விஜிதா

விஜிதா

விஜிதாவின் மரணத்துக்கு பின் நின்றவர்! பாலியல் லஞ்சம் கோருவோர்! விபச்சாரி என்று பட்டம் வழங்குபவர்! இவர்கள் தான் தமிழ் தேசியத்தின் தலைவர்கள் !

விஜிதாவின் மரணத்துக்கு பின் நின்றவர்! பாலியல் லஞ்சம் கோருவோர்! விபச்சாரி என்று பட்டம் வழங்குபவர்! இவர்கள் தான் தமிழ் தேசியத்தின் தலைவர்கள் !

 

தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர் சுகிர்தனின் வீட்டில் தீயில் எரிந்த விஜிதா மரணத்தில் இதுவரை துலங்காத நீதி. வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக் கிளை தலைவருமான சோ. சுகிர்தன் வீட்டிற்குள் தீ மூட்டி இளம் குடும்பப் பெண் ஒருவர் 16 ஆம் திகதி ஏப்ரல் மாதம் 2023 ஆம் ஆண்டு உயிரிழந்திருந்தார். இறந்தவர் யாழ் குப்பிளானைச் சேர்ந்த 36 வயதுடைய விஜிதா என்றழைக்கப்படும் 10 வயது பெண் குழந்தையின் தாயார் ஆவார். விஜிதா யாழ்.வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் மல்லாகம் உப அலுவலகத்தில் கடமையாற்றி வந்தவர் என்றும் கூறப்பட்டது.

சம்பவம் நடந்த அன்று. தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர் சுகிர்தனின் வீட்டுக் சென்று விஜிதா சுகிர்தனோடு வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் தன்னைத் தானே தீ மூட்டிக் கொண்டு எரிந்ததாகவும். தீயை அணைத்த பின்னர், அவர் கிணற்றினுள் குதித்ததாகவும் கூறப்பட்டது. தீக் காயங்களுடன் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட விஜிதா, சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார்.

விஜிதா, சுகிர்தன் வீட்டில் தீ மூட்டிய போது சுகிர்தன் தனது வீட்டிற்குள் சென்று பூட்டிக் கொண்டதாகவும் கூறப்பட்டது. விஜிதா மரணத்திற்கான காரணம் இன்று வரை துலங்கவில்லை. குடும்பத்தைப் பிரிந்த தனியே வாழும் சுகிர்தன் , விஜிதா குடும்பத்துடன் நெருங்கிப் பழகியதாகவும் கூறப்பட்டது. விஜிதாவும் கணவரைப் பிரிந்து மகளுடன் பெற்றோர் வீட்டில் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சுகிர்தன் விஜிதா இருவரும் நெருங்கிப் பழகியதாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் விஜிதா சுகிர்தனை தன்னை திருமணம் முடிக்கும்படி வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. சுகிர்தன் வழமையாகவே விஜிதா வீட்டிலேயே உணவருந்தி வந்ததாகவும் கூறப்பட்டது. சுகிர்தன் திடீரென விஜிதாவுடனான தொடர்பை குறைக்கவும் விடையம் பெரிதானதாகவும் கூறப்பட்டது.

அதேநேரம் சுகிர்தாவின் மரணத்தில் சுகிர்தனின் 21 வயதான பொலிஸ் பயிற்சியில் இருக்கும் மகன் சம்பந்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. விஜிதாவின் பெற்றோர் தங்களுடைய மகள் சுகிர்தனின் வீட்டில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என குற்றம் சாட்டினர். விஜிதாவின் தற்கொலை அல்லது கொலை சுகிர்தன் வீட்டில் இடம்பெற்றதால் சுகிர்தன் பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். பின்னர் விஜிதாவின் மரணம் தற்கொலை எனத் தீர்மானிக்கப்பட்டு சுகிர்தன் வெளியில் வந்துவிட்டார்.

