PAFFREL

PAFFREL

நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் மற்றும் மகளிர் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் – பெஃரல் கோரிக்கை!

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் மற்றும் மகளிர் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என பெஃரல்(PAFFREL) அமைப்பு அரசியல்கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

 

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த பெஃரல் அமைப்பின் நிறைவேற்றுபணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்”

 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகின்றது. நாட்டில் போராட்ட களத்தின் பின்னர் இடம்பெறுகின்ற நாடாளுமன்ற தேர்தல் இதுவாகும்.

 

நாட்டில் மாற்றம் ஒன்றை மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர். எனவே தேர்தலில் இளைஞர்களுக்கும் மகளிருக்கு முன்னுரிமையளிக்குமாறு நாம் அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

 

குறைந்தபட்சம் 2 பெண் வேட்பாளர்களையேனும் முன்னிறுத்துமாறு கோருகின்றோம். 260 நாட்டில் மாவட்டங்களின் அடிப்படையில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தி பேர் போட்டியிட முடியும்.

 

சுயாதீன குழுக்கள் தேர்தலில் போட்டியிடுவதாயின் அவர்களுக்கு 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபா மாத்திரமே செலவிட நேரிடும். ஏனெனில் சுயாதீன வேட்பாளர்கள் மாத்திரமே நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு 2000 ரூபா கட்டுப்பணம் அறவிடப்படுகின்றது.இது மிகவும் குறைந்த கட்டணமாகும்.

 

அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களிடம் கட்டுப்பணம் அறவிடப்படமாட்டாது. 196 பேர் மாத்திரமே மக்கள் வாக்கெடுப்பினால் தெரிவு செய்யப்படுவார்கள் ஏனைய 29 பேர் தேசிய பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்படுவார்கள். தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 1300-இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் – PAFFREL

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 1300-இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக PAFFREL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

 

இவற்றில் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 62 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதுடன் 19 தாக்குதல் சம்பவங்களும் அலுவலகங்கள் மீதான 27 தாக்குதல் சம்பவங்களும் உள்ளடங்குவதாக அவர் கூறியுள்ளார்.

 

இம்முறை ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து வகையான பிரசார நடவடிக்கைகளும் எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைவதாக கூறியுள்ள ரோஹண ஹெட்டியாரச்சி, இந்த காலப்பகுதியில் அமைதியான முறையில் செயற்படுமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

அத்துடன் இம்முறை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளில் 150-இற்கும் மேற்பட்ட சர்வதேச பிரதிநிதிகள் ஈடுபடவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

தேர்தல் வெற்றிக்காக இலஞ்சம் வழங்கும் வேட்பாளர்களிடம் அவதானமாக இருங்கள் – பெப்ரல் எச்சரிக்கை !

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இலஞ்சம் வழங்கும் வேட்பாளர்களிடமிருந்து மக்கள் ஏமாந்துவிடக்கூடாது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கிடைக்கப்பெறும் தேர்தல் சட்ட மீறல் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதி இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிலர் தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரச அதிகாரம் மற்றும் அரச வளங்களை முறைகேடாக பயன்படுத்தி வருவதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த நடவடிக்கைகளை தடுப்பதற்காக அரச அதிகாரிகள், குறிப்பாக உள்ளூராட்சி மன்ற செயலாளர்கள், நகர ஆணையாளர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதேபோன்று வேட்பாளர்களும் மக்கள் பிரதிநிதியாவதற்கு தகுதியானவர்கள் என்ற வகையில் செயற்படவேண்டும் என கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.