும். அதற்கு தேவையான சகல ஒத்துழைப்புக்களையும் நாம் வழங்குவோம் என்றார் அமைச்சர் நளிந்த.

கலைப்பீடாதிபதி சி ரகுராம், தான் எடுத்த முடிவுக்கு எதிராக பேரவை முடிவெடுத்ததால் கொதிப்படைந்து போட்ட நாடகமே பதவி விலகல். பின்னர் தன்னுடைய சார்பு மாணவர்களைத் தூண்டிவிட்டு, மீண்டும் பதவிக்கு வர கோரிகை வைக்கும் போராட்டத்தை முன்னெடுத்தார். அதற்காக ஆசிரியர் சங்கத்தில் சி ரகுராமுக்கு ஆதரவாக நின்ற காமுகப் பேராசிரியர்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்க, ஏனையவர்களும் வேறு வழியின்றி களத்தில் இறங்க வேண்டியதாயிற்று.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் மாணவிகள் மீது திணிக்கப்பட்டுள்ள பாலியல் லஞ்சம், அங்குள்ள பெண் விரிவுரையாளர்கள் எதிர்கொள்கின்ற பாலியல் லஞ்சம் மற்றும் மோசடிகள் தொடர்பில் சுயாதீன விசாரணை ஒன்றுக்கு கல்வி அமைச்சு உத்தரவிட வேண்டும். உயர்கல்வி வரை இலவசக் கல்வி. ஆனால் பட்டதாரி மாணவர்கள் பேராசிரியர்களின் பழிவாங்கல்களால் மாதக் கணக்கில் வகுப்புத் தடை போடப்படுகின்றனர். தற்போது மாணவர் ஒன்றியத் தலைவர் எஸ் சிவகஜனுக்கு எழுந்தமானமாக வகுப்புத் தடை வழங்கப்பட்டுள்ளது. முன்னர் சி ரகுராமின் செல்லப்பிள்ளையாக இருந்த எஸ் சிவகஜனுக்கும் கலைப்பீடாதிபதி ரகுராமிற்கும் இடையேயான முரண்பாடு, தற்போது போதைப் பொருளுக்கு எதிரானதாக காண்பிக்கப்பட்டு வருகின்றது.

அண்மைய யாழ் பல்கழலக்கழகப் போராட்டம் பெயரளவில் போதைப்பொருளுக்கு எதிரானது என கலைப்பீடாதிபதி ரகுராம் தரப்பால் சொல்லப்பட்டாலும், இப்போராட்டம் முற்றிலுமாக சி ரகுராமின் தனிப்பட்ட நலன்களை முன்நிறுத்தியும், கலைப்பீடாதிபதி ரகுராமிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைப் பழிவாங்கவுமே மேற்கொள்ளப்படுகின்றது. யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் மாணவர்களின் நலன்களை முன்நிறுத்தாமல், தனிப்பட்ட கலைப்பீடாதிபதியின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளை நியாயப்படுத்தவே போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இவ்விடயத்தில் அரசு தனது உத்தரவை மிகத் தெளிவாக அறிவுறுத்தியுள்ளது. கடந்த காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளால் கல்வி கற்றலுக்கான சந்தர்ப்பங்கள் இழக்கப்ட்டுள்ளது. இதனை இனிமேலும் தொடரமுடியாது என அமைச்சர் கோடிட்டு மிகத் தெளிவாகக் காட்டியுள்ளார். நாளை பேரவைக் கூட்டத்தில் இறுதியான முடிவெடுக்கப்படும் எனத் தெரிகின்றது.

பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகும் யாழ்ப்பாண மாணவிகள் !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் பாலியல் ரீதியிலான தொல்லைகளுக்கு மாணவிகள் முகங்கொடுக்கின்றனர் – துணைவேந்தர் சி சற்குணராஜா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் பாலியல் ரீதியிலான தொல்லைகளுக்கு மாணவிகள் முகங்கொடுக்கின்றனர் என துணைவேந்தர், பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மீண்டும் தெரிவித்துள்ளார். துணைவேந்தர் சி சிறிசற்குணராஜா சில ஆண்டுகளுக்கு முன் புதிய மாணவர்களை வரவேற்கும் வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதும் யாழ் பல்கலைக்கழகத்தின் சில பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பற்றிக் குறிப்பிடும் போது, ‘மாணவிகள் இவர்கள் சொக்லேட் தந்து கூப்பிடுவார்கள், நம்பிப் போய்விடாதீர்கள்’ என்ற கருத்துப்பட குறிப்பிட்டிருந்தார். அதனையே அவர் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவம் பற்றிய இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு, பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் டிசம்பர் 11ஆம் திகதி நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பால்நிலை வன்முறைகள் பல்கலைக்கழகங்களிலும் தலைதூக்கியுள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 67சதவீதமான மாணவர்கள் பெண்கள். அவர்களுக்கும் பல்வேறுவிதமான பிரச்சினைகள் உள்ளன. சில விரிவுரையாளர்கள் இரவு நேரங்களில் அவர்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்புகின்றனர். இது சிக்கலான ஒரு பிரச்சினை எனவும் அவர் தெரிவித்துள்ளார். துணைவேந்தர் சி சிறிசற்குணராஜா சொல்கின்றார்:

“பால்நிலையை முதன்மைப்படுத்துவதற்கான பல்துறைசார்ந்த மற்றும் ஒன்றிணைந்த முன்னோக்குகள்” என்ற தொனிப் பொருளுடன் நடைபெற்ற “வியோமம்” சர்வதேச ஆய்வு மாநாட்டில் பால்நிலை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான கண்காட்சி ஒன்றும் திறந்து வைக்கப்பட்டது. இந்தக் கண்காட்சியில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பால்நிலை வன்முறை குறித்த 56 உண்மைச் சம்பவங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பாலியல் துஸ்பிரயோகங்கள், வன்முறைகளால் பெண்கள் தொடர்ந்தும் பாதிப்புள்ளாகி வருகின்றனர். ஆயினும் அவை தொடர்பான முறையான விசாரணைகளோ, சட்ட ரீதியான நடவடிக்கைகளோ இடம்பெறுவதில்லை. 67 சதவீதமான பெண் மாணவிகளையும் அதிகப்படியான பெண் விரிவுரையாளர்களையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கொண்டுள்ளது.

ஆனாலும் பல்கலைக்கழகத்தில் செல்வாக்கு செலுத்துவோராக பாலியல் சுரண்டலில் ஈடுபடும் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களும் அவர்களுக்கு ஆதரவான தரப்பினருமே உள்ளனர். பாலியல் ரீதியிலான பாதிப்புக்குள்ளாகும் மாணவிகள் அவற்றை வெளிப்படுத்துவதற்கு அல்லது நீதிகோருவதற்கு நம்பிக்கையான பொறிமுறை பல்கலைக்கழகத்தில் இல்லை. மேலும் பெரும்பாலான பெண் விரிவுரையாளர்கள் இவ்வாறான பாதிக்கப்படும் பெண்களுக்கு நீதிபெற்றுக் கொடுப்பதற்கு பதிலாக அவற்றை மூடிமறைப்பவர்களாகவே உள்ளனர். அல்லது அவற்றை எதிர்த்து போராடுவதற்குத் திராணியற்றவர்களாக உள்ளனர். இவையெல்லாம் இவ்வாறான பாலியல் குற்றவாளிகள் நல்லவர்கள், வல்லவர்கள் என்ற வேடத்தில் உலாவுவதற்கு காரணமாக அமைகின்றன. ஆனால் பாதிப்புக்குள்ளாகும் மாணவிகள் தம் வாழ்நாள் வடுவாக இவற்றை சுமக்க நேரிடுகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வெறுமனே சம்பிரதாயத்துக்காகவும் அரசாங்கத்தின் கட்டாயத்துக்காகவும் மட்டும் இவ்வாறான நிகழ்வுகளை நடாத்தக்கூடாது. மாறாக இவ்வாறான பிரச்சினைகளை சமூகப் பொறுப்போடு அணுகி உரிய பொறிமுறைகளை உருவாக்கி பெண்களுக்கு பாதுகாப்பான இடமாக பல்கலைக்கழகத்தை மாற்ற முன்வர வேண்டும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் குற்றிப்பாக கலைப்பிரிவில் மிக மோசமான பாலியல் சுரண்டல்கள் நடைபெற்று வருவதை கடந்த 15 ஆண்டுகளாக தேசம்நெற் அம்பலப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் 50 ஆண்டுகள்- முளையிலேயே கிள்ளி எறிய முற்பட்ட தமிழ்தேசிய கனவான்கள்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் 50 ஆண்டுகள்- முளையிலேயே கிள்ளி எறிய முற்பட்ட தமிழ்தேசிய கனவான்கள்!

 

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மலையக தியாகிகளின் தினம் அனுஷ்டிப்பு !

மலையக தியாகிகள் தினம் யாழ் பல்கலைக்கழகத்தில் உணர்வு பூர்வமாக மாணவர்களால் இன்று (10) அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக பிரதான பொது ​தூபியில் தியாகிகள் தின நினைவேந்தல் நடைபெற்றது.

இவ் நினைவேந்தலில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள் , ஊழியர்கள் உட்பட பல்கலைக்கழக சமூகத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.