இந்தவிடயத்தில் தமிழரசுக் கட்சி எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. தமிழரசுக் கட்சியில் இன்று வரை செயற்படும் சோ. சுகிர்தன் இந்தவிடயத்தில் விளக்கங்கள் எதுவும் மக்களுக்கு வழங்கவில்லை. சோ. சுகிர்தன் நடக்கவிருக்கிற உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரனின் வலதுகரமாக செயற்படுகிறார்.

இந்த விடயம் தொடர்பில் 2013 மேமாதம் 13 ஆம் திகதி ”பெண்கள் சந்திப்பு” என்ற சூம் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘ மரணங்களாலும் அவதூறுகளாலும் மறைக்கப்படும் பெண்கள் மீதான சுரண்டல்கள் – உரத்துப்பேசுவோம்’ என்ற தலைப்பில் விஜிதாவிற்கு பணியிடத்தில் சுரண்டல் தொடர்பிலும் விஜிதாவின் மரணத்தின் பின்னணியில் குற்றவாளி அல்லது குற்றம் சாட்டப்பட வேண்டிய ஆண் தப்பிக்கவிடப்பட்டமை தொடர்பிலும் பேசப்பட்டது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளரும் உள்ளூராட்சிசபை அலுவலகருமான சுரேகா பரமநாதன் விஜிதாவை மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு குரல் கொடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதே சுரேகா பின்னர் எம். ஏ. சுமந்திரனின் சிபாரிசில் பாராளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார்.

ஒருபக்கம் வீட்டு வன்முறைகளால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இன்னொரு பக்கம் சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் மற்றும் குற்றங்கள் அதிகரித்திரிக்கின்றன. யாழ் வேளாள ஆண்மைய அரசியலை முன்னெடுக்கும் தமிழ் அரசியல் கட்சிகளாலும் கூட பெண்கள் வன்முறைகளை எதிர்கொள்கின்றனர்.

இதன் உச்சகட்டமாகத் தான் எம்பி இராமநாதன் அர்ச்சுனா கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் சாளினியை, விபச்சாரி’ என பாராளுமன்ற ஹன்சார்ட்டில் பதிந்தமையை குறிப்பிடலாம். எம்பி அர்ச்சுனா அத்தோடு நிற்கவில்லை தன்னை விமர்சித்த சங்கவி என்னும் பெண் ஊடகவியலாளரையும் அரசியல்வாதியும் சட்டத்தரணியுமான ஸ்வதிகா அருளிங்கம் என்ற இன்னுமொரு பெண்ணையும் மிகக் கீழ்த்தரமான முறையில் விமர்சித்திருந்தார். இந்த விடயங்களுக்காக எம்பி அர்ச்சுனா இராமநாதன் பாராளுமன்ற சாபாநாயகரின் கண்டனைங்களையும் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது.

இந்த விடயத்தில் எம்பி அர்ச்சுனாவை கண்டித்து பாதிக்கப்பட்ட தமிழ்ப் பெண்களுக்காக தமிழ்த் தேசியக் கட்சிகள் குரல் கொடுக்கவில்லை. அதேநேரம் எம்பி சிவஞானம் சிறிதரன் கூட தனது சொந்த ஊர்ப் பெண்ணான வட்டக்கச்சி சாளினியின் பக்கம் நிற்கவில்லை. மாறாக பாராளுமன்றத்தில் எம்பி அர்ச்சுனா இராமநாதனை சபாநாயகர் மன்னித்து, அர்ச்சுனா மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகளை வாபஸ் பெற கோரிக்கை விடுத்தார்.

தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவக்கு போட்டியிடும் இருவரில் ஒருவரான எம். ஏ சுமந்திரன் விஜிதாவின் மரணத்திற்கு காரணமான சோ. சுகிர்தனை தனது வலதுகரமாக வைத்துள்ளார். மற்றையவர் சி. சிறிதரன் உதவி கேட்டு கட்சி அலுவலகத்திற்கு வரும் பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரும் வேழமாலிகிதனை வலதுகரமாக வைத்துள்ளார். அப்படியிருக்க எம்பி சிறிதரன் எம்பி அர்ச்சுனாவிற்கு வக்கலாத்துக்கு போனதில் ஆச்சரியமில்லை.

