ராஜீவ்காந்தி

ராஜீவ்காந்தி

ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள முருகன், ஜெயக்குமார், ரொபட் பயஸ் ஆகியோர் தாய்நாடு திரும்ப கடவுச்சீட்டு!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள முருகன், ஜெயக்குமார், ரொபட் பயஸ் ஆகியோர் தாய்நாடு திரும்புவதற்கு இலங்கை துணை தூதரகத்தால் கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த மூவரும் எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் என தமிழ் நாட்டு அரசாங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

 

தமிழ் நாட்டு சட்டத்தரணி புகழேந்தி தொலைப்பேசி ஊடாக ஆதவனின் செய்திப் பிரிவுக்கு இதனை தெரிவித்திருந்தார்

 

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டணைக்குட்படுத்தப்படம்டு 30 ஆண்டுகளாக சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் சாந்தன் முருகன் நளினி ரொபர்ட் பயஸ் ஜெயக்குமார் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் 2022ஆம் ஆண்டு சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

 

விடுவிக்கப்பட்டவர்களில்; நளினியின் கணவர் முருகன் உட்பட சாந்தன் ஜெயக்குமார் ரொபர்ட் பயஸ் ஆகிய நால்வர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது அத்துடன் குறித்த நால்வரும் திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் இதன்போது உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து சாந்தன் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது

 

குறித்த வழக்குசென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது இதன்போது முருகன் ஜெயக்குமார் ரொபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கைக்கு செல்வதற்கு இலங்கை துணை தூதரகம் கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் இந்தியாவில் மரணம் !

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (28) காலை காலமானார்.

 

கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த ஜனவரி மாதம் முதல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தால் உயிரிழந்தார்.

 

இதனை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

 

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன், கடந்த 2022-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் விடுவிக்கப்பட்டார்.

 

இலங்கை தமிழரான சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார். கடந்த ஜனவரி மாதம் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதையடுத்து உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

 

எனினும் இன்று சிகிச்சை பலனின்றி சாந்தன் காலமானார்.

 

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் இருந்த தனது மகனை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையிலுள்ள சாந்தனின் தாயார் மகேஸ்வரி உருக்கத்துடன் கடந்த ஆண்டு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

 

இந்த நிலையில் அவர் நாடு திரும்ப அண்மையில் இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது.

 

அதற்குள் அவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

ராஜீவ்காந்தியை கொலை செய்த புலிகளை நாம் அழித்தோம் – அமைச்சர் அலிசப்ரி

32 வருடங்களிற்கு முன்னர் இந்தியாவின் முன்னாள் பிரதமரை கொலை செய்த பயங்கரவாத அமைப்பை 14 வருடங்களிற்கு முன்னர் இலங்கை அழித்தது என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட தினத்தை குறிக்கும் விதத்தில் டுவிட்டரில் அலிசப்ரி இந்த கருத்தினை பதிவு செய்துள்ளார்.

32 வருடங்களிற்கு முன்னர் விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அவர்களின் நிதி திரட்டும் சர்வதேச வலையமைப்பினர் அரசியல் ஆதரவாளர்கள் புலனாய்வாளர்கள் இணைந்து உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் முன்னாள் பிரதமரை கொலை செய்தனர் என அலிசப்ரி தெரிவித்துள்ளார்.