மலையக தமிழ் மக்களின் உரிமைகளுக்காககவும் – சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கையில் மலையகத்தின் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட அரசு அடக்கு முறைகளை எதிர்த்து மேற்கொள்ளப்பட்ட இந்த போராட்டங்களில் பலர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

“யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களையும் புகுத்துவதற்காக சட்டக்கல்வி ஆங்கிலமூல கற்கை நெறியாக்கப்பட்டுள்ளது.” – யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் மா.இளம்பிறையன் விசனம் !

”யாழ் பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்வி ஆங்கிலத்தில் மாத்திரம் நடைபெற்று வரும் நிலையில், தமிழ் மொழியிலும் சட்டத்துறைக் கல்வி நடைபெறவேண்டும்” என யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க உறுப்பினருமான மா.இளம்பிறையன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வியினை மும்மொழிகளிலும் கற்கும் வாய்ப்பு வழங்கப்படுகின்றது. எனினும் யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் சட்டத்துறையில் ஆங்கிலமொழியில் மாத்திரம் சட்டக்கல்வி நடத்தப்பட்டு வருகின்றது. ஏன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மூலத்தில் சட்டக்கற்கையை உட்புகுத்த முடியாது? யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமானது தமிழ் மக்களினுடைய பண்பாட்டு, பாராம்பரிய விழுமியங்களை பாதுகாக்கின்ற பல்கலைக்கழகமாக இருந்து வந்தது.

 

தற்போது அந்நிலை சிதைத்து வருகின்றது. குறிப்பாக சிங்கள மாணவர்களையும் புகுத்துவதற்காக ஆங்கிலமூல கற்கைநெறி புகுத்தப்படுகின்றது. வடக்குக் கிழக்கிலே புதிய பல்கலைக்கழகங்களை தொடங்குதல் எனும் பெயரில் ஏற்கனவே பல்கலைக்கழகங்களின் கீழ் இயங்குகின்ற வளாகங்களை பல்கலைக்கழகமாக தரமுயர்த்த விண்ணப்பிக்கும் போது அரசும் மிக அவசரமாக அதற்கு அனுமதி வழங்குகின்றது.

 

ஆனால் தென்பகுதியில் எந்தவொரு பல்கலைக்கழகங்களையும் தொடங்குவதற்கு அரசாங்கம் அனுமதியை வழங்குவதில்லை, காரணம் வடக்குக் கிழக்குப் பல்கலைக்கழங்களின் தமிழ் சாயத்தைத் சிதைத்து, தமிழ் பண்பாட்டை சிதைத்து, பெரும்பாண்மை சிங்கள மாணவர்களை இங்கு அனுமதிப்பதன் ஊடாக தமிழ் மக்களின் பல்கலைக்கழங்கள் மீதான ஏகபோகங்களை சிதைக்கும் நடவடிக்கை தான் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 

தமிழர்களுடைய தாயகபூமியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானபீடம், முகாமைத்துவ பீடம், மற்றும் கிளிநொச்சியிலுள்ள பீடங்களில் பெரும்பான்மையாக சிங்கள மாணவர்கள் காணப்படுகின்றனர். எமது தமிழ் மாணவர்கள் கல்வி பயில்வதற்காக யாழ் பல்கலைக்கழகத்திலே தொடங்கப்பட்ட கற்கைநெறிகள் எமது மாணவர்களிற்கு வசதி கிடைக்காமல் மாற்று மாணவர்களிற்கு வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன.

 

தமிழ்ப் பண்பாட்டுப் பல்கலைக்கழகம் என்ற பெயரைக் காப்பாற்ற வேண்டுமென்றால் சகல கற்கைநெறிகளும் தமிழ்மொழியிலும் போதிக்கப்பட வேண்டியது அவசியமாகும். கலைப்பீட கற்கை நெறிகளைக் கூட ஆங்கில மொழியில் கற்பிக்க வேண்டும் என்ற அழுத்தத்தினை அரசாங்கம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊடாக எமது பல்கலைக்கழகத்திற்கு வழங்கி வருகின்றது. இருப்பினும் பாரிய எதிர்ப்பின் காரணமாக அந்த முயற்சி கைகூடாமல் இருக்கின்றது.

 

சிங்களமொழி மாணவர்கள் பெரும்பான்மையாக இருப்பதைக் காரணம் காட்டி சிங்கள ஆளணி நியமனத்தை மேற்கொள்ள வேண்டிய தேவை உருவாகி வருகின்றது. ஏன் சட்டத்துறையில் கூட சிங்கள நிரந்தர விரிவுரையாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர்களை நியமிக்கக்கூடாதென்று யாரும் சொல்லவில்லை, ஆனால் அது எதிர்காலத்தில் ஆக்கிரமிப்பாக மாறும் என்பதை நாங்கள் மறுக்க முடியாது. இது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சிங்களமயமாகும் என்பதற்கான அபாய எச்சரிக்கை” இவ்வாறு மா.இளம்பிறையன் தெரிவித்துள்ளார்.