இதெல்லாம் ஒருபுறம்மிருக்க உள்ளூராட்ச்சித் தேர்தலில் எம்பி அர்ச்சுனாவின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டன. எம்பி அர்ச்சுனாவோ தங்களுடைய வாக்குகளை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்த் தேசியமக்கள் முன்னணிக்கு அளிக்கும்படி கேட்டுள்ளார். கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அர்ச்சுனாவோடு கூட்டணிக்கு தயார் என சமிக்ஞை காட்டுகிறார். கஜேந்திரகுமாருக்கு மட்டும் ஏன் தமிழ்ப் பெண்கள் விடயத்தில் அக்கறை இருக்கப் போகிறது. எல்லோரும் ”யாழ்ப்பாண வெள்ளாள ஆண்மைய “குட்டையில் ஊறிய மட்டைகளே” ஆகும்.

உள்ளூராட்சித் தேர்தலில் குறைந்தபட்சம் 25 % பெண்களுக்கு வேட்புமனுக்களில் இடம் அளிக்க வேண்டும் சட்டம் அமுலில் உள்ளது. ஆனால் வேட்புமனுத்தாக்கல் செய்ய வந்த பிரதான தமிழ்க்கட்சிகள் பெண்கள் யாரையும் கூட்டிவந்ததாகத் தெரியவில்லை.

உள்ளூராட்சித் தேர்தலைப் பொறுத்தவரை பெண்கள் அரசியலில் காலடி எடுத்து வைக்கவும் , பயிற்சி பெறவும் சிறந்த சந்தர்ப்பம். தமிழ்த் தேசியம் பேசுகின்ற ஆண்மைய அரசியல் கட்சிகள் பெண்களுக்கு உரிய இடம் கொடுப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. இவ்வாறான பெண்களை இழிவுசெய்யும் இசைப்பிரியா போன்ற இராணுவத்தால் பாலியல் வன்முறைக்குள்ளாகி கொலை செய்யப்பட்ட பெண்களுக்கு எப்படி நீதி பெற்றுக் கொடுப்பார்கள்?

அந்த வகையில் பெண் வாக்காளர்கள் தமக்காக குரல் கொடுக்க கூடிய கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என பெண்கள் உரிமைச் செயற்பாட்டாளர்கள் கோருகின்றார்கள். அதேநேரம் பாலியல் சுரண்டலில் ஈடுபடும் ஆண்களுடன் சமரச அரசியலில் ஈடுபடும் மற்றும் துணை போகும் ஐக்கிய மக்கள் சக்தி உமாசந்திரப் பிரகாஷ் போன்ற பெண் அரசியல்வாதிகளையும் ஆதரிக்க கூடாது.

எனது மகள் விஜிதாவின் மரணத்தில் சந்தேகம் – உண்மையான விசாரணை மூலம் நீதி கிடைக்கவேண்டும் என பெற்றோர் கோரிக்கை !

தனது மகள் விஜிதாவின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும், தமக்கு  என உயிரிழந்த விஜிதாவின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக்கிளை தலைவருமான சுகிர்தன் வீட்டிற்குள் தீமூட்டி இளம் குடும்பப் பெண் உயிரிழந்த சம்பவம் தொட்பில் பெற்றோர் பரபரப்பை ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

சம்பவத்தில் யாழ். குப்பிளான் பகுதியை சேர்ந்த 36 வயதான விஜிதா என்ற குடும்பப் பெண்ணே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் யாழ்.வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் மல்லாகம் உப அலுவலகத்தில் கடமையாற்றி வந்தவர் என கூறப்படுவதுடன், 10 வயதான பெண் பிள்ளை ஒன்றும் உள்ளது.

அதேவேளை  தமிழ் அரசு கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக்கிளை தலைவருமான சுகிர்தன்  நீண்டகாலத்தின் முன்னரே திருமணமாகியவர் எனவும் அவரது மகன் ஒருவர் இலங்கை  காவல் திணைக்களத்தில் கடமையாற்றி வருவதாகவும் கூறப்படுகின்றது.

சுகிர்தனின் மனைவி கடந்த 2020ம் ஆண்டு தனது இரு பிள்ளைகளுடன் வெளிநாடு சென்று தனித்து வாழ்ந்துவருவதாக கூறப்படுகின்றது.

யாழில் பரபரப்பை ஏற்ப்படுத்திய இளம் பெண்ணின் மரணம் தொடர்பில் வெளியாகியுள்ள  செய்தி! - Today Jaffna News - Jaffna Breaking News 24x7

இந்நிலையில் உயிரிழந்த விஜிதாவின் வீட்டிலேயே தவிசாளர் உணவருந்துவதாகவும் அந்த பெண்ணின் பிள்ளையை வெளியிடங்களிற்கும் கல்வி நடவடிக்கைக்கும் அழைத்து செல்வதாகவும் விஜிதாவின் பெற்றோர் கூறுகிறார்கள்.

இச்சம்பவம் தொடர்பில் விஜிதாவின் தந்தை மேலும் தெரிவித்ததாவது,

கடந்த 16ஆம் திகதி தன்னுடைய உந்துருளியில் இருந்து பெட்ரோலை எடுத்து கொண்டு தனது தோழி ஒருவர் பெட்ரோல் இன்றி வீதியில் இடைநடுவில் நிற்பதாகவும், அவருக்கு பெட்ரோலை வழங்கி விட்டு வருவதாகவும் கூறியே வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் விஜித்தா.

இரவு 1 மணிவரை வீடு திரும்பாத விஜித்தாவிற்கு பலமுறை தொலைபேசி அழைப்பை எடுத்தும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. பின்னர் இரவு 1.30 மணியளவில் சுகிர்தனின் மகனும் மற்றுமொரு நபரும் வீட்டிற்கு வந்து இவ்வாறு விஜிதா தீ மூட்டிகொண்ட நிலையில், உயிருடன் அவரை தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் முச்சக்கரவண்டி ஒன்று எடுத்துகொண்டு மகளை வைத்தியசாலையில் பார்க்க சென்றுள்ளார்.

“மகள் 10 மணிக்கு வீட்டில் இருந்து துவிச்சக்கரவண்டியில் சென்றாள். எனவே 3 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து மகள் 10.30க்கு அங்கு சென்றிருப்பாள். அதற்கு பிறகு அவள் தீமுட்டி கொண்டுள்ளாள். ஆனால் எங்களுக்கு அவர் எதுவும் சொல்லவில்லை. எங்களுடைய தொலைபேசி இலக்கம் அவரிடம் உள்ளது.

அதோடு அவள் தன்னுடன் (சுகிர்தன்) எதுவும் கதைக்காமல் இப்படி செய்து கொண்டதாக தெரிவித்திருக்கின்றார்.

அவள் அப்படி செய்திருக்க மாட்டாள் என்கிறார் விஜிதாவின் தாயார். எனவே தனது மகளின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும், தமக்கு உண்மையான விசாரணை மூலம் நீதி கிடைக்கவேண்டும் என மன்றாடுகின்றனர் விஜிதாவின் பெற்றோர்.

மேலும், விஜிதா தற்கொலை செய்தாரா..? அல்லது குற்றச்செயல்கள் நடந்ததா..? என்பது உறுதியாகாத நிலையில் குறித்த தவிசாளர் காவல் நிலையம் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

காவல் நிலையத்தில் பெண் தற்கொலைக்கு முயன்றதற்கான சாட்சியங்கள் தென்பட்டதையடுத்து தவிசாளர் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.